Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி

சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான்.

நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவும் முழுமதி நாளிலே நிகழ்ந்துள்ளன. ஒரு முழுமதி நாளில் புத்தர் விழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடத் தொடங்கியிருக்கிறது.

சித்தார்த்தர் சாதி மத மேடு பள்ளங்களைக் கடக்க புத்தராக மாற்றம் பெற வேண்டியிருந்தது.

புத்த சங்கத்தில் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. ஆறுகள் கடலில் கலந்தவுடன் தம் பெயர்களை இழப்பது போல் சங்கத்தில் சேர்பவர்கள் சாதியையும் பெயரையும் இழந்து விடுவதாக புத்தர் கூறினார்.

யாரும் நாட்டை விட்டுப் போகச் சொல்லவில்லை. ஆனாலும் சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியேறினார். மனைவியையும், மகனையும் பிரிந்து நடந்தார். உலக மக்களின் துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டார். துன்பத்திற்கான காரணத்தையும், போக்கும் வழிகளையும் கண்டறிந்தார்.

தத்துவம் தான் குரு என்றார். நீங்களே தான் முயன்று விடுதலை தேடிக்கொள்ள வேண்டும் என்றார்.

சுகபோக வாழ்வு கூடாது என்று கூறுவது போலவே, கொடிய விரதங்களைக் கடைபிடிப்பதும் தேவையில்லை என்றார்.

தம்முடைய செயல்களிலிருந்து நாம் தப்பவே முடியாது என்றார். துன்பத்தை ஒழிக்கத் தூய வாழ்க்கை நடத்துங்கள் என்றார்.

புத்தர் எதையும் மறைவான தத்துவம் என்று கூறவில்லை. தாம் கூறும் கோட்பாடுகளும், விதிகளும் உலக முழுவதற்கும் சொந்தம் என்று கூறினார்.

மக்களை அறியாதவர் என்று எண்ணினாரேயன்றிக் கெட்டவர்கள் என்று ஒருபோதும் புத்தர் எண்ணவில்லை. தேவதத்தன் என்பவன் அவரை நீக்கிவிட்டுத் தானே புத்த சங்கத்தின் தலைவனாகச் சதி செய்தான். ஆனால் புத்தர் அவனுக்கு முழு மன்னிப்பு அளித்தார்.

பெண்களும் புனித நிலை அடைய முடியும் என்றார்.

புத்தர் எல்லா மக்களும் எளிதில் கையாளக் கூடிய அறநெறியையே வகுத்தார்.

அன்பே இதயத்துக்கு விடுதலை அளிப்பது. அதுவே ஒளி என்றார். தாய் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையைக் காப்பாற்றுவது போல் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பு காட்டக் கற்பித்தார்.

புத்தர் எக்காலத்துக்கும் சொந்தமானவராக இருக்கின்றார். ஆசிய சோதியாக மட்டுமின்றி உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாகப் புத்தரின் தத்துவம் திகழ்கிறது. அவரது வாழ்க்கையும், தத்துவமும் வையகம் பயனுற வாழ்வதற்கு வழி காட்டுகின்றன.

புத்தரின் கொள்கைகளை வளரும் தலைமுறையும், வரும் தலைமுறையும் அறிந்திட அரசு, விழா எடுத்துக் கொண்டாடுகிறது. விழா சிறப்புற அமைந்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல் - அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

http://www.vikatan.com/

அப்ப ஏனாம் புத்தன்ர நாட்டில இரத்த ஆறு ஓடுது. நர பலி எடுக்க்கிறாங்கள் புத்தன்ர ஆட்கள்.

இது தமிழுக்காக சாகிறவருக்கு தெரியேல்லையோ. எல்லாம் திராவிடனுக்கு தெரியும் சும்மா டூப்புதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் வேறு பௌத்தம் வேறு. பௌத்தத்தை ஆய்வு செய்து பின்னாளில் அம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கர் கூறுகையில் புத்தரின் போதனைகளும் மார்க்கமும் தவறாக பல நாட்டவர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவிட்டதென்றும், கடவுளை மறுத்த புத்தரை கடவுள் அவதாரமாகவே கருதிவிட்டார்கள் என்கிறார். ஆனால் இலங்கையில் அந்தப் பௌத்தமே தலை கீழாகத் தொங்க விடப்பட்டதுதான் உண்மை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

புத்தரின் பெயரைச் சொல்வதற்கே அருகதை அற்ற அற்பர்கள் சிங்களவர்கள். தங்கள் இனவெறியைக் காட்டுவதற்கு பௌத்தத்தைக் ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்பதுதான் அந்தப் புத்தர் சொன்னவை. இந்தச் சிங்களப் பிக்கு வெறியர்களோ யுத்தம் சரணம் கச்சாமி, இரத்தம் சரணம் கச்சாமி, மிலிட்ரி சரணம் கச்சாமி என்று அலைகிறார்கள்.

ஜே.வி.பி யை எடுத்துக் கொள்ளுங்கள். கொம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கைச் சிங்கள அரசின் தரகு முதலாளித்துவத்தை எதிர்த்து தொடங்கிய இயக்கம். 1971 மற்றும் 1988 காலப் பகுதிகளில் ஆளும் சிங்கள அரசு ஜே.வி.பி. யை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிங்கள இளையர்களை வேட்டையாடியது.

இன்று அந்த ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுடன் கூட்டு சேர்ந்து இனவெறியைக் கக்கி தங்களின் இடது சாரிக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கிறது.

எந்த ஒரு தேசிய இனமும் இன்னொரு தேசிய இனத்திற்கு அடிமையில்லை. இது தான் தோழர் இலெனினின் பொதுவுடமைத் தத்துவம். அந்தக் கொள்கைகளைக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்பவர்கள் தமீழீழத்தை ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ இடது சாரிப் போர்வைக்குள் ஊடுருவும் இனவெறியர்கள்(பச்சையாகச் சொல்லப் போனால் கம்யூனிசத்தில் ஒளியும் கபோதிகள்)

மார்க்ஸ் , ஏங்கல்ஸ், இலெனின் போன்றவர்களின் தத்துவங்களை ஜே.வி.பி. தலை கீழாகத் தொங்க விடுவது போல் புத்தரின் கொள்கைகளை சிங்களவர்கள் தலைகீழாகத் தொங்க விடுகிறார்கள்

அன்பின் அருள்வடிவான புத்தரின் தத்துவங்களுக்கும் மஞ்சள் துணிக்காக தாயை விற்ற சிங்கள நாய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Edited by இளங்கோ

என்ன சும்மா வீட்டை விட்டுட்டு போய் மரத்துக்கீழ இருந்தவரை தானே புத்தர் எண்டவை. நானும் தன் சின்னவயதிலேயே வீட்டைவிட்டுட்டு வேலைக்கெண்டு கடைக்கு கலைச்சுவிட்டினம்.

சிங்களம் வேறு பௌத்தம் வேறு. பௌத்தத்தை ஆய்வு செய்து பின்னாளில் அம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கர் கூறுகையில் புத்தரின் போதனைகளும் மார்க்கமும் தவறாக பல நாட்டவர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவிட்டதென்றும், கடவுளை மறுத்த புத்தரை கடவுள் அவதாரமாகவே கருதிவிட்டார்கள் என்கிறார். ஆனால் இலங்கையில் அந்தப் பௌத்தமே தலை கீழாகத் தொங்க விடப்பட்டதுதான் உண்மை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

புத்தரின் பெயரைச் சொல்வதற்கே அருகதை அற்ற அற்பர்கள் சிங்களவர்கள். தங்கள் இனவெறியைக் காட்டுவதற்கு பௌத்தத்தைக் ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்பதுதான் அந்தப் புத்தர் சொன்னவை. இந்தச் சிங்களப் பிக்கு வெறியர்களோ யுத்தம் சரணம் கச்சாமி, இரத்தம் சரணம் கச்சாமி, மிலிட்ரி சரணம் கச்சாமி என்று அலைகிறார்கள்.

ஜே.வி.பி யை எடுத்துக் கொள்ளுங்கள். கொம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கைச் சிங்கள அரசின் தரகு முதலாளித்துவத்தை எதிர்த்து தொடங்கிய இயக்கம். 1971 மற்றும் 1988 காலப் பகுதிகளில் ஆளும் சிங்கள அரசு ஜே.வி.பி. யை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிங்கள இளையர்களை வேட்டையாடியது.

இன்று அந்த ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுடன் கூட்டு சேர்ந்து இனவெறியைக் கக்கி தங்களின் இடது சாரிக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கிறது.

எந்த ஒரு தேசிய இனமும் இன்னொரு தேசிய இனத்திற்கு அடிமையில்லை. இது தான் தோழர் இலெனினின் பொதுவுடமைத் தத்துவம். அந்தக் கொள்கைகளைக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்பவர்கள் தமீழீழத்தை ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ இடது சாரிப் போர்வைக்குள் ஊடுருவும் இனவெறியர்கள்(பச்சையாகச் சொல்லப் போனால் கம்யூனிசத்தில் ஒளியும் கபோதிகள்)

மார்க்ஸ் , ஏங்கல்ஸ், இலெனின் போன்றவர்களின் தத்துவங்களை ஜே.வி.பி. தலை கீழாகத் தொங்க விடுவது போல் புத்தரின் கொள்கைகளை சிங்களவர்கள் தலைகீழாகத் தொங்க விடுகிறார்கள்

அன்பின் அருள்வடிவான புத்தரின் தத்துவங்களுக்கும் மஞ்சள் துணிக்காக தாயை விற்ற சிங்கள நாய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.