Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுச்செயலாளர் யார்? இழுபறியில் அ .தி.மு .க.

Featured Replies

பொதுச்செயலாளர் யார்? இழுபறியில் அ .தி.மு .க.

paneer-703c4e5c206d4e037ee9a6467c578ea339607640.jpg

 

அ.தி.மு.க.வின் அதி­கார மைய­மாக இருந்த அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரான ஜெய­ல­லிதாவின் மர­ணத்தின் பின்னர் அடுத்த பொதுச் செய­லாளர் யார் என்ற கேள்வி கடந்த சில நாட்­க­ளாக அ.தி.மு.க. தொண்­டர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் மத்­தியில் காணப்­பட்­டது. அ.தி.மு.க. தொண்­டர்­க­ளிடம் மட்­டு­மன்றி, தமி­ழகம் மற்றும் அகில இந்­திய ரீதியில் ஒரு எதிர்ப்­பார்ப்பும் நில­வி­யது.

அ.தி.மு.க. யாப்பின் படி அந்தக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ருக்கே சகல அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. புதி­ய­வர்­களை சேர்ப்­பது, நீக்­கு­வது, அமைச்­சர்­களை நிய­மிப்­பது, நீக்­கு­வது, தேர்­தலில் போட்­டி­யி­டு­வது, மாவட்ட செய­லா­ளர்கள் அனை­வ­ரையும் நிய­மிப்­பது உள்­ளிட்ட அனைத்தும் பொதுச் செய­லா­ளரின் அதி­கா­ரத்­திற்­குட்­பட்­ட­தாகும். அந்த வகையில் பொதுச்­செ­ய­லா­ள­ராக இருந்த ஜெய­ல­லி­தாவின் கையில் அனைத்து அதி­கா­ரங்­களும் இருந்­தன.

ஜெய­ல­லி­தாவை எதிர்த்துப் பேசவோ, அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ எவ­ருக்கும் தைரியம் இருந்­த­தில்லை. கட்­சிக்கு எதி­ரா­கவோ அல்­லது தலை­மைக்கு எதி­ரா­கவோ எந்­த­வொரு உறுப்­பி­ன­ருமே செயற்­ப­ட­வில்லை. இதற்கு ஜெய­ல­லி­தாவின் ஆளு­மைதான் காரணம். சிறந்த நிர்­வா­கத்­திறன், நேர்மை, கட்­டுப்­பாடு, பார­பட்­ச­மின்மை என்­ப­வையே இதற்குக் கார­ண­மாகும்.

கட்­டுக்­கோப்­புடன் இருந்த அ.தி.மு.க. என்ற பெரும் கட்சி, ஜெய­ல­லிதா மறைந்து, இந்த ஒரு­வார காலத்தில் பலத்த சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. பொதுச்­செ­ய­லாளர் பத­விக்­கா­கவும், முத­ல­மைச்சர் பத­விக்­கா­கவும் கட்சி பிள­வ­டையும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்குப் பின்னர் முத­ல­மைச்சர் பதவி ஓ.பன்னீர் செல்­வத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், அதை­விட உயர் அதி­கா­ரங்­களைக் கொண்ட கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி யாருக்கு என்­பதில் சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. 25 வரு­ட­கா­ல­மாக ஜெய­ல­லி­தா­வுடன் நிழ­லாக இருந்து வந்­துள்­ள­துடன், அர­சி­ய­லிலும் தமது ஆதிக்கம் செலுத்­தி­யவர் சசி­கலா நட­ராஜன். அவ­ருக்கு பொதுச் செய­லாளர் பத­வியை தன­தாக்கிக் கொள்ள வேண்­டு­மென்ற ஆசை இல்­லாமல் இல்லை.

இது சசி­க­லா­வுக்கு மட்­டு­மல்ல, அவ­ரது கணவர் நட­ராஜன், சசி­கலா அக்­காவின் மகன் தின­கரன், தம்பி திவா­கரன் ஆகி­யோ­ரும்­கூட பொதுச்­செ­ய­லாளர் பத­வியைப் பெறு­வ­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். இவர்கள் தங்­க­ளுக்கு ஆத­ரவு தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இவர்கள் அனை­வரும் ஜெய­ல­லி­தாவால் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­வர்­க­ளாகும். இதில் சசி­க­லாவும் அடங்­குவார். பின்னர் பகி­ரங்க மன்­னிப்பு கேட்டு மீண்டும் ஜெய­ல­லி­தா­வுடன் இணைந்து கொண்­ட­வர்தான் சசி­கலா.

ஆனால், ஏனை­ய­வர்கள் (நட­ராஜன், தின­கரன், திவா­கரன், மகா­தேவன்) ஜெய­ல­லிதா உயி­ருடன் இருந்­த­வரை அவர் முன்னாள் வரு­வ­தற்கு அஞ்சி, மறைந்­தி­ருந்த நிலையில், ஜெய­ல­லிதா உயி­ரி­ழந்து உடல் ராஜாஜி மண்­ட­பத்தில் வைத்­தி­ருந்­த­போது, அருகில் நின்று கொண்டு ஆக்­கி­ர­மித்­த­படி இருந்­தனர். ஜெய­ல­லி­தாவின் உடல் அருகில் சசி­க­லாவின் குடும்ப உற­வி­னர்கள் மட்­டுமே இருந்­தனர். இதனைக் கண்ட கட்­சியின் விசு­வா­சிகள், சிரேஷ்ட தலை­வர்கள் அனை­வரும் கடும் கோப­ம­டைந்­தி­ருந்­தனர். பெரும் கவ­லையும் அடைந்­தனர்.

இந்த நிலையில் கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­விக்கு சசி­கலா முயற்சி செய்­வ­தா­கவே தகவல் வெளி­யா­கி­யுள்­ளன. இதற்கு கட்­சி­யி­லுள்ள ஒரு பிரி­வி­ன­ரி­டையே பலத்த எதிர்ப்பு காணப்­பட்­டாலும், மற்­றொரு பிரி­வினர் ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றனர்.

இத­னி­டையே முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுள்ள ஓ.பன்­னீர்­செல்­வத்­தையே பொதுச் செய­லா­ள­ராக்க வேண்­டு­மென்று ஒரு பிரி­வினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். ஏற்­க­னவே சசி­க­லா­வுக்கும் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கும் இடையில் சுமுக நிலை இல்லை. தவிர பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்­ச­ராக்­கி­யதை சசி­கலா விரும்­ப­வில்லை. தனது ஆத­ர­வா­ள­ரான எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யையே முத­ல­மைச்­ச­ராக்க வேண்­டு­மென்ற தீர்­மா­னத்தில் இருந்­தவர் சசி­கலா. ஆனால், மத்­திய அரசின் அழுத்­தத்­திற்­க­மை­யவே ஓ.பன்­னீர்­செல்வம் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­ததாக் கூறப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான கார­ணங்­களால் பொதுச் செய­லாளர் பத­வியைப் பெறு­வதில் சசி­கலா தரப்­பி­ன­ருக்கும் ஓ.பன்­னீர்­செல்வம் தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கடும்­போட்டி ஏற்­பட்­டுள்­ளது. இதுவே கட்­சியில் பிளவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தொரு நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது.

இத­னையே, பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, சசி­கலா தலை­மை­யிலும், ஓ.பன்­னீர்­செல்வம் தலை­மை­யிலும் அ.தி.மு.க. இரண்­டாகப் பிள­வ­டையும் என்று சில தினங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. மறைந்த ஜெய­ல­லி­தாவைப் போன்று முழு அதி­கா­ரத்­தையும் கைப்­பற்ற நினைக்கும் சசி­கலா மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும், ஒ.பன்­னீர்­செல்வம் தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் நிச்­ச­ய­மாக முரண்­பா­டுகள் ஏற்­ப­டக்­கூடும். இதன் கார­ண­மாக கட்சி பிள­வ­டை­யக்­கூடும் என்று அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

இத­னி­டையே, கடந்த வியா­ழ­னன்று பன்னீர் செல்­வமும், அமைச்­சர்கள் சிலரும் போயஸ்­கார்டன் (ஜெய­ல­லி­தாவின்) இல்­லத்தில் சசி­க­லாவை சந்­தித்து, நீண்ட நேர­மாகப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­வியை பெறு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­வர்­க­ளுடன் சசி­கலா சம­ரசப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும், சில­ருக்கு துணைச் செய­லா­ளர்கள் பத­வி­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஒரு காலத்தில் ஜாதிய அமைப்பு முறைக்கு எதி­ரான கொள்­கை­களைக் கொண்­ட­வைதான் திரா­விடக் கட்­சிகள் எனக்­கூ­றப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அப்­போது சகல இன மக்­களும், சகல இன தலை­வர்­களும் திரா­விடக் கட்­சி­களில் இணைந்­தனர்.

ஆனால், இப்­போது அங்கும் கூட, சாதி ஆதிக்கம் கூடி­விட்­ட­தாக சமூக நோக்­கா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அ.தி.மு.க.வில் சாதி ஆதிக்கம் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தாக ஏற்­க­னவே பர­வ­லாக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன. தற்­போது ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்குப் பின்னர், பொதுச்­செ­ய­லாளர் மற்றும் முத­ல­மைச்சர், அமைச்­சர்­களை நிய­மிப்­ப­திலும் சாதி ஆதிக்கம் நில­வு­வதை காணக்­கூ­டி­ய­தாக இருப்­ப­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அந்த வகையில் ஒ.பன்னீர் செல்வம் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில், கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக மற்­றொரு சாதியைச் சேர்ந்த எடப்­பாடி பழ­னிச்­சாமி அல்­லது தம்­பித்­துரை, செங்­கோட்­டையன் ஆகிய மூவரில் ஒரு­வரை பொதுச் செய­லா­ள­ராக்­கு­வ­தற்­கான திட்­டமும் முன் வைக்­கப்­பட்­டுள்­ளதாம்.

வேறொரு சாதியைச் சேர்ந்­த­வ­ராகக் கூறப்­படும் சசி­கலா குடும்­பத்­தினர் இந்தத் திட்­டத்தை ஏற்க மறுத்­துள்­ள­துடன், சசி­க­லா­வையே பொதுச் செய­லா­ள­ராக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

ஆனால், சசி­க­லாவை பொதுச் செய­லா­ள­ராக்­கு­வ­தற்கு கட்­சியில் பெரும் எதிர்ப்பு எழுந்­துள்­ள­தாக அ.தி.மு.க. நிர்­வா­கிகள் தெரி­வித்­துள்­ளனர். குறிப்­பாக ஆரம்பம் முதல் கட்­சியைக் கட்­டிக்­காத்து, வளர்த்­தெ­டுத்த சிரேஷ்ட தலை­வர்கள், அமைச்­சர்கள், நிர்­வா­கிகள் மற்றும் தொண்­டர்கள் சசி­கலா பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை என்றும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

தற்­போ­தையை நிலை­மையில் கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­வியைப் பெறு­வ­தற்­கான முயற்­சியில் பலரும் ஈடு­பட்­டி­ருப்­ப­தையே காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. தற்­கா­லி­க­மாக இதற்கு தீர்வு காணப்­பட்­டாலும் கூட, கட்­சியில் ஒற்­றுமை ஏற்­படும் என்று எதிர்­பார்க்க முடி­யா­தென்­பதே பொது­வான அபிப்­பி­ரா­ய­மாகும். அதா­வது பத­வி­க­ளுக்­காக பிள­வுகள் ஏற்­ப­டு­வதை தடுத்து நிறுத்த முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கி­றது.

தி.மு.க.விலி­ருந்து வெளி­யே­றிய எம்.ஜி.ஆர். அண்­ணா­து­ரையின் பெயரில் ஒரு பகு­தியை இணைத்­துக்­கொண்டு ‘அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தை’ ஆரம்­பித்து, அதனை விருட்­ச­மாக மாற்­றிக்­காட்­டினார். தற்­போது அ.தி.மு.க.விலி­ருந்து ஒரு பிரி­வினர் வெளி­யேறி ‘ஜெய­ல­லிதா தி.மு.க’ (ஜெ.தி.மு.க) என்­றொரு கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

எவ்­வா­றெ­னினும் அ.தி.மு.க.வை கட்­டி­யெ­ழுப்பி பல­மான கட்­சி­யாக மாற்­றி­ய­மைக்க ஆளு­மை­யுள்ள ஒரு தலைவர் தேவை. அவரே பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான ஆளு­மை­மிக்க தலைவர் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. தவிர, எம்.ஜி.ஆரைப் போன்று ஜெய­ல­லி­தாவும் அடுத்த ஆளு­மை­யுள்ள தலை­வரை அடை­யா­ளப்­ப­டுத்தத் தவ­றி­விட்டார் என்­பதே உண்மை. எனவே, அந்த ஆளு­மை­மிக்க தலை­வரை எதிர்­கா­லந்தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

சில­வேளை அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக சசி­கலா தெரிவு செய்­யப்­பட்டால் ஜெய­ல­லிதா சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்ட தற்­போது வெற்­றி­ட­மா­க­வுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகு­தியில் போட்­டி­யி­டு­வா­ரென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆர்.கே.நகரில் சசி­கலா போட்­டி­யி­டு­வ­தற்கு சசி­க­லாவின் கணவர் நட­ராஜன், தம்பி திவா­கரன் மற்றும் குடும்ப உறுப்­பினர் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்­க­ளென்று கூறப்­ப­டு­கி­றது.

சசி­கலா பொதுச் செய­லா­ள­ரா­கி­னாலும், எதிர்­கா­லத்தில் முத­ல­மைச்­ச­ரா­னாலும், ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அதே­வேளை, அவரை முழு­மை­யாக இயக்­கு­ப­வ­ராக அவ­ரது கணவர் நட­ராஜன் இருப்பார் என்­பதே உண்மை. மொத்­தத்தில் ஜெய­ல­லி­தாவால் ஒதுக்­கப்­பட்­ட­வர்­களின் கைகளில் அந்தக் கட்சி செல்­வதை எவ­ராலும் தடுக்க முடி­யா­த­தா­கி­விடும் என்­பதே பலரின் கருத்­தாக இருக்­கி­றது.

அதே­வேளை, ஜெய­ல­லிதா சுக­யீ­ன­ம­டைந்து அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் அனு­மிக்­கப்­பட்டு, அவர் பற்றி இர­க­சி­யங்­களை வெளி­யி­டாமல் மறைத்து வைத்திருந்தமை, ஜெயலலிதாவின் குடும்ப சொத்துக்கள், கட்சி அதிகாரம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மட்டுமன்றி பொது மக்களிடமும் கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் பலர் பொதுநல வழக்குகள் மற்றும் தகவலறியும் சட்டத்தின் கீழும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இவற்றுக்கு முழுமையான பதில் கிடைத்தால், பல்வேறு உண்மைகள் வெளிவரக்கூடும்.

ஆனால், அதற்கு பொறுப்பானவர்களென்று கூறப்படுவோரே பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் நியமிக்கப்படுவாரானால் உண்மைகள் வெளியிடப்படாமலே மறைக்கப்பட்டு விடும். பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போய்விடும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் கவலையாகும்.

எம்.ஜி.ஆர் என்ற சகாப்தத்தின் பின்னர் பல சோதனைகளுக்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து, ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. இலட்சக்கணக்கான தமிழக மக்களின் அன்பை வென்ற அவரது மறைவின் பின், அக்கட்சி பலவீனமடைவதை எவரும் விரும்பவில்லை. அந்த பலவீனம் பலருக்கு சாதகமாகி பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-11#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.