Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!' -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும்

Featured Replies

'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!'  -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும் 

ops_governor1_14299.jpg

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர் நிர்வாகிகள். ' தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து அரசியலையும் கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சட்டமன்றத் தேர்தலின்போது, 'போடி நாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவாரா? தலைமை சீட் கொடுக்குமா' என்ற கேள்வி தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் மத்தியில் வலம் வந்தது. அவரது விசுவாசத்தின் மீது ஜெயலலிதாவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாததால், சீட் கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வந்த பிறகு, அமைச்சர் பதவி குறித்தும் கேள்வி எழுந்தது. நிதித்துறையை மட்டும் அவரிடம் வழங்கிவிட்டு, பொதுப் பணித்துறையை எடப்பாடி பழனிச்சாமிக்குக் கிடைக்கச் செய்தார் சசிகலா. ஆனால், ஓ.பி.எஸ் பக்கம் காற்றின் திசை வீச ஆரம்பித்ததால், அப்போலோ சிகிச்சையில் ஜெயலலிதா இருந்தபோதே, முதல்வரின் அதிகாரங்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. பின்னர், தமிழகத்தின் முதல்வராகவும் பதவியேற்றார். கடந்த இருபது நாட்களாக, ' சசிகலாவை முதல்வராக்குவதற்காக, பன்னீர்செல்வம் விட்டுத் தர வேண்டும்' என அமைச்சர்கள் பேசிக் கொண்டிருந்தனர். விவசாய மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதால், இந்தக் கோஷத்தின் அளவு சற்று குறைந்திருக்கிறது. " மாவட்ட நிர்வாகிகளை வரும் 9-ம் தேதி வரையில் சந்திக்க இருக்கிறார் சசிகலா. அதன்பிறகு, ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என மன்னார்குடி உறவுகள் தீர்மானித்தாலும், பன்னீர்செல்வத்தின் மௌனம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மத்திய அரசின் தலையீடு தீவிரமாக இருப்பதால், முதல்வர் பதவி குறித்த பேச்சுக்களை சில நாட்கள் நிறுத்தி வைக்குமாறு கார்டன் தரப்பில் இருந்து உத்தரவு வந்துள்ளது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நிர்வாகிகள் வரிந்து கட்டுகின்றனர். தேர்தல் நேரத்திலேயே அவருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் யாரும் வேலை செய்யவில்லை. மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வனின் உத்தரவுகளைத்தான் கீழ்மட்ட நிர்வாகிகள் பின்பற்றி வருகின்றனர். இதில் எரிச்சலான ஓ.பி.எஸ், தன்னுடைய மகனை தேர்தல் பணிகளில் ஈடுபட வைத்தார். அதன் விளைவாகவே வெற்றி பெற முடிந்தது. ' சொந்த மாவட்டத்துக்குள் எதிர்ப்பு நீடிப்பதால், தி.மு.கவின் லட்சுமணன் வெற்றி பெற்றுவிடுவார்' என்றுதான் அ.தி.மு.கவினர் பேசி வந்தனர். அதையும் மீறி நல்ல ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸை பதவியில் இருந்த அகற்றுவதற்காக, சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும் என தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் தீர்மானம் நிறைவேற்றி, கார்டனுக்கே வந்து அளித்தனர். கடந்த ஓரிரு நாட்களாக, ஓ.பி.எஸ் பதவி விலக வேண்டும் எனப் பேசி வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். இதை ஓ.பி.எஸ் சமுதாயத்து மக்கள் ஏற்கவில்லை. ' இப்போதே இப்படி நடந்து கொள்கிறார்கள். நாளை முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டால், அமைச்சரவையில் என்ன இடம் கொடுப்பார்கள் என்பதும் சொந்த மாவட்டத்தில் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும்' என்பதையும் அவருடைய ஆதரவாளர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். தன்னைச் சுற்றி நடக்கும் உள்கட்சி அரசியலையும் கவனித்து வருகிறார் பன்னீர்செல்வம். அதனால்தான் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்" என்றார். 

secretariate_600_14044.jpg

" தமிழக அரசியலில் நடக்கும் விவகாரங்கள் குறித்து, மத்திய அரசின் பார்வைக்குத் தகவல்களை அனுப்பி வருகிறது ஆளுநர் அலுவலகம். வெளியில் உள்ள அ.தி.மு.க அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி ஆளுநருக்கு எந்த அக்கறையும் இல்லை. சபை நடவடிக்கை மட்டும்தான் கவர்னரின் கணக்கு. அந்தக் கணக்கிற்குள் குழப்பம் வந்தால் மட்டுமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி அவர் ஆராய்வார். ஒருவேளை, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சொல்வதுபோல, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பன்னீர்செல்வம் சென்றாலும், பலத்தை நிரூபிக்க ஒரு மாதம் வரையில் அவகாசம் கொடுக்கும் முடிவில் ஆளுநர் இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுவிட்டால், ஆறு மாதத்துக்கு அவருடைய பதவியை யாரும் அசைக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் கனிவான பார்வை ஓ.பி.எஸ்ஸை நோக்கி இருப்பதையும், கார்டன் வட்டாரத்தினர் கவனித்து வருகிறார்கள். ' சட்டரீதியாக தனக்குள்ள வலுவை அவர் பயன்படுத்த வேண்டும். முதல்வர் பதவியில் சமரசம் காட்ட வேண்டாம்' என அவருக்கு அறிவுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தொடங்கி அமைச்சர்கள் வரையில், கடந்த இருபது நாட்களாக சசிகலா முதல்வர் ஆக வேண்டும் எனப் பேசி வருகின்றனர். இன்னும் ஓ.பி.எஸ் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ' சசிகலாவுடன் அவர் சமரசம் ஆகிவிட்டார்' என திட்டமிட்டே தகவல் பரப்பப்படுகிறது. ' தானாக பதவி விலகுவார்' என எதிர்பார்த்து, மன்னார்குடி உறவுகள் இவ்வாறு பேசி வருகின்றனர். ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான், அவருடைய அரசியல் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். 

'சின்னம்மா முதல்வர் ஆனால், ஆறு பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருக்கிறது. இனிப்பான பொங்கலை எதிர்பார்க்கலாம்' என எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிர்வாகிகளுக்கு, கசப்பான பொங்கலை ஓ.பி.எஸ் கொடுப்பாரா என்ற பேச்சுக்களும் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/76951-governor-goes-ahead-as-per-the-assembly-will-silence-of-ops-have-an-effect-on-mannargudi-family.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.