Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம்

Featured Replies

'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து
சசிகலாவை நீக்கும் வரை
போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம்
 
 
 

''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார்.

 

Tamil_News_large_168389220170104232033_318_219.jpg

தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

*அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே?

அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை.

*எப்படி கூறுகிறீர்கள்?

பொது செயலாளராக வருபவர் கட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். இதை அ.தி.மு.க., விதி 30(5)ல் இருக்கிறது. ஆனால் கட்சிக்கு துரோகம் செய்ததாக கூறி சசிகலாவை மறைந்த முதல் வர் ஜெயலலிதா 2011ல் நீக்கினார். பின் 2012ல் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப் பட்டார். அவர் இணைந்து ஐந்தாண்டுகள் பூர்த்தியாகவில்லை.

அதற்குள், அவர் பொது செயலாளரானது அடாவடி செயல். தொண்டர்கள் ஏற்க மாட்டார் கள். அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என தேர்தலில் ஓட்டு போட்ட மக்களும், இதை ஏற்க மாட்டார்கள். வேண்டுமானாலும் இப்பவே தேர்தல் வைக்கட்டுமே?

* ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவலியுறுத்தப்படுகிறதே?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்

இருப்பதாகவும், அப்போலோ மருத்துவ மனையில் 75 நாட்கள் என்ன நடந்தது? இதுகுறித்து நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

* சசிகலாவிற்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்களே?

எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர், கவுன்சிலர் பதவிகளில் இருப்பவர்கள் பதவி ஆசைக்காக சசிகலா பின்னால் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள், தன்மானத்தை விட்டு கொடுக்காமல் அமைதியாக உள்ளனர்.

* எதை வைத்து இப்படி கூறுகிறீர்கள்?

தமிழகம் முழுவதும் சசிகலா போஸ்டர்கள் மீது மக்கள் சாணம் அடிக்கின்றனர். அவரது போஸ்டர்களை கிழித்தெறிகின்றனர். மாறாக, உண்மையான தொண்டர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் எனக் கூறியவர்கள், அப்படி கூற வைத்தவர்கள் பின்னால் உள்ளனர்.

சசிகலா பின்னால் போனால் அ.தி.மு.க.,விற்கு எதிர்காலத்தில் வளர்ச்சி இருக்காது. ஜெயலலிதா மீது உயிரை வைத்திருந்த தொண்டர்கள் அரசியலே வேண்டாம் என்ற மனஉளைச்சலில் உள்ளனர்.

* தீபா மற்றும் உங்களை போன்றவர்கள் சசிகலாவிற்கு எதிராக ஒன்றிணைவீர்களா?

விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும். திருப்பு முனை ஏற்படும். சசிகலா குடும்பத்தினருக்கு பயந்து உண்மையான தொண்டர்கள் பொறுமையாக காத்து இருக்கின்றனர்.

* சசிகலாவிற்கு எதிராக பேசுவோர் மீது தாக்குதல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

கன்னியாகுமரி மாவட்டத்தில், சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்தநாஞ்சில்முருகன் என்பவர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்ளார். சசிகலா குடும்பத்தினர் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

* சசிகலாவை அ.தி.மு.க., பொதுக்குழு கூடி பொது செயலாளராக தேர்வு செய்துள்ளதே?

அ.தி.மு.க., சட்டவிதிகளின்படி, முறையாக

 

அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை, என் போராட்டம் ஓயாது.

* போயஸ்கார்டனை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளதே?

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததே நான் தான். ஜெயலலிதாவே இல்லை. இன்னும் ஏன் சசிகலா அங்கிருக்கிறார். நான் இறந்து விட்டால், என் வீட்டில் வேலைக்காரிக்கு என்ன வேலை. இல்லத்தை கபளீகரம் செய்யும் வேலை இது.

* சசிகலா முதல்வராக வேண்டும் என உதயகுமார், தம்பித்துரை போன்றவர்கள்
கூறுகிறார்களே?


சசிகலா முதல்வராக வேண்டும் என்றால் முதலில் எம்.எல்.ஏ., ஆக வேண்டும். தமிழகத்தில் ஊழல் எதிரொலியாக வருமான வரி ரெய்டு நடத்தி வருகின்றனர். சசிகலா ஓட்டு கேட்டு போனால் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர் எம்.எல்.ஏ., ஆக முடியாது.

* அ.தி.மு.க., தற்போதைய நிலை குறித்து?

அ.தி.மு.க., என்ற பெரிய இயக்கத்தை சீரழிக்க சிலர் நினைக்கின்றனர். பதவி சுகத்திற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சசிகலா பின்னால் உள்ளனர். அவர்கள் வரும் காலத்தில் தொகுதி பக்கமே போக முடியாத நிலை ஏற்படும். இதனால் அ.தி.மு.க.,விற்கு எதிர்காலத்தில் வளர்ச்சி இல்லாமல் போய் விடும். இவ்வாறு பேட்டியளித்தார்.

-நமது சிறப்பு நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.