Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிருப்தி

Featured Replies

gallerye_231017693_1683079.jpg

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், முக்கிய பேச்சாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில், நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,விலிருந்து நேற்று வெளியேறினார். இவர்களைப் போல மேலும் பல அதிருப்தி யாளர்களும், மாற்று கட்சிகளுக்கு வண்டி கட்டி கிளம்ப, ஆயத்தமாகி வருகின்றனர்.

 

Tamil_News_large_1683079_318_219.jpg

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலாவும், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வசித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகலாவின் அண்ணி இளவரசியும், போயஸ் தோட்டத்தில் தங்கினார். சசிகலாவும், அவரது உறவினர்களும் தனக்கு எதிராக செயல்படுவதை அறிந்த ஜெயலலிதா, கடும் அதிர்ச்சி அடைந்தார்.
 

விரட்டி அடிக்கப்பட்ட சசிகலா


இதையடுத்து, 2011ல் அதிரடி நடவடிக்கை எடுத்தார்; சசிகலா மற்றும் அவரது உறவினர்களை, போயஸ் கார்டனில் இருந்து விரட்டினார்; கட்சியில் இருந்தும் நீக்கினார். அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என, கட்சியினருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.சில மாதங்களுக்கு பின், சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
'உறவினர்கள் செய்த துரோகம், எனக்கு தெரியாது. நான் எந்தப் பதவிக்கும் வர விரும்பவில்லை; விரும்பவும் மாட்டேன்' என, உறுதிமொழி கொடுத்தார்.அதை ஏற்று, சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார்; மற்றவர்களை சேர்க்கவில்லை. ஜெயலலிதா மறையும் வரை, இந்நிலை தொடர்ந்தது.

ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவரால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் வரத் துவங்கினர்.ஜெயலலிதா மறைந்ததும், எந்த தடையும் இன்றி போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சசிகலாவை பொதுச்செயலராகவும் ஆக்கிவிட்டனர்.
இதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மாறாக, சசிகலா தலைமைக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தனர்.
 

தொண்டர்களிடம் எதிர்ப்பு


இதை விரும்பாத கட்சித் தொண்டர்கள், சசிகலா பேனர் கிழிப்பு உட்பட பல்வேறு வகையில், தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சசிகலா பொதுச் செயலராவதை ஏற்றுக் கொள்ள முடியாத தொண்டர் ஒருவர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்தார். தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தற்போது மேல் மட்டத்திலும் பரவத் துவங்கி உள்ளது. அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக, அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டவர், நடிகர் ஆனந்தராஜ். அவர், 'ஜெ., இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க.,விலிருந்து விலகினார்.
 

காரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்



முக்கிய பேச்சாளர்களான, நடிகை விந்தியா உட்பட பலர், எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இச்சூழலில், ஆனந்தராஜை தொடர்ந்து, கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத், விலக முடிவு செய்துள்ளார்.இவர், ம.தி.மு.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த போது அவருக்கு, இன்னோவா கார் ஒன்றை, ஜெயலலிதா பரிசாக வழங்கினார்.

 

அவர் மறைவுக்கு பின், அதிருப்தியில் இருந்த நாஞ்சில் சம்பத், கட்சிஅலுவலகத்தில் நேற்று, இன்னோவா காரை ஒப்படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எட்டு மாதங்களாக, கட்சி பிரசார கூட்டம் எதற்கும் செல்லவில்லை; அதனால், காரை பயன்படுத்தவில்லை. என் நண்பர் வீட்டில், காரை நிறுத்தியிருந்தேன். என் சொந்த உபயோகத்திற்கு அதை பயன்படுத்தியதில்லை. இனியும், பிரசார கூட்டம் எதுவும் நடைபெறுவது மாதிரி தெரியவில்லை. எனவே, காரை வீணாக வைத்திருக்க வேண்டாம் எனக்கருதி, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டேன். கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். மற்ற விபரங்களை, பின்னர் தெரிவிக்கிறேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

ஆனந்தராஜ், நாஞ்சில் சம்பத் வரிசையில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். விரைவில், அவர்களும் விலகல் முடிவை அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

சசிகலாவுக்கு எதிர்ப்பு: பேச்சாளர் விலகல்


அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகினார்.
அவரது அறிக்கை: ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். 'எம்.ஜி.ஆர்., இரட்டை இலை சின்னத்தை மட்டும் விட்டு விட்டுச் செல்லவில்லை; சின்னம்மாவையும் விட்டுச் சென்றார்' என, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதையே தெரிந்து கொண்டோம்.
முதல்வர் என்ற நிலை மறந்து, சசிகலா காலில் விழுந்த பன்னீர்செல்வம் போன்றவர்களை, மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, அ.தி.மு.க.,விலிருந்து விலகுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683079

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.