Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுதான் நல்லிணக்கமா?

Featured Replies

இதுதான் நல்­லி­ணக்­கமா?

 

சிறை­யி­ல­டைக்­கப்­பட வேண்­டிய மதத்தலை­வர்­களை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­திற்கும் ஜனா­தி­பதி மாளி­கைக்கும் அழைத்து கௌர­வப்­ப­டுத்­து­கி­றதா என இப் பத்­தியில் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தோம். ஆனால் தற்­போது அரசின் செயற்­பா­டுகள் அதை விட ஒரு­படி மேலே போய் அடா­வ­டித்­தனம் புரி­கின்ற பிக்­கு­களை அமைச்­சர்கள் அவர்­க­ளது கால­டிக்கே சென்று சந்­திக்­கின்ற அள­வுக்கும் ஜனா­தி­பதி மாளி­கைக்கு அழைத்து அவர்­க­ளது ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­கின்ற நிலைக்கும் வந்­தி­ருக்­கி­றது. அடுத்த கட்­ட­மாக இந்த பிக்­கு­க­ளுக்கு தேசி­யப்­பட்­டியல் எம்.பி. பதவி கொடுத்து அமைச்­ச­ர­வைக்கு அழைத்து அழ­கு­பார்த்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் ஆகிய இரு­வரைப் பற்­றியே நாம் இங்கு பேசு­கிறோம். இவர்கள் இரு­வ­ரதும் பின்­னணி என்ன? இவர்­க­ளது கடந்த கால சம­கால வர­லா­றுகள் என்ன என்­ப­தை­யெல்லாம் இங்கு விலா­வா­ரி­யாக விளக்க வேண்­டி­ய­தில்லை. இவர்­க­ளுக்­கு­ரிய சட்ட, சமூக அந்­தஸ்­துகள் என்ன என்­பதும் நாம் அறி­யா­த­தல்ல.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இந்த நாட்டின் அரச இயந்­திரம் இவ்­விரு நபர்­க­ளையும் இன்று தமக்­க­ருகில் வைத்துக் கொள்­ளவும் அவர்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­கவும் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­ளவும் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அண்­மைய நாட்­களில் இடம்­பெற்ற சில நிகழ்­வுகள் இதனை மெய்ப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன.

கடந்த 3ஆம் திகதி சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பில் நடந்­தவை நினை­வி­ருக்கும். ஞான­சார தேரர் தலை­மை­யி­லான நூற்­றுக்கும் மேற்­பட்டோர் அன்­றைய தினம் மட்­டக்­க­ளப்­புக்குள் நுழைந்து அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேர­ருக்கு ஆத­ரவு தெரி­விக்க முற்­பட்ட சமயம் நீதி­மன்ற தடை­யுத்­த­ரவின் பேரில் அம்­மு­யற்சி தடுத்து நிறுத்­தப்­பட்­டது. எனினும் மீண்டும் நாம் மட்­டக்­க­ளப்­புக்கு வருவோம் என்று ஞான­சார தேரர் சூளு­ரைத்­தி­ருந்தார். அதனை அவர் நிரூ­பித்தும் காட்­டி­யி­ருக்­கிறார்.

கடந்த புதன்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையில் ஒரு கூட்டம் நடை­பெற்­றது. அதில் நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்­சரும் ஞான­சார தேரரும் சிங்­கள ராவ­யவின் செய­லா­ளரும் பங்­கேற்­றி­ருந்­தனர். அண்­மைக்­கா­ல­மாக சும­ண­ரத்ன தேரர் முன்­வைத்­து­வரும் மட்­டக்­க­ளப்பு வாழ் சிங்­கள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கேட்­ட­றி­வ­தற்­கா­கவே இக் கூட்டம் நடந்­த­தாக அறிய முடி­கி­றது. இக் கூட்­டத்தில் மட்­டக்­க­ளப்பில் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களும் கலந்து கொண்டு தமது பிரச்­சி­னை­களை முன்­வைத்­துள்­ளனர். புத்­த­சா­சன அமைச்சர் என்ற வகையில் நாட்டின் எந்தப் பகு­தி­யி­லேனும் வாழு­கின்ற சிங்­கள மக்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றி­வ­தற்­கான பொறுப்பு விஜே­தா­ச­வுக்கு உண்டு என்­பதில் எந்­த­மாற்றுக் கருத்தும் இருக்க முடி­யாது.

ஆனால் அப்­பட்­ட­மா­கவே நீதிக்கு முர­ணாகச் செயற்­ப­டு­கின்ற, பல்­வேறு வழக்­கு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ள மேற்­படி கடும்­போக்கு தேரர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாச செயற்­ப­டு­வ­தைத்தான் ஏற்றுக் கொள்ள முடி­யா­துள்­ளது.

இதை விடவும் ஆட்­சே­பத்­துக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், மட்­டக்­க­ளப்பு வாழ் சிங்­கள மக்­களின் உரி­மைக்­கு­ர­லாக அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் விளங்­கு­கிறார் என்றும் மட்­டக்­க­ளப்பில் சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இல்­லாத குறையை சும­ண­ரத்ன தேரர் நிரப்­பு­கிறார் என்றும் அமைச்சர் விஜே­தாச குறிப்­பிட்­ட­மை­யாகும்.

அப்­ப­டி­யானால் அந்த தேரரின் கடந்த கால செயற்­பா­டு­க­ளையும் அவர் ஆடிய சட்­டத்­துக்கு முர­ணான ஆட்­டங்­க­ளையும் நீதி­ய­மைச்­ச­ராக இருந்து கொண்டே விஜே­தாச ஏற்றுக்கொள்­கி­றாரா? இதே கேள்­வி­யைத்தான் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அக­மட்டும் எழுப்­பு­கிறார்.

"இந்­நாட்டின் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் தமிழ், முஸ்லிம் மக்­களை மிகவும் மோச­மாக தூஷித்துப் பேசி சட்­டத்தை மதி­யாது செயற்­பட்ட மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ர­த்ன தேரரை நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தேடிச் சென்று சந்­தித்­த­மையின் பின்­னணி என்ன? மர்மம் என்ன என்­பது தெரி­ய­வில்லை. இது சிறு­பான்மை சமூ­கங்கள் கண்­டிக்க வேண்­டிய செயற்­பா­டாகும்" என அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

"இந்தச் சந்­திப்­புக்கு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அந்­நி­கழ்வில் நான் கலந்து கொள்­ள­வில்லை. பங்­கு­கொள்ள வேண்­டிய அவ­சி­யமும் இருக்­க­வில்லை. மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி சும­ண­ரத்ன தேரர் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக இன­வாதம் பேசி­யவர். இன முறு­கல்­களை உரு­வாக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டவர். இப்­ப­டி­யான ஒருவர் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வ­ராவார். இவரை நாட்டின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் அதுவும் நீதி­ய­மைச்சர் தேடிச் சென்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் மர்மம் என்ன என்­பது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கிழக்கில் மாத்­தி­ர­மல்ல நாடு தழு­விய ரீதியில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மா­னதே. ஆனால் இன­வா­தத்­தையே இலக்­காகக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுடன் நல்­லி­ணக்கம் பற்றி பேச முடி­யாது. அவ்­வாறு பேசு­வதன் மூலம் எது­வித பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இன­வாத செயற்­பா­டு­க­ளுக்­காக சட்­டத்தின் மூலம் தண்­டிக்­கப்­பட வேண்­டிய தேரர் ஒரு­வ­ருடன் ஏனைய கடும்­போக்­கு­வாத தேரர்­க­ளையும் இணைத்துக் கொண்டு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யமை கடும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

நாட்டின் சட்டம் அனை­வ­ருக்கும் சம­மாக இருக்க வேண்டும். ஒரே குற்­றத்­துக்கு ஒருவர் தண்­டிக்­கப்­படும் போது அதே குற்றம் புரிந்த ஒருவர் தண்­டிக்­கப்­ப­டாது சுதந்­தி­ர­மாக விடக்­கூ­டாது. மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையில் நீதி­ய­மைச்­ச­ருக்கும் சும­ண­ரத்ன தேரர் உட்­பட ஏனைய அமைப்­பு­களின் தேரர்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் விப­ரங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பேச்­சு­வார்த்­தைகள் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளு­ட­னல்­லாது இன­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தற்­காகப் பாடு­ப­டு­ப­வர்­க­ளு­டனேயே நடத்­தப்­பட வேண்டும்" என்றும் முத­ல­மைச்சர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். அதே­போன்­றுதான் முஸ்லிம் சிவில் சமூ­கமும் இந்த நகர்­வுகள் தமக்கு அதி­ருப்­தி­ய­ளிப்­ப­தாக கவலை வெளி­யிட்­டுள்­ளது.

"பொது­பல சேனா­வுக்கு மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆசிர்­வாதம் வழங்­கி­யி­ருந்­தது. தற்­போ­தைய அர­சாங்கம் பொது­பல சேனா­வுடன் நெருக்­க­மா­கி­யுள்­ளது" என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்

"தற்­போ­தைய அர­சாங்கம் தொடர்பில் முஸ்லிம் தலை­வர்­க­ளி­டத்தில் குறிப்­பி­டும்­ப­டி­யான நம்­பிக்கை இல்லை. தமது முறைப்­பா­டுகள் கிடப்பில் போடப்­ப­டு­வ­தாக அவர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். இதுதான் யதார்த்த நில­வ­ரமும் ஆகும்.

மஹிந்­தவின் காலத்தில், மஹிந்­த­வினால் பொது­பல சேனா தள்­ளி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் ஆசிர்­வாதம் இருந்­தது.

தற்­போதைய அர­சாங்­கத்தில் நிலைமை அவ்­வாறு அல்ல. நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ பொது­பல சேனாவை பகி­ரங்­க­மா­கவே அர­வ­ணைக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ளார். இது அபா­ய­க­ர­மா­னது மாத்­தி­ர­மல்­லாமல் நாட்­டுக்கும், கடினப் போக்­கு­டைய பௌத்த சிங்­கள தரப்­பிற்கும் தவ­றான வழி­காட்­ட­லையும் வழங்கும்.

முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் இந்த அர­சாங்­கமும், நீதி­ய­மைச்­சரும் எத்­த­கைய நிலைப்­பாட்டில் பய­ணிக்­கின்­றனர் என்­பதை இதன்­மூலம் முஸ்லிம் சமூ­கத்­தினால் தெளி­வாக புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது" என்றும் அமீன் மேலும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இவ்­வா­றான அணு­கு­மு­றை­க­ளுக்கு நீதி­ய­மைச்சர் சொல்லும் காரணம் கடும்­போக்கு பிக்­கு­களை நல்­லி­ணக்க வழி­மு­றைகள் மூல­மாக நாம் கையாள்­கிறோம் என்­ப­தாகும்.

நல்­லி­ணக்­கத்தை தோற்­று­விக்­கின்ற நீதி­ய­மைச்­சரின் முயற்­சியை நாம் வர­வேற்­கின்ற அதே­நேரம் சட்­டத்தை மீறி நடந்­த­வர்­களை பாது­காக்க முனை­வ­தையோ அல்­லது அவர்கள் அணிந்­தி­ருக்­கின்ற காவி உடையை முன்­னி­றுத்தி அவர்­களை கௌர­வப்­ப­டுத்த முனை­வ­தையோ ஏற்றுக் கொள்ள முடி­யாது என்­ப­தையும் அழுத்திக் கூற விரும்­பு­கிறோம்.

நீதி­மன்ற உத்­த­ரவை ஞான­சார தேரர் கிழித்­தெ­றிந்­தமை சட்­டத்தை மீறும் செயல் என கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் குறிப்­பிட்ட நீதி­ய­மைச்சர் பின்னர் அதே தேர­ருடன் மட்­டக்­க­ளப்பில் சிரித்து மகிழ்ந்து பேச்­சு­வார்த்தை நடத்­­து­வ­து எந்­த­வ­கையில் நியா­ய­மா­னது என்ற நியா­ய­மான கேள்­வி­யையும் பலர் எழுப்­பு­கின்­றனர். எனவேதான் நல்லிணக்கம் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்படி கடும் போக்குள்ள, சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கும் பிக்குகளை ஆதரிக்கவும் அரவணைக்கவும் முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்த நகர்வுகள் மறுபுறத்தில் இந்த பிக்குகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை தரப்புகளை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது என்பதையும் நீதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு தரப்பை அரவணைத்தும் மறு தரப்பை ஒதுக்கி வைத்தும் முன்னெடுக்கப்படும் சமரச முயற்சிகளால் ஒருபோதும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என நம்புகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.