Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு நாட்டை பிரித்து விடுமென வேதனைப்படும் மஹிந்த

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிரித்து விடுமென வேத­னைப்­ப­டு­ம் மஹிந்த

55-fe50805b620de946611154c6986469df57a0acd3.jpg

 

புதிய அர­சியல் யாப்பு சம்­பந்­த­மான இடைக்­கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது. பார­ாளு­மன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலா­கவோ அதற்கு சமாந்தர­மா­கவோ எந்­த­வொரு மையமும் இருக்க முடி­யாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்படும் என்­பதே அடிப்­படை நிலைப்­பாடு.

இதற்கு முன்­ன­ரான மூன்று அர­சியல் யாப்­பு­க­ளையும் நோக்­கினால், அவை அர­சியல் ரீதி­யா­கவோ பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பா­கவோ நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­ல­வில்லை. முத­லா­வ­தான சோல்­பரி யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த 27(C) சரத்­தையும் திட்­ட­மிட்டு புறந்­தள்­ளியே 1956 இல் சிங்­களம் மட்டும் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதனால் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்கள், பலத்த உயிர், உடமை அழிப்­புகள் வர­லாறு. பின்பு 1972 இல் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அர­சாங்­கத்தால் குடி­ய­ரசு யாப்பு மற்றும் 1978 இல் ஜே.ஆர்.ஜய­வர்­தன அர­சாங்­கத்தால் நிறை­வேற்­றப்­பட்ட எதேச்­ச­தி­கார நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யி­னா­லான யாப்பு இரண்டுமே, குறிப்­பாக புரை­யோடிப் போயுள்ள தமிழ் தேசிய இனப்­பிரச்­சி­னைக்கு ஒரு நீதி நியாயமான, தமி­ழரின் இறை­மை­யுடன் கூடிய சமத்­து­வத்தை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் அற்ற நிலை­யி­லேயே 26 வருட கால யுத்தம் கோரத்­தாண்­ட­வ­மா­டி­யது. அதன் கார­ண­மாக எல்லா இன மக்­களும் பாதிக்­கப்­பட்­ட­தோடு, தமிழ் மக்கள் இலட்­சக்­க­ணக்கில் வர­லாறு காணாத அழித்­தொழிப்­புக்கு ஆளாக்­கப்­பட்­டனர்.

எனவே, கடந்த கால அட்­டூ­ழி­யங்கள் நிறைந்த நிலை­மையை மீண்டும் ஏற்­ப­டாத வகையில் புதிய அர­சியல் யாப்பு வடி­வமைக்­கப்­ப­டு­வ­தோடு நடை­மு­றைப்­படுத்­தவும் வேண்டும். அதா­வது, இனி மேலா­வது நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்­டுச்­செல்ல வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. அதுவே நிஜ­மான நல்­லாட்­சி­யாக இருக்க முடியும்.

புதிய அர­சியல் யாப்பு கூட மத சார்­பற்­றது என்­ப­தற்­கில்லை. அர­சியல் வேறு, மதம் வேறு என்­ப­தற்கு மாறாக இன்று மதம் தான் அர­சி­ய­லாக மாறி விட்­ட­தான எதிர்­ம­றை­யான தோற்­றப்­பாட்­டையே தொடர்ந்து காண முடி­கி­றது. இதுவும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் ஒரு நீட்சி என்ற கூட கூற முடியும். ஆயினும், பௌத்­தத்­திற்கு அதி­யுயர் ஸ்தானம் என்ற சம கால யதார்த்­தங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்ற போர்­வையில் காய்கள் நகர்த்­தப்­ப­டு­கின்­றன.

மறுபுறத்­தில், தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­சியல் யாப்பின் மூலம் தீர்வு காணப்­படும் என்று கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது அளிக்கப்­பட்ட வாக்­குறுதி எவ்­வாறு நடை­மு­றைக்கு வரப்­போ­கிறது? தற்­போ­தைய யாப்பில் உள்ள 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் எவ்­வளவு தூரம் செல்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படப் போகி­றது என்­பதை பார்க்க வேண்டும்.

கூட்டு எதி­ர­ணி­யின் இன­வாதக் கூக்­குரல் இத­னி­டையில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந்த ராஜ பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி தரப்­பினர் இன­வாதக் கூக்­குரல் இட்டு வரு­கின்­றனர். உதா­ர­ண­மாக, அண்­மையில் மஹிந்த ராஜபக் ஷ ஒரு கொள்கை அறிக்­கையை விடுத்­தி­ருந்தார். அதா­வது, முத­லா­வ­தாக, சமஷ்டி ஆட்சி முறை­யினை அறி­மு­கப்­ப­டுத்தி நாடு பிரிக்­கப்­ப­டு­வ­தாக மேற்­படி அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது. அத்­தோடு, பொது எதி­ரணி சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆலாய்ப்­ப­றந்து விஷமத்­த­ன­மான பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். அவர்கள் இவ்­வாறு படு பிழை­யான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­வது நிச்­ச­ய­மாக தேசத்­து­ரோ­கத்­திற்கு ஒப்­பா­ன­தாகும். இதனை அவர்கள் தேசப்­பற்று என்று அர்த்தம் கற்­பித்து வரு­வது, தேசப்­பற்று என்­பது கடை கெட்­ட­வர்­களின் புக­லிடம் என்று அறிஞர் பேர்னாட் ஷா மற்றும் சாமுவேல் ஜோன்சன் கூறி வைத்த வியாக்­கி­யா­னத்­திற்கு ஒப்­பா­ன­தாகும். சிங்­கள மக்­களை திசை திருப்பி அர­சி­ய­ல­மைப்பு சபை முன்­னெ­டுத்து வரும் முயற்­சி­களை தடம்­பு­ரளச் செய்து விடலாம் என்று அவர்கள் செய்து வரும் பிர­சாரம் பின்­வ­ரு­மாறு:- 

அர­சி­ய­ல­மைப்பு வழி­காட்டல் குழுவின் மத்­தி-­ பி­ராந்­தியம் எனும் தலைப்­பி­லான உப குழு­வா­னது மாகாண ஆளு­நர்­களின் தற்­று­ணிவு அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு பரிந்­து­ரைத்­துள்­ளது. அதா­வது, மாகாண சபை­யினால் நிறை­வேற்­றப்­படும் நிய­திச்­சட்­டங்­க­ளிற்கு சட்ட வலு வழங்­கு­வ­தற்­கான ஆளு­நரின் அதி­காரம் அகற்­றப்­பட்டு, அது மாகாண சபையின் தவி­சா­ள­ருக்கு வழங்­கப்­பட உள்­ளது. அதா­வது, நிய­திச்­சட்­டத்தில் ஏதா­வது திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்­டு­மாயின், நிய­திச்­சட்­டத்தை மீண்டும் மாகாண சபைக்கு அனுப்­பு­வ­தற்கோ அல்லது அவ­சி­ய­மாயின் உச்ச நீதி­மன்­றத்­திற்கு பாரப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைப்­ப­தற்கோ ஆளு­ந­ருக்கு உள்ள தற்­று­ணி­வான அதி­காரம் அகற்­றப்­படப் போகி­றது. மேலும், மாகாண அரச சேவை சம்­பந்­த­மான ஆளு­நரின் அதி­காரம் முத­ல­மைச்­ச­ருக்கும் மாகாண அமைச்­ச­ர­வைக்கும் வழங்­கப்­ப­டு­கி­றது. மற்றும், முத­ல­மைச்­சரின் ஒப்­பு­த­லு­ட­னேயே ஆளுநர் பதவி நிய­ம­னங்­களை வழங்க முடியும் என்­பது மட்­டு­மல்­லாமல், முத­ல­மைச்சர் மற்றும் மாகாண அமைச்­சர்­களின் ஆலோ­ச­னை­யு­ட­னேயே ஆளு­நர்கள் தமது கட­மை­களை நிறை­வேற்ற முடியும்.

அதுமட்­டு­மல்­லாமல், தற்­போ­துள்ள ஒத்­தி­சைவுப் பட்­டியல் நீக்­கப்­பட்டு அவ்­வ­தி­கா­ரங்­களும் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட உள்­ள­தால், மத்­திய அர­சாங்­கமும் மாகாண சபை­களும் வெவ்­வே­றான அதி­கார மையங்­க­ளாகி விடு­கின்­றன. அதனை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் மாவட்டச் செய­லா­ளர்­களும் பிர­தேச செய­லா­ளர்­களும் மாகாண சபை­களின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரப்­ப­டு­வ­தோடு, மாகா­ணங்கள் தோறும் செயற்­படும் அரச சேவை ஆணைக்­குழுக்கள் மாகாண சபை­க­ளி­னதும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் சேவை­யாளர் பட்­டி­யல்­களை திறை­சேரியின் கண்­கா­ணிப்­பின்றி தீர்­மா­னித்­துக்­கொள்ள முடியும்.

அரச காணி சம்­பந்­த­மான அதி­கா­ரங்­க­ளையும் மாகாண சபை­க­ளுக்கு கைய­ளிப்­ப­தற்­கான யோச­னையும் மேற்­படி மத்­தி-­ பி­ராந்­தியம் உப குழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. மாகா­ணங்­களில் உள்ள ஏதா­வது காணிகள் மத்­திய அர­சாங்­கத்தின் உப­யோ­கத்­திற்கு தேவை­யாயின் மாகாண அதி­கா­ரி­களின் ஒப்­பு­த­லு­ட­னேயே அவற்றைக் கைய­கப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

அடிப்­படை உரி­மைகள் உப­குழு

சிங்­க­ளமும் தமிழும் அரச கரும மொழி­க­ளா­யி­ருக்க வேண்­டு­மென்­பது அடிப்­படை உரி­மைகள் உப­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முக்­கி­ய­மா­ன­தொரு பரிந்­து­ரை­யா­யுள்­ளது. மஹிந்த ராஜ­பக் ஷவின் கொள்கை அறிக்­கையின் பிர­காரம் இது ஏற்­பு­டை­ய­தல்ல என்ற அவ­ரது நிலைப்­பாடு தெரி­கி­றது. 1956 இல் சிங்­களம் மட்டும் சட்டம் இயற்­றப்­பட்ட பின்பு, 1987 இல் எட்­டப்­பட்ட இலங்­கை-­ – இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் இலங்­கையின் அரச கரும மொழி சிங்­களம் என்­பது கட்­டாயம் என்­ப­தோடு தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களும் அரச கரும மொழி­க­ளாக இருக்கும் என்­பதே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. இன்று மேற்­கு­றித்த உப­குழு சிங்­க­ளமும் தமிழும் அரச கரும மொழி­களாய் இருக்க வேண்டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­பதை மஹிந்த ராஜ­பக் ஷவினால் ஜீர­ணித்துக் கொள்ள முடி­ய­வில்லை என்­பது தெரி­கி­றது. அதா­வது, அவர் கற்­பிக்கும் காரணம் யாதெனில் வடக்கு-­, கிழக்கில் தமிழ் நிர்­வாக மொழி­யாக இருக்க வேண்டும் என்றும் அப்­பகு­தியில் சிறு­பான்­மை­யி­ன­ராக விளங்கும் சிங்­கள மக்­களின் நல­னுக்­காக நியா­ய­மான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும் என்றும் 1957 இல் ஏற்­று­க­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதுவே, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் முழு நாட்­டிற்கும் சிங்­களம் அரச கரும மொழி­யா­யி­ருக்கும், அதேவேளை வடக்­கு-­கி­ழக்கில் தமிழ் மொழிக்கு நியா­ய­மான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும் என்று வகுக்­கப்­பட்ட கொள்கை ஆகும் என்று மஹிந்த ராஜ­பக் ஷவின் மேற்­படி அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது, ஏழு தசாப்­தங்­க­ளுக்கு முன்பு மொழி சமத்­து­வ­மின்­மை­யா­யி­ருந்த நிலைப்­பாடு ஏன் இன்று நீக்­கப்­பட வேண்டும் என்­ப­துதான் இங்கே தொக்கி நிற்கும் வாத­மாகும். சிங்­கள அதி தீவி­ர­வா­திகள் சகிதம் தான் ராஜபக் ஷ பய­ணித்து வந்­துள்­ளாரே ஒழிய, 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்று அன்று இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங், பின்பு இன்­றைய இந்­திய வெளியு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுக்கும் மற்றும் 2012 இல் இலங்கை வந்­தி­ருந்த முன்னாள் இந்­திய வெளியு­றவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்­ணா­வுடன் கலந்­து­ரை­யா­டிய போதும், 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்­படும் என்று ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­த­தாக அறிக்­கைகள் பதி­வா­கி­யி­ருந்­தன. அதே ராஜ­பக் ஷதான் 13ஆவது திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை கூட வழங்க மாட்டேன் என்று அர­சியல் யாப்பை அப்­பட்­ட­மாக மீறும் வகையில் மார் தட்­டினார். முற்­பகல் செய்யின் பிற்­பகல் விளையும் என்­ப­தற்­கி­ணங்­கவே அவ­ருக்­கான அறு­வடை 2015 ஜன­வரி 8ஆம் திகதி கிடைத்­தது. அன்­றைய தோல்­வியை தாங்க முடி­யாத நிலையில், எவ்­வா­றா­வது சிறி­சே­ன-­ – விக்­கி­ர­ம­சிங்க தேசிய ஒற்­றுமை அர­சாங்­கத்தை கவிழ்த்து விட வேண்­டு­மென்று மேற்­கொண்ட பகீ­ரதப் பிர­யத்­தனம் கார­ண­மா­கவே அவர் இன­வா­தத்தை கக்­கிய வண்ணம் இருக்­கின்றார்.

இன்­னொரு சுவா­ரஷ்­ய­மான விடயம் யாதெனில், ராஜபக் ஷ வெளியிட்ட மேற்­படி கொள்கை அறிக்கை முன்னாள் வெளிநாட்­ட­மைச்­சரும் இன்று ராஜபக் ஷ சார்பு ஸ்ரீ லங்கா பொது மக்கள் முன்­ன­ணியின் (ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன) தலை­மைப்­ப­த­வியில் அமர்த்­தப்­பட்டு இருப்­ப­வ­ரு­மா­கிய பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரி­ஸினால் வரை­யப்­பட்­ட­தாக அறி­கிறோம். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நாயக்­கவின் ஆட்­சிக்­காலத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அதி­கா­ரப்­ப­கிர்­விற்­கான திட்­டத்தை தீட்­டு­வ­தற்கும் பீரிஸ் குறிப்­பி­டத்­தக்­க­ளவு பாகம் வகித்­தவர். பின்பு 2001 முதல் 2003 வரை­யான சிறிய காலப்­ப­கு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­யி­ருந்த போதும் பீரிஸ் முக்­கி­ய­மான பாகம் வகித்­தவர். எனவே, பதவி மோக மேலீட்­டினால் தலை­சி­றந்த சட்ட மேதை ஒருவர் தனது ஆத்­மாவை அடகு வைத்­துள்ளார் என்­பது துர்ப்­பாக்­கி­ய­மா­ன­தாகும்.

இறு­தி­யாக, ஆளு­நர்­களின் தற்­போ­தைய அதி­கா­ரத்தை பொறுத்­த­வரை பிர­தா­ன­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது யாதெனில் அவர்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் அல்லர் என்ற வகையில் அவர்­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்து புத்திஜீவிகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒரு தனி நாட்டிற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் முனைகின்றனர் என்று மஹிந்த ராஜபக் ஷ சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன போன்றோர் சமஷ்டி முறைமை வழங்கப்படுகிறது, பௌத்தத்திற்கு உள்ள அதியுயர் ஸ்தானம் விலக்கப்படுகின்றது என்று இன்னோரன்ன பொய்யும் புரட்டு­மான கதைகளை புனைந்து தம்மைத் தாமே தாழ்த்திக்கொள்ளும் அரசியல் வங்குரோத்துத்தனத்தை சந்திக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும், அடோல்ஃப் ஹிட்லரின் பேச்சாளராயிருந்த கோயபள்ஸ் பாணியில் பொய் பொய்யாக கூறி அதுதான் இறுதியில் உண்மை என்று தாங்களே விசுவாசித்துக்கொள்ளும் வங்கு­ரோத்துத்தனத்தை வெளிப்படுத்துவதை விட வேறொன்றும் செய்ய முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

எவ்வாறாயினும், சிறிசேன- – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த நாசகார சக்திகளை தலையெடுக்க விடாது, கடந்த கால இரு தேர்தல்களிலும் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து துணிச்சலாக நிறைவேற்ற வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.