Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Featured Replies

gallerye_234715919_1665190.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_166519020161208234655_318_219.jpg

இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக
வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததும், உடனடியாக முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், அமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர். சசிகலா குடும்பத்தினர், அமைச்சர், எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு

செய்ய திட்டமிட்ட நிலையில் பன்னீர் செல்வத்திற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலராக யாரை தேர்வு செய்வது என்ற பேச்சு எழுந்தது. சசிகலா பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப் பட்டார். இதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ., க்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுச் செயலர், முதல்வர் என முக்கிய பதவிகள் இரண்டிலும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களே இருப்பதை ஏற்க முடியாது. பொது செயலர் பதவியை கவுண்டர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதை ஏற்க மறுத்த சசிகலா குடும்பத்தினர், சசிகலாவை பொதுச் செயலராக்க முடிவு செய்தனர். பின் அமைச்சர்களை அழைத்தனர். நேற்று காலை 10:40 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், மதுசூதனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்றனர். பகல் 1:00 மணிக்கு ஆலோசனை கூட்டம் முடிந்தது.

கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: சசிகலாவை பொதுச் செயலராக தேர்வு செய்ய, கட்சியிலும், அவரது குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சர்களை அழைத்து பேசிய சசிகலா, குடும்ப பிரச்னையை நான் பார்த்துக்

 

கொள்கிறேன். உங்களுக்குள் பிளவு வேண்டாம் எனஅறிவுறுத்தினார்.

கொங்கு மண்டலத்தினரை சமாதானப்படுத்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து பேசினார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவி, கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் என, உறுதி அளித்துள்ளார்.அதை அனைவரும் ஏற்று, சமாதானமாகி உள்ளனர்; எனவே அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. மத்திய அரசு தலையிட்டால் மாற்றம் ஏற்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
 

ஆர்.கே.நகரில் சசிகலா?


சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஆறு மாதங் களுக்குள் இடைதேர்தல் நடத்தபட வேண்டும். அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட உள்ள சசிகலா இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்ப வட்டாரம் கூறியதாவது ஆர்.கே.நகரில் சசிகலா போட்டியிடுவது உறுதி. அவரது குடும்பத்தினரில், சசிகலா கணவர் நட ராஜன், தம்பி திவாகரன் தவிர, வேறு யாரும் கட்சி மற்றும் ஆட்சியில் தலையிட மாட்டார் கள். டில்லி அரசியலை, நடராஜன் கவனிப்பார். தமிழக அரசியலையும் ஆட்சி யையும், சசிகலா கவனிப்பார். அவருக்கு திவாகரன் உதவி செய்வார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1665190

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.