Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

#CricketUpdates: இந்தியா த்ரில் வெற்றி!

India beats England

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே கட்டாக்கில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 381 ரன்கள் குவித்தது. யுவராஜ் மற்றும் தோனி சதமடித்து அசத்தினர். இதையடுத்து,382 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்தது. அந்த அணி கேப்டன் மோர்கன் 102 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.  இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.

http://www.vikatan.com/news/sports/78193-india-beats-england-in-second-odi.art

  • தொடங்கியவர்

2-வது ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி-தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது.

 
2-வது ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி-தொடரை கைப்பற்றியது
 
கட்டாக்:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(150) மற்றும் டோனி(134) ஆகியோரின் அபார சதத்தால்  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது.
46F125B4-FBD7-4196-AFF6-01F2F5C7927F_L_s
பின்னர் 382 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. ஆனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இதனால் பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் ராய் 82(73), மோர்கன் 102(81), மொயின் அலி 55(43) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/19215518/1063125/India-win-the-second-ODI-match-against-England-take.vpf

  • தொடங்கியவர்

மோர்கன் சதம் வீண்; அஸ்வின் அபாரம்: பரபரப்பான ஆட்டத்தில் தொடரை வென்றது இந்தியா

 

 
திருப்பு முனை ரன் அவுட்.| பும்ரா அதிரடி சத இங்கிலாந்து கேப்டன் மோர்கனை ரன் அவுட் செய்கிறார். | படம்.| கே.ஆர்.தீபக்.
திருப்பு முனை ரன் அவுட்.| பும்ரா அதிரடி சத இங்கிலாந்து கேப்டன் மோர்கனை ரன் அவுட் செய்கிறார். | படம்.| கே.ஆர்.தீபக்.
 
 

கட்டாக் ஒருநாள் போட்டியில் 382 ரன்கள் மகாவிரட்டலில் ஈடுபட்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் வரை வந்து தோல்வி அடைந்தது. இதனால் 2-0 என்று இந்தியா கோலி தலைமையில் முதல் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 747 ரன்கள். யுவராஜ், தோனி, பிறகு மோர்கன் என்று 3 அருமையான சதங்களை இன்று ரசிகர்கள் விருந்தாகப் பெற்றனர். கட்டாந்தரை பிட்சில் தொடக்கத்தில் கிறிஸ் வோக்ஸ் தவண், ராகுல், கோலியை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும், பிற்பாடு ஜடேஜா தொடர்ச்சியாக 10 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிக முக்கியமான ஜேசன் ராய் (82) விக்கெட்டை அருமையான பந்தில் கைப்பற்றி இந்தப் பிட்சில் ஒரு அரிய சிக்கனத்தை வெளிப்படுத்த நடு ஓவர்களில் ரூட் (54), ஸ்டோக்ஸ் (1), ஜோஸ் பட்லர் (10) ஆகியோரை அஸ்வின் வீழ்த்தயதும் கட்டாந்தரையில் வீசிய அருமையான பந்து வீச்சுகளுக்கு உதாரணமாகும்.

இந்தக் கட்டத்தில்தான் 20 ஒவர்களில் 128/1 என்று சென்று கொண்டிருந்த இங்கிலாந்து ஜடேஜா, அஸ்வின் பவுலிங்கினால் 31.2 ஓவர்களில் 206/5 என்று ஆனது. அதாவது ஜோஸ் பட்லர், அஸ்வின் பந்தில் எகிறி வரப்பார்க்க, அதனை கவனித்த அஸ்வின் பந்தை லெக் திசையில் வேகமாக வீச பட்லரை தோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார்.

31.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில்தான் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பை அளித்த கூட்டணியாக மோர்கனுடன் மொயின் அலி சேர்ந்தார்.

மொயின் அலி அஸ்வினை 2 சிக்சர்களையும் பாண்டியாவை ஒரு சிக்சரையும் அடித்தார். மொயின் அலி 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்தார். மோர்கனும் இவரும் இணைந்து 12 ஒவர்களில் 93 ரன்களை விளாச 43.3 ஓவர்களில் 299/5 என்று இங்கிலாந்து உயிர்ப்பு பெற்ற நிலையில் புவனேஷ் குமாரின் வெளீயே சென்ற பந்தை மொயின் அலி ஆடிக்கப் போய் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். வோக்ஸ். பும்ராவின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், அவர் 5 ரன்களையே எடுத்தார்.

44.2 ஓவர்களில் 304/7 என்ற நிலையில் லியாம் பிளென்கெட், மோர்கனுடன் சேர்ந்தார், இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர், மோர்கன் காட்டடி தர்பாரில் இறங்கினார், அருமையாக ஆஃப் திசையில் இடைவெளியைப் பயன்படுத்தி பவுண்டரிகளை அடித்து வந்தார், மேலும் பந்து ஈரமாக இருந்ததால் பும்ரா, புவனேஷ் அதிகம் புல்டாஸ்களை வீசினர். பாண்டியா 6 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டார். பிளென்கெட், மோர்கன் இணைந்து ஸ்கோரை 354 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

மோர்கன் மிக அருமையாக விளையாடி ஒரு முனையில் தனிமனிதனாக அச்சுறுத்தி 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 81 பந்துகளில் 102 ரன்கள் என்று கேப்டன் இன்னிங்ஸ் ஆடி இந்தியாவை கதி கலக்கினார். ஏனெனில் 381 ரன்களுமே போதவில்லை என்றால் பிட்சை இன்னும் எப்படித்தான் போடுவது என்று கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் சிக்கல் எழுந்திருக்கும். ஒருவேளை அடுத்து இரு அணிகளும் 500 ரன்களுக்கான பிட்ச் அமைக்க வாய்ப்புண்டு!

இந்நிலையில்தான் பும்ரா ஒரு பந்தை யார்க்கர் லெந்தில் வீச அதனை பிளென்கெட் நேராக பும்ராவிடமே அடித்தார், ஆனால் மோர்கன் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு நடுபிட்சில் இருந்தார், பும்ரா பந்தை ரன்னர் ஸ்டம்பில் அடிக்க மோர்கன் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து 366/8 என்று அருகில் வந்து தோற்றது, நல்ல ‘ஸ்பிரிட்டட் சேஸ்’ என்பார்களே அதைத்தான் இன்று ரசிகர்கள் பார்த்தனர்.

முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் பும்ராவின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை தோனியிடம் கேட்ச் கொடுத்தார், வழக்கமாக அதிரடி பின்னி எடுக்கும் ஜேசன் ராய் இன்று நிதானம் கடைபிடித்து பிறகு அடித்து ஆடினார், அவர் 73 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார். இது திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஜோ ரூட் 55 பந்துகளில் அனாயசமான 8 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆகி கோலியிடம் மிட்விக்கெட்டில் சிக்கினார். ராய், ரூட் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 100 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர்.

அஸ்வினை கோலி மிகவும் பின்னால்தான் கொண்டு வந்தார், அஸ்வின் 20-வது ஓவரில்தான் கொண்டு வரப்பட்டார், இது நல்ல முடிவு, காரணம் வந்தவுடனேயே ரூட்டை வீழ்த்தினார். இந்தப் பந்தை அஸ்வின் வழக்கத்தை விட தூக்கி மெதுவாக வீச ஸ்லாக் ஸ்வீப் ஆடப் போன ரூட்டின் மட்டைக்கும் பந்துக்கும் கொஞ்சம் அதிகம் இடைவெளி இருந்ததால் டாப் எட்ஜ் எடுத்தது. ரூட் விக்கெட்டுக்குப்பிறகுதான் ராயும் மோர்கனும் 42 ரன்களை 6 ஓவர்களில் சேர்த்தனர் அப்போது ஒருமுனையில் தொடர்ச்சியாக வீசி வந்த ஜடேஜா ராயை பவுல்டு செய்தார். அதிலிருந்து இங்கிலாந்து சற்றே திணறத் தொடங்கியது.

ஆனால் மோர்கன், மொயின் அலி, பிளென்கெட் முயற்சி வீணானது, இந்தியா தொடரைக் கைப்பற்றியது, ஒருவேளை மோர்கன் அவுட் ஆகவில்லை என்றால் இங்கிலாந்து வென்றிருக்கலாம் இவ்வளவு பெரிய இன்னிங்சை ஆடிய மோர்கன் அந்த சிங்கிளை ஏன் எடுக்க அரை பிட்சிற்கு வேகமாக முன்னேற வேண்டும்? அதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு ஆர்வமூட்டும் திருப்பு முனைத் தன்மை. அந்த ரன் அவுட் இங்கிலாந்துக்கு தொடரை இழக்கச் செய்துள்ளது.

ஆட்ட நாயகனாக 150 ரன்களை விளாசிய ‘ஸ்டைலிஷ்’ யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/மோர்கன்-சதம்-வீண்-அஸ்வின்-அபாரம்-பரபரப்பான-ஆட்டத்தில்-தொடரை-வென்றது-இந்தியா/article9490803.ece?homepage=true

  • தொடங்கியவர்

தொடர் வெற்றியை நோக்கி இந்திய அணி? கொல்கத்தாவில் 3-வது ஒருநாள்  போட்டி

தோனியுடன் விராட் கோலி

கொல்காத்தாவில் இன்று இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்தியா தொடர் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈடன்காடன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது, தோனியே வீரர்களுக்கு டிப்ஸ் வழங்கி ஊக்குவித்தார். மேலும் மைதானத்தின் தன்மையையும் அவர் பார்வையிட்டார். பயிற்சியின் போது, விராட்கோலி, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இன்றைய போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக ஷிகர் தவான் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட தவான், நேற்றைய பயிற்சியில் பங்கேற்றதால், அவர் இன்று 11 பேர் அணியில் இடம்பெறுவார் என்று தெரியவந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை முடிந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியுள்ளது. எனினும் 3-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்து அணி, 3-வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்க திட்டமிட்டடுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/78414-indian-cricket-team-heads-on-3rd-and-final-odi-against-england-to-be-played-kolkata-today.art

  • தொடங்கியவர்

கோல்கட்டா ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி 53/0

  • தொடங்கியவர்

#CricketUpdates- இந்திய அணி பந்துவீசுகிறது!

India-England test match

இந்தியா-இங்கிலாந்து, அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து., 13 ஓவர் முடிவில் 62/0 என்ற நிலையில் ஆடி வருகிறது. காயம் அடைந்துள்ள தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக அஜிங்க்யா ரகானே விளையாடி வருகிறார். முன்னர் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

England 313/6 (49.2 ov)
India
  • தொடங்கியவர்

3-வது ஒருநாள் போட்டி: 5 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

 
 
3-வது ஒருநாள் போட்டி: 5 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
 
கொல்கத்தா: 
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பகல் 
 
இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
 
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ராய்(65), பெய்ஸ்டோவ்(56), மோர்கன்(43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா(3), ஜடேஜா(2) விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
 
பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இறுதிவரை போராடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேதர் யாதவ்(90), ஹர்திக் பாண்டியா(56), விராட் கோலி(55) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். 
 
இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளை சாய்த்து அந்த அணியின் வெற்றி வித்திட்டார்.
 
போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கேதர் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/22223309/1063656/England-beat-India-by-5-runs-in-the-3rd-ODI.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.