Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ?

Featured Replies

முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ?

 

எதிர்­வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­ றப்­ப­டாது விடின் அல்­லது கடந்த வருடம் நிறை­ வேற்­றப்­பட்ட பிரே­ரணை இன்னும் ஒரு வருட காலத்­திற்கு நீடிக்­கப்­ப­  டாது விடின் இலங்கை தொடர்­பான நீதிப் பொறி­ முறை விவ­காரம் அத்­ துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை­ மையே காணப்­ப­டு­வ­தாக சட்ட ஆய்­வா­ளர்கள் சுட்­ டிக்­காட்­டு­கின்­றனர்

 

நாட்டில் இன­வாத சக்­திகள் தலை­தூக்­கு­வதை காண முடி­கின்­றது. மறு­புறம் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் அர­சியல் தீர்வு விவ­காரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்பு என பல்­வேறு பர­ப­ரப்­பான விட­யங்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. அடிக்­கடி அர­சியல் களம் சூடி­பி­டிக்கும் நிலையை காண்­கின்றோம். ஆனால் இவை எல்­லா­வற்­றையும் தாண்டி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக ஏங்­கிக்­கொண்­டி­ருக்கும் நிலை தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­­மான சட்­ட­மீ­றல்கள் போன்­ற­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு எப்­போது நீதி கிடைக்கும் என பல ஆண்­டு­க­ளாக காத்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொட­ருடன் அந்த எதிர்­பார்ப்பு கலைந்து போய்­விடும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக எதிர்­வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டாது விடின் அல்­லது கடந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை இன்னும் ஒரு வருட காலத்­திற்கு நீடிக்­கப்­ப­டாது விடின் இலங்கை தொடர்­பான நீதிப் பொறி­முறை விவ­காரம் அத்­துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை­மையே காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

காரணம் ஜெனி­வாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டாமல் விடின் அல்­லது கடந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நீடிக்­கப்­ப­டாமல் விடின் இலங்கை தொடர்பில் தொடர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு மனித உரிமைகள் அலு­வ­ல­கத்­திற்கு ஆணை இல்லை என்றே சட்ட ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அதனால் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை விவ­காரம் தொடர்பில் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. அல்­லது கடந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை மேலும் ஒரு வருட காலத்­துக்கு நீடிக்­க­வேண்­டிய தேவையும் உள்­ளது. முத­லா­வது விட­யத்தை தற்­போ­தைய கள நில­வ­ரங்­களுடன் பார்க்­கும்­போது எங்கே மற்­று­மொரு பிரே­ரணை ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­றது.

காரணம் கடந்த 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பாக ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நான்கு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. அந்த நான்கு பிரே­ர­ணை­க­ளையும் அமெ­ரிக்­காவே கொண்டு வந்­தி­ருந்­தது. எனினும் தற்­போ­தைய நிலை­மையில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா இன்­னு­மொரு பிரே­ர­ணையை கொண்டு வருமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

2008 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016 ஆம் ஆண்­டு­வரை அமெ­ரிக்­காவின் ஒபாமா நிர்­வா­க­மா­னது இலங்கை விவ­கா­ரத்தில் பாரிய அக்­கறை காட்­டி­யி­ருந்­தது. அந்த அக்­க­றையே இலங்கை தொடர்பில் நான்கு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தது. அந்த வகையில் தற்­போது அமெ­ரிக்­காவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்ள நிலையில் ட்ரம்பின் புதிய நிர்­வா­க­மா­னது இலங்கை விவ­கா­ரத்தை எவ்­வாறு கையாளும் என்­பதில் இது­வ­ரையில் தெளி­வில்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்­பிடம் ஒரு கோரிக்­கை­யை முன்­வைக்கப் போவ­தா­கவும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து இலங்­கையை விடு­விக்­கு­மாறு கோரிக்கை விடுக்­க­வுள்­ள­தா­கவும் இது தொடர்பில் விசேட பிர­தி­நிதி ஒரு­வரை அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்பி வைக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்த வகையில் பார்க்­கும்­போது இலங்கை விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா எதிர்­கா­லத்தில் எவ்­வாறு செயற்­படும் என்­பது தொடர்பில் புரி­யாத நிலைமை காணப்­ப­டு­கி­றது. இந்தப் பின்­ன­ணியில் அடுத்த வருடம் நடை­பெறப் போகும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொட­ரா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில் ஆராயும் இறுதிக் கூட்­ட­மாக அமைந்து விடுமா என்­பது என்ற அச்­சமும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து காத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் அந்த மக்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய வகையில் செயற்­பா­டுகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­பட வில்லை. குறிப்­பாக யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் இலங்கை வந்த ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து கூட்­ட­றிக்­கை­யொன்றை வெளி­யிட்டார். அதில் யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் எவ்­வி­த­மான உள்­ளக விசா­ரணைக் கட்­ட­மைப்பும் முன்­னெ­டுக்கப் படா­ததன் கார­ண­மாக அமெ­ரிக்கா 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வந்­தது. அந்த பிரே­ர­ணையில் மீண்டும் நம்­ப­க­ர­மான சுயா­தீன விசா­ரணை வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த பிரே­ர­ணையை அப்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது.

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டும் இலங்கை தொடர்பில் ஜெனி­­வாவில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணை­யிலும் நம்­ப­க­ர­மான விசா­ரணை வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அத­னையும் அப்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்­தது. அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் தலை­மையில் சில நாடுகள் இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தன. அதில் இலங்கை நிலை­வரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலு­வ­லகம் விசா­ர­ணை­யொன்றை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அத­னையும் அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­த­துடன் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்க மாட்டோம் எனக் கூறி­யது. ஆனால் ஐக­கிய நாடுகள் மனித உரிமைகள் அலு­வ­ல­க­மா­னது இலங்கை தொடர்பில் திட்­ட­மிட்­ட­வாறு விசா­ரணை நடத்­தி­யது. அந்த விசா­ரணை அறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேர­வையின் 28 ஆவது கூட்டத் தொடரில் வெளியி­டப்­ப­ட­வி­ருந்­தது.

ஆனால் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து பத­விக்கு வந்த புதிய அர­சாங்கம் குறித்த அறிக்­கையை ஆறு மாதங்­க­ளுக்கு பிற்­போ­டு­மாறு கோரிக்கை விடுத்­தது. அந்த கோரிக்­கையின் பிர­காரம் விசா­ரணை அறிக்கை ஆறு மாதங்­க­ளுக்கு பிற்­போ­டப்­பட்­டது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் குறித்த அறிக்கை வெளியி­ட­ப்பட்­டது.

அந்த அறிக்­கையில் பல்­வேறு விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. விசே­ட­மாக 39 பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றில் 33 பரிந்­து­ரைகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் 6 பரிந்­து­ரைகள் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்பு நாடு­க­ளுக்கும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரை­யாக இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் இந்த மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­பன தொடர்பில் கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அந்த கூற்றை இலங்கை பெரி­தாக விரும்­ப­வில்லை. கலப்பு என்ற வச­ன­மா­னது சமஷ்டி எந்­த­ளவு தூரம் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் வெறுப்­புக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதோ அந்­த­ள­வுக்கு வெறுப்­புக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தது. எவ்­வா­றெ­னினும் அதே 30 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட ஐந்து நாடுகள் மீண்­டு­மொரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தன.

அந்த பிரே­ர­ணையில் 20 பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் மிக முக்­கி­ய­மாக பொது­ந­ல­வாய வெ ளிநாட்டு நீதி­ப­திகள், பிர­தி­வா­தி­களின் வழக்­க­றி­ஞர்கள், விசேட சட்­ட­வ­ரை­ஞர்கள், வழக்கு தொடு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் போன்றோர் இலங்­கையின் நீதித்­து­றையின் பொறி­மு­றைக்­கு­ உட்­பட்­ட­ வ­கையில் இணைந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் பொறி­மு­றையை முன்­னெ­டுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 இந்த பிரே­ர­ணையில் கலப்பு நீதி­மன்றம் என்ற விடயம் இல்­லா­வி­டினும் இவ்­வாறு பொது­ந­ல­வாய வெளிநாட்டு நீதி­ப­திகள், பிர­தி­வா­தி­களின் வழக்­க­றி­ஞர்கள், விசேட சட்­ட­வ­ரை­ஞர்கள், வழக்கு தொடு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் போன்றோர் இலங்­கையின் நீதித்­து­றையின் பொறி­மு­றைக்கு உட்­பட்ட வகையில் செயற்­பட்டு இந்த பொறி­மு­றையை முன்­னெ­டுக்க வேண்டும் என்று கூறு­வதன் மூலம் இது ஒரு வகை­யான கலப்பு நீதி­மன்றம் என்­ப­தற்கு சம­மா­ன­தாக எடுத்துக் காட்­டப்­ப­டு­கி­றது.

ஆனால் கலப்பு என்ற சொற்­பி­ர­யோகம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக வெ ளிநாட்டு பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தென கூறப்­பட்­டுள்­ளது. இந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. இத­னூ­டாக வெ ளிநாட்டு பங்­க­ளிப்­புடன் நம்­ப­க­ர­மான விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு காணப்­ப­டு­கி­றது.

ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் தென்­னி­லங்­கையில் நடை­பெறும் சம்­ப­வங்­களை பார்க்­கும்­போது எங்கே சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான விசா­ர­ணைகள் சாத்­தி­யமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது. குறிப்­பாக விசா­ரணை பொறி­முறை என்று வந்­தாலே அந்த விட­யத்தை தென்­னி­லங்­கையின் கடும் போக்­கு­வா­திகள் மிகப் பெரிய விவ­கா­ர­மாக எடுத்து நிலை­மையை குழப்­பி­விடும் அபாயம் தென்­ப­டு­கி­றது.

குறிப்­­பாக தமி­ழர்­க­ளுக்­கான நீதிப் பய­ணத்தில் பல்­வேறு தடைக் கற்கள் காணப்­ப­டு­கின்­றன என்­பதை நாம் ஏற்றுக் கொண்­டாக வேண்டும். முதலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்க வேண்டும் என அர­சாங்கம் மன­த­ளவில் விரும்ப வேண்­டி­யது அவ­சியம். அர­சாங்­கத்­திற்கு அவ்­வா­றான அர்ப்­ப­ணிப்பு இல்­லா­விடின் நீதிப்­பொ­றி­முறை விடயம் சாத்­தி­ய­மா­காது.

அதற்கு அடுத்­த­தாக தென்­னி­லங்­கையில் செயற்­படும் கடும் போக்­கு­வா­தி­களின் எதிர்ப்பை சமா­ளிப்­பதும் அவ­சி­ய­மாகும். அந்த எதிர்­பார்ப்பை சமா­ளிக்க முடி­யாது போய்­விடின் அப்­போது கூட பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதிப்­பொ­றி­முறை என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­விடும்.

அதையும் தாண்டி ஜெனி­வாவில் அடுத்த மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டாது விடின் அல்­லது ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை நீடிக்­கப்­ப­டாது விடின் அப்­போது கூட பொறுப்­புக்­கூறல் பொறி­முறை சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விடும்.

  யுத்தம் முடிந்­ததன் பின்னர் கிட்­டத்­தட்ட 8 வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்கள் ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். ஜெனிவா மூலம் தமக்கு எவ்­வா­றா­வது நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு இருந்­தது. ஆனால் தற்­போது உலக அளவில் ஏற்­பட்­டுள்ள அதி­கார மாற்­ற­மா­னது எங்கே இந்த நம்­பிக்­கையை சீர்­கு­லைத்­து­வி­டுமா என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.

 ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 34 ஆவது கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் தீர்க்­க­மா­ன­தொரு கூட்­டத்­தொ­ட­ராக அமையப் போகின்­றது. இந்த கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகள் எடுக்கப் போகின்ற நட­வ­டிக்­கை­யி­னூ­டா­கவே தமிழ் மக்­க­ளுக்­கான எதிர்­கால நீதி தங்கியிருக்கின்றது என்று கூறினால் அது பெரும்பான்மையாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எனவே தமிழர் தரப்பு தலைவர்கள் இம்முறை ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் இராஜதந்திர ஏற்பாடுகளே பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அறிக்கையொன்றினை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைனும் இலங்கை கடந்த வருடப் பிரேரணையை எவ்வாறு நிறைவேற்றியது என்று விளக்கமளித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்வார்.

அத்துடன் இலங்கைக்கு கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்ட விசேட அறிக்கையாளர்களும் தமது அறிக்கைகளை தாக்கல் செய்யவுள்ளனர். அந்த வகையில் 34 ஆவது கூட்டத் தொடர் என்பது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது இந்த விடயங்கள் அவ்வாறே கைவிடப்பட்டு விடுமா என்பதை தீர்மானிக்கின்ற கூட்டத் தொடராக 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் அமையும்.  சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவார்களா?  

ரொபட் அன்­டனி 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-10#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.