Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை

Featured Replies

சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை
 
 
 

தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Tamil_News_large_1683177_318_219.jpg


சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன.
இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், கிழித்தும் வருவது, முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எல்லாம் தாண்டி, பல்வேறு இடங்களில் அடிமட்ட தொண்டர்களின் பெயர்களில் பிளக்ஸ்கள் முளைத்து உள்ளன. விருப்பம் இல்லாத நிலையில், மேல்மட்ட நிர்வாகி களின் மிரட்டலுக்கு பயந்து தான், பிளக்ஸ் வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடரும் மிரட்டல்


இது குறித்து, தொண்டர்கள் சிலர் கூறியதாவது:சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக இருப்பதற்கு, கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் யாருக்கும் துளிக்கூட விருப்பம் இல்லை.


இப்படி இருக்கும் நிலையில், சசிகலாவிற்கு ஆதர வாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., ரங்கசாமி உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவாளர்களும், 'சசிகலாவிற்கு ஆதரவாக கண்டிப்பாக பிளக்ஸ் வைக்க வேண்டும்; இல்லை என்றால் கட்சியில் இருந்து விலக்கி விடுவோம்' என, பல்வேறு விதங்களிலும் மிரட்டி வருகின்றனர். இதற்காக தான், நாங்களும் பிளக்ஸ் வைக்க வேண்டிய நிலையில்உள்ளோம். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட செயலராக வைத்திலிங்கம் உள்ளார். இவரது பதவிக்கு, மன்னார்குடி கும்பல் குறி வைத்துள்ளது. இதற்கு பயந்துதான், வைத்திலிங்கம் பதவியை தக்கவைக்க, முஸ்தீபுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

பேனர்கள் அகற்றம்


சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில், சசிகலா மற்றும் தீபா பேனர்கள் அகற்றப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி, கடைவீதி உள்ளிட்ட இடங்களில், தீபா மற்றும் சசிகலா படத்துடன் பேனர்கள் வைத்திருந்தனர். நேற்று முன்தினம், சசிகலா பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர், கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார்.
அனுமதி பெறப்பட்டு பேனர்கள் வைக்க வேண்டும்; சசிகலா, தீபா பேனர்களை அகற்றும்படி, இரு தரப்பினருக்கும் போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று, இரு தரப்பினரும் அனைத்து பேனர்களையும் அகற்றினர். மற்ற அரசியல் கட்சி பேனர்களை போலீசார் அகற்றினர். பேரூராட்சி நிர்வாக அனுமதி பெறப்பட்டு, பேனர்கள் வைக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.
 

பன்னீரை பதவி விலக கூறுவது அநாகரிகம்


''ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், அவரை பதவி விலகும்படி கூறுவது அநாகரிகம். இதனால், முதல்வருக்கு பின்னடைவு ஏற்படும்; நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும்,'' என, நாஞ்சில் சம்பத் கூறினார்.

 

செங்கல்பட்டில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு கருவியாக என்னை, பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாததால், அ.தி.மு.க.,வில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலகுகிறேன். தி.மு.க.,வில் இருந்து என் நண்பர்கள் பேசினர்; ம.தி.மு.க.,வில் இருந்தும் அழைப்பு வந்தது. இலக்கிய சொற்பொழிவு கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.
தமிழகத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, கவலை அளிக்கிறது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க, உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா தீர்ப்பு பெற்று தந்தார்; ஆனால், மத்திய அரசு செயல்படுத்தவில்லை.முதல்வராக சசிகலா வர வேண்டும் என்பது, அமைச்சர் உதயகுமாரின் ஆசை.
ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், அவரை பதவி விலகும்படி கூறுவது அநாகரிகம். இது, முதல்வருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; நிர்வாகத்தில், சிக்கல் ஏற்படும்.
சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 132 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் வீட்டில், 2,000 ரூபாய் புதிய நோட்டுகள், தங்கம் பறிமுதல்செ ய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவிற்கு தலைக்குனிவு. அவரை உடனே, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683177

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.