Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரப்ப முடியாத இடைவெளியில் நீடிக்கப்போவது யார் ?

Featured Replies

நிரப்ப முடியாத இடைவெளியில் நீடிக்கப்போவது யார் ?

 

ஜெய­ல­லி­தா­வுக்கு அடுத்து அ.தி.­மு.­க.வின் தலைமை யார் ..-? எதிர்­பார்ப்­புடன் நாடே காத்­தி­ருக்­கின்­றது. ஜெய­ல­லி­தாவின் வெற்­றி­டத்தை நிரப்ப கூடிய வகையில் அ.தி.மு.க.வில் எவரும் இல்­லாத போதிலும் அதன் அடுத்த தலை­மையை ஜெய­ல­லி­தாவின் நிழ­லா­கவும் உற­வா­கவும் கடை­சி­வரை இருந்த அவ­ரது தோழி சசி­கலா கைப்பற்­றக்­கூடும் என்­பதே அனை­வ­ரது ஊக­மா­கவும் உள்­ளது. ஆயினும் , அ.தி.மு.க. தலைமை அரி­ய­ணையில் ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­கலா அமர்த்­தப்­ப­டு­வாரா அல்­லது நிரா­க­ரிக்­கப்­ப­டு­வாரா என்ற விவாதம் வீதி­தோறும் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது.

அ.தி.மு.க.வில் தன்­னி­க­ரில்லா தலை­வ­ராக விளங்­கிய ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்குப் பிறகு, அக்­கட்­சிக்குள் நடை­பெறும் அதி­கார மாற்­றத்­துக்­கான நிகழ்­வுகள் தேசிய அளவில் உன்­னிப்­பாக கவ­னிக்­கப்­ப­டு­கின்­றன. தி.மு.க. உள்­ளிட்ட தமி­ழக அர­சியல் கட்­சிகள் மட்­டு­மின்றி பா.ஜ.க., காங்­கிரஸ் போன்ற தேசியக் கட்­சி­களின் தலை­மை­களும் அ.தி.மு.க.வின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் பற்றி தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கின்­றன.

தற்­போ­தைய பாரா­ளு­மன்ற மக்­க­ள­வையில் பா.ஜ.க., காங்­கிரஸ் ஆகிய கட்­சி­க­ளுக்கு அடுத்து 37 உறுப்­பி­னர்­க­ளுடன் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக உள்­ளது அ.தி.மு.க. மாநி­லங்­க­ள­வை­யிலும் இக்­கட்­சிக்கு 13 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இரு அவை­க­ளையும் சேர்த்து மொத்தம் 50 உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள ஒரே மாநில கட்சி அ.தி.மு.க. மட்­டுமே.

ஜெய­ல­லிதா எனும் தலை­மைக்கு கிடைத்த மாபெரும் மக்கள் செல்­வாக்­குதான் அ.தி.மு.க.வின் இத்­த­கைய பெரு­மைக்கு காரணம். இவ்­வாறு அ.தி.மு.க.வை வழி­ந­டத்திச் சென்ற பலம் பொருந்­திய தலை­வ­ரான ஜெய­ல­லி­தாவின் மறைவு, அக்­கட்­சிக்குள் மிகப்­பெரும் வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அ.தி.மு.க.வை தலை­மை­யேற்று வழி­ந­டத்தக் கூடிய அடுத்த தலைவர் யார் என்­பதை அறிந்து கொள்­வதில் இந்­தியா மட்டுல்­லாது உலக தமி­ழர்­க­ளி­டமும் பெரும் எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஜெய­ல­லிதா தனது அர­சியல் வாரிசு என்று யாரையும் கைகாட்­ட­வில்லை. இந்­நி­லையில் சசி­கலா தலை­மையை வலி­யு­றுத்தும் ஒரு குழு, கட்சி நட­வ­டிக்­கை­களில் சசி­கலா தலை­யீட்டை விரும்­பாத மற்­றொரு குழு என அ.தி.மு.க.வில் பிளவு ஏற்­படும் என்ற பேச்சு உள்­ளது. அவ்­வாறு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்­பட்டால் எம்.எல்.ஏ.க்கள் மத்­தி­யிலும் அந்த பிளவு பிர­தி­ப­லிக்கும். பல­மான எதிர்க்­கட்­சி­யாக திகழும் தி.மு.க.வுக்கு இன்னும் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆத­ரவு கிடைத்தால் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்­து­விடும். ஆகவே, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்­ப­டு­மானால், அதில் ஒரு பிரி­வி­னரின் ஆத­ரவைப் பெற்று தி.மு.க. நிச்­சயம் ஆட்சி அமைத்­து­விடும் என்று பலரும் பேசு­கின்­றனர். ஜெய­ல­லிதா இல்­லாத அ.தி.மு.க.வால் உட­னடி பலன் பெறும் கட்­சி­யாக தி.மு.க.தான் இருக்கும் என்றும் பேசப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், தேசிய அர­சி­ய­லிலும் அ.தி.மு.க.வின் அடுத்­த­கட்ட தலைவர் குறித்த எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு தற்­போது மிகவும் நெருக்­க­டி­யான கால­கட்­டத்தை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. 500 மற்றும் 1000 ரூபா நாண­யத்­தாள்கள் செல்லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­பட்­டமை அதன் மக்கள் செல்­வாக்கை ஆட்டம் காண­ச்செய்­துள்­ளது.

அத்­தோடு பாரா­ளு­மன்ற மக்­க­ள­வையில் பலம் பொருந்­திய கட்­சி­யாக பா.ஜ.க .திகழ்ந்­தாலும், மாநி­லங்­க­ள­வையில் போதிய உறுப்­பி­னர்கள் அக்­கட்­சிக்கு இல்லை. அதனால் அரசின் மிக முக்­கி­ய­மான முடி­வுகள் வெற்றி பெற வேண்­டு­மானால் மாநி­லங்­க­ள­வையில் தோழமைக் கட்­சி­களின் ஆத­ரவை நாட வேண்­டிய நிலையில் உள்­ளது. இந்தச் சூழலில் அ.தி.மு.க.வின் 13 மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை தொடர்ந்து தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் பா.ஜ.க.வுக்கு உள்­ளது. ஆகவே, அ.தி.மு.க.வின் புதிய தலைமை எவ்­வாறு அமையப் போகி­றது என்­பதை பா.ஜ.க. தலை­மையும் மிக உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கி­றது. இதே­போல காங்­கிரஸ் உள்­ளிட்ட மற்ற பல கட்­சி­க­ளுக்கும் அ.தி.மு.க.வின் புதிய தலைமை குறித்து பல எதிர்­பார்ப்­புகள் நில­வு­கின்­றன.

இதற்­கி­டையே, சசி­க­லாவின் தலை­மையை அ.தி.மு.க. தொண்­டர்கள் ஏற்றுக் கொள்­வார்­களா, மாட்­டார்­களா என்­ப­துதான் தற்­போது பிர­தான அர­சியல் விவாதப் பொரு­ளா­கி­யுள்­ளது. ஜெய­ல­லி­தாவின் அர­சியல் பிர­வேச காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர் .மறை­வின்­போது மிக மிக நெருக்­க­டி­யான காலத்தில் அவ­ருக்கு உற்ற துணை­யாக உட­னி­ருந்­தவர் சசி­கலா மட்­டுமே. ஜெய­ல­லி­தா மர­ணிக்கும் வரையில் அரு­கி­லேயே இருந்து கவ­னித்துக் கொண்­டவர்.

ராஜாஜி அரங்கில் பொது­மக்­களின் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த ஜெய­ல­லி­தாவின் உடல் அருகே அவ­ரது முதல் பிர­தி­நி­தி­யாக சசி­க­லாதான் நின்று கொண்­டி­ருந்தார். பிர­தமர் நரேந்­திர மோடி உள்­ளிட்ட தேசியத் தலை­வர்கள் முதல் உள்ளூர் தலை­வர்கள் வரை தங்­க­ளது இரங்­கலை சசி­க­லா­வி­டம்தான் தெரி­வித்துச் சென்­றனர். அத்­தோடு ஜெய­ல­லி­தாவின் உடலில் போர்த்­தி­யி­ருந்த தேசிய கொடி கூட இறு­தி­யாக அவ­ரது உறவு என்ற முறையில் சசி­க­லா­வி­டமே பூரண அரசமரி­யா­தை­யுடன் வழங்­கப்­பட்­டது.

ஜெய­ல­லிதா உடல் கிடத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மேடையைச் சுற்­றிலும் சசி­கலா குடும்­பத்­தினர் வீற்­றி­ருந்­தனர். மிக நீண்ட நாட்­க­ளாக அ.தி.முக.வுடன் வெளிப்­ப­டை­யான தொடர்பு இல்­லாமல் ஜெய­­ல­லி­தாவால் ஒதுக்­கி­வைக்­கப்­பட்­டி­ருந்த சசி­க­லாவின் கணவர் நட­ராஜன், தம்பி திவா­கரன் போன்­ற­வர்­களும் ஜெய­ல­லி­தாவின் உடலைச் சுற்றி நின்­றதை தமி­ழக மக்கள் அனை­வரும் தொலைக்­காட்­சி­களில் பார்த்­தனர். இந்தக் காட்­சிகள் யாவும் ஜெய­ல­லி­தா­வுக்கு மிகவும் வேண்­டப்­பட்ட முதல் நபர் சசி­க­லாதான் என்­பதை நாட்­டுக்கு உணர்த்­து­வ­தாக இருந்­தன.

மேலும், ஜெய­ல­லி­தாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருந்த கட்சி, தற்­போது சசி­க­லாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் சென்று விட்­ட­தையே இது காட்­டு­வ­தா­கவும், அ.தி.மு.க.வின் அதி­கா­ர­மிக்க அமைப்­பான பொதுக்­குழு விரை­வி­லேயே கூடி சசி­க­லாவை கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக முறைப்­படி தேர்வு செய்யும் என்றும் ஒரு தரப்­பினர் கூறு­கின்­றனர்.

அதே­நே­ரத்தில் ஜெய­ல­லி­தாவை தங்கள் உயி­ரினும் மேலான தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்ட அ.தி.மு.க. தொண்­டர்கள், சசி­க­லாவை தலை­வ­ராக ஏற்றுக் கொள்­வார்­களா என்­பது சந்­தே­கமே என்ற கருத்­தையும் பர­வ­லாக கேட்க முடி­கி­றது.

சசி­கலா மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­னரை கட்­சியில் இருந்து ஜெய­ல­லிதா விலக்கி வைத்­த­போது அ.தி.மு.க.வின் அடி­மட்டத் தொண்­டர்கள் மத்­தியில் பெரும் ஆர­வா­ரமும், மகிழ்ச்­சியும் ஏற்­பட்­டது என்­பது யாவரும் அறிந்த உண்மை. அதே­போல சொத்துக் குவிப்பு வழக்கில் தண்­டனை பெற்று பெங்­களூரு சிறையில் ஜெய­ல­லிதா அடைக்­கப்­பட்­டி­ருந்த காலத்தில் தமி­ழ­கத்தில் ஏற்­பட்ட கொந்­த­ளிப்பு அனை­வரும் அறிந்­ததே. ஜெய­ல­லி­தா­வுக்கு இத்­த­கைய துயரம் ஏற்­பட சசி­க­லாவின் குடும்­பத்­தி­னரே காரணம் என்ற புலம்­பலை வெளிப்­ப­டை­யா­கவே அ.தி.மு.க.வின­ரிடம் காண முடிந்­தது. இதை ஜெய­ல­லி­தாவும் உணர்ந்­து­கொண்ட கார­ணத்­தா­லேயே கட்­சியின் உயர் பத­வி­க­ளுக்கு சசி­க­லாவை முன்­னி­றுத்­த­வில்லை. அண்­மைக்­கால கட்­சியின் செயற்­பா­டு­க­ளிலும் சசி­க­லாவின் வெளிப்­ப­டை­யான தலை­யீ­டுகள் எதுவும் தெரி­யா­ம­லேயே ஜெய­ல­லிதா பார்த்துக் கொண்டார். இந்தச் சூழலில் தற்­போது சசி­க­லாவை அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்­புக்கு முன்­னி­றுத்­தினால் அதை தொண்­டர்கள் ஏற்றுக் கொள்­வார்­களா என்­பது மிகவும் சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­துதான்.

 ‘‘ஜெய­ல­லிதாவின் உடல் கிடத்தி வைக்கப்­பட்­டி­ருந்த மேடையில் சசி­கலா குடும்ப அங்­கத்­தி­னர்கள் நிறைந்­தி­ருந்­ததை கண்டோம். கட்­சி­யிலும், ஆட்­சி­யிலும் சசி­கலா குடும்­பத்தின் ஆதிக்கம் இனி எவ்­வாறு இருக்கும் என்­ப­தற்­கான சிறு அடை­யா­ளமே இந்தக் காட்­சிகள். ஒரு­வேளை இதை அ.தி.மு.கவினர் ஏற்­றுக்­கொண்­டா­லும்­கூட, தமி­ழக மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்­களா என்­பது கேள்விக் குறியே ...

பன்னீர்செல்­வத்தை முதல்­வ­ராக்­கு­ண­வதில் கூட சசி­க­லா­ கு­டும்­பத்­தி­ன­ருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்­பட்­டாலும் ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்கும் போது இரு­முறை பன்­னீரே முதல்வர் பொறுப்பு வகித்தார் என்­பதால் சசி­கலா பன்­னீரை நிய­மிக்க ஒத்­துக்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

முதல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் அ.தி.மு.க.வின் தலை­மையை ஏற்­று­ந­டத்­தலாம் என்ற கருத்து எழுந்­தாலும் அவரால் கட்­சியை நடத்த முடி­யுமா? தனித்து இயங்­க­மு­டி­யுமா போன்ற கேள்­விகள் பல எழு­கின்றன.

இவர் ஜெய­ல­லி­தாவின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மா­னவர், பணி­வுக்கும் விசு­வா­சத்­துக்கும் பெயர்­போ­னவர் என்­றாலும், 2016ஆம் ஆண்டு சட்­டப்­பே­ரவைத் தேர்தல் சம­யத்தில், அவர் மீதும் வேட்­பாளர் பேரக் குற்­றச்­சாட்­டுகள் எழுந்­ததை மறுக்க முடி­யாது. தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்­பு­க்கூட அவ­ருக்கு மறுக்­கப்­படும் என்ற அள­வுக்கு இந்த விவ­காரம் அப்­போது பேசப்­பட்­டது. ஜெய­ல­லிதா அவரை பார்க்க மறுத்­த­தாக கூட செய்­திகள் பர­வின. இருப்­பினும் எல்­லா­வற்­றையும் தாண்டி மீண்டும் தேர்­தலில் அவ­ருக்கு வாய்ப்­ப­ளித்தார் ஜெய­ல­லிதா. மீண்டும் அமைச்­ச­ரா­கவும் ஆக்­கினார். அந்த நம்­பிக்­கையின் தொடர்ச்­சி­யா­கவே இப்­போதும் ஜெ. நிர்­வ­கித்த தமி­ழக முதல்­வ­ரெனும் மிகப்­பெ­ரிய பொறுப்பை கையேற்­றுள்ளார் பன்­னீர்­செல்வம்.

தமி­ழக அர­சி­யலின் மிகப் பெரிய வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஜெய­ல­லி­தாவின் மறைவைத் தொடர்ந்து, அவ­ரது நாற்­கா­லியில் அமரும் ஓ.பன்­னீர்­செல்­வத்தின் முன்னால் இப்­போது மிகப் பெரிய பொறுப்­பு­களும் சவால்­களும் காத்­தி­ருக்­கின்­றன. இதற்கு முன்னர் இடை­க்கா­லத்தில் அவர் முதல்­வ­ராக இருந்­த­போது முதல்வர் நாற்­கா­லியில் கூட அமர மறுத்தார். அத்­தோடு தமி­ழக அரச நிர்­வாகம் முடங்­கி­விட்­ட­தாக அப்­போது ஊட­கங்கள் கடு­மை­யாக விமர்­சித்­தன. எனவே அது­போல முந்­தைய கால அணு­கு­மு­றையை அவர் இனியும் தொடர முடி­யாது. அவர் தனித்துச் செயற்­பட்­டுக்­காட்ட வேண்டும். ஆனால் அவர் மத்­திய அர­சுக்கோ அல்­லது தொடர்ந்து அ.தி.மு.க.வில் உள்ள வேறு அதி­கா­ர­ மை­யத்­துக்கோ தலை­யாட்டு பொம்­மை­யாக இருந்து விடு­வாரோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.

கட்­சிக்குள் நிழல் அதி­கா­ரங்­க­ளையும் புதி­தாக உரு­வெ­டுக்கும் அதி­கார மையங்­க­ளையும் சமா­ளித்துச் செல்ல வேண்டும் ஆனால் எம். ஜி.ஆரும் ஜெய­லி­தாவும் இரா­ணுவ கட்­ட­மைப்பு போல கட்­டி­யெ­ழுப்­பிய அ.தி­.மு.க. எனும் ­பே­ரி­யக்­கத்தை தனித்து வழி­ந­டத்தக் கூடிய இய­லுமையும் ஆளுமையும் பன்னீர் செல்­வத்­திடம் இருக்­கின்­றதா என்­பது சந்­தே­கமே... சசி­கலா கட்­சியை வழி­ந­டத்த முய­லலாம். ஆனால் ஏற்­க­னவே அவ­ரையும் அவ­ரது கணவர் நட­ராஜன் உள்­ளிட்­டோ­ரையும் ஜெய­ல­லிதா துரோ­கிகள் என கட்­சியை விட்டு ஒதுக்கி வைத்­தி­ருந்­தமையை மறக்­க­மு­டி­யாது. இறு­தி­வரை நட­ரா­ஜனை கட்­சிக்குள்ளேயும் ஜெய­ல­லிதா அனு­ம­திக்­க­வில்லை. ஆயினும் அவ­ரது மறைவை அடுத்து அ.தி.மு.க.வை யாரும் உள்­ளுக்குள் இருந்து உடைக்க முடி­யாது என நட­ராஜன் அறிக்கை வெளியிட்­டி­ருந்­தமை. மற்றும் அவர்­க­ளது குடும்ப செல்­வாக்கு கட்­சியில் ஆதிக்கம் செலுத்த முயல்­வது... ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்கள்.. ஜெய­ல­லிதா மெல்லக் கொல்லும் விஷம் வைத்து கொலை செய்­ய­ப்பட்­டி­ருப்­ப­தா­கவும் பல நாட்­க­ளுக்கு முன்பே இறந்து விட்­ட­தா­கவும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பரவி வரும் செய்­திகள்.. என்­பன நிச்­ச­ய­மாக மக்கள் மத்­தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. எனவே அ.தி.மு.க.வின் தலைமையை சசிகலா ஏற்பது என்பது அதன் செல்வாக்கை சரியச் செய்யும் அதேவேளை பன்னீரால் ஜெயலலிதா போல தனித்து செயற்பட முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின் வாரிசு இல்லாமல் தனித் துவிடப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னவாகும் என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். 

ஒரு மனிதன் இந்த பூமியில் வாழும் போது குறிப்பிட்ட ஒரு துறையில் கொடிகட்டிப் பறப்பானாயின் அவனுக்கு பின்னர்அவனது வம்சமோ அல்லது அவன் மீதும் குறித்த துறைமீதும் பற்றுக்கொண்டவரோ அதனை பின்பற்றி குறித்த இருப்பை அவனுக்கு பின்னர் உலகத்தில் நிலைநிறுத்த வேண்டுமென அனைவரும் எதிர்ப்பார்பார்கள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மக்கள் செல்வாக்கு பெற்ற உய ர்ந்த சிறந்த தலைமைகள் பல தமக்கு பிறகு தமக்கு நிகரான ஒரு தலைமையை ஏற்படுத்த தவறிவிடுகின்றன... இதனால் அவர்களை நம்பி அவர்களால் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் மேய்ப்பன் இல் லாத மந்தைகள் கூட்டம் போல சிதறி தனது அடையாளத்தை இழந்து தனித்துவத்தை தொலைத் துவிடுகின்றன. இதுபோன்ற ஒரு இக்கட்டான நிலையில்தான் தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியான அ.தி.மு.க. சிக்கிக் கொண்டுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-10#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.