Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்!” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி #IamATroll

Featured Replies

“நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்!” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி   #IamATroll

நரேந்திர மோடி பி.ஜே.பி

 

ந்தப் புத்தகம் இப்படியாகத் தொடங்குகிறது, “அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ அல்லது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவோ அல்லது ஃபிரான்ஸ் அதிபர் ஃப்ரான்சியோஸ் ஹாலாந்தோ சமூக ஊடகங்களில் மிக மோசமான நடவடிக்கைகளில் (பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்கள், கொலை மிரட்டல் விடுபவர்கள்) ஈடுபடுபவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா....?  நம் பிரதமர் இந்தத் தலைவர்களுடன் நட்பில் இருப்பதில் பெருமை கொள்கிறார். அதே நேரம்... அவர், பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்களையும், கொலை மிரட்டல் விடுபவர்களையும் பின்தொடர்கிறார்...!” 

இது ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதி எழுதி உள்ள,  ‘I am a Troll' புத்தகத்தின் முதல் பத்தி. 

இந்தப் புள்ளியில் தொடங்கும் புத்தகம், எப்படித் தீவிர வலதுசாரி குழுக்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களை எதிர்கொள்கிறது... எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு மாய அலையை சமூக ஊடகங்களில் உண்டாக்குகிறது... எப்படி அரசின் ட்விட்டர் கணக்குகள் பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன  என்பதை உரிய தரவுகளுடன் விளக்குகிறது. 


“அச்சத்தை விதை!”

I Am A Troll‘அச்சத்தை விதை’. இதுதான்... இது மட்டும்தான்  தீவிர வலதுசாரி குழுக்களின் தாரக மந்திரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறது அந்தப் புத்தகம். அதாவது, “ நீங்கள் ஆளும் பி.ஜே.பி அரசுக்கும்... அவர்களுக்கு முதுகெலும்பாக இருக்கும் தீவிர வலதுசாரி குழுக்களுக்கும் ஒவ்வாத கருத்துகளைச் சொல்கிறீர்களா... அவர்கள் கொண்டுவரும் திட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை ஆதாரத்துடன் நிறுவுகிறீர்களா...? அப்படியானால், உங்கள் மனதில் எப்படி அச்சம் விதைக்கப்பட வேண்டும். உளவியல்ரீதியாக உங்களை ஓங்கி அடித்து நிலைகுலையச் செய்ய வேண்டும்?”  இது மட்டும்தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், இதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல... போகிறபோக்கில் செய்கிற காரியமும் அல்ல. இதற்கென நல்ல பயிற்சி தேவை, உள்கட்டமைப்பு வசதி தேவை. நாம் செய்வது சரிதான் என உங்களை முதலில் நம்பவைக்க வேண்டும். இதையெல்லாம் அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் பேசுகிறது அந்தப் புத்தகம். 

சரி. அதன் உள்ளடக்கத்தை நான் புரிந்துகொண்ட மொழியில் சொல்கிறேன். “உங்களுக்கு ஒருஜோதிமணி மகள் இருக்கிறாள். அவள், சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவள். அவளுக்கு, அனைத்தையும் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. அதுகுறித்து சமூக ஊடகத்தில் எழுதுகிறாள்.  அது, ஆளும் மத்திய அரசுக்கு உவப்பானதாக இல்லை. அவர்களை விமர்சிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா...? மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகளை சமூக ஊடகத்தின் மூலம் படுக்கைக்கு அழைப்பார்கள்... டெல்லியில் நிர்பயாவை பாலியல் வன்புணர்வு செய்த பாணியில் உங்கள் மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிடுவேன் என்பார்கள்...! நீங்கள் அசரவில்லையா...?  இறுதியாக கொலைமிரட்டல் வரும்.  இப்போது எளிமையான இந்திய தகப்பன் மனது என்ன நினைக்கும்...  ‘நமக்கு எதுக்கும்மா வீண் வம்பு..? நீ எழுதுவதை நிறுத்து... சமூக ஊடகத்திலிருந்து வெளியே வா’ என்றுதானே சொல்லும். உங்கள் மகளும் உளவியல்ரீதியாக உடைந்துபோய் வெளியே வருவாள்.”

இத்துடன் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளர் ஜோதிமணி மீது நிகழ்த்தப்பட்ட சமூக ஊடகத் தாக்குதலை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நான் இவை எதையும் மிகையாகச் சொல்லவில்லை... உங்களை அச்சப்படுத்த எழுதவில்லை. 'கொலைமிரட்டல் விடுத்தவர்கள், பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வேன் என்றவர்கள், பத்திரிகையாளர்களை ‘Presstitute' என்று சொல்லியவர்களே... மிக விளக்கமாக... அதுவும் பெருமையாக, முகத்தில் குரூரச் சிரிப்பைப் படரவிட்டு, ஆம், நாங்கள் அப்படியெல்லாம் செய்தோம்' என்று அந்தப் புத்தகத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 

“வாக்குமூலம்!”

சுவாதி சதுர்வேதிஇந்த மிரட்டல் எதுவும் ஏதோ ஆண் ஆதிக்கம் உள்ள... பிரதமரை விரும்பும், வலதுசாரி சித்தாந்தத்தை நேசிக்கும் ஒரு சில தீவிர வலதுசாரியின் மிரட்டல்கள் அல்ல. இது திட்டமிடப்பட்ட ஒன்று என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ஆசிரியர் சுவாதி. 

“சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-க்கு எதிராக எழுதுபவர்களை எதிர்கொள்வதற்கென்றே டெல்லியில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. அதில், பல இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். 9 - 5 அடிப்படையில் இந்த அலுவலகம் செயல்படுகிறது.  இதற்கென  ஒரு தலைவர் இருக்கிறார். அவரிடமிருந்து, யாரைத் தாக்கி சமூக ஊடகங்களில் இன்று எழுத வேண்டுமென்று உத்தரவுகள் வரும். அந்த உத்தரவுகளின்படிதான் நாங்கள் செயல்பட்டோம். அது மட்டும் அல்ல... நிறைய தன்னார்வலர்களும் வெளியிலிருந்து செயல்படுகிறார்கள்” என்று அந்தப் புத்தகத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் சமூக ஊடக அணியின் முன்னாள் தன்னார்வலர்  கோச்லா. 

கோச்லா சொல்கிறார், “நான் மாற்றத்தை விரும்பினேன்... உண்மையாக நரேந்திர மோடியினால் மாற்றம் வரும் என்று நினைத்தேன். அதற்காக என் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தச் சமூக ஊடக அணியில் ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டேன். ஆனால், அங்கு எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான். தினமும், 'அவர்களைத் தாக்கி எழுதுங்கள்... இவர்களைத் தாக்கி எழுதுங்கள்' என்று உத்தரவு வரும். பல நேரம் எழுதும் வேலைகூட எங்களுக்கு இருக்காது. அவர்களே எழுதி அனுப்பிவிடுவார்கள். அதை எங்கள் ட்விட்டர் கணக்கில் பகிர்வது மட்டும்தான் எங்கள் வேலையாக இருக்கும்.”

 அமீர் கான்“இப்படித்தான் அமீர்கானை மதரீதியாகக் குறிவைத்துத் தாக்கினார்கள். பின், ஊடகவியலாளர் பர்காதத்தை பாலியல் ரீதியான கொச்சை மொழியில் தாக்கினார்கள். எங்களையும் தாக்கச் சொன்னார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் வெளியேறினேன்” என்று தான் வெளியேறிய காரணத்தை பதிவுசெய்கிறார் கோச்லா.  

''முழுநேர ஊழியர்கள் மட்டுமல்லாமல், பி.ஜே.பி-க்கு ஆதரவான ட்விட் பகிர... 7 ட்விட்களுக்கு 40 ரூபாய் என்ற கணக்கில்  சம்பளமும் தரப்படுகிறது'' என்றும் குறிப்பிடுகிறார் சுவாதி.

இதில் மிகுந்த அச்சம் தரும் விஷயம் என்னவென்றால், நம் பிரதமர் நரேந்திர மோடியே பெண்களை மிகமோசமாகக் கொச்சைப்படுத்தும் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்கிறார் என்பதுதான். இதுகுறித்த ஒரு பட்டியலையும் அந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் சுவாதி. 

“மாய அலை”

பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஹாஷ்டேக் அனைத்தும் சமூக ஊடகங்களில் எப்படி ட்ரெண்ட் ஆகிறது  என்பதையும் அந்தப் புத்தகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுடன் பதிவுசெய்கிறார் சுவாதி. அவர், சமூக ஊடகங்களில் மோடிக்கு இருக்கும் ஆதரவை...' மாய  அலை' என்கிறார். “பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லம், #ModiInUSA #ModiInSwitzerland, #ModiInMexico போன்ற ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் உண்டாக்கப்படுகின்றன. இந்த டேகுகள், ட்ரெண்டும் ஆகின்றன. தொழில்நுட்பம் துணைக்கொண்டு இதை ஆராய்ந்து பார்த்ததில், இந்த டேக் உடன் அதிகமான பதிவுகள் தாய்லாந்து தேசத்திலிருந்துதான் பகிரப்பட்டிருக்கின்றன. தாய்லாந்தில் இந்தியச் சமூகம் இந்த எண்ணிக்கையில் வாழ்கிறதா  அல்லது தாய்லாந்துக்காரர்கள் மோடியை இந்த அளவுக்கு நேசிக்கிறார்களா... என்பது கேள்வியாக இருந்தால், ‘இல்லை’ என்பதுதான் பதில். பின் எப்படி இவ்வளவு பகிர்வுகள்...? இதற்கு இரண்டு பதில்கள்தான் இருக்கின்றன... ஒன்று, தொழில்நுட்பம் துணைக்கொண்டு கணினியில் VPN-யை மறைத்துப் பகிர்ந்திருக்க வேண்டும். மற்றொன்று ,தாய்லாந்து தேசத்தில் ஏதாவது மக்கள்தொடர்பு மற்றும் விளம்பர நிறுவனத்தை அமர்த்தி இந்த வேலையைச் செய்திருக்கவேண்டும்” என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஆங்கித் லால். 

“திட்டமிடல்”

எப்படி இவ்வளவு நுணக்கமாகத் திட்டமிடுகிறார்கள்... என்கிற நம் கேள்விக்கும் அந்தப் புத்தகத்திலேயே விடை இருக்கிறது. “இந்தியாவில் சமூக ஊடகத்தின் தாக்கத்தை முதலில் உணர்ந்த கட்சி, முதலில் சுவீகரித்துக்கொண்ட கட்சி பி.ஜே.பி-தான். மில்லினியம் ஆண்டு தொடக்கத்திலேயே இணையம் குறித்த பயிற்சியை... பெங்களூருவில் தங்கள் கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டளர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். பின், சமூக ஊடகங்கள் இந்தியாவில் கால்பதிக்கத் தொடங்கியதும், அதையும் தழுவிக்கொண்டார்கள். இதற்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே பல வல்லுநர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.”

“வெறுப்பு அரசியல்”

இந்தியாவில் அனைத்துச் சித்தாந்தங்களுக்கும் இடம் இருக்கிறது. சொல்லப்போனால் சித்தாந்தங்களுக்கு இடையேயான முரண்கள்தான் சமூகத்தை இயக்குகின்றன. சமூக ஊடகம், அனைத்துச் சித்தாந்தங்களுக்குமான இடம். அங்கு ஆரோக்கியமான விவாதம் நடக்கலாம். அதனால், தேசத்துக்கு நன்மை பிறந்தால் மகிழ்ச்சி. ஆனால், அங்கு எதிராளிகளே இருக்கக் கூடாது... நம் குரல் மட்டும்தான் ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது சமூக ஊடக ஃபாசிசமன்றி வேறில்லை. இது, இங்கு மென்மேலும் வெறுப்பு அரசியல் வளரத்தான் காரணமாக இருக்குமே தவிர, தேசத்துக்கு எந்த நன்மையும் இல்லை!

http://www.vikatan.com/news/coverstory/77069-secret-world-of-bjps-digital-army--iamatroll.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.