Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா

Featured Replies

“ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா

sasaikala1_10541.jpg

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா-வின் மரணத்தில், சந்தேகமிருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பலவித சந்தேக கணைகளை வீசி வருகின்றனர். இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வாட்ஸ் அப் ஒன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், (8-12-16) கோவையில் அதனை அவர் உறுதி செய்துள்ளார்.

ஜெயலலதாவின் மரணத்தில் சந்தேகம்!

‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு புகைப்படம்கூட வெளியிடப்படவில்லை. மேலும், ஜெயலலிதாவின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளதா... மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவர், நினைவோடுதான் இருந்தாரா... எனத் தெரியவில்லை.அவருடைய சொத்துக்களைப் பாதுகாக்க, அதற்கான ஆவணங்களை தயார் செய்துவருகிறோம்... இதுதொடர்பாக வழக்குத் தொடர உள்ளோம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘‘சி.பி.ஐ விசாரணை வேண்டும்!’’ 

இந்தநிலையில்,ஜெயலலிதா மரணமடைந்த 5 -ம் தேதி அன்று அ.தி.மு.க எம்.பி-யான சசிகலா புஷ்பாவிடம் பேசினோம்.‘‘ஆரம்பத்தில் இருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து...அப்போலோ நிர்வாகம் எந்தத் தகவலையும் முறையாகச் சொல்லவில்லை. நான், ‘முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிற விஷயத்தில் வெளிப்படையான சிகிச்சை வேண்டும்’ என்றே முதலில் இருந்தே கூறி வந்தேன்.   ஆனால், இதை யாரும் கேட்கவில்லை...

இதற்காக வேண்டும் என்றே ஒரு குரூப் செயல்பட்டு வருகிறது. முதல்வருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. அவருடன் ஒரு பெண்மணி மட்டும் தான் உடன் இருந்திருக்கிறார். அவரது குடும்பம் தான்  மிகப்பெரிய சதி செய்து ஜெயலலிதாவை தன்னுடைய கஸ்டடியிலேயே வைத்திருந்திருக்கிறார்கள்.  கட்சிக்காரர்கள் அனைவரையும் அந்த பெண்மணி தான் ஆட்டிவித்துக் கொண்டிருக்கிறார். அவரை விசாரித்தால், ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியே வரும். இதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்’’ என்றார்.

http://www.vikatan.com/news/coverstory/74520-sasikala-pushpa-demands-cbi-probe-on-jayalalithaa-death.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.