Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா

Featured Replies

'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா

deepa3_11145.jpg

'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேசினார் சசிகலா. வரக் கூடிய நாட்களில் மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் தனக்கான ஆதரவைப் பெருக்குவதில் மும்முரமாக இருக்கிறார். ஜனவரிக்குள் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்பதற்காக, சீனியர் நிர்வாகிகளான தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வலிந்து பேசி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த அச்சமும் கார்டன் தரப்பை வாட்டி வருகிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவியை விட்டுத் தருவது குறித்து பொதுவெளியில் எந்தக் கருத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. அவர் எப்போதும் போலவே அமைதியாக இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வலியுறுத்திய நிர்வாகிகள்தான், முதல்வர் பதவிக்கும் அவரை முன்னிறுத்துகிறார்கள். பதவியேற்ற ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதால், எந்தத் தொகுதி சரியாக இருக்கும் என்ற தேடுதலில் மன்னார்குடி உறவுகள் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வெற்றித் தொகுதியாக இருந்த ஆண்டிப்பட்டியில் போட்டியிடலாமா? உசிலம்பட்டியைத் தேர்வு செய்யலாமா என பலவித ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மரணத்தால் காலியாக இருக்கின்ற, ஆர்.கே.நகரைவிடவும் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்வதுதான் அவரது விருப்பம். வரும் 9-ம் தேதி வரையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதன்பிறகு, ஆட்சி அதிகாரத்திற்குள் சசிகலா வருவார்" என்றார் விரிவாக.

11_11200.jpg

அதேநேரம், அ.தி.மு.கவில் உள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் தீபாவை முன்னிறுத்தி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். சசிகலாவை ஏற்காத தொண்டர்கள் அனைவரும், 'தீபா ஜெயலலிதா' என்ற பெயரிலேயே நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். நேற்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். தன்னை முன்னிறுத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூடவே, 'இன்னும் மூன்றே வாரத்தில் முடிவை அறிவிப்பேன்' எனவும் தெரிவித்தார். இதன்பின்னர், அரசியல் பிரமுகர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் தீபா. அவர்களிடம் பேசும்போது, "சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.

அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன். திண்டுக்கல் தொகுதியில் மாயத் தேவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் களத்தில் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். அதைப்போல, ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது. இரட்டை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு. எனவே, இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்திற்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்திற்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன்" என தேர்ந்த அரசியல் தலைவரைப் போல் விவாதித்திருக்கிறார். 

'பொங்கலுக்குள் சின்னம்மா முதல்வர் என்ற இனிப்பான செய்தி வரும்' என அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பேசி வருகின்றனர். பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்ததைப் போலவே, முதல்வர் பதவிக்கும் படிப்படியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. 'சசிகலா முதல்வர் ஆவாரா?' என கோட்டை வட்டாரத்திலும் விவாதம் நடந்து வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/76804-deepa-says-she-will-contest-against-sasikala-in-by-election.art

  • தொடங்கியவர்

அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு: தீபா

 

அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு எடுப்பேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

 
 
அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு: தீபா
 
சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சசிகலா தலைமையை ஏற்க மறுத்து அதிருப்தியுடன் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிக்கத் தொடங்கி உள்ளனர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் வசித்து வரும் தீபா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க அனுமதிக்கப்படாததால் தீபா பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தீபா வலியுறுத்தி வருகிறார்.

இதன் காரணமாக அ.தி.மு.க நிர்வாகிகளில் சிலரது பார்வை தீபா மீது திரும்பியுள்ளது. அவர்கள் தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

தீபாவை பார்ப்பதற்காக அ.தி.மு.கவினர் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கடலூர், வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் தீபா வீடு முன்பு திரண்டனர். அவர்கள் தீபாவை வாழ்த்தி கோ‌ஷமிட்டனர்.

ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்பதால் நீங்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த முன் வரவேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். தீபா முதலில் தன்னை சந்திக்க வருவதை தவிர்க்கும் படி கோரிக்கை விடுத்தார். போஸ்டர்கள் அச்சடித்து ஒட்ட வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் அதை அ.தி.முக தொண்டர்கள் ஏற்கவில்லை.

தீபா படம் போட்ட பெரிய, பெரிய போஸ்டர்களை வைத்து வருகிறார்கள். இன்றும் தீபாவை பார்க்க நிறைய பேர் வந்தனர். தொண்டர்களின் வாழ்த்து கோ‌ஷத்தால் மனம் நெகிழ்ந்த தீபா நேற்றும் இன்றும் தனது வீட்டின் மாடியில் உள்ள பால்கனிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். ரெட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் இரண்டு விரல்களைக் காட்டிய போது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அ.தி.மு.க தொண்டர்களின் தொடர் ஆதரவு காரணமாக தீபாவின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை விரைவில் நான் அறிவிப்பேன்.

இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது எதிர்கால நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை சில வாரங்களில் தீர்மானிப்பேன். 2 அல்லது 3 வாரங்களில் எனது முடிவு என்ன என்பது தெரிந்து விடும்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப்பற்றி தற்போது வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளன. அரசியலில் ஈடுபடுவது பற்றி ஓரிரு வாரங்களில் தெளிவாக சொல்லிவிடுவேன்.

இவ்வாறு தீபா கூறினார்.

இதற்கிடையே ஜெயலலிதா மரணம் காரணமாக காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து தீபாவை களம் இறங்க செய்ய முயற்சி நடக்கிறது. இதற்காக அ.தி.மு.க நிர்வாகிகளில் சிலர் ரகசியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/04110532/1060000/Deepa-decide-about-jump-into-politics-in-3-weeks.vpf

  • தொடங்கியவர்
அரசியலுக்கு வருகிறார் ஜெ., அண்ணன் மகள் தீபா
ஆதரவு திரட்டும் சசிகலா எதிர்ப்பாளர்கள்
 
 
 

சசிகலா பொதுச்செயலரானதால் அதிருப்தி யடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் குவிந்து, அவரை அரசியலுக்கு கொண்டு வர, முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

Tamil_News_large_168382620170105000519_318_219.jpg


ஜெயலலிதா மறைந்த சுவடு மறைவதற்குள், அவரது தோழி சசிகலா, பொதுச் செயலராகியுள் ளார். தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, மேல்மட்ட நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க் கள், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும், நுாற்றுக்கணக்கான தொண்டர் கள் குவிந்து, அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தி வருகின்றனர். அங்கு வரும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும், தீபா ஆதரவாளர்களால் சேகரிக்கப்படுகிறது.

மேலும், புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களில், தீபாவுக்கு ஆதரவாக, உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. நேற்று, ஜெயலலிதாவிற்கு விருப்பமான, ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து, ஏராளமானோர் தனியார் பஸ்சில், தீபா வீட்டிற்கு வந்தனர்.

திருச்சி மாவட்டம், மனப்பாறையை சேர்ந்த, அ.தி.மு.க., பேச்சாளர் ராஜேந்திரன், ஜனகராஜ், ஆகியோர் கூறுகையில், 'ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, என்ன நடந்தது என்ற விபரத்தை, சசிகலா வெளியிட வில்லை; யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. அவர் மீது சந்தேகமாக உள்ளது. அவர் தலைமையை ஏற்கவில்லை. எனவே, தீபா தலைமையேற்க வேண்டும்' என்றனர்.
 

'விரைவில் அரசியலுக்கு வருவேன்'- ஜெ., அண்ணன் மகள் தீபா பேட்டி


''அரசியலுக்கு வர, சில பணிகளை செய்து வருகிறேன்; விரைவில் என் முடிவை அறிவிப்பேன்,'' என, தீபா தெரிவித்தார்.

அவரது பேட்டி:

* அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தபடி உள்ளனர். அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

என் முடிவை மிக விரைவில் அறிவிப்பேன். அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும், உண்மையான தொண்டர்கள் தான்; அவர்களை பிரித்து பார்க்க வேண்டாம்.


* அரசியலுக்கு வர தயங்குகிறீர்களா?

எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

* மத்திய அரசு அல்லது வேறு கட்சிகள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனவா?

இல்லை; அப்படிப்பட்ட பேச்சு ஏதும் நடக்கவில்லை. என் முடிவை வெளியிட்ட பின், மற்றநடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.

* பிரதமரை சந்திக்க உள்ளீர்களா?

இல்லை.

* நீங்கள் அடுத்த ஜெயலலிதா என, தொண்டர்கள் கூறுகின்றனர்; அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அது ஆரோக்கியமான சிந்தனை.

* தற்போதுள்ள அரசியல் ஆரோக்கியமாக இல்லை; நீங்கள் வந்தால் எப்படி செயல்படுவீர்கள்?

நான் வந்தால், மக்கள் எதிர்பார்ப்பது போல், ஆரோக்கியமான அரசியல் மேற்கொள்வேன்.

* அப்படியென்றால் நீங்கள் அரசியலுக்கு வருவது உறுதி தானே?

அரசியலுக்கு வருவேன்; அதற்காக சில பணிகளை செய்து வருகிறேன். மக்கள் என்ன நினைக்கின்றனர்; நான் என்ன நினைக்கிறேன் என, முதலில் தெளிவுப் படுத்துவேன். அதன் பின் மற்ற விஷயங்கள் குறித்து பேசுவேன்.

* உங்கள் அண்ணன் தீபக்குடன் பிரச்னை உள்ளதா?

எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.

* நீங்கள் பேரம் பேசுவதாகவும், உங்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறதே?

நான் யாரிடமும் பேரம் பேசவில்லை; என்னை யாரும் மிரட்டவில்லை. சர்ச்சையை கிளப்புகிறவர்களுக்கும், எனக்கும் சம்பந்தமும் இல்லை.

* உங்கள் பெயரில், உறுப்பினர் சேர்க்கை நடக்கிறதே?

எனக்கும் தகவல் வந்துள்ளது; என் பதிலுக்கு பின், அது குறித்து பேசுகிறேன்.

* இரட்டை இலையை காட்டுகிறீர்கள்; கட்சியை மீட்பீர்களா?

அப்படி எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா பெயர்மற்றும் புகழை காப்பாற்ற நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

தீபா பேரவைக்கு பொறுப்பாளர்கள் 21 மாவட்டங்களுக்கு நியமனம்


சேலத்தில் உருவான, 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை'க்கு

 

அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், 21 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி:

சேலத்தில் உள்ள, 60 டிவிசன்களின் நிர்வாகிகள் மட்டும் இணைந்து, தீபாவை சந்திக்கலாம் என, நினைத்தோம். ஆனால், தமிழகம் முழுவதும் இருந்து, எங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விரைவில், மற்ற மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினால், மிரட்டல் வரும் என்ற காரணத்தால், புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளோம்.அ.தி.மு.க., பொதுச்செயலரா கவும், முதல்வராகவும், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபா மட்டுமே வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெ., இறந்த, 30ம் நாள் துக்கத்தை, தீபா ஆதரவாளர்கள் நேற்று அனுஷ்டித்தனர்.

ஜெ., இறந்து நேற்றுடன், 30ம் நாள் என்பதால், தீபா ஆதரவாளர்கள் சார்பில், கடலுார் புதுப்பாளையத்தில், நேற்று காலை, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் திருநங்கையர் ஒப்பாரி வைத்து அழுதனர்.
 

சசிக்கு எதிர்ப்பு


ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் வைக்கப்பட்ட தீபா ஆதரவு பேனர் அகற்றப் பட்டது; இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், வேறு இடத்தில் பேனர் வைக்க, போலீசார் அனுமதி வழங்கினர்.தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது:

சசிகலாவை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. கடந்த, 1972 முதல், அ.தி.மு.க.,வில் உறுப்பி னராக உள்ளோம். ஜெயலலிதாவின் மரணத் திற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவரது அண்ணன் மகள் தீபாவால் தான் முடியும். அவர் அரசியலுக்கு வருவதை, நாங்கள் மனதார வரவேற்கிறோம். ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683826

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.