Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள்

Featured Replies

முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள்

3d-9e9dad64ed0bfc2d79ac5c37db9ddfb017460fac.jpg

 

எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்­வ­தற்கு அதற்­கு­ரிய கருவி முறை­யாக இருக்க வேண்டும். கருவி பழு­த­டைந்து இருந்­தாலோ, முறை­யான கருவி இல்­லா­தி­ருந்­தாலோ அந்த வேலையை சரி­யாக செய்ய முடி­யாது. சில வேளை­களில் முறை­யாக கருவி இருந்­தாலும் அக்­க­ரு­வியை முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தி­னாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடி­யாது. இதுதான் நிய­தி­யாகும். இது போலவே இலங்கை முஸ்­லிம்­களின் அர­சி­யலை முன்­னெ­டுத்துச் செல்லும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நட­வ­டிக்­கை­களும் உள்­ளன.

முஸ்­லிம்­களின் அர­சி­யலைப் பொறுத்­த­வரை அதனை செயற்­ப­டுத்தும் கரு­வி­யாக முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. இக்­கட்­சிகள் எதுவும் முறை­யாக இருப்­ப­தாக இல்லை. இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் சந்தி சிரிக்கும் படி­யாக மாறி­யுள்­ளன.

எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்­கிரஸ் எனும் கருவி மூலம் முஸ்­லிம்­க­ளுக்கான அர­சி­யலை மிகச் சரி­யாக வழி நடத்திக் கொண்டு சென்றார். அப்­போது முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்­கான கரு­வியும், அதனை இயக்­கி­ய­வரும் மிகச் சரி­யா­கவே செயற்­பட்­டனர் . சமூ­கத்தின் விட­யங்­களில் மிகக் கூடுதல் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. ஆனால், இன்று முஸ்­லிம்­க­ளி­டையே பல கட்­சிகள் உள்­ளன. எல்லாக் கட்­சி­களும் குழப்­பத்தில் உள்­ளன.

ஒற்­று­மைக்குப் பதி­லாக கட்­சிக்­குள்­ளேயே பல முரண்­பா­டுகள் உள்­ளன. அந்த முரண்­பா­டுகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்­கின்­றன. தலை­வர்கள் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை களை­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது கௌரவ யுத்தம் நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் பல­வீ­ன­ம­டைந்து கொண்டு செல்­­கின்­றது. முஸ்­லிம்­களின் மீது அர­சியல் ரீதி­ய­ாகவும், இன­வாத அமைப்­புக்­களின் மூல­மா­கவும் முன்வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உரிய பதில்­களை அளிப்­ப­தற்கு முடி­யாத கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் உள்­ளது.

ஒரு சமூ­கத்தின் தலை­வர்­களும், அவர்கள் சார்ந்த கட்­சி­களும் உருப்­ப­டி­யாக இல்­லாது போனால் அச்­ச­மூ­கத்­தினுள் மாற்று இனத்­த­வர்கள், இல­கு­வாகத் தங்­களின் கரு­மங்­களை ஆற்­று­வார்கள். இத­னையே இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்­க­ளிலும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எத்­தனை கட்­சிகள் உள்­ளன. எத்­தனை தலை­வர்கள் உள்­ளார்கள் என்ற எண்­ணிக்­கையில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. உருப்­ப­டி­யாக ஒரு கட்சி, ஒரு தலைவர் இருந்­தாலே போதும். முஸ்­லிம்கள் அர­சியல் ரீதி­யாக தலை நிமிர்ந்து வாழ்­வார்கள். இதனை மர்ஹும் அஷ்­ரபில் கண்டோம். இன்று முஸ்­லிம்­ளி­டையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், உலமா கட்சி என்று பல கட்­சிகள் உள்­ளன.

இவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை எடுத்துக் கொண்டால் அக்­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும், செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி மற்றும் தவி­சாளர் பசீர் சேகு­தா­வூத்­திற்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் உள்­ளன.

இந்த முரண்­பா­டு­களை தீர்ப்­ப­தற்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் கட்சி மட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. பின்னர் அது கட்­சியின் ஏற்­பா­டில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இக்­கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பா­டுகள் நீதி­மன்றம் வரை செல்லும் நிலையை தற்­போது அடைந்­துள்­ளது. அவ்­வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை நீதி­மன்­றத்தில் நிறுத்­தினால் கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­று­களோ, தடை­களோ எற்­ப­டலாம். ஏற்­க­னவே, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லொன்றின் போது முஸ்லிம் காங்­கி­ரஸின் மரச் சின்­னத்­திற்கு நீதி­மன்­றத்­தினால் தடை விதிக்­கப்­பட்­டது. இதனால், அத்­தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டாது சுயேச்­சையில் போட்­டி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் காங்­கி­ரஸில் காணப்­படும் பிணக்குகளும், முரண்­பா­டு­களும் தீர்க்­கப்­ப­டாத வரை அக்­கட்­சி­யினால் புதிய அர­சியல் யாப்பு மற்றும் ஏனைய விட­யங்­களை கையாள முடி­யாது. இன்று வரைக்கும் முஸ்லிம் காங்­கிரஸ், புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் அபி­லா­சை­க­ளுக்­கு­ரிய தீர்­வுகள் பற்­றிய திட்ட வரை­பு­களை முன்வைக்­க­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே முஸ்­லிம்­க­ளுக்கு எதனைத் தருவோம் என்று சொல்ல வேண்­டு­மென்று பகி­ரங்­க­மா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

 முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­சை­க­ளுக்­கு­ரி­ய­வற்றை முஸ்லிம் காங்­கி­ரஸ்தான் முன்வைக்க வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இதுதான் சிறந்த அர­சியல் அணுகு முறை­யாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது தீர்வுத் திட்­டத்தை முன் வைத்­துள்­ளது. அதற்கு முஸ்­லிம்­களும், முஸ்லிம் காங்­கி­ரஸும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென்று நல்­ல­தொரு அணுகு முறையை கையாண்­டுள்­ளது. ஆனால், முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அது போலவே முஸ்­லிம்­களும் பல பிரச்­சி­னை­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவற்றைக் கூட அக்­கட்­சி­யினால் கையாள முடி­ய­வில்லை.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற இறக்­கா­மம் பிர­தே­சத்தில் மாணிக்­க­ம­டுவில் சட்­டங்­க­ளுக்கு முர­ணாக புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வாரங்­களில் அது அகற்­றப்­ப­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸார் தெரி­வித்­தனர்.

ஆனால், இன்னும் அது அகற்­றப்­ப­ட­வில்லை. அதனை அகற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எத­னையும் முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்­க­வில்லை. ஆனால், புத்தர் சிலை வைக்­கப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் மதம் மாற­மாட்­டார்கள் என்று பொறுப்­பற்ற கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

இலங்கை தௌஹீத் ஜமா­அத்தை பொதுபல சேனா போன்று மஹிந்­த­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு அமைப்பு என்று சொல்லிக் கொண்­டிக்­கின்­றார்கள். இத்­த­கைய பொறுப்­பற்ற கருத்­துக்கள் முஸ்­லிம்­களின் மீது இன­வா­தி­க­ளுக்கு இருக்­கின்ற வெறுப்­பையும், சந்­தே­கத்­தையும் அதி­க­ரிக்­கவே செய்யும் என்­ப­தனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2017ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் புதிய அர­சியல் யாப்பு வரு­மென்ற நம்­பிக்கை தனக்கு இருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கமும் இதே கருத்­தையே சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றது. அப்­ப­டி­யாயின் அந்தப் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் நிலை என்­ன­வென்று முஸ்லிம் கட்­சிகள் எதுவும் சிந்­திப்­ப­தா­கவோ தமது யோச­னை­களை முன்வைப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை.

முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் மறக்­கப்­பட்­ட­தொரு பிரச்­சி­னை­யாக உள்ள தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி போன்­ற­தா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் அர­சியல் யாப்­பையும் கையாண்டு கொண்­டி­ருக்­கின்­றது.

முஸ்­லிம்கள் என்­னதான் சொல்லிக் கொண்­டாலும் சில நாட்­களின் பின்னர் அதனை மறந்து விடு­வார்கள். உயர்­பீட உறுப்­பி­னர்­களும் தாம் சொல்­­வ­தனை கேட்டு ஆமா­சாமி போடு­வார்கள் என்று புதிய அர­சியல் யாப்­பையும் கருதிக் கொண்­டி­ருப்­ப­தா­கவே தெரி­விக்­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் தமது கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை மறந்­துள்­ளது. தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தனை கிடப்பில் போட்­டுள்­ளது. மாணிக்­க­மடு சிலை விவ­கா­ரத்தை ஓரங்­கட்டி வைத்­துள்­ளது. சிலை இருந்தால் நமக்­கென்ன என்ற போக்கை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. இவை­யா­வற்­றையும் அக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் ஊமை­க­ளாக பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த ஊமை வேடத்­தினை புதிய அர­சியல் யாப்பில் கடைப்­பி­டிக்க முடி­யாது. முஸ்­லிம்­களின் இந்த நிலை, தீர்­வுக்­காக போராடி பல உயிர்­களை பலி கொடுத்த தமிழ் சமூ­கத்தின் எதிர் பார்ப்­புக்­களை தீயில் போடு­வ­தற்கு பேரி­ன­வா­தி­க­ளுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும்.

ஆதலால், முஸ்லிம் காங்­கிரஸ் தம்மை உருப்­ப­டி­யாக்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளையும், முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க வேண்டும்.

இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை எடுத்துக் கொண்டால் அக்­கட்­சிக்­குள்ளும் முரண்­பா­டுகள் உள்­ளன. கட்­சியின் செய­லாளர் நான்தான் என்று வை.எல்.எஸ்.ஹமீட் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்ளார்.

இதனால், அக்­கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளிலும் தளம்பல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. கட்­சியின் தலைவர் றிசாட் பதி­யு­தீ­னுக்கும் வை.எல்.எஸ்.ஹமீட்­டிற்­கு­மி­டையே தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான நிய­ம­னத்தில் ஏற்­பட்ட முரண்­பாடு நீதி­மன்­றத்தில் கட்­சியை கொண்டு போய் நிறுத்தி வைத்­துள்­ளது. இந்த முரண்­பாட்டைக் தீர்ப்­ப­தற்கும் கட்சி மட்­டத்தில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு பற்­றிய தமது திட்ட வரை­பினை அர­சாங்­கத்­திடம் முன் வைக்­க­வில்லை.

முஸ்லிம் காங்­கி­ரஸைப் போல் மேடை­களில் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பற்றிக் பேசிக் கொண்­டி­ருப்­ப­தி­லேயே காலத்தை கழித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

கட்­சியின் ஆத­ர­வு­த­ளத்தை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஆழ ஊன்றச் செய்ய வேண்­டு­மென்­பதில் கச்­சி­த­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்கும் அமைச்சர் றிசாட் பதி­யுதீன் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வு எவ்­வாறு அமைய வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை கோர­வில்லை. கட்­சியை வளர்த்துக் கொள்­வதில் வெற்றி கொண்­டாலும், முஸ்லிம் சமூகம் தோல்­வி­ய­டைந்து கொள்­ளு­மாயின் கட்­சியின் வளர்ச்­சி­யினால் முஸ்­லிம்­க­ளுக்கு பய­னில்லை. இன்று முஸ்லிம் கட்சித் தலை­வர்கள் ஏனைய கட்­சி­களைப் போன்று கட்­சியின் ஆத­ரவை வளர்த்துக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றார்­களே அன்றி முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் நிம்­ம­தி­யுடன் ஏனைய சமூ­கங்கள் பெற்­றுள்ள உரி­மை­களை பெற்று வாழ வேண்­டு­மென்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால், அதாவுல்லாவும் சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தார் . தற்போது அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவருக்கான மக்கள் ஆதரவு இன்னும் பெரிய வீழ்ச்சியை அடையவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தமை அவரின் தோல்வி என்பதனை விடவும், மஹிந்தராஜபக்ஷவின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தோற்கடிக்கப்பட்டார் என்றுதான் சொல்லுதல் வேண்டும். இவர் கூட முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டுமென்று அரசாங்கத்திடம் கேட்கவில்லை. இக்கட்சியின் உறுப்பினர்களிடையேயும் முரண்பாடுகள் உள்ளன.

இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் எல்லாம் முரண்பாடுகளினாலும், பிணக்குகளினாலும் சூழப்பட்டுள்ளன. இதனால், அக்கட்சிகள் யாவும் உருப்படியாக இல்லாதுள்ளன. முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலைச் செய்வதற்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இதனைச் செய்யாது போனால் முஸ்லிம் கட்சிகளைப் போன்றே முஸ்லிம் சமூகமும் உருப்படியில்லாத நிலையை அடைந்துவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.