Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமா?! - கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு!? #VikatanExclusive

Featured Replies

சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமா?!  - கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு!? #VikatanExclusive 

MGR1_11095.jpg

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் வி.கே.சசிகலா. 'எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால், சட்டரீதியாக போராட்டங்களைத் தொடங்கும் முடிவில் கட்சியின் முன்னாள் சீனியர்கள் உள்ளனர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, அ.தி.மு.கவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை சின்னம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும்' என்று கூறி, அ.தி.மு.கவின் சீனியர்கள் செங்கோட்டையன், மதுசூதனன், கண்ணப்பன் உள்ளிட்டோரும் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் மறைவுக்கான 7 நாள் துக்கம் நிறைவடையும்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. "சசிகலாவை முன்னிறுத்தும் முடிவை அ.தி.மு.கவின் சீனியர்கள் எடுத்துள்ளனர். ஆனால், கட்சிக்கென்று உள்ள சட்ட விதிகளின்படி சசிகலாவால் உடனடியாகப் போட்டியிட முடியாது. விதி எண் 20 மற்றும் உட்பிரிவு(2)ன் கீழ் பொதுச் செயலாளர் தேர்தல் என்ற தலைப்பில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 'பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, அந்தமான் தீவுகளில் உள்ள கட்சிக்காரர்களும் ஒன்றுசேர்ந்து பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும்' என்கிறது. அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களும் திரண்டுதான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். கட்சியின் சீனியர்களோ பொதுக்குழு உறுப்பினர்களோ தன்னிச்சையாக தேர்வு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. இதையே காரணமாக வைத்து, அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குப் பதியப்பட இருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றம் செல்வதற்கான சூழல்களும் ஏற்பட்டுள்ளன" என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் சீனியர் ஒருவர். 

sasi_cho1_11370.jpg

"அதேபோல், 'அரசியல் எதிரிகளின் பிடியில் கட்சியின் எதிர்காலம் சென்றுவிடக் கூடாது' என்பதற்காக எம்.ஜி.ஆர் பல சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்படி, தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே, பொதுச் செயலாளர் பதவி உள்பட இதர பதவிகளுக்குப் போட்டியிட முடியும். 1.11.1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்சியின் சட்டவிதிகளில், பிரிவு 30, உட்பிரிவு 5- இதைத்தான் சொல்கிறது. அப்படி இல்லாதபட்சத்தில், போட்டியிடும் வேட்பாளருக்கு விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு" என விளக்கிய மற்றொரு நிர்வாகி, தொடர்ந்து நம்மிடம், " இதைச் சொல்வதற்குக் காரணம். 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சசிகலாவோடு முரண்பட்டார் ஜெலலிதா. அதன்விளைவாக, 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய பின்னரே, அ.தி.மு.கவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அப்படியானால், கட்சிக்குள் ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய, 2017 ஏப்ரல் வரையில் சசிகலா காத்திருக்க வேண்டும். அல்லது விதிவிலக்கு அளிக்கும் அதிகாரத்தின்படி போட்டியிடும் வேட்பாளருக்கு பொதுச் செயலாளரால் விலக்கு அளிக்க வேண்டும். ஜெயலலிதா சசிகலாவுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. ஆக, கட்சி விதிகளை மீறி 2017 ஏப்ரலுக்கு முன் சசிகலா பொதுச் செயலாளர் ஆனார் என்றால், அதற்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். இதுவரையில் ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார். இதற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பியதில்லை. ஆனால், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கவில்லை. சீனியர்கள்தான் திரண்டு ஆதரவு கொடுக்கின்றனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய by law-வுக்கு எதிராக சசிகலா செயல்படுவாரா என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என்றார் விரிவாக.

146_12572.jpg 

இதையெல்லாம் மனதில் வைத்துதான், 'கொடநாட்டில் பொதுக்குழுவை நடத்தி முடிக்கும் முடிவில் இருக்கிறது மன்னார்குடி தரப்பு' என்கின்றனர் அ.தி.மு.கவினர். " பொதுக்குழு கூட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் வந்தால், அதனை எதிர்கொள்வது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து வைத்துள்ளனர். எனவே, பொதுக் குழு உறுப்பினர்களை கொடநாட்டிற்கு வரவழைத்து கூட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். அதே சமயம் கடைசி நேரத்தில் இதில் மாறுதல்கள் ஏற்படுமா என்பதை இப்போது சொல்ல முடியவில்லை. கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்டார் என சட்ட விதிகளை மாற்ற முடியுமா எனவும் ஆலோசனை நடந்து வருகிறது. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கும் சட்ட விதிகளில் இடம் இல்லை. தனக்கு எதிரான சட்டப் போராட்டங்களை சசிகலா எதிர்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர். 

அ.தி.மு.கவில் சட்டவிதிகளின்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியுமா என்ற கேள்வியை, அக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். " கட்சியின் சட்டவிதிகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. முதல்வர் மறைவைத் தொடர்ந்து, 16 நாள் துக்கத்தில் இருக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

http://www.vikatan.com/news/tamilnadu/74707-aiadmk-general-body-meeting-at-kodanad.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.