Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார்

Featured Replies

சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார்

Tamil_News_large_168597020170107232702_318_219.jpg

 

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது.

அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

சசி வருகைக்காககாத்திருந்த முதல்வர்

அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, தன் நடை, உடை, சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். ஜெயலலிதா வரும் போது, போயஸ் கார்டனில் இருந்து, கட்சி அலுவலகம் வரை, சாலையின் இரு புறங்களிலும், தொண்டர்கள் நின்று, வரவேற்பு கொடுப்பர்.

அதே போல, தனக்கும் வரவேற்பு அளிக்க வேண்டும் என, சசிகலா எதிர்பார்க்கிறார். அதற்காக, மக்களை அழைத்து வரும் பொறுப்பு, தினம் ஒரு மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நான்கு நாட்களாக, வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆட்களை அழைத்து வந்தனர்.

சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்க வருவோருக்கு, ஆளுக்கு, 200 முதல், 500 ரூபாய் வரை வழங்கப்பட்டது. நேற்று ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களும், பஸ் மற்றும் வேன்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, ஆட்களை அழைத்து வந்திருந்தனர்.

சசிகலாவை வரவேற்பதற்காக, முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்தார். அமைச்சர்கள், அவருக்கு முன்னதாக வந்தனர். ஆனால், சசிகலா காலை, 11:00 மணிக்கு தான் வந்தார். அவருக்காக, முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அழைத்து வரப்பட்டவர்கள், மணிக்கணக்கில் காத்திருந்தனர். இந்த நிலை, தினமும் தொடர்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.