Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!' - தமிழக அமைச்சர்களின் மனநிலை

Featured Replies

'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!'  - தமிழக அமைச்சர்களின் மனநிலை 

 

ops1_13048.jpg

புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் 5-ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். 'தற்போதுள்ள சூழலில் தலைமைப் பதவிக்கு வர விரும்பினார் எடப்பாடி. சசிகலாவின் சமாதானத்தால் அமைதியாகிவிட்டார். தலைமைக்கழக கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்த ஜெயலலிதா, 2011-16ம் ஆண்டு ஆட்சியில் கோலோச்சியவர்களை ஓரம்கட்டியே வைத்திருந்தார். 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொடுத்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இதனால் அகமகிழ்ந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களுக்கு வலுவான துறைகளை வழங்கினார். கடந்த ஆட்சியில் ஓ.பி.எஸ் வசமிருந்த பொதுப் பணித்துறையை எடப்பாடிக்கு வழங்கினார். அவை முன்னவர், நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகளை மட்டுமே ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கினார். " மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அமைச்சரவையில் ஓ.பி.எஸ் இடம் பெறுவதே கடினம் என்றுதான் பேசப்பட்டது. முதல்வருக்கு ஓ.பி.எஸ் மீது பெரிய அதிருப்தி இல்லை என்பதால் பதவி வழங்கப்பட்டது.

முதல்வரின் அதிகாரங்களை அவரிடம் வழங்கியதிலும், எடப்பாடி உள்ளிட்டவர்களுக்கு விருப்பம் இல்லை. ஓ.பி.எஸ்ஸை நிழல்போல பின்தொடர்ந்து வந்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவை அடுத்து, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். நேற்று முன்தினம் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும், ஓ.பி.எஸ் வசம் முதல்வர் பதவி அளிக்கப்படுவதை கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. தலைமைக் கழகத்திற்கு வெளியில் கூடியிருந்த சிலர், 'அண்ணன் எடப்பாடி வாழ்க...' என திடீர் கோஷம் எழுப்பினர். எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கும் வராமல் சீனியர் அமைச்சர்கள் சிலர் அப்போலோ மருத்துவமனையிலேயே இருந்தனர். இதனை ஓ.பி.எஸ் தரப்பினர் ரசிக்கவில்லை" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் 

"கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க, 'ஓ.பி.எஸ் தொடரட்டும்' என அனுமதி கொடுத்தார் சசிகலா. இதற்கு மிக முக்கியக் காரணம். மத்திய அரசின் சாய்ஸாக பன்னீர்செல்வம் இருப்பதுதான். கொங்கு வேளாளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், தம்பிதுரையை முன்னிறுத்தும் வேலைகளும் நடந்தன. இறுதியில், ஓ.பி.எஸ் வசமே முதல்வர் பதவி சென்றது. 'இப்படியொரு சூழல் இனி வராது. சின்னம்மா ஆதரவில் எடப்பாடி பதவிக்கு வருவார்' என அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேசி வந்தனர். ஒருகட்டத்தில் கடுப்பான மன்னார்குடி உறவுக்காரர் ஒருவர், ' நம் கையை மீறி நிலைமை செல்லக் கூடாது என்றுதான் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு உள்ளே வரப் பார்க்கிறது. ஒற்றுமையாக இல்லாவிட்டால், நீங்கள்தான் சிரமப்பட வேண்டியிருக்கும்' என கடுமையான குரலில் சொல்லிவிட்டார். இதை உணர்ந்து எடப்பாடி ஆதரவாளர்கள் அமைதியாகிவிட்டனர். ஆனால், நேற்று முதல் நிலைமை அப்படியே மாறிவிட்டது. 'ஓ.பி.எஸ் பக்கம் சாய்வதே சிறந்தது' என சீனியர் அமைச்சர்கள் சிலர் கணக்குப் போட்டுள்ளனர். அதற்கேற்ப, அவரிடம் நெருக்கம் காட்டி வருகின்றனர். சசிகலா ஆதரவாளர்களை ஓரம்கட்டிவிட்டு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. 'இதையும் மீறி அமைச்சர்கள் செயல்பட்டால், மத்திய அரசின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படலாம்' என்பதால் பன்னீர்செல்வத்திடம் கூடுதல் மரியாதை காட்டுகின்றனர்" என்றார். 

" முதல்வர் இருந்த வரையில் கூடுதல் பணிவோடு வலம் வந்தார் ஓ.பி.எஸ். கட்சியில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தாலும், அனைத்தையும் மௌனமாகவே எதிர்கொண்டார். இதுவரையில், அவரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் பார்த்ததில்லை. இனி வரக் கூடிய காலங்களில் நிலைமை மாறுமா என்பது மிகப் பெரிய கேள்வி. கட்சியின் எதிர்காலம் குறித்த கவலைதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என குமுறலோடு பேசினார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/74376-tn-senior-ministers-favours-ops-ahead-of-sasikala.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.