Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா?

Featured Replies

வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா?

 

வைகோ

.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே  உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

2015-ம் ஆண்டு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாக உருவெடுக்கச் செய்தனர். பின்னர் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்த் தலைமையை ஏற்று, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க-வாகி, பிறகு அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்தக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. 

தேர்தல் முடிவுக்குப் பிறகு, இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள், சட்டமன்றத் தேர்தலோடு கூட்டணி உறவு முடிந்து விட்டது என்று அறிவித்து விட்டு வெளியேறின. அதன் பின்னரும், "மக்கள் நலக்கூட்டணி தொடர்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் இணைந்தே போராடுவோம்" என்று நான்கு கட்சிகளின் தலைவர்களும் அறிவித்து செயல்பட்டு வந்தனர். எனறாலும் சிறு, சிறு கருத்து மோதல்கள் அக்கட்சிகளுக்குள் நீடித்தன. குறிப்பாக, காவிரிப் பிரச்னை தொடர்பாக, தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தன்னிச்சையாக அறிவித்ததுடன், மக்கள் நலக்கூட்டணியின் இதர தலைவர்களையும் வற்புறுத்தினார். அப்போதே லேசான சலசலப்பு உருவானது. இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள உயர் மதிப்புகொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வைகோ வரவேற்பதாக அறிவித்தார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. மோடிக்கு ஆதரவான வைகோவின் குரல்கள் காம்ரேட்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கின. 

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் 3 தொகுதி சட்டமன்றத் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிக்கிறது என்று  வைகோ அறிவித்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட கமிட்டி கூட்டங்களில் வைகோவின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் அக்கட்சி நிர்வாகிகள். கூட்டணியில் இருந்தாலும், ஒவ்வொரு கட்சிக்கும் என்று தனிப்பட்ட கொள்கைகள் உண்டு என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தனித்தனியாக சொல்லிவந்தார்கள். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தி.மு.க-வை விமர்சித்தும், அ.தி.மு.கவை புகழ்ந்தும் பேசியதை கூட்டணியில் இருந்தவர்கள் ரசிக்கவில்லை. "மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் சம தொலைவில் வைத்துதான் பார்க்க வேண்டும்" என்று மற்ற மூன்று தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், வைகோவின் சமீபத்திய பேட்டிகள் மற்றும் நடவடிக்கைகள் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக இருப்பதாக கூட்டணிக்குள் பரவலாக பேச்சு எழுந்தது. 

இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு' பாண்டிச்சேரியில் வரும் 28-ம் தேதிvck_18441.jpg நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் பெயர் இடம்பெறவில்லை. 

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலாஜி கூறுகையில், “ரூபாய் நோட்டு விவகாரத்தில், பழைய நோட்டுகளை செல்லாது என்று மோடி அரசு அறிவிப்பதற்கு முன், நாடாளுமன்ற சட்டம் மூலம் அதை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ரிசர்வ் வங்கியின் மூலம் அத்திட்டத்தை அமல்படுத்தியதற்கு எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். இதை முன்னிறுத்திதான் அரசியல் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. எங்கள் தலைவர் இதை, 'மோடி அரசின் பொருளாதார நெருக்கடி' என்று  கண்டித்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடிக்கு, வைகோ ஆதரவு தெரிவித்திருந்தார். எனவே எதிர்நிலையில் உள்ள வைகோவை எந்த அடிப்படையில் இந்த மாநாட்டிற்கு அழைக்க முடியும்?” என்றார்.

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கௌதம சன்னா, “இந்த மாநாட்டிற்கு வைகோ அழைக்கப்படாததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியின் பலத்தை வைகோ சிதைத்து வருவதை அனைவரும் அறிந்துள்ள நிலையில், எங்கள் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அவரை அழைக்காதது இயற்கையிலேயே வருத்தம்தான்” என தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடி ஆதரவு நிலைப்பாட்டில் வைகோ இருப்பதால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளார்கள். "இனி மக்கள் நலக்கூட்டணி தொடர்வது வைகோ கையில்தான் உள்ளது" என்று முத்தரசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். இனி கூட்டணி தொடர்வது வைகோ கையில் தான் உள்ளது என்பதை அவர்கள் சொல்லி விட்டார்கள்..   வைகோ என்ன செய்ய போகிறார்?

http://www.vikatan.com/news/tamilnadu/75485-vaiko-could-be-the-reason-behind-the-spoilage-of-people-welfare-front.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.