Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா, கருணாநிதி சுகயீனம் : அரசியல் வாரிசுகள் யார்?

Featured Replies

ஜெயலலிதா, கருணாநிதி சுகயீனம் : அரசியல் வாரிசுகள் யார்?

mka-mks-605b4991eb53dbc0cdf00a010d705d197e0221d2.jpg

 

தமி­ழக அர­சி­யலில் அசைக்­க­மு­டி­யாத சக்­தி­க­ளாக தி.மு.க.தலைவர் மு.கரு­ணா­நி­தியும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் ஜெய­ல­லி­தாவும் காணப்­ப­டு­கின்­றனர். இவர்­களை மைய­மாக வைத்தே தமி­ழக அர­சியல் நடை­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் இவர்கள் இரு­வரும் சுக­யீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தமி­ழக முதல்­வரும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான ஜெய­ல­லிதா இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக சென்னை அப்­பல்லோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­பெற்று வரு­கின்றார். அவர் பூரண குண­ம­டைந்து எப்­போது திரும்­புவார் என்ற கேள்­விக்கு இது­வரை உரிய தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து பதில் வர­வில்லை.

இது இவ்­வா­றி­ருக்க தி.மு.க.தலை­வரும் முது­பெரும் தமி­ழ­றி­ஞ­ரு­மான மு.கரு­ணா­நி­தியும் சுக­யீ­ன­முற்ற நிலையில் சென்னை காவிரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடந்த ஒரு மாத­கா­ல­மாக உடல்­நலம் பாதிக்­கப்­பட்டு வீட்­டி­லேயே இருந்து வந்த அவரை சில தினங்­க­ளுக்கு முன்னர் சென்னை காவிரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

காவிரி வைத்­தி­ய­சாலை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தி.மு.க.தலைவர் கரு­ணா­நிதி ஊட்­டச்­சத்து, நீர்ச்­சத்து குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் அவர் தொடர்ந்து சில தினங்­க­ளுக்கு வைத்­தி­ய­சா­லையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த இரு தலை­வர்­களும் சுக­யீ­ன­முற்­றி­ருப்­பது அந்­தந்த கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளிடம் மட்­டு­மின்றி முழு தமி­ழக மக்­க­ளையும் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது.

இவை ஒரு புற­மி­ருக்க இந்த கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு அடுத்­த­தாக, கட்­சியை முன்­னெ­டுத்துச் செல்லும் வாரி­சுகள் யார்? அல்­லது அடுத்­த ­த­லை­வர்கள் யார்? என்ற கேள்வி பல­ரி­டமும் இயல்­பா­கவே எழுந்­துள்­ளமை மறுக்­க­மு­டி­யாது. அந்த வகையில் தி.மு.க.வில் அடுத்த வாரிசு – தலை­வ­ராக வரக்­கூ­டி­யவர் யார் என்­பதை அந்­தக்­கட்சி அடை­யா­ளப்­ப­டுத்­தி­விட்­டது. எனினும் அதிலும் சிக்கல், சண்டை, போட்டி எல்லாம் இருக்­கின்­றன. ஆனால் அ.தி.மு.க வைப்­பொ­றுத்த வரையில் இது­வ­ரையில் "அடுத்த­த­லைவர் அல்­லது வாரிசு" என இது­வரை எவரும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனினும் கட்­சியின் அடுத்த தலை­வ­ராக வரு­வ­தற்கும் வாரிசு அந்­தஸ்தைப் பெறு­வ­தற்கும் கட்­சிக்குள் பல­மான போராட்­டங்கள், போட்­டிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன என்­பது உண்மை. வெளிப்­பார்­வைக்கு அங்கு பிரச்­சி­னைகள், குழப்­பங்கள் இல்லை என்­பது போல் தெரிந்­தாலும் உள்­ளுக்குள் பல்­வேறு மறை­முக நகர்­வுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

மறைந்த முன்னாள் முத­ல­மைச்சர் எம்.ஜி.ராமச்­சந்­தி­ரனால் 1972ஆம் ஆண்டு ஒக்­டோபர் 17 ஆம் திகதி அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக்­க­ழகம் (சுருக்­க­மாக அ.தி.மு.க) ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1977இல் நடை­பெற்ற தமி­ழக சட்­டப்­பே­ர­வைத்­தேர்­தலில் அதிக இடங்­களில் வெற்­றியைப் பெற்று தமி­ழக ஆட்­சியை எம்.ஜி.ஆர். கைப்­பற்­றினார். அன்று முதல் அவர் ஒரு­வரே "எல்­லா­மு­மாக" இருந்தார். அதா­வது" அ.தி.மு.க என்றால் அது எம்.ஜி.ஆர்.! எம்.ஜி.ஆர். என்றால் அது அ.தி.மு.க.!" என்று அர்த்­த­மாகும். ONE MAN SHOW என்­பார்­களே அதுதான்.

எம்.ஜி.ஆர்.கூட ஆரம்­பத்தில் 'தனக்குப் பிறகு' வாரிசு யார்? என்­பதை அறி­விக்­கா­த­துடன் இரண்டாம் நிலை தலைவர் ஒரு­வரை அறி­மு­கப்­ப­டுத்­தாத ஒரு­வ­ரா­கவே இருந்தார். 'எம்.ஜி.ஆர் என்று ஒருவர் மட்­டுமே இருக்­க­மு­டியும்' என்ற கொள்­கையை கொண்­டி­ருந்தார் என்று கூறப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே அவர் 'வாரிசை' அறி­விக்­க­வில்லை.

ஆனால் அவர் சுக­யீ­ன­முற்­றி­ருந்த காலத்தில் இரா.நெடுஞ்­செ­ழியன் பதில் முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றமை தவிர்க்க முடி­யா­த­தொன்­றா­கவே இருந்­தது. அந்­தக்­கா­லப்­ப­கு­தியில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இரா.நெடுஞ்­செ­ழியன், ஆர்.எம்.வீரப்பன், ஜெய­ல­லிதா, எஸ்.திரு­நா­வுக்­க­ரசர்(தற்­போ­தைய தமி­ழக காங்­கிரஸ் தலைவர்) உள்­ளிட்ட பலர் இருந்­தனர். இவர்­களில் ஒரு­வ­ரைக்­கூட இறு­தி­நே­ரத்­திலும் அடுத்த தலை­வ­ராக அறி­விக்­க­வில்லை.

1987 டிசம்பர் 24ஆம் திகதி எம்.ஜி.ஆர்.கால­மானார். அவ­ரது மறை­வுக்­குப்­பின்னர் "யார் முதல்வர்?" என்­பது தொடர்பில் அ.தி.மு.க வுக்குள் பெரும் குழப்பம் ஏற்­பட்­டது. ஆர்.எம்.வீரப்­பனின் ஆத­ர­வுடன் எம்.ஜி.ஆரின் மனை­வி­யான ஜானகி இரா­மச்­சந்­திரன் முத­லை­மைச்­ச­ராக பத­வி­யேற்றார். ஆனால் அதனை ஜெய­ல­லிதா ஏற்­க­வில்லை. 132 சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­களில் 33 பேர் ஜெய­ல­லி­தாவை ஆத­ரித்­தனர். ஏனையோர் ஜான­கிக்கு ஆத­ரவு தெரி­வித்­தனர். பின்னர் 1989 இல் பிள­வு­பட்ட கட்சி ஒன்­று­பட்­டது.

ஜெய­ல­லிதா அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ள­ராக பத­வி­யேற்­ற­துடன் ஆட்­சி­யிலும் பிர­தான பங்­கினை தொடர்ந்து இடம்­பி­டித்து வரு­கின்றார். எம்.ஜி.ஆர் காலத்தில் என்ன நடந்­ததோ அதுவே தற்­போதும் இடம்­பெற்று வரு­கின்­றது.

அதா­வது இது­வரை தனது அர­சியல் வாரிசு பற்றி ஜெய­ல­லிதா அறி­விக்­க­வில்லை. தனக்­குப்­பி­றகு கட்­சிக்குத் தலைமை தாங்­கப்­போ­வது யார்? என்­ப­தையோ, முதல்வர் பொறுப்­பினை யார் வகிக்­கப்­போ­கின்­றார்கள் என்றோ பகி­ரங்­க­மாக தெரி­விக்­க­வில்லை.

ஆரம்­ப­கா­லத்தில் ஜெய­ல­லி­தா­வுக்கு பெரிதும் உறு­து­ணை­யாக இருந்த எஸ். திரு­நா­வுக்­க­ர­ச­ருக்கே அடுத்த தலை­வ­ராகும் வாய்ப்­புள்­ள­தாக பேசப்­பட்­டது. ஆனால் திரு­நா­வுக்­க­ரசர் முரண்­பா­டு­க­ளுடன் வெளி­யேறி காங்­கி­ரஸில் இணைந்து கொண்டார்.

அதன்­பின்னர் செங்­கோட்­டையன், காளி­முத்து, தின­கரன் எனத் தொடர்ந்­தது. அவர்­களும் ஓரங்­கட்­டப்­பட்­டனர். தற்­போது ஓ.பன்­னீர்­செல்வம், விஸ்­வ­நாதன், பழ­னிச்­சாமி என சிலர் பேசப்­பட்­டனர். கடந்த தேர்­த­லுடன் விஸ்­வ­நாதன், ஓ.பன்­னீர்­செல்வம் போன்­ற­வர்­களின் மீது அதி­ருப்­தி­ய­டைந்த நிலை­யி­லுள்ளார் ஜெய­ல­லிதா.

ஆனால், சந்­தர்ப்பம், சூழ்­நிலை கார­ண­மாக ஓ.பன்­னீர்­செல்வம் இரண்­டு­முறை முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்றார். தற்­போதும் ஓ.பன்­னீர்­செல்வம் நிதி­ய­மைச்­ச­ரா­கவும், முதல்­வரின் பொறுப்­புக்­களை கவ­னிப்­ப­வ­ரா­கவும் இருந்­தா­லும்­கூட அவர் அர­சியல் வாரி­சா­கவோ, அ.தி.மு.க பொதுச்­செ­ய­லா­ள­ரா­கவோ அறி­விக்­கப்­ப­ட­மாட்டார் என்­பதே உண்மை.

இதே­வேளை கட்­சி­யிலோ, அர­சாங்­கத்­திலோ எந்­த­வி­த­மான பத­வி­யையும், பொறுப்­புக்­க­ளையும் வகிக்­காத 'ஜெய­ல­லி­தாவின் தோழி' என்ற ஒரே அந்­தஸ்தைக் கொண்­டுள்ள சசி­கலா நட­ராஜன் அ.தி.மு.க வையும் தமி­ழக அர­சாங்­கத்­தையும் தமது முழு­மை­யான கட்­டு­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மன்றி கட்­சியின் தலை­மை­யையும் முத­ல­மைச்சர் பத­வி­யையும் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்­வு­களை அவர் மேற்­கொண்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எவ்­வா­றெ­னினும், ஜெய­ல­லிதா குண­மாகி கட்சி – ஆட்சி பொறுப்பை ஏற்­ற­பின்­னரே சில உண்மை வெளி­வ­ரு­மென அ.தி.மு.க.வினர் கூறு­கின்­றனர். இனி­மே­லா­வது ஜெய­ல­லிதா தமது வாரிசை – அடுத்த தலை­வரை அறி­விப்­பாரா? அல்­லது விடு­வாரா? என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க, தி.மு.க.வில் இடம்­பெற்­று­வரும் தலை­மையைக் கைப்­பற்­று­வ­தற்­கான வாரி­சுகள் சண்­டை­பற்றி எல்­லோரும் அறிந்­த­துதான். குறிப்­பாக தி.மு.க தலைமைப் பத­வியைக் கைப்­பற்­று­வ­தற்கு அதன் தலைவர் மு. கரு­ணா­நி­தியின் இரண்டு புதல்­வர்­க­ளான மு.க. அழ­கிரி, மு.க.ஸ்டாலின் ஆகி­யோ­ரி­டையே ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு இன்­று­வரை தீர்வு காணப்­ப­ட­வில்லை.

இரு­வரும் இரு­வேறு துரு­வங்­களில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதனால் கட்­சிக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்கள் கொஞ்­ச­மல்ல.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் படு­தோல்வி, அதன்­பின்னர் இவ்­வ­ருட நடுப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் சில இலட்­சக்­க­ணக்­கான வாக்கு வித்­தி­யா­சத்தில் ஆட்­சி­ய­மைக்கும் சந்­தர்ப்­பத்தை நழு­வ­விட்­டமை, இறு­தி­யாக கடந்­த­மாதம் நடை­பெற்ற 3 தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல்­களில் தோல்­வி­ய­டைந்­தமை உள்­ளிட்ட பல விட­யங்­களைக் கூறலாம்.

தி.மு.க. வுக்குள் இருந்­துக்­கொண்டு கட்­சி­யையும், கட்­சித்­த­லை­மை­யையும் அழ­கிரி விமர்­சனம் செய்­து­வந்தார். குறிப்­பாக தனது சகோ­தரன் ஸ்டாலின் கட்­சித்­த­லைமைப் பத­வியைக் கைப்­பற்ற முனை­வ­தாகக் கூறி, அவ­ரையும், தலைவர் கரு­ணா­நி­தி­யையும் கடு­மை­யாக விமர்­சனம் செய்­து­வந்தார். இந்­நி­லையில் கட்­சியின் தீர்­மா­னத்­துக்­க­மைய மு.க. அழ­கி­ரியும் அவ­ரது நெருங்­கிய முக்­கி­யஸ்­தர்­களும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டனர்.

எனினும், மீண்டும் கட்­சியில் சேர்ந்துக் கொள்­வ­தற்கு அழ­கிரி கடும் முயற்­சி­களை மேற்­கொண்­ட­துடன் தலைவர் கரு­ணா­நி­தியை பல­முறை சந்­தித்துப் பேசினார். எனினும் அழ­கிரி கட்­சியில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னி­டையே கட்­சியில் மு.க. ஸ்டாலி­னுக்­கான முக்­கி­யத்­து­வமும் அதி­க­ரித்­தது.

இந்­நி­லையில் கடந்த 30 ஆம் திகதி சென்னை கோபா­ல­பு­ரத்­தி­லுள்ள கரு­ணா­நி­தியின் வீட்டில் அழ­கிரி மற்றும் ஸ்டாலின் ஆகி­யோ­ருக்­கி­டையே சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. இந்த சந்­திப்பின் போது தி.மு.க. தலைவர் மு. கரு­ணா­நிதி, முன்னாள் மத்­திய அமைச்சர் பாலு மற்றும் வேலு ஆகியோர் உட­னி­ருந்­தனர். இந்த சந்­திப்பு சுமார் ஒரு மணி­நேரம் நீடித்­தது.

அழ­கி­ரியை மீண்டும் கட்­சியில் சேர்த்­துக்­கொள்­வது பற்றி, அடுத்த மாதம் சென்னை அறி­வா­ல­யத்தில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் தீர்மானிக்கப்படலாம் என்று தி.மு.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தி.மு.க.வில் உயர்மட்ட பொறுப்புக்கள் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்சியின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படலாமென தெரியவருகிறது. கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த புதிய ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் க. அன்பழகன் வயது மூப்பு காரணமாக செயற்படமுடியாத நிலையில் இருக்கிறார். எனவே, தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய ஸ்டாலின் செயல்தலைவராகவும் திருமுருகன் பொதுச்செயலாளராகவும் எ.வ.வேலு பொருளாலராகவும் ஐ. பெரியசாமி முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் தி.மு.கவின் அடுத்த தலைவர் மற்றும் வாரிசு மு.க. ஸ்டாலின் என்பது உறுதியாகிவிட்டது. கருணாநிதிக்கு அடுத்ததாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் என்றாகிவிட்ட நிலையில், அவரது மற்றொரு மகனான மு.க. அழகிரி மற்றும் மகள் கனிமொழி ஆகியோருக்கு கட்சியில் எவ்வாறான இடம் – பதவி வழங்கப்படுமென்பது கேள்விக்குறியாகியுள்ளது!

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.