Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா?

Featured Replies

சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா?

jayalalitha1-8439db3bc4b2c3d9702f88c11f3b4dd9c6949819.jpg

 

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மறைவு தமி­ழக மக்­க­ளி­டையே பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் "வர்தா" புயல் சென்னை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்தி விட்டுச் சென்­றி­ருக்­கி­றது. இந்த இரண்டு தாக்­கங்­க­ளி­லி­ருந்தும் இது­வரை மக்கள் மீள­வில்லை.

ஜெய­ல­லி­தாவின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­புதான்! அந்த இழப்பு தற்­போது அ.தி.மு.க. வுக்குள் பெரும் பிர­ள­யத்­தையே ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. கட்­சியின் பிர­தான பத­வி­யான பொதுச்­செ­ய­லாளர் பதவி யாருக்கு என்­பது தான் அந்­தப்­பி­ர­ள­ய­மாகும்.

அடுத்த பொதுச் செய­லா­ள­ராக ஜெய­ல­லி­தாவின் தோழி­யான சசி­கலா நட­ரா­ஜனை நிய­மிக்க வேண்­டு­மென்று அ.தி.மு.க. வின் ஒரு பிரி­வினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். சசி­கலா நட­ராஜன் மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் சகல அதி­கா­ரங்­களும் கொண்ட" பொதுச்­செ­ய­லாளர் பதவி பெறு­வ­தற்­காக பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதே­வேளை சசி­கலா நட­ரா­ஜனை அ.தி.மு.க. வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மனம் செய்­யக்­கூ­டாது என்று மற்­றொரு பிரி­வி­னரும் வாதப் பிர­தி­வா­தங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

குறிப்­பாக அ.தி.மு.க. வின் சிரேஷ்ட தலை­வர்கள் சிலர் சசி­கலா நட­ரா­ஜ­னையே கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக்க வேண்டும் என்­பதில் விடாப்­பி­டி­யாக இருக்­கின்­றனர். அதே­வேளை இளைய தலை­மு­றை­யினர் அதற்கு எதி­ராகப் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர்.

இந்த நிலையில் சசி­கலா நட­ராஜன் அ.தி.மு.க. வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக வரு­வ­தற்கு முத­ல­மைச்சர் ஓ. பன்­னீர்­செல்வம் தமது ஆத­ர­வினை தெரி­வித்­தி­ருக்­கிறார். சசி­க­லா­வுக்கு பெரும் போட்­டி­யா­ள­ரா­கவும் எதிர்ப்­பா­ள­ரா­கவும் இருப்­பா­ரென எதிர்­பார்க்­கப்­பட்­ட­வர்தான் ஓ. பன்­னீர்­செல்வம். ஆனால் அவரே பின்­வாங்­கி­யுள்­ளமை சசி­க­லாவின் எதிர்ப்­பா­ளர்­க­ளுக்கு சப்­பென்­றாகி விட்­டது.

ஜெய­ல­லி­தா­வுடன் 33 ஆண்­டுகள் இணைந்து செயற்­பட்டு அவ­ரு­டைய சிந்­த­னையை உள்­வாங்­கி­யி­ருப்­பவர் சசி­கலா. அவர் ஜெய­ல­லி­தாவைப் போன்று இரா­ணுவக் கட்டுக் கோப்­புடன் அ.தி.மு.க. வை வழி­ந­டத்திச் செல்வார். அவரே பொதுச் செய­லாளர் பத­விக்குப் பொருத்­த­மா­னவர் என்று நற்­சான்­றி­தழும் கொடுத்­தி­ருக்­கிறார் முத­ல­மைச்சர் ஓ.பன்னீர்­செல்வம்.

தற்­போ­தைய நிலையில் சசி­கலா நட­ரா­ஜனின் "கை" கட்­சியில் ஓங்­கி­யி­ருப்­ப­தா­கவே தெரி­ய­வ­ரு­கி­றது. கட்­சித்­தலைவர்கள் பலரும் ‘சின்­னம்மா” என்று அழைத்து குனிந்து காலில் விழுந்து கும்­பிடு போடத் தொடங்­கி­விட்­டனர். எனவே விரைவில் சசி­கலா நட­ராஜன் அ.தி.மு.க. வின் பொதுச் செய­லா­ள­ராக வெகுவிரைவில் நிய­மிக்­கப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ராக இருந்து கொண்டே கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கவும் ஜெய­ல­லிதா செயற்பட்டார். தற்­போ­தைய நிலையில் சட்டப் பேரவை உறுப்­பி­ன­ராக இருக்கும் ஓ. பன்­னீர்­செல்வம் முத­ல­மைச்­ச­ராக இருக்­கிறார். இந்த நிலையில் அவ­ரிடம் பொதுச்­செ­ய­லாளர் பத­வியும் இருக்­கு­மானால் அவர் பலம் பொருந்­தி­ய­வ­ராகக் கரு­தப்­ப­டுவார்.

அ.தி.மு.க. கட்சி யாப்­பின்­படி பொதுச் செய­லா­ள­ருக்கு சகல அதி­கா­ரங்­களும் இருக்­கின்­றன. சிலவேளை சசி­கலா பொதுச் செய­லா­ள­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டால் அவரே முத­ல­மைச்சர் உள்­ளிட்ட அமைச்சர் நிய­ம­னங்­களைத் தீர்­மா­னிப்பார். அப்­போது அவர் நினைத்தால் தான் சிறிதும் விரும்­பாத ஓ. பன்­னீர்­செல்­வத்தை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு தமக்கு வேண்­டி­ய­வ­ரான எடப்­பாடி பழ­னிச்­சா­மியை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க முடியும்.

அதே­வேளை, தற்­போது வெற்­றி­ட­மாக இருக்கும் ஆர்.கே. நகர் சட்டப் பேர­வைத்­தொ­குதி இடைத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைந்து சட்டப் பேரவை உறுப்­பி­ன­ரா­வ­துடன் முத­ல­மைச்­ச­ரா­கவும் முடியும் என்­ப­தையும் மறந்­து­வி­டக்­கூ­டாது. சசி­கலா நட­ராஜன் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரானால் அதன் மூலம் பாதிக்­கப்­ப­டு­வது ஓ. பன்­னீர்­செல்­வம்தான். மட்­டு­மின்றி பன்­னீர்­செல்­வத்தின் ஆத­ர­வா­ளர்கள், சசி­க­லாவை எதிர்த்­த­வர்கள் அனை­வரும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­பது உண்மை.

இந்த விட­யங்­களை பன்­னீர்­செல்வம் நன்கு அறிந்­தி­ருந்­தாலும் கூட தற்­போ­தைய நிலையில் எதுவும் செய்ய முடி­யாத நிலையில் இருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. மறு­பக்­கத்தில் மத்­திய பா.ஜ.க. அர­சாங்கம் தன்னைக் கைவி­டாது என்ற நம்­பிக்­கை­யுடன் பன்னீர்செல்வம் இருக்­கின்றார்.

எவ்­வா­றெ­னினும் புதிய பொதுச்­செ­ய­லா­ளரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் கட்­சியின் பொதுச் செயற்­கு­ழு­வி­டந்தான் உள்­ளது. இந்த பொதுக்­குழுக் கூட்டம் எப்­போது நடக்­கு­மென்று இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனவே கட்சி செயற்­கு­ழுவின் தீர்­மானம் எவ்­வாறு அமை­யு­மென தற்­போது சொல்வ­தற்­கில்லை. ஆனால் பெரும் போட்டி, பிரச்­சினை, பிளவு ஏற்­படும் என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால், பொதுச்செயலாளர் பதவியைப் பெறுவதற்கான சதியில் சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

1987 ஆம் ஆண்டு கட்­சியின் நிறு­வ­ன­ரான எம்.ஜி.ஆர். கால­மா­ன­போது அவ­ருக்குப் பின்னர் தலைமைப் பத­வியைப் பெறு­வ­தற்கு அவ­ரது மனை­வி­யான ஜானகி ராமச்­சந்­தி­ரனை ஒரு குழுவும் ஜெய­ல­லி­தாவை முன்­னி­றுத்தி மற்­றொரு குழுவும் செயற்­பட்­டன.

இதனால் கட்சி பிள­வ­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அது­போன்­ற­தொரு நிலையே உரு­வாகும் சந்­தர்ப்­பமே தற்­போது காணப்­ப­டு­கி­றது.

சசி­கலா நட­ரா­ஜனை கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக்க வேண்­டு­மென்று பத­விக்கும் பணத்­துக்கும் ஆசைப்­பட்ட கட்சி நிர்­வா­கி­களும் முக்­கி­யஸ்­தர்­க­ளுமே கோஷ­மி­டு­கின்­ற­னரே தவிர சாதா­ரணத் தொண்­டர்கள் சசி­க­லாவை ஏற்க மறுப்­ப­தா­கவே சமூக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

நடிகர் கருணாஸ், ராம­ராஜன், சரத்­குமார் போன்ற பலர் சசி­க­லா­வுக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்­துள்­ளனர். அதே­வேளை அ.தி.மு.க. உறுப்­பி­ன­ரான நடிகர் ஆனந்­தராஜ் போன்­ற­வர்கள் தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர். அ.தி.மு.க. கட்சி பேச்­சா­ள­ரான பொன்­னையன் சசி­கலா நட­ராஜன் கட்­சியின் பொதுக் குழுக்­கூட்­டத்தில் பொதுச் செய­லா­ள­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வது உறு­தி­யென்று தெரி­வித்­தி­ருக்­கிறார்.

சசி­கலா நட­ராஜன் பொதுச் செய­லா­ள­ராக கட்சி பொதுச் சபை­யினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டாலும் பொது மக்­களின் அபிப்­பி­ராயம் என்­ன­வென்­பதை உட­ன­டி­யாகக் கூற முடி­யாது.

கடந்த வாரம் தமி­ழக செய்தி நிறு­வனம் ஒன்று நடத்­திய கருத்­துக்­க­ணிப்பில் தற்­போது தேர்தல் ஒன்று நடத்­தப்­பட்டால் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தி.மு.க. வெற்­றி­பெறும் என தெரி­ய­வந்­துள்­ளது.

அ.தி.மு.க. வின் பொதுச் செய­லாளர் ஜெய­ல­லிதா மக்­களின் ஆத­ர­வினைப் பெற்­றவர் அவரின் மறை­வுக்குப் பின்னர் அந்­தக்­கட்­சிக்கு மக்கள் செல்­வாக்கு உள்­ளதா என்­பதை ஆராயும் நோக்­கத்­து­ட­னேயே இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில் தி.மு.க. வுக்கு முத­லிடம் கிடைத்­துள்­ளது. இரண்­டா­மிடம் பா.ம.க. வுக்குக் கிடைத்­துள்ள அதே­வேளை மூன்றாம் இடந்தான் அ.தி.மு.க. வுக்குக் கிடைத்­துள்­ளது. விரைவில் ஒரு தேர்தல் நடை­பெறு­மானால் உண்மை வெளி­வரும். எவ்­வா­றெ­னினும் மக்­களின் கருத்தை தேர்தல் மூலமே அறிந்­து­கொள்ள முடியும்.

இது இவ்­வா­றி­ருக்க முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் மறைவு தொடர்பில் பல்­வேறு சந்­தே­கங்கள் நாளுக்கு நாள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது பொது மக்­க­ளி­டையே பல்­வேறு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் உண்­மையில் நடந்­தது என்­ன­வென்­பதை அறிந்து கொள்­வ­தற்கு மிகவும் ஆவ­லுடன் இருந்து வரு­கின்­றனர். இது சாதா­ரண மக்­களை மட்­டு­மின்றி சட்­ட­வல்­லு­னர்கள், கல்­வி­மான்கள், சமூக ஆர்­வ­லர்கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரையும் குழப்­ப­ம­டையச் செய்­துள்­ளது.

பிரான்­சி­லி­ருந்து "தமி­ழச்சி" என்­பவர் பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­வ­ரு­வ­துடன் அதற்கு உரிய விளக்­கங்­க­ளையும் அவ்­வப்­போது முக­நூலில் வெளி­யிட்டு வரு­கின்றார்.

தமி­ழ­கத்தின் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான பொது­நல ஆர்­வலர் ட்ராபிக் ராம­சாமி ஜெய­ல­லிதா மரணம் தொடர்பில் கேள்வி எழுப்­பி­யுள்­ள­துடன் அப்­பல்லோ வைத்­தி­ய­சாலை தலைவர் பிரதாப் ரெட்­டி­யிடம் ‘உண்­மையைக் கண்­ட­றியும் சோதனை” மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் சென்னை உயர் நீதி­மன்­றத்தில் வழக்கும் தொடர்ந்­துள்ளார்.

தி.மு.க. பொரு­ளா­ளரும் தமி­ழக சட்டப் பேரவை எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மு.க. ஸ்டாலின், முதல் ஜெய­ல­லி­தா­வுக்கு வழங்­கப்­பட்ட சிகிச்சை குறித்து அர­சாங்கம் ‘வெள்ளை அறிக்கை’ வெளி­யிட வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யுள்ளார். பா.ம.க. நிறு­வுனர் ராம­தாஸும் ‘வெள்ளை அறிக்கை வெளி­யிட வேண்­டு­மென்று கேட்­டுள்ளார். இது போன்று பலர் ஜெய­ல­லி­தாவின் மரணம் தொடர்­பான விப­ரங்­களை வெளி­யிட வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்­துள்­ள­துடன் வழக்­கு­களும் தொடுத்­துள்­ளனர்.

கடந்த செப்­டெம்பர் 22 ஆம் திகதி அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் காய்ச்சல், நீர்ச்­சத்து குறைவு போன்ற நோய்­க­ளுக்­காக ஜெய­ல­லிதா அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் ஒரு சில தினங்­களில் வீடு திரும்பி விடு­வா­ரென கூறப்­பட்­ட­போ­திலும் தொடர்ச்­சி­யாக சுமார் 75 நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி கால­மா­ன­தாக அறி­விக்­கப்­பட்டார்.

அவர் அப்­பல்லோ வைத்­தி­ய­சா­லையில் இருந்த காலப் பகுதியில் எந்தவொரு பொது நபரையும் தலைவரையும் முக்கியஸ்தர்களையும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது அருகில் அப்பல்லோ வைத்தியர்களைத் தவிர சசிகலா, நடராஜன் குடும்பத்தினரே இருந்துள்ளனர். அந்தக் காலத்தில் முதலமைச்சருக்கு வழங்கிய சிகிச்சை பற்றியோ அல்லது அவரது புகைப்படத்தையோ வெளியிடவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் பொறுப்புமிக்க ஒரு கட்சியின் தலைவி என்ற வகையில் ஜெயலலிதா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதா பற்றிய தகவல்களை வெளியிடாதது உண்மையை மறைக்கும் தவறான செயலாகும் என்பதே வழக்குத் தொடர்ந்தவர்களின் வாதமாகும்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரக்கூடும். அதனையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசியல் பின்புலம் இந்த பிரச்சினையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருப்பது உண்மையெனில் உண்மைகள் வெளிவராமல் போகலாம். ஆனால் இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது ஒருநாள் உண்மை வெளிவரும் இது உலக நியதி.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-18#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.