Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"திக்திக்"

Featured Replies

gallerye_235523362_1685945.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர்.

 

Tamil_News_large_1685945_318_219.jpg

அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது
கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கூட்டு சதி மற்றும் சொத்து சேர்ப்புக்கு, உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன்

ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

4 ஆண்டு சிறை


இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், தீர்ப்பு வழங்கினார். ஜெ.,வுக்கு நான்கு ஆண்டு கள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து, தேதி குறிப்பிடாமல், 2016 ஜூன் மாதம், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுள்ளார்; முதல்வராகவும் முடிவு செய்துள்ளார். அதற்கு, சொத்து குவிப்பு வழக்குஇடையூறாக உள்ளது.

 

இதில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, தற்போது தீர்ப்புக்காக, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் காத்து இருக்கின்றனர்.
 

ஆதரவு அதிகரிப்பு


இந்நிலையில், ஜெயலலிதாவின் மருமகள் தீபாவுக்கு, அ.தி.மு.க., வினரிடம் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, ஆதரவாளர் கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று, அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக் கிறார். அந்த முடிவு, சசிகலாவுக்கு எதிராக வந்தால், அவரை ஆதரிக்கும் முன்னணி தலைவர்கள் பலர் அணி மாறக்கூடும் என்பதால், அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டு, தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிகிறது.

அத்துடன், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கின்றன.

- நமது நிருபர் -

திக்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.