Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை... சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” மன்மோகன் சிங் விளாசல்! #Demonetisation

Featured Replies

“இது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை... சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” மன்மோகன் சிங் விளாசல்! #Demonetisation

 

மன்மோகன்

பேசாத பிரதமர் என எதிர்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்துள்ளார். ரூபாய் நோட்டுகள் தடை பற்றி 6 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன், ஆழமான அழுத்தமான கருத்துகளை கூறி மோடி அரசை விமர்சித்தார். மன்மோகன் பேசும் போது அரங்கத்தில் கரகோஷங்கள் தெறித்தன. மன்மோகன் பேசி முடித்த பிறகு, பிரதமர் மோடியே மன்மோகன் இருந்த இடத்திற்கு சென்று கைக்கொடுத்தார். மன்மோகன் சிங் பேசிய உரை தமிழில் இங்கே...

''1000, 500 ரூபாயினை செல்லாது என அறிவித்த பிறகு எழுந்த பிரச்னைகளைப் பற்றி நான் பேசவுள்ளேன். 1000, 500 ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணமும், கள்ளநோட்டுகளும், தீவிரவாத நடவடிக்கைகளும் குறையும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கை மீது எங்களுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனால், இதைச் செயல்படுத்திய விதம் மாபெரும் தவறான நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பிரதமரின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் பலர், இந்தக் குறுகிய காலத் துயரத்தை நாட்டின் நீண்ட கால நலனுக்காக தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்களுக்கு 'ஜான் கெய்ன்ஸ்'ன் மேற்கோளை நினைவுறுத்த விரும்புகிறேன் “வெகு நீண்ட காலத்தில் நாம் அனைவரும் இறந்திருப்போம்”, ஒரே இரவில் பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு பொறுப்புடன் நான் சொல்கிறேன், இதன் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என நமக்குத் தெரியாது.

பிரதமர் 50 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 50 நாட்கள் குறைவான நாட்களாக இருக்கலாம் ஆனால், சாமானியர்களுக்கு இந்த 50 நாட்கள் பெரும் சித்தரவதைகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கும்.  இந்தப் பாதிப்புகளால்தான் 60-65 பேர் இறந்துள்ளனர். நான் குறிப்பிடுவதை விட இன்னும் அதிகமாக இருக்கலாம். வங்கிகள், ரூபாய் நோட்டுகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, பிரதமரின் நடவடிக்கை அரித்துவிட்டது. உலகில் எந்த நாடாவது  தன் குடிமக்கள் வங்கியில்  டெபாசிட் செய்த பணத்தை மீண்டும் எடுக்க முடியாது என கூறியிருக்கிறதா? என நான் பிரதமரிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பிரதமரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க இதுவே போதும் என நினைக்கிறேன். 

நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்... இந்த செல்லாகாசு அறிவிப்பு அமல்படுத்தப்பட்டவிதம், நம்முடைய விவசாயத்தை... சிறுதொழிலை... முறைப்படுத்தப்படாத தொழில்துறையில் இருப்பவர்களை மிக மோசமாகப் பாதிக்கும். இந்த நடவடிக்கையால், தேசத்தின் வருமானம், மொத்த உற்பத்தி இரண்டு சதவிகிதம் அளவுக்கு குறையும். இது அதிக மதிப்பீடு  அல்ல... நான் குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறேன். 

modii_17584.jpg

எனவே, எப்படி சாமான்ய மனிதன் பாதிக்கப்படாதவாறு, இந்த திட்டத்தை அமுல்படுத்துவதென்று...?நம் பிரதமர் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைக்கவேண்டும். 

எளிய மக்கள் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பாக தினம் தினம் ஒரு விதியை முன்வைப்பது யாருக்கும் நல்லதல்ல. இது பிரதமர் அலுவலகத்தின், நிதி அமைச்சக அலுவலகத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகிறது.  இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் மோசமாக விமர்சிக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லாம் நியாயமானதே.
நான் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. இந்தப் பிரச்னைக்கு நடைமுறைக்கேற்ற வழிகளைக் கண்டு, பாதிக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் துயர் துடைக்க வேண்டுமென்று நான் நம் பிரதமரை வலியுறுத்துகிறேன். 

இங்கு ஏறத்தாழ 90 சதவிகிதத்தினர் முறைசாராத் தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப் புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை... மிகமோசமான அரசு நிர்வாகத்  தோல்வியாக, முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது ...இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல். 

நான் பிறர் செய்வதைப் போல, இதில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டும்   நோக்கத்தை  கொண்டிருக்கவில்லை .. ஆனால், இப்போதாவது... இந்த கடைசி நேரத்திலாவது நம் பிரதமர்... நம்முடைய அடித்தட்டு மக்களின் துயர் துடைக்க நடைமுறைக்கேற்ற வழிகளை தேடுவார் என்று நான் நம்புகிறேன்.''

நன்றி.

http://www.vikatan.com/news/coverstory/73369-organised-loot-legalised-plunder-manmohan-singh-on-demonetisation.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.