Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தீராத சோகத்தை தந்த டிசம்பர் மாதங்கள்.!

Featured Replies

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தீராத சோகத்தை தந்த டிசம்பர் மாதங்கள்.!

 

 

tamilnadu.jpg

டிசம்பர் மாதம் என்றாலே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீராத சோகத்தை தரக்கூடிய மாதம் என்ற கருத்து ஜெயலலிதாவின் மறைவால் தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இதற்கு கண்கண்ட உதாரணமாக பல துயரச் சம்பவங்களை சொல்லலாம். மக்களிடையே நிலவிவந்த மூடநம்பிக்கையை வேரோடு வீழ்த்த தமிழ்நாட்டில் தோன்றிய ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கடந்த 24-12-1972 அன்று காலமானார்.

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பொறுப்புவகித்த ’சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார் கடந்த 25-12-1972 அன்று காலமானார். தமிழ்நாட்டு மக்களால் ‘மக்கள் திலகம்’ என்று போற்றப்பட்ட அ.தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 24-12-1987 அன்று காலமானார்.

அடுத்தடுத்து இந்த பெருந்தலைவர்களை எல்லாம் அள்ளிச்சென்ற டிசம்பர் மாதம், கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சுழற்றியடித்த ’சுனாமி’ என்ற ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை சுருட்டி எடுத்துக் கொண்டு சென்றது.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைவிடாது பெய்த அடைமழை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை வெள்ளக்காடாக்கி பல உயிர்களை பறித்ததுடன், இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

தற்போது, மீண்டும் பிறந்துள்ள இம்மாதத்தின் 5 ஆம் திகதியான நேற்றிரவு தமிழ்நாட்டின் ‘பெண் சிங்கம்’ என்று அ.தி.மு.க. தொண்டர்கள் போற்றிக் கொண்டாடிய தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.

http://www.virakesari.lk/article/14196

  • தொடங்கியவர்

தமிழகமும், டிசம்பர் மாதமும்: தொடரும் சோக நிகழ்வுகள்

 

மரணத்திற்கும், நாள், மாதம், கிழமை போன்றவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும், சுனாமி போன்ற சோக நிகழ்வுகள் டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருப்பது ஒரு வியப்பூட்டும் அம்சமாகும்.

தமிழகமும், டிசம்பர் மாதமும்: தொடரும் சோக நிகழ்வுகள்
 தமிழகமும், டிசம்பர் மாதமும்: தொடரும் சோக நிகழ்வுகள்

டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெளியானது.

இதே போல் பல பிரபலங்களின் மரண செய்தி மற்றும் பேரழிவுகள், கடந்த டிசம்பர் மாதங்களில் வெளியாகியுள்ளது என்பதை காலத்தை பின்னோக்கினால் நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம். ஜி. ராமச்சந்திரன் 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மறைந்தார்.

டிசம்பர் மாதத்தில் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன்  டிசம்பர் மாதத்தில் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன்

முன்னாள் தமிழக முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி 1972-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25-ஆம் நாளில் மறைந்தார்.

'பெரியார்' என்றழைக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஈ.வி. ராமசாமி, 1973-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24-ஆம் நாளில் காலமானார்.

'இசைக்குயில்' என்றழைக்கப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, கடந்த 2004-ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி மறைந்தார்.

கடந்த 2004-ஆண்டில், இந்தியா உள்பட பல தெற்காசிய நாடுகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சுனாமி பேரலை டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தில் பெரும் பாதிப்பையும், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

2005-ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற பல மாவட்டங்களிலும் வெவ்வேறு நாள்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. டிசம்பர் 18-ஆம் தேதியன்று சென்னை எம்ஜிஆர் உள்ள ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உதவியை பெற கூட்டத்தினரின் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

2015-ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் போன்ற பல தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் அணை நீர் திறப்பு ஆகியவற்றால் பலர் பலியானார்.

டிசம்பர் 7-ஆம் தேதி மறைந்த சோ ராமசாமி  டிசம்பர் 7-ஆம் தேதி மறைந்த சோ ராமசாமி

இக்கட்டுரை பதிவு செய்யப்படும் இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார்.

http://www.bbc.com/tamil/india-38232632

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.