Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் துரித நடவடிக்கை தேவை

Featured Replies

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் துரித நட­வ­டிக்கை தேவை

 

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே எனது இலக்­காகும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வை அடை­ய­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு வழங்­கு­வது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அனை­வரின் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொள்வோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நான் மறக்­க­வில்லை. இந்­த ­நாட்டில் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டு­மென்­பதில் நான் உறு­தி­யாக உள்ளேன். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வெண்­தா­மரை இயக்கம் போன்­ற­தொரு அமைப்பை விரைவில் ஸ்தாபிக்­க­வுள்ளோம். அந்த அமைப்பு தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வுள்­ளது. 

 அதே­நேரம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்ற முற்­ப­டு­கின்ற போது எதிர்ப்­புகள் வரலாம். ஆத­ர­வு­களும் கிடைக்­கலாம். அவற்றை நாம் எதிர்­கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­ற­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் எவர் எதிர்த்­தாலும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நாம் அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­றுவோம் என்­பது எனது நம்­பிக்­கை­யாகும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் 16 பேரும் நேற்று முன்­தினம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் அவர்­களின் எதிர்­பார்ப்­புகள் தொடர்­பிலும் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் விளக்­கிக்­கூ­றி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்­த­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விட­யங்கள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். 

இந்த சந்­திப்பில் கருத்து தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தங்கள் மீது தமிழ் மக்கள் நம்­பிக்கை வைத்தே வாக்­க­ளித்­துள்­ளனர். தற்­போது முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன் பல விட­யங்கள் முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. அதனை நாம் வர­வேற்­கின்றோம். எனினும் எம்மை தெரிவு செய்த மக்­க­ளுக்கு, அவர்கள் வழங்­கிய ஆணைக்கு நாம் பதி­ல­ளிக்­க­வேண்­டி­யுள்­ளது.

 அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும். மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதே எமது உறுப்­பி­னர்­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வதால் எமக்­குள்ளே கூட பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. ஆகவே தாங்கள் இந்த விட­யங்கள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.  

இதேபோல் வடக்கு, கிழக்கில் தமிழ்­மக்கள் அனு­ப­விக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அவர்­களின் எதிர்­பார்ப்பு குறித்தும் ஏனைய கூட்­ட­மைப்பு எம்.பி.க்­களும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளனர்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இன்­னமும் முயற்­சித்து வரு­கின்­றனர். யுத்­தத்தின் பின்­ன­ரான அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ண­ மு­டி­யாது அவர்கள் அல்­லல்­பட்டு வரு­கின்­றனர். முன்­னைய அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய வகையில் தீர்­வு­காண நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இத­னால்தான் கடந்­த ­வ­ருடம் ஜன­வ­ரி­ மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தமிழ் மக்கள் பேரா­த­ர­வினை வழங்கி அவரை புதிய ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்­கான ஆணையை அளித்­தி­ருந்­தனர்.

புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் புதிய தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. புதிய ஜனா­தி­பதி மற்றும் புதிய பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினர் தமது அன்­றாடப் பிரச்­சி­னைக்கும் அடிப்­படை பிரச்­சி­னைக்கும் தீர்வைக் காண்­பார்கள் என்ற நம்­பிக்கை தமிழ் மக்­க­ளிடம் மேலோங்கிக் காணப்­பட்­டது.

உயர் பா­து­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் இரா­ணு­வத்­தி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த தமது காணிகள் விடு­விக்­கப்­பட்டு சொந்த இடங்­களில் தாம் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்­பது தொடர்பில் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டு­மென்றும் சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டுதல் உட்­பட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என்று மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இந்த எதிர்­பார்ப்­புக்­க­மைய புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பாடுகள் இடம்­பெற்று வந்­தன.

வடக்கு, கிழக்கில் படை­யினர் வச­மி­ருந்த காணிகள் படிப்­ப­டி­யாக பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. யாழ்ப்­பாணம், வலி­காமம் வடக்கில் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் வரையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கில் சம்பூர் பகு­தியில் 800 ஏக்கர் அள­வி­லான காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனாலும் இந்த செயற்­பாட்டில் பெரும் மந்­த­நிலை தற்­போது காணப்­பட்டு வரு­கின்­றது.

பொது­மக்­களின் காணிகள் மீள முழு­மை­யாக ஒப்­ப­டைக்­கப்­ப­டா­மை­யினால் யாழ். குடா­நாட்டில் இன்­னமும் 30 ஆயிரம் பேர­ளவில் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மக்கள் ஆறு­மா­த­கா­லத்­திற்குள் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று கடந்­த ­வ­ருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ்­வாறு உறு­தி­ய­ளித்­த­போ­திலும், அந்த விவ­கா­ரத்­திற்கு இன்­னமும் தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.

காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தை எடுத்­துக்­கொண்டால் காணாமல் போன தமது உற­வு­களைத் தேடி மக்கள் தொடர்ந்தும் அலைந்­து­ வ­ரு­கின்­றனர். பல போராட்­டங்­களை நடத்­தி­ய­போதும் அதற்கு இன்­னமும் தீர்­வு ­கா­ணப்­ப­ட­வில்லை. தற்­போதும் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கு விசேட செய­ல­ணி­யொன்­றினை அமைப்­ப­தற்­கான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதிலும் அதனை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அர­சியல் கைதிகள் விவ­கா­ரமும் இன்­னமும் இழு­பறி நிலை­யி­லேயே காணப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு மீள்­கு­டி­யேற்றம் முதல் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் விட­யத்தில் இழு­ப­றி ­நி­லையே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இத­னை­விட இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­த­போ­திலும் அந்த விட­யத்­திலும் இழுத்­த­டிப்புப் போக்கே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமை பேர­வையில் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்த விட­யங்­களில் கூட தற்­போது பின்­வாங்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இதனால் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் கூட அர­சாங்கம் உரிய வகையில் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைத்து இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் அந்த விட­யத்தில் கூட இன்­னமும் முழு­மை­யான அர்ப்­ப­ணிப்­புடன் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றதா? என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­யில நல்­லி­ணக்க அர­சாங்­கத்தை ஆத­ரித்து வரும் எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படா­மையின் கார­ண­மாக பெரும் அதி­ருப்­தியை சந்தித்து வருகின்றது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொள்ளும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கடந்த வருடம் உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழியும் தற்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

இவ்­வா­றான நிலையில் தான் தமிழ் தேசி­யக்­கூட்­டமைப்பு எம்.பி.க்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து தமது ஆதங்­கத்தை தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே தமிழ் மக்­க­ளது அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­டாத நிலையில் அர­சாங்­கத்தின் மீதும் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மீதும் தமிழ் மக்­களின் அதி­ருப்தி அதி­க­ரித்து வரு­கின்­றது. எனவே இதனை உணர்ந்து தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னைக்கும் தீர்­வைக்­காண அர­சாங்­க­மா­னது துரி­த­க­தியில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.