Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ஆட்சி சாத்தியமா?

Featured Replies

இரா­ணு­வ ஆட்சி சாத்தியமா?

SAMAKALAMPAGE01-c3e0bbb7747d9d0397cc344d96742fca9fc38ce7.jpg

 

கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்­ப­தாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா- இல்­லையா என்­பதே அர­சி­யலில் பெரும் விவா­தத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

தெரிந்தோ தெரி­யா­மலோ, தினேஸ் குண­வர்த்­தன இந்த ஆபத்­தான விட­யத்­துக்குள் கால­டியை எடுத்து வைத்து விட்டார்.

அதனால் தான், கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த எவரும், அவ­ரது கருத்­துக்கு ஆத­ர­வாக வாய் திறக்­காமல் மெள­ன­மாக இருக்­கி­றார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீர­வன்­சவோ, உதய கம்­மன்­பி­லவோ, வாசு­தேவ நாண­யக்­கா­ரவோ, கூட, தினேஸ் குண­வர்­த­ன வின் கருத்­துக்கு விளக்கம் கொடுக்­கவோ அல்­லது அதற்கு ஆத­ர­வாக வரிந்து கட் டிக் கொண்டு செல்­லவோ இல்லை.

காரணம், இந்த விட­யத்தை முன்­னி ­றுத்தி மீண்டும் அர­சியல் செய்ய முனைந் தால், நாட்டு மக்கள் மத்­தியில் இரா­ணுவப் புரட்­சியை கூட்டு எதி­ரணி தூண்டி விடு­கி­றது என்ற கருத்து வலுப்­பெறும்.

இன்­னொரு பக்­கத்தில், இலங்­கையின் அர­சி­யலில் தலை­யீ­டு­களைச் செய்­யா­ம­லேயே இருந்து வரும் இரா­ணு­வத்­துக்­குள்­ளேயும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும்.

இதனால் தான், கூட்டு எதி­ரணி மேல­தி­க­மாக எதையும் உளறிக் கொட்­டாமல் அமை­தி­யாக இருக்­கி­றது.

ஆனால் அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­சர்கள், இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, தினேஸ் குண­வர்­த­ன­வையும், கூட்டு எதி­ர­ணி­யையும் தாரா­ள­மா­கவே வறுத்­தெ­டுக்­கி­றார்கள்.

இந்­த­நி­லையில் தான் நாம், இலங்­கை யில் இரா­ணுவப் புரட்சி ஒன்று ஏற்­படும் வாய்ப்பு உள்­ளதா என்ற கேள்­விக்கு பதில் தேட வேண்­டி­யுள்­ளது.

தெற்­கா­சி­யாவில் பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் தவிர, வேறெந்த நாடு­க­ளிலும் இது­வ­ரையில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றும் அள­வுக்கு சென்­ற­தில்லை.

இந்தப் பிராந்­தி­யத்தில் பாகிஸ்தான் மற் றும் பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் மாத்­தி ­ரமே இந்த விட­யத்தில் விதி­வி­லக்­கான நாடு­க­ளாக இருந்து வரு­கின்­றன.

அதிலும் பாகிஸ்தான் மாத்­தி­ரமே இன்­னமும் உறு­தி­யான ஜன­நா­ய­கத்­துக்குத் திரும்­பாத நாடாக இருக்­கி­றது.

இங்கு எப்­போ­தெல்லாம், ஜன­நா­யக ரீதி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட தலை­வர் கள், தமது உறு­தி­யான அர­சியல் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்த முனை­கி­றார்­களோ அப்­போ­தெல்லாம் இரா­ணுவம் அவர்­களை பத­வியில் இருந்து அகற்றத் தவ­று­வ­தில்லை.

இன்றும் கூட ஜன­நா­யக ரீதி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பிர­த­மரும், ஜனா­தி­ப­தியும் அதி­கா­ரத்தில் இருந்­தாலும், இரா­ணு­வமே அர­சி­யலில் மேலா­திக்கம் செலுத்­து­கி­றது.

ஆனால், இந்­தியா, இலங்கை உள்­ளிட்ட ஏனைய தெற்­கா­சிய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் அத்­த­கைய நிலை ஒரு­போதும் இருந்­த­தில்லை.

இந்­தி­யாவில் அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தை 1977ஆம் ஆண்டு இந்­தி­ரா­காந்தி அர­ சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­திய போது கூட இரா­ணுவம் புரட்சி செய்ய முயற்­சிக்­க­ வில்லை.

இந்­தியா போன்ற நாடுகள் இரா­ணுவப் புரட்சி வெற்­றி­ய­ளிக்­காது என்­ப­தற்கு முக்­கி­ய­மான காரணம், பல மொழிகள் பேசப்­படும், பல இனங்­களைக் கொண்ட நாடு என்­பதும் ஒன்று.

ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இரா­ணுவம் பெரும்­பாலும் ஒரே இனத்தை, ஒரே மொழியைப் பேசு­வ­தாக இருப்­ப­தா­னது, இரா­ணுவப் புரட்­சிக்கு சாத­க­மா­ன­தா­கவே இருந்­தாலும், அதி­கா­ ரத்தைப் பிடிக்கும் நிலை ஒரு­போதும் இரா­ணு­வத்­துக்குக் கிடைத்­த­தில்லை.

அதற்­காக இலங்­கையில் இரா­ணுவப் புரட்­சிக்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று அர்த்­த­மில்லை. 

1962ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க ஆட்­சியில் இருந்­த­போது, அவ­ரது அர­சாங்­கத்தை பத­வி­யி­றக்கி அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற ஒரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

"ஒப்­ப­ரேசன் ஹோல்ட் பாஸ்ட்" என்ற சங்­கேதப் பெயரில் தீட்­டப்­பட்ட இந்த சதித்­திட்டம், நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னரே கண்­டு­பி­டிக்­கப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்­டது.

அது­போ­லவே 1966ஆம் ஆண்டும் இன்­னொரு சதித் திட்டம் தீட்­டப்­பட்­ட­தா­யினும் அதுவும் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னரே முறி­ய­டிக்­கப்­பட்­டது.

இலங்­கையில் இரா­ணுவப் புரட்­சிக்­கான திட்­டங்கள் முன்­னரும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அவை செயல்­நி­லைக்கு வர முன்­னரே. தோற்­க­டிக்­கப்­பட்­டன.

அதற்குப் பிறகு 1987இல், ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, இரா­ணுவப் புரட்சி ஒன்று ஏற்­பட்டால் அதனை முறி­ய­டிக்க உதவி தர வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் ராஜிவ்­காந்­தி­யிடம் கேட்டுக் கொண்டார்.

அது போலவே, 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்­சவும் இரா­ணுவப் புரட்சி ஒன்றை சரத் பொன்­சேகா மேற்­கொண்டால் உதவ வேண்டும் என்று இந்­தி­யா­விடம் கேட்­டி­ருந்தார்.

ஆனால் அத்­த­கைய எந்த முயற்­சி­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

போர்க்­கா­லத்­திலும் போருக்குப் பின்­னரும், எத்­த­கைய சூழ்­நி­லை­யிலும், இலங்கை அர­சாங்­கத்தின் சொல்லை இரா­ணுவம் மதித்தே வந்­தி­ருக்­கி­றது. இரா­ணுவ ஒழுக்­கத்தை மீறும் துணிச்சல், எந்த இரா­ணுவ அதி­கா­ரிக்கும் வந்­த­தில்லை.

கடந்­த­வாரம் கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன இதனைத் தான் கூறி­யி­ருந்தார். இரா­ணு­வத்தை அர­சியல் நலன்­க­ளுக்குப் பக­டைக்­கா­யாக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், அர­சாங்கம் ஒரு இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்டால் அதனை எதிர்­கொள்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களை செய்­தி­ருக்கும் என்றே நம்­பலாம்.

ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், அர­சாங்­கத்தின் எல்லா செயற்­பா­டு­களும் இரா­ணு­வத்தின் எல்லா மட்­டங்­க­ளிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வை­யாக இருக்­க­வில்லை. அவ்­வாறு முரண்­பா­டான கருத்­து­டையோர், சதி­மு­யற்­சிகள் எதையும் நிறை­வேற்றக் கூடும் என்ற அச்சம் அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது.

அத்­த­கைய சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­தையும் தலை­வர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு பொது­வாக எல்லா நாடு­க­ளிலும் ஒரு இர­க­சிய கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது வழக்கம்.

இலங்­கை­யிலும் அதற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

அதே­வேளை, இலங்­கையில் இரா­ணுவப் புரட்சி ஒன்று ஏற்­பட்டால் அல்­லது இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற முனைந்தால், அது வெளி­நா­டு­களில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும், எத்­த­கைய எதிர் விளை­வுகள் உரு­வாகும் என்­பதும் கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம்.

இலங்­கையில் இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தையோ, அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தையோ, இந்­தி­யாவோ அமெ­ரிக்­காவோ விரும்­பாது.

இந்­தியப் பெருங்­க­டலில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்தில் அமைந்­தி­ருக்கும் இலங்­கையில் உறு­தி­யான ஆட்சி நிலவ வேண்டும் என்­பதே அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடு­களின் நிலைப்­பா­டாகும்.

இலங்­கையில் இரா­ணுவம் அதி­கா­ரத்­துக்கு வந்தால், அது தெற்­கா­சியப் பிராந்­தி­யத்­துக்கு ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ண­மாகி விடும் என்­பதை இந்­தியா கவ­னத்தில் கொள்ளும்.

பாகிஸ்­தானின் இரா­ணுவ அதி­கா­ரத்­தினால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வது இந்­தியா தான். எனவே இலங்­கை­யிலும் அத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­பட்டு மற்ற நாடு­க­ளுக்கு அது ஊக்­க­மாக அமைந்து விடு­வதை இந்­தியா விரும்­பாது.

எனவே எத்­த­கைய இரா­ணுவப் புரட்சி மேற்­கொள்­ளப்­பட்­டாலும், இந்­தியா அதில் தலை­யீடு செய்யும். அர­சாங்­கத்தைக் காப்­பாற்ற முயற்­சிக்கும்.

ஏற்­க­னவே 1988 ஆம் ஆண்டு மாலை­தீவில் ஒரு இரா­ணுவப் புரட்சி எற்­பட்­ட­போது இந்­தியா தனது படை­களை அனுப்பி அந்த அர­சாங்­கத்தைக் காப்­பாற்­றி­யது.

அது­போ­லவே இலங்­கையைக் காப்­பாற்­றவும் இந்­தியா தயங்­காது. அமெ­ரிக்­காவும் கூட அத்­த­கை­ய­தொரு நிலையில் தேவை­யான படை­ப­லத்தை பயன்­ப­டுத்த முயற்­சிக்­கலாம்.

அதை­விட, இந்­தியா, அமெ­ரிக்­காவின் எதிர்ப்­பு­க­ளையும் தாண்டி, ஆட்­சியைக் கைப்­பற்றக் கூடிய எந்த தரப்­பி­னாலும் சர்­வ­தேச ஆத­ரவை தக்­க­வைத்துக் கொள்ள முடி­யாது.

சர்­வ­தேச ஆத­ரவு இல்­லாமல் இலங்­கையால் செயற்­பட முடி­யாது. எனவே சர்­வ­தேச ஆத­ரவு என்­பது முக்­கி­ய­மா­னது.

இரா­ணுவ ஆட்சி ஒன்­றுக்கு உதவக் கூடிய நிலையில் உலகின் எந்த நாடும் இருக்­காது. சீனா கூட அதற்கு அங்­கீ­காரம் அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இப்படியான ஒரு நிலையில், இராணுவ அரசாங்கம் ஒன்றினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பியோடும் நிலை ஏற்படும்.

அதற்கு அப்பால், இத்தகைய இராணுவப் புரட்சி ஒன்று நிகழுமேயானால், அது. சர்வதேச தலையீடுகளுக்கு வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், தமிழர் பிரச்சினை விடயத்திலும் வெளித் தலையீடுகளுக்கு வழி வகுக்கும்.

எனவே, அரசாங்கத்தின் மீது எந்தளவுக்குத் தான் அதிருப்தியைக் கொண்டிருந்தாலும், இலங்கை இராணுவம் சகித்துக் கொள்ள முனையுமே தவிர, சீறிப் பாய எத்தனிக்காது.

இப்படியான ஒரு சூழலில், இராணுவ ஆட்சி ஏற்படுவது என்பது இலங்கையில் மிகமிக அரிதான ஒன்றாகவே இருக்க முடியும்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில், இராணுவ ஆட்சி பற்றிய பீதியை உருவாக்கியுள்ளமையானது கூட்டு எதிரணியின் அரசியல் வங்கு ரோத்து நிலையைத் தான் வெளிப்படுத்துகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.