Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன.

Featured Replies

gallerye_234620433_1683787.jpg

 

  • gallerye_232216376_1683787.jpg

 

தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன.

 

Tamil_News_large_1683787_318_219.jpg

ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் மற்றும், தி.மு.க., தலைவர் உடல்நலம் குன்றி இருத்தல் ஆகிய காரணங்களால், புதிதாக தலைமை ஏற்றிருக்கும், இரு கட்சிகளின் பொறுப்பாளர் களும், கட்சி ரீதியிலான பதவிகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், அதிகாரத்தை, தங்கள் கைகளில் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைத்து விட்டனர்.

அ.தி.மு.க.,வில், தலைவர் பதவி, அதைத் தோற்றுவித்த, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உரித்தானது; எனவே, அதற்கடுத்த, பொதுச் செயலர் பதவியில், பல ஆண்டு காலமாய், ஜெயலலிதா இருந்தார். அவர் மறைந்த பின், தற்போது, அவரது தோழி சசிகலா, அப்பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிப்போர் அனைவரும், அடுத்த நாளே, அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடும் நிலைக்கு மாற்றப்படுகின்றனர்.

இது தொடர்கதையாகும் என்பதை, அவர்களின் எதிர்கால திட்டங்கள் விளக்குகின்றன. அதாவது, தனக்குச் சாதகமாகச் செயல்படும் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் அதிகாரம் அளிப்பது,
மற்றவர்களை, கட்சியிலிருந்து வெளியேற்றாமல், 'டம்மி'யாக்கி விடுவது ஆகியவை, திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.அதே போல், தி.மு.க.,விலும், தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அக்கட்சியில், செயல் தலைவர் என்ற புதுப் பதவி உருவாக்கப்பட்டு, அவர் மகன் ஸ்டாலின், நேற்று அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

அவர் ஏற்கனவே பார்த்து வந்த பொருளாளர் பதவி, அவர் சகோதரி கனிமொழிக்கோ,முதன்மைச் செயலர் துரைமுருகனுக்கோ வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அப்பதவியை, ஸ்டாலினே தக்க வைத்துக் கொண்டார்; இவர் ஏற்கனவே வகித்து வந்த, இளைஞரணி செயலர் பதவியையும், வேறு யாருக்கும் கொடுக்கவில்லை.

ஆக, கட்சியின் முக்கிய மூன்று பதவிகளையும் தன்னிடம் இருத்தி, மொத்த அதிகாரத்தையும் தன் வசமாக்கிக் கொண்டுள்ளார். இனி கட்சி ரீதியான எந்த செயல்பாடும் ஸ்டாலினிடம் கேட்காமல் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 

தலையாட்டிகளுக்கு மட்டுமே பதவி நீட்டிப்பு


அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டு உள்ள சசிகலா, மாவட்ட வாரியாக, நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவு செய்தார். அதன்படி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள, எட்டு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். காலை, 9:00 மணிக்கு நிர்வாகிகள் வந்தனர். 10:15 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தனர். சசிகலா வருகைக்காக, அனைவரும் காத்திருந்தனர். பகல், 11:50 மணிக்கு, சசிகலா வந்தார்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பேச, அனுமதி

வழங்கப்படவில்லை; சசிகலா மட்டும் பேசினார்.

அவர் பேசியதாவது:மாவட்ட செயலர்கள், அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும். வேற்றுமையை மறந்து, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்டங்களில் நடக்கும், நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவில், நானும் கலந்து கொள்வேன். அனைவரும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்; கரையான்கள் புக வழி விடக்கூடாது.

ஜெயலலிதா இருந்தபோது, எப்படி செயல்பட்டீர் களோ, அப்படியே தொடர்ந்து செயல்படுங்கள். மாதந்தோறும்,கிளை கூட்டம் நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒன்றிய, நகர கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரங்களை, தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதிக அளவில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை, கட்சியில் சேருங்கள். சிறப்பாக செயல்படுங்கள்; உங்களுக்கு நல்லது நடக்கும். இவ்வாறு சசிகலா பேசினார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி,9ம் தேதி வரை நடைபெற உள்ளது.சந்திப்பு முடிந்ததும், தனக்கு ஆதரவாக தலையாட்டும் நிர்வாகிகளை மட்டும், பதவி யில் தொடர அனுமதிப்பது என்றும், எதிராக உள்ளவர்களை, 'டம்மி'யாக்கவும், சசிகலா முடிவு செய்துள்ளார்.

'கட்சியை சசி கட்டுப்பாட்டில் வைத்தால் தான், மற்ற வேலைகளை எளிதாக முடிக்க முடியும். 'மாவட்ட'ங்களையும், 'வட்ட'ங்களையும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களையும் பேச விட்டால் பிரச்னை வெடிக்கும்.

ராணுவ கட்டுப்பாட்டுடன், ஜெ., போல கட்சியை வழி நடத்துவேன் என, அக்கா சொல்லி இருக்காங்க...' என, சசிகலா ஆதரவாளர் சிலர், இப்போதே கூறி வருவது, சசிகலாவின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதாக, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

சசி காருக்கு மட்டும் அனுமதி!


கட்சி அலுவலகம் உள்ளே, சசிகலா காருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர், ஜெயலலிதா பயன்படுத்தும் காரில் வந்தார். முதல்வர் பன்னீர்செல்வம் கார் உட்பட அனை வருடைய கார்களும், வெளியே நிறுத்தப் பட்டன. முதல்வர் பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

கூட்டம் குறைவு!


மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, சசிகலா காலை, 10:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வருவார் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், அவர் குறித்த நேரத்திற்கு வரவில்லை.

அவரை வரவேற்க, பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சசிகலா வருவதற்கு முன், கட்சி அலுவலகம் உள்ளே நிறுத்தப்பட்டனர். அவர்களின் கைகளில், ஜெயலலிதா, சசிகலா படத்துடன் கூடிய அட்டைகள் வழங்கப்பட்டன. சிறிது நேரத்தில், அவற்றை திரும்ப பெற்று, கட்சிக் கொடிகளை வழங்கினர்.

அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு இடையே, முன் வரிசையில் நிற்பது தொடர்பாக, மோதல் எழுந்தது; போலீசார் சமாதானப்படுத்தினர். ஜெயலலிதா, கட்சி அலுவலகம் வருவது, திருவிழா போல் இருக்கும்; தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிவர்.

ஆனால், நேற்று அந்த எழுச்சி இல்லை.சந்திப்பு முடிந்ததும், மாவட்ட வாரியாக,

 

நிர்வாகிகளுடன் சசிகலா, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

முழு அதிகாரத்துடன் செயல் தலைவர்


தி.மு.க., வரலாற்றில், முதன்முறையாக, செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அப் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை
அறிவாலயத்தில், நேற்று காலை, 9:10 மணிக்கு துவங்கியது; 10:25 மணிக்கு முடிந்தது. உடல்
நலக்குறைவு காரணமாக,கட்சி தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.

பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன், மகளிர் அணி செயலர் கனி மொழி, துணை பொதுச் செயலர், ஐ.பெரிய சாமி, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர். பாலு, மருத்துவ அணி நிர்வாகி சரவணன், அமைப்புச் செயலர் இளங்கோவன் உட்பட, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க., சட்டப்பிரிவு செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,
''கட்சியின் சட்டவிதிகளில், திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. செயல் தலைவர் பதவி என்பது, தி.மு.க., தலைவர் பதவிக்கு இணை யானது; தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு உண்டு,'' என்றார்.

பொதுச் செயலர் அன்பழகன் பேசுகையில், ''கட்சியின் சட்டவிதி, 18வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, செயல் தலைவராக, ஸ்டாலினை நியமனம் செய்யும் அறிவிப்பை முன்மொழிகிறேன்,'' என்றார். முதன்மை செயலர் துரைமுருகன், அந்த அறிவிப்பை வழிமொழிந்தார். ஸ்டாலின், செயல் தலை வராக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட தும், அவர், அன்பழகனின் காலை தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

பின், ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவி, துரைமுருகனுக்கோ, கனிமொழிக்கோ வழங்கப்படும் என, அனைவரும் அமைதி காத்து, கைகட்டினர்; ஆனால், அது போன்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.தவிர, ஸ்டாலின் வகித்து வரும் இளைஞரணி செயலர் பதவியை, வேறு யாருக்காவது மாற்றித் தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது; அதுவும் நடக்கவில்லை.

உறுப்பினர்கள் அனைவரும், மனதில் எழுந்த சந்தேகத்திற்கு விடை தெரியாமல் கிளம்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.'மூன்று பதவிகளையும் ஸ்டாலின் வைத்திருப்பதைப் பார்க்கும் போது, அ.தி.மு.க., போல, ராணுவக் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வர ஆசைப் படுகிறாரோ என, நினைக்கத் தோன்றுகிறது.

ஏற்கனவே, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, இவருடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே, 'சீட்' கொடுக்கப்பட்டது என, புகார் கிளம்பி, தலைவர் காதுக்குச் சென்றது. அவர் பல முறை, பலரைச் சமாதானம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. இனி, எதிர்ப் பாளர்கள் யாரும், வாயைத் திறக்க முடியாத சூழல் உருவாகி விட்டது' என்ற கருத்து, கட்சி யினரிடையே எழுந்துள்ளது.
 

ஜெ., போல் சசிகலா சைகை!


அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டதும், தனது நடை, உடை மற்றும் சிகை அலங்காரத்தை, ஜெயலலிதா போல் மாற்றிக் கொண்டுள்ளார். பொதுச் செயலராக பதவியேற்க, கட்சி அலுவலகம் வந்தபோது, ஜெயலலிதாவை போலவே, முதல் மாடியில் நின்று, தொண்டர்களை பார்த்து வணங்கினார். அதேபோல், நேற்று கட்சி அலுவலகம் வந்த சசிகலா, ஜெ.,வை போல் மாடியில் நின்று, இரட்டை விரலை காண்பித்தார். மேடையில், சசிகலா மட்டும் அமர்ந்தார். மற்றவர்கள், அவர் முன் பவ்வியமாக உட்கார்ந்திருந்தனர்.
 

கனிமொழி ஏமாற்றம்


கனிமொழிக்கு, பொருளாளர் பதவி அல்லது காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவருக்கு, இன்று பிறந்த நாள்; பிறந்த நாள் பரிசாக, பொருளாளர் பதவி வழங்கப்படாத தால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு காரணம், பொருளாளர் பதவியை, முன்னாள் அமைச்சர்கள் துரை முருகனும், எ.வ.வேலுவும் எதிர்பார்த்தனர். இந்த போட்டியின் காரணமாக, அப் பதவியை யாருக்கும் வழங்காமல், ஸ்டாலினே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.