Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!’ - மிரட்டும் ஹேக்கர்ஸ்

Featured Replies

‘அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!’ - மிரட்டும் ஹேக்கர்ஸ்

 

'ஹேக்கிங்'  இந்த வார்த்தையே பலரை பீதியூட்டுவதாக மாறிவிட்டது. 'ஹேக்கிங்' என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

லீஜியன் என்ற ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது.  

இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, ஊடகவியலாளர்கள் பர்க்கா தத் மற்றும் ரவிஷ்குமார் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது. கணக்குகளை முடக்கியதோடு அவர்களது பெயரில் தவறான தகவல்களையும் பதிந்துவிட்டது.

 

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை (12-12-16), வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளியுறவு செய்திகளைக் கண்காணிக்கும் மேக்ஸ் பேரக் தந்த செய்தி இன்னும் அதிர்ச்சியானது.  லீஜியன் ஹேக்கிங் குழு இந்தியாவைக் குறிவைத்து பல முக்கிய பிரமுகர்களின் கணக்குகளை முடக்குவது, அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தளங்களையும் கம்ப்யூட்டர்களையும் ஹேக் செய்து முக்கிய டேட்டாக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறதாம். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அப்போலோ மருத்துவமனையின் சர்வரையும் ஹேக் செய்துள்ளனராம் இந்த லீஜியன் ஹேக்கர் குழுவினர். அப்போலாவில் அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்களை வெளியிட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் வரக்கூடுமாம். 

 

இந்தியாவிலிருந்து பல ஜிகாபைட்ஸ் அளவுள்ள தகவல்களைத் திருடியுள்ளனர். இந்திய அரசியல் தளங்களை ஹேக் செய்வதில் தொடக்கத்தில், இவர்களுக்கு ஆர்வமிருக்க வில்லை. ஆனால் கிடைத்த செய்திகளின் சுவாரஸ்யம் தொடர்ந்து திருட வைத்துள்ளது.  இதுவரை இந்தியாவில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வர்கள் இந்த லீஜியன் ஹேக்கிங் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், பர்க்கா தத்-தின் ட்விட்டர் கணக்கு மற்றும் மெயில் களிலிருந்து இதுவரை 1.2 ஜிகாபைட் அளவுகளில் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவாம்.  மேலும், அடுத்தகட்டமாக இந்திய அரசியல்வாதி லலித் மோடியின் கணக்குகளைத் திருட திட்டமிட்டிருக்கிறதாம் லீஜியன் ஹேக்கிங் குழு.  என,  அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் மேக்ஸ் பேரக்.

http://www.vikatan.com/news/india/74843-if-we-release-the-mystery-behind-apollo-and-jayalalithaa-it-would-cause-a-great-chaos-in-country.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அப்போலோ சர்வர் விவரங்களை வெளியிட்டால் பல்வேறு குழப்பம் ஏற்படும்: ஹேக்கர்கள் குழு தகவல்

 

 
hacking_3040393f.jpg
 
 
 

அப்போலோ சர்வர் விவரங்களை வெளியிட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்று ஹேக் கர்கள் குழு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, தொலைக்காட்சி நிருபர் பர்கா தத் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை லெஜியன் என்ற ஹேக்கர்கள் குழு அண் மையில் முடக்கியது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் 78 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போலோ சர்வர் விவரங்களையும் லெஜியன் குழு வசப்படுத்தியுள்ளது.

அந்த ஹேக்கர்கள் குழு அமெரிக்காவில் இருந்து வெளி யாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு இணையதளம் வாயிலாக பேட்டி அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அப்போலோ மருத்துவமனை சர்வர் விவரங்களை வசப்படுத்தி யுள்ளோம். அதில் பாதிக்கும் மேற் பட்ட தகவல்களின் உண்மைத்தன் மையை உறுதி செய்ய முடிய வில்லை. அப்போலோ சர்வர் தகவல்களை ஆராய்ந்தபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல தகவல்கள் கிடைத் தன. அவற்றை வெளியிட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எனவே அந்த தகவல்களை வெளியிடவில்லை.

இந்திய வங்கிகளின் சர்வர் களை எளிதில் ஊடுருவி தகவல் களை திருட முடியும். எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. இது போன்ற தகவல் திருட்டுகள் முன்னரே நடைபெற்றுள்ளன.

ராகுல் காந்தி, விஜய் மல்லையா, பர்கா தத் ஆகியோரின் ட்விட்டர் மற்றும் இமெயில் தகவல் பரி மாற்றங்களை திரட்டியுள்ளோம். எங்களது அடுத்த இலக்கு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி.

இவ்வாறு லெஜியன் ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவின் வங்கிக் கணக்கு விவரம், சொத்து விவரங் கள் மற்றும் முக்கிய பாஸ்வேர்டு களை லெஜியன் ஹேக்கர் குழு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. இதேபோல நிருபர் பர்கா தத்தின் சில இமெயில்களையும் அந்த குழு வெளியிட்டுள்ளது. அவர்கள் தொடர்பான வேறு சில முக்கிய தகவல்களையும் விரைவில் வெளி யிடுவோம் என்று லெஜியன் ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/india/தமிழக-முன்னாள்-முதல்வர்-ஜெயலலிதா-குறித்த-அப்போலோ-சர்வர்-விவரங்களை-வெளியிட்டால்-பல்வேறு-குழப்பம்-ஏற்படும்-ஹேக்கர்கள்-குழு-தகவல்/article9425558.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.