Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்க விமானநிலையத்தின் திருத்தப்பணிகளை பார்க்க வேண்டுமா? இதோ.. வைரலாகும் புகைப்படங்கள்

Featured Replies

கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தலைமையில் குறித்த திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த திருத்தப்பணிகளை காலை 08.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சீன நிறுவனம் ஒன்று மேற்கொள்கின்றது.

இதற்காக 720 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திருத்தப்பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்...

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/130765?ref=home

  • தொடங்கியவர்

மத்தல விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! பெரும் மகிழ்ச்சியில் மஹிந்த

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவின் தலைமைத்துவத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்கு புனரமைப்பு நடவடிக்கை சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை விமான பயண நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய இன்றைய தினம் மத்தல விமான நிலையத்தில் பயணிகள் அதிகளவில் நிறைந்து காணப்பட்டதாகவும், அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் மத்தல விமான நிலையம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தது. பாரிய நிதி செலவீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையம், பாரிய நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.

விமான நிலையம் அமைந்துள்ள அமைவிடம் குறித்து விமான சேவைகள் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்திருந்தன. இதன் காரணமாக தமது விமான சேவைகளை மத்தல விமான நிலையம் ஊடாக முன்னெடுக்க மறுத்திருந்தன.

இந்நிலையில் இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணையாக மத்தல விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனை செயல் திட்டத்தின் கீழ் ஆசியாவின் ஆச்சரியமாக மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/transport/01/130773?ref=home

 
  • தொடங்கியவர்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

1986ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை முதல்முறையாக புரனமைப்புச் செய்யப்படவுள்ளது.

41 மில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தை நேற்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.

நெதர்லாந்து விமான விமான ஆலோசனை மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த புனரமைப்பு திட்டத்தை வடிவமைத்து மேற்பார்வையை மேற்கொள்கிறது.

ஓடுபாதை புனரமைப்பு மற்றும் கட்டட அமைப்பு பணிகளை, சீன தேசிய வான் பொறியியல் அனைத்துலக குழுமம் மற்றும் சங்காய் புதுயுக விமான நிலைய வடிவமைப்பு மற்றும் ஆய்வு நிறுவகம் ஆகியன இணைந்து மேற்கொள்கின்றன.

katunayake-1katunayake-2katunayake-3

ஓடுபாதை மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நேரத்தில் விமான சேவைகள் முற்றாக இடம்பெறாது. நேற்றுத் தொடக்கம், நாளாந்தம் 8 மணிநேரம் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன.

பகுதிநேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், சிறிலங்கன் விமான நிறுவனத்தின் ஆறு சேவைகளும், ஏனைய நிறுவனங்களின் நான்கு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏனைய விமான சேவை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று கடும் நெரிசல் காணப்பட்டது.

விமான சேவை நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளை 5 மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வருமாறு கோரப்பட்டுள்ளது.

விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/01/07/news/20508

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.