Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது

01-6c33c3b69eed8dd5edcfcdd56310a4fd779e0d73.jpg

 

ஆச்சரியமளிப்பதாக கூறுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன

(ரொபட் அன்­டனி)

நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வுத்­திட்­ட­மொன்றை சக­லரும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான அவ­கா­சத்தை அர­சாங்­கத்­திற்கு பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மிகவும் சாதுரி­ய­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் இந்த செயற்­பாடு எங்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கி­றது என்று சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தொடர்ந்து இவ்­வாறு ராஜ­தந்­திர ரீதி­யிலும் சாதுரி­ய­மா­கவும் செயற்­பட்டால் எம்மால் விரைவில் தீர்­வுத்­திட்­ட­மொன்றை நோக்கிப் பய­ணிக்க முடியும். எமது வேலையை கூட்­ட­மைப்பு இல­கு­ப­டுத்­தி­விட்­டது. வர­லாறு முழு­வதும் நாங்கள் எதிர்­பார்த்த விட­யங்கள் தற்­போ­துதான் தமிழர் தரப்­பி­ட­மி­ருந்து கிடைக்­கின்­றன என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன சுட்­டிக்­காட்­டினார்.

அர­சியல் தீர்வை நோக்­கிய அர­சாங்­கத்தின் பயணம் மற்றும் அதில் காணப்­ப­டு­கின்ற சவால்கள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரட்ன இந்­த­வி­டயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்:- 

நல்­லி­ணக்­கத்தை அடைதல், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காணுதல், நாட்டை முன்­னேற்­றுதல் உள்­ளிட்ட பாரிய நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எமது நல்­லாட்சி அர­சாங்கம் பய­ணிக்­கி­றது. இந்­நி­லையில் எமது பய­ணத்தை முடக்­கு­வ­தற்கு எதிர்­கா­லத்தில் சதி முயற்­சிகள் வரலாம். ஆனால் அவற்றை முறி­ய­டித்து நாங்கள் பய­ணிப்போம். அதற்­கான இய­லுமை எமது அர­சாங்­கத்­திடம் இருக்­கின்­றது.   

தற்­போது முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் இன­வா­தத்தை கையில் எடுத்து இரத்­தக்­க­றை­யூ­டாக அதி­கா­ரத்­திற்கு வர முயற்­சிக்­கின்­றனர். ஆனால் மக்கள் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்­டார்கள். மக்கள் அனைத்துத் தரப்­பி­லி­ருந்தும் இன­வா­தத்தை நிரா­க­ரித்­துள்­ளனர்.

எனவே, இன­வா­தத்தை கையில் எடுத்து இதற்குப் பின்னர் எத­னையும் சாதிக்க முடி­யாது. எனினும் முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் தொடர்ச்­சி­யாக இன­வா­தத்தை நோக்­கியே பய­ணிக்­கின்­றனர்.   அதே­போக்­கி­லேயே வடக்கில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனும் செயற்­பட்டு வரு­கின்றார். அதா­வது விக்­கி­னேஸ்­வரன் வடக்கு முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­போது நாங்கள் அனை­வரும் பாரிய மகிழ்ச்சி அடைந்தோம்.   

உயர்­நீ­தி­மன்­றத்தின் முன்னாள் நீதி­ய­ரசர் ஒருவர் முற்­போக்­கான சிந்­த­னை­யு­டனும் தூர நோக்­கு­டனும் செயற்­ப­டுவார் என்ற நம்­பிக்­கையில் அவரை சம்­பந்தன் வடக்கு முதல்­வ­ராக கொண்­டு­வந்தார். கூட்­ட­மைப்பின் இந்தத் தெரிவு தொடர்பில் மித­வாத கொள்­கை­யு­டைய அனை­வரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர்.

ஆனால் நாங்கள் எதிர்­பா­ராத விட­யமே இறு­தியில் நடந்­தது. வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இன­வா­தத்தை கையில் எடுத்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார். வட­மா­காண சபைக்கு ஒதுக்­கப்­படும் நிதியைக் கொண்டு முழு­மை­யாக மக்­க­ளுக்கு சேவை­யாற்ற முடி­யாத வடக்கு முதல்வர் தனது இய­லா­மையை மறைப்­ப­தற்­காக சுய அர­சியல் லாபம் பெறும் வகையில் செயற்­பட்டு வரு­கின்றார்.

அவரின் இந்த செயற்­பா­டுகள் எமக்கு பாரிய அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. பாரிய எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் தெரிவு செய்­யப்­பட்ட ஒருவர் அந்தப் பாதை­யி­லி­ருந்து விலகி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார். இதன்­மூலம் சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலை அவர் முன்­னெ­டுக்­கின்றார்.

அவரின் நிய­மனம் தொடர்பில் அன்று பெரு­மை­ய­டைந்த நாங்கள் இன்று கவலை அடையும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையை அடை்­து­கொள்­வ­தற்­காக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வடக்கு முதல்­வரை அந்­தப்­ப­த­விக்கு கொண்­டு­வ­ர­வில்லை.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நோக்­கத்­திற்­காக விக்­கி­னேஸ்­வ­ரனை கொண்­டு­வந்­ததோ, அந்த நோக்கம் இன்று நிறை­வே­ற­வில்லை. மறு­புறம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது மிகவும் சாது­ரி­ய­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் இரா­ஜ­தந்­திர ரீதி­யிலும் செயற்­பட்டு வரு­கின்­றது.

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வைக் காணும் நோக்கில் செயற்­பட்டு வரு­கின்ற எமது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பக்­க­ப­ல­மாக இருக்­கின்­றது என்றே கூற­வேண்டும். அதா­வது எவ்­வாறு செயற்­பட்டால் அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­தாமல் தீர்வை நோக்கி பய­ணிக்­கலாம் என்­பதை அறிந்து கூட்­ட­மைப்­பினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்து நாங்கள் எதனை எதிர்­பார்த்­தோமோ அது தற்­போதே எமக்கு கிடைக்­கின்­றது. அதா­வது எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்­பான விடயம் எந்­த­ளவு தூரம் உணர்­வு­பூர்­வ­மான விடயம் என்­பதை உணர்ந்து செயற்­பட்டு வரு­கின்றார். இந்த விடயம் எந்­த­வ­கை­யிலும் குழம்­பி­வி­டக்­கூ­டாது என்­ப­திலும் சாமர்த்­தி­ய­மாக செயற்­பட்டு தீர்வைப் பெற்­று­விட வேண்­டு­மென்­ப­திலும் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தெளி­வான சிந்­த­னை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார்.

எந்­த­வொரு கட்­டத்­திலும் தீர்வு விவ­கா­ரத் தில் அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது என்­பதில் தமிழ் தேசி­யக்­கூட்  ட­மைப்பின் தலைவர் சம்பந்தன் காய்களை  நகர்த்திவருகின்றார். அவரின் அந்த சாணக்கியமான செயற்பாடு நாம் முன்னெடுக்கும் விடயங்களை இலகுபடுத்தியுள்ளது. 

அது எமக்கு தைரியத்தை கொடுத் துள் ளது. இவ்வாறு இன்னும் சிறிதுகாலம் பயணித்தால் நிச்சயம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை எம்மால் அடைந்துகொள்ள முடியும். அந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின் செயற்பாடுகள் மித வாதப் போக்கைக் கொண்டுள்ள எமது பார்வையில் ஆக்கபூர்வமானவையாக அமைந் துள்ளன என்றார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-26#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.