Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாபா வருகை... கொதிக்கும் கி.வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவாளரான முதல்வரின் வீட்டுக்கு சாய்பாபா சென்றதும், முதல்வரின் முன்பாகவே அமைச்சர் துரைமுருகன் மோதிரம் கேட்டு வாங்கியதும் பலவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்தது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்ன நினைக்கிறார்? பெரியார் திடலில் அவரைச் சந்தித்தபோது...

‘‘ஒரு பகுத்தறிவாளரின் வீட்டுக்குள் சென்று பாபா நடத்தி வந்த சந்திப்பு... அங்கே நடந்த சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

‘‘கலைஞர் என்றைக்குமே ஒரு நாத்திகர். சாய்பாபாவைத் தேடி அவர் போகவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் எல்லாம் பாபாவின் காலடியில் போய் உட்கார்ந்திருக்கும்போது, அதே பாபாவைத் தன் வீடு தேடி வரவழைத்தவர் கலைஞர். கிருஷ்ணா நதிக் கால்வாய்ப் பணிக்கு 200 கோடி ரூபாய் உதவியவருக்கு நன்றி சொல்லி யிருக்கிறார் கலைஞர், அவ்வளவுதான். இந்தியாவிலேயே முதன் முதலாக ஓர் அரசியல் தலைவரை வீடு தேடிப் போய் சாய்பாபா சந்தித்தது இதுதான் முதல் தடவை.

ஆனால், தி.மு.க. அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன், ‘முன்கூட்டியே எதையும் தெரிந்துகொள்கிற சக்தி படைத்தவர் பாபா. தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்குத் தந்தார்’ என்றதுதான் நகைப்புக்கு இடம் தரக்கூடியது. பாபாவுக்கு எதையும் வரவழைக்கும் சக்தி இருப்பின், மோதிரத்துக்குப் பதில் பூசணிக்காயை வரவழைப்பாரா? பாபா செய்வது மோடிமஸ்தான் வேலை என்று தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேடைகளில் எங்கள் தோழர்கள் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அது சகோதரர் துரைமுருகனுக்கும் தெரியும். மேஜிக் காட்சியைக் கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை, கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கிற ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது.

அதேபோல தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும், தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர். தங்கள் வீட்டுக்கு வந்தவரை மதிக்க வேண்டும் என்பதால் காலில் விழுந்திருக்கலாம் . அதைக் கண்டிக்க மாட்டோம். அதை எதிர்த்துப் பிரசாரமும் செய்ய மாட்டோம். கலைஞரின் மூத்த தமக்கையாருக்கே கடவுள் நம்பிக்கை இருந்தது. எங்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பற்றியெல்லாம் கவலை இல்லை. கலைஞர் ஒருவேளை பாபாவின் ஆசிரமத்துக்குப் போய் பூஜை செய் திருந்தால்தான், அது தவறு. ஆகவே, அந்தச் சந்திப்பைப் பொறுத்தவரை கலைஞர் சரி, துரைமுருகன்தான் தப்பு!

"சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு முதல்வர் சென்றார். அடுத்து, மாதா அமிர்தானந்தமயி விஷயத்திலும் அரசு நட்பு பாராட்டு வதாகத் தோன்றுகிறதே..?"

"சுனாமி தாக்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதா அமிர்தானந்தமயி வீடு கட்டித் தரு கிறார். தமிழக மக்களுக்கும் அரசுக்கும் இது அவர் செய்கிற உதவி. அதற்குப் பதில் மரியாதை செய்தாலும் தவறு இல்லை. அந்த வகையில் சாய்பாபா வும் சங்கராச்சாரியாரும் பெரியார் திடலுக்கு வந்தாலும்... நாங்களும் வரவேற்போம்!’’

‘‘பெரியார் படம் திரையிடப்படும் தியேட்டர்களின் வாசலில் இந்து முன்னணித் தொண்டர்கள் போராடுவார்கள் என்று ராமகோபாலன் அறிவித்திருக்கிறாரே?’’

‘‘மகிழ்ச்சி! ராமகோபாலனிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் அவர் அந்தப் போராட்டத்தை வேகத்துடன் நடத்த வேண்டும். ஒரு தியேட்டரைக்கூட விட்டுவிடக் கூடாது. ‘பெரியார்’ படத்துக்கான விளம்பரச் செலவுகளை நாங்கள் குறைத்துக்கொள்கிறோம். காரணம், எங்களின் எதிரிகளே அதை விளம் பரப்படுத்திவிடுவார்கள்.

வைரமுத்து எழுதிய பாடலுக்காக அவர்கள் கொதிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவே சொல்லி விட்டார்... ‘என் தாத்தா எழுதிய வரிகளை நான் மீண்டும் கொடுத்திருக்கிறேன்’ என்று. அதை மாற்றச் சொல்வது பெரியாரின் கருத்துக்களையே மாற்றச் சொல்வது மாதிரி. தமிழக சினிமா வரலாற்றில் எந்தவொரு படமும் இவ்வளவு எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்காது. பெரியாரைப் படமாக எடுத்தாலும் பிரச்னை, பாடமாக வைத்தாலும் பிரச்னை என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் இன்றைக்கும் வாழும் சக்தியாக இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறைக்கு அவர் எடுத்துச் சொன்ன சில உண்மைகள் தெரிந்துவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருக்கிறார்கள். காலம் அவர்களைத் துடைத்தெடுத்துவிடும். பெரியா ரின் பிள்ளைகளாக ஒவ்வொரு தமிழனும் மாறுகிற காலம் வரும்!’’

‘‘சாய்பாபா, அமிர்தானந்தமயி போன்றவர்கள்... அரசுக்கு, பொது நன்மைக்காக நிறைய உதவுகிறார்கள். திராவிடர் கழகத்தின் அறக்கட்டளையில் இருந்து பொது நன்மைக்காக நீங்களும் அரசுக்கு நிதி உதவி அளிக்கலாமே?’’

‘‘சாய்பாபாவுக்கோ, அமிர்தா அம்மையாருக்கோ உலகெங்கிலும் உள்ள விசிறிகள் ஆன் மிகத்தின் பெயரால் கோடிகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நாங்களோ கட்சிக்கு பெரியார் கொடுத்துவிட்டுப் போன சொத்தை வைத்து ஐம்பது கல்வி நிறுவனங்களை நடத்துகிறோம். மக்களின் நல்வாழ்வுக்காகத்தான் இதை நடத்துகிறோம். வருடந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எங்களது கல்வி நிறுவனங்களில் படித்து வெளியில் வருகிறார்கள். பெண் கல்வி, சுயமரியாதைத் திருமணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த இடைவிடாது நிகழ்ச்சிகளும் நடத்து கிறோம்.

‘விடுதலை’ பத்திரிகை நஷ்டத்தில் இயங்கினாலும் சமூகத்தின் தேவை கருதி அதைத் தொடர்ந்து நடத்திவருகிறோம். இதெல்லாமும் மக்கள் பணிதான். எங்களுக்கு நிதி ஆதாரம் அதிகமாக இருந்தால், பாபாவை விட பல ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்குக் கொட்டிக் கொடுப்போம்!’’

‘‘அ.தி.மு.க, தி.மு.க. என்று எது ஆளும் கட்சியாக வந்தாலும், அந்தக் கட்சியுடன் தோழமைப் போக்கைக் கடைப்பிடிப்பதாக உங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதே?’’

‘‘ஆமாம், அனுசரித்துப்போவது உண்மைதான்! எங்களின் கொள்கைகளுக்கு முரணாகப்போனால், அதையும் விமர்சிக்கிறோம். கோசி மணி, சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போனதைக் கண்டித்தோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும், அங்கே எங்கள் கொள்கைகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தபோது அதையும் கண்டித்தோம். திராவிடர் கழகம் என்பது ஒரு சமுதாய இயக்கம். எங்களின் கொள்கைகளைச் செயல்படுத்துகிற ஆட்சியாக நான் கலைஞரின் ஆட்சியைப் பார்க்கிறேன். ஆமாம், நான் தி.மு.க. ஆட்சியை பெரியாரின் ஆட்சியாகவே பார்க்கிறேன்!’’

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்.. திருமணம் என்பதே பெண்களுக்கு சாபக்கேடு என்றார். அதுவே பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாக்குகிறது என்றார். நீங்க என்னடான்னா சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கிறேளே.. பெண்களை சாபக்கேட்டுக்க தள்ளி விடுறேளே. பேசாம பெண்களை எல்லாம் பெரியார் இருக்கும் சொர்க்கத்துக்கு அனுப்பி விடுங்களேன். அவர் உரிமையோடு கோடி கலியாணம் கட்டி வாழ்வார்..!

வீரமணி ஐயாவுக்கும் பெரியார் போல நல்லா நாக்குச் சுழரும் போல.

பெரியாரை சினிமாவில காட்டித்தான் இளைய சமுதாயம் அவரைப் பற்றி அறிய வேண்டிய நிலை இருக்கென்றால் பெரியாரின் கொள்கைகள் பற்றி பேசவும் வேண்டுமா...?!

இருக்கிறது காணாதென்று கலியாணம் செய்யாமலே குடும்பம் நடத்தச் சொல்லப் போறேள் என்றது தெரியுது. காணும் ஐயா 100 கோடியைத் தாண்டிட்டு சனத்தொகை.

அதென்ன பெரியாரின் வாரிசு தன்ர வீட்டுக்குள்ளேயே பெரியாரின் கொள்கையை பின்பற்ற வைக்க முடியல்ல.. நாட்டுக்குள்ள மட்டும் பெரியார் ஆட்சியா...??! எதோ அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிட்டு போக்கிட்டிருக்க வேண்டியதுதான். :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.