Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம்

Featured Replies

இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம்

maverrar-343b1dae1f0acbc5576f88102dc8772c6a9bb7c3.jpg

 

இன்று மாவீரர் நாள். ஆயுதப் போராட்­டத்தில் உயிர்­நீத்த, தமது போரா­ளி­களை நினைவு கூரு­வ­தற்­காக விடு­தலைப் புலி­களால் 1989ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதே, இந்த மாவீரர் நாள்.

பிற்­கா­லத்தில் விடு­தலைப் புலிகள், தம்­முடன் இணைந்து செயற்­ப­டாமல், தமி­ழரின் விடு­தலைப் போராட்­டத்­துக்­காக உயிர்­நீத்த பல­ரையும் மாவீ­ரர்­க­ளாக அங்­கீ­க­ரித்­தி­ருந்­தனர்.

ரெலோ அமைப்பை ஆரம்­பித்த குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் போன்­ற­வர்­களும், ஈரோஸ் அமைப்பில் இருந்து போராடி உயிர்­நீத்த போரா­ளி­க­ளையும் கூட விடு­தலைப் புலிகள் மாவீ­ரர்­க­ளாக அங்­கீ­க­ரித்­தி­ருந்­தனர்.

1989ஆம் ஆண்டு தொடங்கி, விடு­தலைப் புலிகள் இயக்கம், 2009 மே மாதம், முள்­ளி­வாய்க்­காலில், இறுதி மூச்சை அடக்கும் வரை­யி­லான 20 ஆண்­டுகள் வடக்­கிலும் கிழக்­கிலும், மாவீரர் நாள், மிகவும் புனி­த­மான நாளாக- பிர­மாண்­ட­மான முறையில் கடைப்­பி­டிப்­பட்­டது.

புலிகள் இயக்கம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், ஆங்­காங்கே ஒளிந்து மறைந்து சுட­ரேற்­று­வதும், அவர்­களைப் படை­யினர் கலைத்துத் திரி­வ­து­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

எனினும், புலம்­பெயர் தேசங்­களில் தமிழ்­மக்கள் மாவீரர் நாளை கடைப்­பி­டித்து வந்­தாலும், விடு­தலைப் புலி­களின் காலத்தில் இருந்து வந்த மக்­களின் பங்­கேற்பு குறைந்து விட்­டது என்றே கூறலாம்.

அதற்கு புலம்­பெயர் தேசங்­களில் விடு­தலைப் புலி­களின் கொள்­கையை முன்­னெ­டுத்துச் செய்­வதில் காணப்­படும் முரண்­பா­டு­களும், போட்­டி­க­ளுமே காரணம்.

இதன்­கா­ர­ண­மாக, சில புலம்­பெயர் நாடு­களில், ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரே இடத்தில் இரண்டு மாவீரர் நாள் நிகழ்­வு­களும் நடத்­தப்­பட்­ட­துண்டு.

இந்­த­ மு­றையும் கூட அதே நிலை பிரான்ஸ் போன்ற நாடு­களில் காணப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக, கடந்­த­ வா­ரத்தில் வாள்­வெட்டுச் சம்­பவம் ஒன்று கூட நடந்­தே­றி­யி­ருக்­கி­றது.

மாவீ­ரர்­களை நினைவு கூரு­வதை ஒரு புனி­த­மான நிகழ்­வாக நடத்த விரும்பும் எவரும், இது­போன்ற வீண் பிரச்­சி­னை­களில் ஈடு­பட்­டி­ருக்க முடி­யாது.

அதே­வேளை, ம ஹிந்த ராஜபக் ஷ

ஆட்­சிக்­கா­லத்தில் மாவீ­ரர்­களை நினைவு கூரு­வ­தற்கு, கடு­மை­யான இரா­ணுவக் கெடு­பி­டிக்கு தடை­யாக இருந்­தது.

குறிப்­பாக வடக்கில், அதுவும் யாழ்ப்­பாணக் குடா­நாட்டில், மூலைக்கு மூலை நிறுத்­தப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரும், புல­னாய்­வா­ளர்­களும், மாவீ­ரர்­களை நினைவு கூரும் எவ­ரையும் மோப்பம் பிடித்து துவைத்­தெ­டுப்­ப­தற்­காக காத்­தி­ருந்­தனர்.

அத­னையும் மீறி யாழ். பல்­க­லைக்­க­ழகம் போன்ற முக்­கிய இடங்­களில், தீபங்கள் ஏற்­றப்­ப­டு­வது வழ­மையே என்­றாலும், தனது அதி­கார பலத்­தினால் மாவீரர் நாளை முடக்கிப் போடு­வதில் மஹிந்த அர­சாங்கம் கணி­ச­மான வெற்­றியைப் பெற்­றி­ருந்­தது.

மக்­களைப் பய­மு­றுத்தி, மாவீ­ரர்­களை நினை­வு­கூர முடி­யாத நிலை அப்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், கடந்த ஆண்டு ஏற்­பட்ட ஆட்சி மாற்றம், நாட்டில் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­கான கத­வு­களை ஓர­ள­வுக்­கா­வது திறந்து விட்­டி­ருக்­கி­றது.

இந்த ஜன­நா­யக இடை­வெளி முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லை­களை மாத்­தி­ர­மன்றி, மாவீ­ரர்­க­ளையும், ஓர­ள­வுக்­கா­வது நினைவு கூரும் வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லைகள், மே-18ஆம் திகதி நினைவு கூரப்­ப­டு­கின்­றன.

அது­போ­லவே, கடந்த ஆண்டு பல இடங்­களில் மாவீ­ரர்கள் நினை­வாக தீபங்கள் ஏற்­றப்­பட்டு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. ஆனாலும் அதனை அர­சாங்­கமோ படைத்­த­ரப்போ, பொலி­ஸாரோ அவ்­வ­ள­வாகக் கண்டு கொள்­ள­வில்லை.

இந்த நிலையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்ட பின்னர், இரண்­டா­வது தட­வை­யாக மாவீரர் நாள் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த ஆண்டு, மாவீரர் நாளை கடைப்­பி­டிப்­பதில், வடக்கு கிழக்கு மக்கள், வெளிப்­ப­டுத்­திய ஆர்­வத்தைக் கொண்டே, இந்­த­முறை மாவீரர் நாளை கடைப்­பி­டிப்­பதில் இன்னும் கூடு­த­லான அர்ப்­ப­ணிப்பை மக்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள் என்ற எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

நல்­லூரில் இன்று மாவீ­ரர்­களின் நினை­வாக பொது­நி­கழ்வு ஒன்றை நடத்தப் போவ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார். அது­போல யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் வழமை போன்றே மாவீ­ரர்கள் நினைவு கூரப்­ப­டு­வார்கள்.

வேறும் பல இடங்­களில் நினைவு கூரல் நிகழ்­வுகள் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

இந்­த­நி­லையில், இத்­த­கைய நினைவு கூரல் நிகழ்­வு­களை அர­சாங்கம் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று அறி­வித்­தி­ருப்­பது முக்­கி­ய­மான விடயம்.

கடந்த ஆண்டும் இதே­போன்ற சர்ச்சை ஒன்று ஏற்­பட்­ட­போது, அர­சாங்கம் இதே­போன்று தான் அறி­வித்­தது. ஆனால், நிகழ்­வு­களில் அர­சாங்கம் தலை­யீடு செய்­தி­ருக்­க­வில்லை.

எனினும், இம்­முறை, மாவீரர் நாளை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்தும் சில ஆரம்ப கட்ட முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை அர­சாங்கம் எவ்­வாறு அணுகப் போகி­றது என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது.

ஏனென்றால், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது என்று கூறி­யி­ருக்­கிறார். விடு­தலைப் புலிகள் இயக்கம் தடை செய்­யப்­பட்ட அமைப்பு என்­பதால், அதன் உறுப்­பி­னர்­களை நினைவு கூர­மு­டி­யாது என்­பது அவ­ரது வாதம்.

பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்­சியும் அத­னையே கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், இவர்கள் இரு­வரும் பாது­காப்பு அமைச்சைப் பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­ப­வர்கள். பாது­காப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் நிர்­வாகம் இல்லை. சிவில் செயற்­பா­டு­களில் இருந்து படை­யினர் ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிலையில், வடக்­கிலோ கிழக்­கிலோ மாவீ­ரர்­களை நினைவு கூரும் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்டால், படை­யி­னரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டாது என்­பதால், பாது­காப்பு அமைச்சு சார்ந்­த­வர்­களின் கருத்து இங்கு முக்­கி­ய­மா­ன­தல்ல.

பொது­மக்கள் பாது­காப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சு எதனைக் கூறு­கி­றது என்­பதே முக்­கியம். ஆனால், அந்த அமைச்சை கையில் வைத்­தி­ருக்கும் சாகல ரத்­நா­யக்க, இந்தப் பத்­தியை எழுதும் வரையில் எந்தக் கருத்­தையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அதே­வேளை, கொழும்பில் கடந்­த­வாரம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பொன்றின்போது, அமைச்சர்

லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­த­ன­விடம், மாவீரர் நாள் தொடர்­பாக கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு அவர், மாவீ­ரர்­களை அமைப்பு ரீதி­யாக நினை­வு­கூர அர­சாங்கம் அனு­ம­திக்­காது என்றும், எனினும், இறந்து போன­வர்­களின் குடும்­பத்­தினர் இணைந்து தனிப்­பட்ட முறையில் அத்­த­கைய நிகழ்­வு­களை நடத்­து­வதை அர­சாங்கம் தடுக்­காது என்றும் கூறி­யி­ருந்தார்.

இறந்து போன­வர்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூரும் ஜன­நா­யக உரிமை அனை­வ­ருக்கும் இருப்­ப­தா­கவும் அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன குறிப்­பிட்­டி­ருந்தார்.

இருந்­தாலும் விடு­தலைப் புலி­களின் மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திப்­ப­தற்கு அர­சாங்கம் தயா­ராக இல்லை. அந்த ஜன­நா­யக உரி­மையை மதிக்­கவோ வழங்­கவோ அர­சாங்கம் தயா­ரில்லை என்­பதை அவ­ரது கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

இங்கு அமைப்பு ரீதி­யாக மாவீரர் நாள் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு அமைப்பு ரீதி­யாக அதனைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு விடு­தலைப் புலி­களும் இங்கு இல்லை.

மாவீரர் நாள் என்­பது, போரில் உயிர் நீத்­த­வர்­களின் உற­வுகள் ஒன்­றாகக் கூடி நடத்தும் ஒரு நிகழ்­வு. அது, இழப்­பு­களின் காயங்­களில் இருந்து மீள்­கின்ற, மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­கின்ற ஒரு நிகழ்வு.

அத்­த­கைய ஒரு நிகழ்வை மாவீ­ரர்­களின் குடும்­பத்­தினர், தாமாக ஒரு இடத்தில் ஒன்­றி­ணைந்து நடத்­து­வதை அர­சாங்கம் தடுக்­கா­தென்றே கரு­தப்­ப­டு­கி­றது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், விடு­தலைப் புலி­களின் காலத்­திலும் சரி, இப்­போதும் சரி மாவீரர் நாள் என்­பது பிரச்­சி­னைக்­கு­ரிய ஒன்­றா­கவே இருக்­கி­றது.

புலிகள் இருந்த காலத்தில், மாவீரர் நாளை ஒட்டி தாக்­கு­தல்­களை நடத்­து­வார்­களோ என்ற அச்சம் அர­சாங்­கத்தை ஆட்டிப் படைப்­ப­துண்டு. ஒரு காலத்தில் கொழும்பு நக­ரம்­கூட இதனால் நடு­ந­டு ங்­கி­யது.

புலி­க­ளுக்குப் பிந்­திய கால­கட்­டத்தில், மஹிந்த அரசு மாவீரர் நாள் நிகழ்­வு­களை தடுப்­ப­தற்­காகப் போராட்டம் நடத்த வேண்­டிய நிலை காணப்­பட்­டது.

இப்­போ­தைய அர­சாங்கம், இந்த நிகழ்வை நடத்த அனு­ம­தித்­தாலும் பிரச்­சினை, அனு­மதி மறுத்­தாலும் பிரச்­சினை என்ற வித்­தி­யா­ச­மான ஒரு திரி­சங்கு நிலையில் இருக்­கி­றது.

நிகழ்­வுக்கு அனு­மதி மறுத்து, தடை­களை விதித்து, படைக் கெடு­பி­டிகள் மூலம் இதனை அணுக முனைந்தால், அது தமிழ் மக்­களைக் கோபப்­ப­டுத்தும். நல்­லி­ணக்க முயற்­சி­களில் இன்னும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும்.

அதே­வேளை, இதனை நடத்த அனு­ம­தித்தால், சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள், புலிகள் மீள் எழுச்சி பெறு­கி­றார்கள் என்ற பிர­சா­ரத்தை தீவி­ரப்­ப­டுத்தும் ஆபத்து இருப்­ப­தையும் ஏற்கத் தான் வேண்டும்.

ஏற்­க­னவே, சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள், ஒன்­று­மே­யில்­லாத விவ­கா­ரங்­க­ளை­யெல்லாம், தூக்கிப் பிடித்து, துரும்பைத் தூணாக்கி, பேனைப் பெருச்­சா­ளி­யாக்கி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள்.

இத்­த­கைய நிலையில் மாவீரர் நாள் பெரி­ய­ளவில் கடைப்­பி­டிக்க அனு­ம­திக்­கப்­பட்டால், அதனை மிகப்­பெ­ரிய இன­வாதப் பிர­சா­ர­மாக முன்­னெ­டுக்க அவர்கள் தயங்­க­மாட்­டார்கள்.

இந்தச் சந்­தர்ப்­பத்தில், சிங்­கள மக்கள் மத்­தியில் விடு­தலைப் புலி­களின் மீது உள்ள வைராக்­கியம் இதனை வேறு கோணங்­களில் பார்க்கத் தூண்­டு­கி­றது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்சர் கொழும்பில் வெளி­யி­ட்ட கருத்து சரி­யா­னதே.

இப்­ப­டி­யான நிலையில், மாவீரர் நாளை அர­சாங்கம் எவ்­வாறு அணுகப் போகி­றது என்ற கேள்வி எழு­கி­றது.

ஒன்றில் கண்டும் காணா­தது போல இருந்து விடு­வது அல்­லது தடுப்­ப­தற்­கான முழு முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­வது. இவை­யி­ரண்­டும்தான் அர­சாங்­கத்­துக்கு உள்ள தெரிவுகள்.

இதில் தற்போதைய அரசாங்கம் செய்யக் கூடியதும், செய்யப் போவதும், பெரும்பாலும் முதலாவது தெரிவான கண்டும் காணாமல் விட்டு விடுவதுதான்.

மஹிந்த அரசின் தடைகளை மீறியே மாவீரர்கள் நினைவு கூரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் அத்தகைய தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி தமிழ் மக்களையும் கோபப்படுத்தி, தடைப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியடைவதை விட, கண்டும் காணாமல் விட்டு விடுவதே நல்லதாக இருக்கும்.

என்னதான் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தினாலும், மாவீரர் நாள் பகிரங்கமாக இல்லாவிட்டாலும், தமிழ் மக்களால் இரகசியமாகவேனும் கடைப்பிடிக்கப்படும்.

இதனை வைத்து தெற்கில் இனவாத அரசியல் தொடரத்தான் போகிறது,

எனவே, அத்தகைய முடிவையே அரசாங்கம் எடுக்கக் கூடும்.

அதேவேளை, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற ஒரு பழமொழி உள்ளது. விடுதலைப் புலிகளும் அது போலத் தான், அவர்கள் இல்லாவிட்டாலும், நவம்பர் 27இல் எப்படியோ அரசாங்கங்களை நிலைகுலைய வைத்து விடுகிறார்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.