Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !

Featured Replies

சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !

சசிகலா பேனர்

நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகலா படங்களை சேதப்படுத்தியும், கிழித்தெறிந்தும் தங்களது எதிர்ப்புகளை மக்கள் காட்டி வருகிறார்கள்.  

திருநெல்வேலி மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு கணிசமான அளவு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. கடையநல்லூர், தென்காசி. சங்கரன்கோவில், திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஃபிளக்ஸ் பேனர்களை வைத்துள்ள அ.தி.மு.க.வினர், சசிகலாவின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகின்றனர். பல இடங்களில் சசிகலாவின் படம் கிழிக்கப்பட்டும், தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தி வருகிறார்கள். இது சசிகலா ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை கழுவியும், கிழிக்கப்பட்ட பேனர்களை உடனடியாக மாற்றியும் வருகிறார்கள்.

சசிகலா பேனர்

காவல்துறையில் வாய்மொழியாக புகார் அளிக்கப்பட்டபோதும், பெரும்பாலான இடங்களில் இவ்வாறு நடப்பதால் யார் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. தீவிரமாக கண்காணித்தும் யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாததால் சசிகலா ஆதரவாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலும் இதை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் விவாதித்து வந்தனர். இந்த குழுவின் அட்மினாக மாநகர மாவட்ட ஜெ பேரவைச் செயலாளரான கே.ஜே.சி.ஜெரால்ட் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அந்த வாட்ஸ் குருப்பில் இந்த விவகாரம் தொடர்பாக  அ.தி.மு.க. மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரான பல்சசிகலா வாட்ஸப் பேனர்லிக்கோட்டை செல்லத்துரை என்பவர், 'சின்னம்மா படத்தை சேதப்படுத்துபவர்களை கண்டறிபவர்களுக்கு 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அம்மாவின் நல்லாசியோடு சின்னம்மா கழகப் பொதுச்செயலாளராக தலைமையேற்று நடத்தும் அ.தி.மு.க.வின் ஆற்றல் மிக்க தொண்டர்களே..’ என்று தொடங்கும் அந்த அறிவிப்பில், ‘‘நமது கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சியால் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தில் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதலுடன் செயல்படும் வன்முறையாளர்களின் செயல்களைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது.

குறிப்பாக, நமது கட்சியினர் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்துபவர்களை அடையாளப்படுத்தும் பணியினைச் செய்ய நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு சின்னம்மாவின் படங்களை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நாம் அனைவருமே இணைந்து செயல்படுவோம். இதற்காக இரவில் நாம் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும்.

அவ்வாறு அனைவரும் இரவு நேரங்களில் தீவிரமாக செயல்பட்டு கூடுதல் கண்காணிப்புடன் இருந்தால் போர்டுகளை சேதப்படுத்தும் நபர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடியும். நமது கட்சியின் ஃபிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்,’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சசிகலா படம் அச்சடிக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களை கிழிப்பவர்களைக் கண்டுபிடித்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற இந்த அறிவிப்பு குறித்து கட்சியினர் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/76875-admk-functionary-announce-prize-money-to-find-the-suspect-who-tore-sasikala-flex-banner.art

  • தொடங்கியவர்

பேசும் படம்: சசிகலா முதல்வராகக் கோரி போஸ்டர்

 

 
படங்கள்: எல்.சீனிவாசன்
படங்கள்: எல்.சீனிவாசன்
 
 

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தமிழகத்தின் ஆட்சித் தலைமையையும் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், முதல்வராக அழைப்பு விடுத்தும் அதிமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இப்படி சசிகலா ஆதரவு போஸ்டர்களை அதிமுகவினர், மக்கள் கவனம் பெறும் பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

இன்று சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் 'முதல்வராய் தலைமை ஏற்க வாருங்கள்' என்று சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதன் புகைப்படப் பதிவுகள்

sasi1_3113101a.jpg

sasi_2_3113106a.jpg

sasi_3_3113107a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சசிகலா-முதல்வராகக்-கோரி-போஸ்டர்/article9459247.ece

  • தொடங்கியவர்
சசிகலா போஸ்டர் கிழிப்பு அதிகரிப்பு
 
 
 

சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்களில், சசிகலா புகைப்படத்தை,
அதிருப்தியாளர்கள் கிழித்தெறிவது, அதிகரித்து வருகிறது.

 

Tamil_News_large_168385820170104232553_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப் பேற்று உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித் தும், அவர் முதல்வராக வர வேண்டும் என வலியுறுத்தியும், சென்னையில், கட்சி நிர்வாகி கள் ஆங்காங்கே, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தாலும், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலா படம் போட்ட போஸ்டர்

ஒட்டப்பட்டதும், அதில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை, அவர்கள் கிழித்துவருகின்றனர்.

சில இடங்களில், சசிகலா புகைப்படம் மீது சாணம் வீசி உள்ளனர். அதே போல், பேனர்களை கிழிக்கும் சம்பவமும் தொடர்கிறது. நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே, சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் களிலும், சசிகலா புகைப்படம் கிழிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'போஸ்டர் ஒட்டிய, சிறிது நேரத்தில், அதில் உள்ள சசிகலாபடத்தை மட்டும், சிலர் கிழித்து விடுகின்ற னர்; எங்களால் தடுக்க முடியவில்லை' என்றனர்.
 

ஓ.பி.எஸ்., தொகுதியில் சசிகலா பேனர் கிழிப்பு


முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியான, தேனி மாவட்டம் போடியில், சசிகலா ஆதரவு பேனர் கிழிக்கப்பட்டது.போடி தொகுதியில், 1989 தேர்தலில், முதன்முதலில் போட்டியிட்ட ஜெயலலிதா, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவ ரானார். தற்போது, இத்தொகுதியில், முதல்வர் பன்னீர்செல்வம்,

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

எம்.எல்.ஏ.,வாக உள்ளார். போடி அருகே, சில மலையில், சசிகலா ஆதரவு பேனர், கிழிக்கப் பட்டது; அது, உடனடியாக அகற்றப்பட்டது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683858

  • தொடங்கியவர்
சசிகலா பேனர்கள் கிழிப்பு
போலீஸ் ஆதரவுடன் மூடி மறைப்பு
 

 

  • gallerye_001311399_1684689.jpg

 

 
 

சேலத்தில், ஒரே நாளில், 10 இடங்களில், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப் பட்ட பேனர்களை, தொண்டர்கள் கிழித்தனர். அதை, போலீஸ் ஆதரவுடன், நிர்வாகிகள் மூடி மறைத்தனர்.

 

Tamil_News_large_168468920170106001255_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

கிளம்பியுள் ளது. பதவியில் இருப்பவர்கள், நிர்வாகி கள், சம்பாதித்ததை பாதுகாக்க நினைக்கும் நிர்வாகி கள் மட்டுமே, தங்களின் வாழ்க்கை ஓட்டத்திற்காக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைக்கின்றனர்.

ஆனால், சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள கட்சி தொண்டர்கள், செய்வதறியாது உள்ளனர். தீபாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தா லும், தீபா முடிவை அறிவிக்காததால், குழப்பத்தில் உள்ளனர்.

தங்கள் கோபத்தை வெளிப்படுத்த, சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர்கள், போஸ்டர் களை, கிழிப்பது, அகற்றுவது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர்.இது, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில், சசிகலாவுக்கு

 

எதிராக பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால், நிர்வாகிகள், போலீஸ் உதவியுடன் மூடி மறைக்கபார்க்கின்றனர்.

இந்த வகையில், சேலத்தில் நேற்று ஒரே நாளில், 10 இடங்களில் சசிகலா ஆதரவு பேனர் கள் கிழித்தெறியப்பட்டன. இவற்றை, போலீசார் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் அகற்றினர்.

தொண்டர்களின் ஆக்ரோஷம், நிர்வாகிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கூறுகையில், 'அ.தி.மு.க., நிர்வாகி களால் வைக்கப்பட்டுள்ள பேனர்களை, அக் கட்சி தொண்டர்கள் கிழித்தனர்.

இதனால், பேனரை வைத்த நிர்வாகிகளுக்கே தகவல் தெரிவித்து, கிழிக்கப்பட்ட பேனர்களை மட்டும் அகற்றியுள்ளோம். நல்ல நிலையில் உள்ள பேனர்களை கண்காணிக்கும்படி, ரோந்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684689

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.