Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா?

Featured Replies

எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா?

Tamilagam-9a6e8ee60335f0862d7a68d54c619620079742d7.jpg

 

சசி­கலா அ.தி.மு.க. வில் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கி­யுள்ள நிலையில் அடுத்த கட்­ட­மாக தமி­ழக முத­ல­மைச்­ச­ராக வேண்­டு­மென்று கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள், அமைச்­சர்கள் மற்றும் மாவட்ட நிர்­வா­கிகள் போன்றோர் குரல் கொடுத்து வரு­கின்­றனர்.

இதன் உச்ச கட்­ட­மாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற மக்­க­ளவை துணை சபா­நா­ய­க­ரு­மான தம்­பி­துரை 'கட்சி தலை­மையும் ஆட்­சி­ய­தி­கா­ரமும் ஒரு­வ­ரி­டமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்­த­னி­யாக இரு­வ­ரி­டமும் இருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. அந்த வகையில் சசி­கலா முதல்­வ­ரா­வது கட்­சிக்கும், தமி­ழ­கத்­துக்கும் இன்­றி­ய­மை­யா­தது' என்று அறிக்கை விடுத்­தி­ருந்தார். இது கட்சி தொண்­டர்­க­ளி­டையே அதி­ருப்­தி­யையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது.

ஓ.பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­விட்டு, அந்த இடத்­திற்கு சசி­கலா அமர்த்­தப்­பட வேண்­டு­மென்­பதே தம்­பி­து­ரையின் கோரிக்­கை­யாக இருக்­கி­றது. இந்த தம்­பி­து­ரையும் தமி­ழக முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்டு தோற்­றுப்­போ­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதா­வது, ஜெய­ல­லிதா கால­மான பின்னர் புதிய முத­ல­மைச்­சரை தெரிவு செய்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது சசி­க­லாவின் ஆத­ர­வா­ளர்­க­ளான தம்­பி­துரை மற்றும் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகி­யோரின் பெயர்­களும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டன.

ஆனால் பா.ஜ.க.வினர் அவர்­களை ஒதுக்­கி­விட்டு தமக்கு சாத­க­மா­ன­வ­ரான ஓ.பன்­னீர்­செல்­வத்தை தமி­ழக முதல்­வ­ராக்­கினர். இதனால் பன்­னீர்­செல்­வத்தின் மீது தம்­பி­துரை கடு­மை­யான கோபத்­துடன் உள்ளார். இதன் கார­ண­மா­கவே பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார். இவ­ருடன் இணைந்து அமைச்சர் உத­ய­குமார், எடப்­பாடி பழ­னிச்­சாமி, முன்னாள் அமைச்சர் வளர்­மதி, அ.தி.மு.க. பேச்­சாளர் பொன்­னையன் உள்­ளிட்ட பலரும் பகி­ரங்­க­மாக சசி­க­லாவை ஆத­ரித்து பேசு­வதும் முதல்வர் பன்­னீர்­செல்­வத்தை தூற்­று­வ­து­மாக உள்­ளனர்.

பொது­வாக அ.தி.மு.க. அமைச்­சர்­களும் எம்.எல்.ஏ.க்களும் தங்­க­ளது பத­வி­களை பாது­காத்து கொள்­வ­தற்கும் பணத்தை தேடு­வ­தற்கும் சசி­க­லா­வுக்கு ஆத­ர­வாக பேசி­வரும் அதே­வேளை, அடி­மட்டத் தொண்­டர்கள் சசி­க­லா­வுக்கு தமது முழு­மை­யான எதிப்­பி­னையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர். பல இடங்­களில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன.

பல முக்­கிய பிர­மு­கர்கள் அ.தி.மு.கவை விட்டு விலகி மாற்றுக் கட்­சி­களில் இணைந்து வரு­கின்­றனர். அதிலும் எதிர்க்­கட்­சி­யான தி.மு.க. வில் சேர்­வதில் அதிக ஆர்வம் கொண்­டுள்­ளனர்.

இத­னி­டையே, ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை அ.தி.மு.க வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக்க வேண்­டு­மென்று ஒரு பகு­தி­யினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். 'ஜெ.தீபா பேரவை' என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி அவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இது சசி­கலா அமைப்­புக்கு தலை­யி­டி­யாக அமைந்­துள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க, அ.தி.மு.க.வுக்குள் ஜாதி ரீதி­யான பிள­வுகள் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளன. ஜெய­ல­லிதா உயி­ருடன் இருந்­த­வரை இந்த பிரச்­சினை எழ­வில்லை. அவர் எல்லா இன மக்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு அமைச்­ச­ர­வை­யிலும், நிர்­வாக செயற்­பா­டு­க­ளிலும் பத­வி­களை வழங்­கினார். தவிர, அவரை எதிர்த்துப் பேசு­வ­தற்கு எவ­ருக்கும் தைரியம் இல்­லாத நிலையில் அடங்­கிப்­போ­யினர்.

சசி­கலா பொதுச்­செ­ய­லாளர் பத­வியை ஏற்ற பின்னர் சில குறிப்­பிட்ட சமூ­கத்­தினர் மட்டும் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புக்­க­ளையும் நிர்­வா­கத்­தையும் மாவட்ட நிர்­வாகப் பொறுப்­புக்­க­ளிலும் நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக பகி­ரங்க புகார் எழுந்­துள்­ளது. இது பெரும் பிளவை ஏற்­ப­டுத்­தி­வி­டுமோ என்ற அச்­சமும் எழுந்­துள்­ளது.

ஆளும் கட்­சி­யான அ.தி.மு.க.வுக்கு சட்­டப்­பே­ர­வையில் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்­ளனர். ஜெய­ல­லிதா இருந்­த­போது அந்­தந்த சமு­தாய எம்.எல்.ஏ.க்களின் எண்­ணிக்­கைக்கு ஏற்­ற­வாறு அமைச்­ச­ர­வை­யிலும் முக்­கிய பத­வி­க­ளிலும் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சர் ஏதோ கார­ணத்­துக்­காக நீக்­கப்­பட்டால், அவ­ருக்கு பதி­லாக அதே சமு­தா­யத்தைச் சேர்ந்த வேறொ­ரு­வரை நிய­மனம் செய்தார். இதனால் பிரச்­சி­னைகள் எழ­வில்லை.

தற்­போ­தைய முத­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்வம் மற்றும் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சசி­கலா ஆகிய இரு­வரும் ஒரே சமு­தா­யத்தைச் சேர்ந்­த­வர்கள். சில­வேளை சசி­க­லாவே முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்டால் பன்­னீர்­செல்வம் மீண்டும் அமைச்­ச­ராக்­கப்­ப­டுவார். இதன் கார­ண­மாக அமைச்­ச­ர­வையில் அந்த சமூக அமைச்­சர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். அந்த வகையில் 8 பேர் அமைச்­சர்­க­ளாக இருப்பர்.

இன்­னொரு சமு­தா­யத்தைச் சேர்ந்த 5 அமைச்­சர்கள் மற்றும் வேறொரு சமு­தா­யத்தைச் சேர்ந்த 5 அமைச்­சர்கள் உள்­ளனர். ஆனால் அதி­கப்­ப­டி­யான எம்.எல்.ஏ.க்கள் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தா­யத்­தி­லேயே (32 பேர்) உள்­ளனர். ஆனால் இவர்­க­ளது சமு­தா­யத்தைச் சேர்ந்த மூவர் மட்­டுமே அமைச்­சர்­க­ளாக உள்­ளனர். அத்­துடன் இவர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­மற்ற அமைச்­சுக்­களே வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் அமைச்­ச­ர­வை­யிலும் ஏனைய பொறுப்­புக்­க­ளிலும் தமது சமூ­கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பிர­தி­நி­தித்­து­வமும் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புக்­களும் வழங்க வேண்டும் என்று பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­தினர் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர். இது பற்றி அந்த சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்கும் வரை எந்த பிரச்­சி­னையும் இல்லை. தற்­போது சசி­கலா பொது செய­லா­ள­ராக பதவி ஏற்­ற­வுடன் அவ­ரது சமு­தா­யத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கிறார். முக்­கிய பத­விகள் அனைத்தும் அவர்­க­ளி­டமே உள்­ளன. அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்­டுள்ள எமது சமு­தா­யத்­திற்கு அமைச்­ச­ர­வையில் உரிய பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் இருக்­கிறோம். எனவே, எமக்கும் போதிய பிர­தி­நி­தித்­துவம் வழங்க வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்து வரு­வ­துடன், அவ்­வாறு வழங்­கா­விட்டால் அதற்கு எதி­ராக போரா­டு­வ­தற்கு தயங்­க­மாட்டோம் என்றார்.

இதே­போன்று பல பிரச்­சி­னைகள் அ.தி.மு.க.வுக்குள் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­துடன் சசிக்­க­லா­வுக்கு சவால் விடுக்கும் வகை­யிலும் தோன்­றி­யுள்­ளன. இதற்கு தீர்வு காணப்­ப­டா­விட்டால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கட்­சி­யை­விட்டு விலகும் நிலை ஏற்­ப­டு­ வ­துடன்எதிர்­வரும் தேர்­தல்­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று சமூக ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.  

இது இவ்­வா­றி­ருக்க, சசி­க­லாவை முதல்வர் பத­வியில் அமர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதில் கட்சித் தொண்­டர்கள் பற்றி எவரும் கவ­லைப்­ப­டு­வ­தாக இல்லை. மிகு­தி­யாக இருக்கும் 4 ½ வரு­ட­கால ஆட்­சியை கொண்டு செல்ல வேண்டும். முடிந்­த­வரை 'உழைத்துக் கொள்ள' வேண்டும் என்ற எண்­ணத்­து­ட­னேயே அ.தி.மு.க.வினர் இருக்­கின்­றனர். தேர்­த­லுக்­காக செலவு செய்த பணத்தை மீட்­டு­விட வேண்டும் என்­பதே அவர்­களின் கணக்கு. எனவே யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அவ­ரது காலில் விழுந்து ஆட்­சியைத் தக்­க­வைக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றனர். அதனால் கட்சித் தொண்­டர்­களைப் பற்றி அவர்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. கட்சித் தொண்­டர்­களோ தமது தலை­வி­யான ஜெய­ல­லி­தாவின் இடத்தில் அவ­ரது உத­வி­யா­ள­ரான கட்­சிக்­காக எந்­த­வித உழைப்­பையும் வழங்­காத சசி­கலா வரு­வதை சிறிதும் விரும்­ப­வில்லை. மறு­புறம் அவர்கள் தற்­போ­தைய முதல்வர் ஓ.பன்­னீர்­செல்­வமே தொடர்ந்து முத­ல­மைச்­ச­ராக இருந்து விட்டுப் போகட்டும் என்று நினைக்­கின்­றனர்.

அ.தி.மு.க தொண்­டர்கள் சசி­கலா கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­னதை விரும்­பு­கின்­ற­னரா? அத்­துடன் அவர்கள் முத­ல­மைச்­ச­ரா­வதை வர­வேற்­கின்­ற­னரா? என்­பது பற்றி தமி­ழ­கத்தின் பல நிறு­வ­னங்கள், பத்­தி­ரி­கைகள், இணைய செய்­தித்­த­ளங்கள் கருத்து கணிப்­புக்­களை நடத்தி வரு­கின்­றன.

அவ்­வா­றான கருத்துக் கணிப்­புக்கள் அனைத்­துமே சசி­க­லா­வுக்கு எதி­ரான முடி­வு­க­ளையே வெளி­யிட்­டுள்­ளன. ஏறக்­கு­றைய 70 – 75 வீத­மான தொண்­டர்கள் மற்றும் பொது­மக்கள் சசி­க­லாவை விரும்­பா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். ஆனால் அவர் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­று­வந்தால் அவரை ஏற்றுக் கொள்ள முடி­யு­மென்று ஒரு­சாரார் தெரி­வித்­துள்­ளனர்.

சசி­கலா முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்று அதனைத் தொட­ர­வேண்­டு­மென்றால் அவர் ஏதா­வது ஒரு சட்டப் பேரவைத் தொகு­தியில் (06 மாதங்­க­ளுக்குள்) போட்­டி­யிட்டு வெற்­றிப்­பெற வேண்டும். ஜெய­ல­லிதா சென்னை ஆர்.கே.நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றவர். அவ­ரது மறைவின் பின் அந்தத் தொகுதி வெற்­றி­ட­மாக இருப்­ப­துடன் ஆறு­மாத காலத்­திற்குள் அங்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகு­தியில் சசி­கலா போட்­டு­யி­டு­வாரா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது. ஆனால் அந்தத் தொகுதி சசி­க­லா­வுக்கு பெரும் சவால்­மிக்க தொகு­தி­யாக அமை­வ­துடன் அவர் நிச்­ச­ய­மாக தோல்­வியை சந்­திப்பார் என்று கூறப்­ப­டு­கி­றது. எனவே அந்­தத்­தொ­கு­தியில் அவர் போட்­டி­யி­ட­மாட்­டா­ரென நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

தனக்கு பாது­காப்­பான தமது சமு­தாய மக்கள் அதிக எண்­ணிக்கை உள்ள பெரி­ய­குளம் தொகு­தியில் அவர் போட்­டி­யி­டக்­கூ­டு­மென தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போது பெரி­ய­குளம் தொகு­தியில் எம்.எல்.ஏ.வாக இருப்­பவர் அமைச்சர் உத­ய­குமார். சசி­க­லாவின் தீவிர ஆத­ர­வா­ள­ரான உத­ய­குமார் தமது எம்.எல்.ஏ. பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு அந்தத் தொகு­தியை சசி­க­லா­வுக்கு விட்­டுக்­கொ­டுக்க தயா­ராக இருப்­ப­தா­கவும் அறி­வித்­துள்ளார். எனவே பெரி­ய­குளம் தொகு­தியில் சசி­கலா போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றெ­னினும் சகி­க­லாவை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­தை­விட தமி­ழக ஆட்­சியைக் கலைத்­து­விட்டு சட்­டப்­பே­ர­வைக்­கான பொதுத்­தேர்­தலை நடத்­து­வதே சிறந்­தது என்று பெரும்­பா­லான தமி­ழக மக்கள் கரு­து­வ­தாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கின்­றது. அதன் மூலம் தமி­ழ­கத்­திற்கு சிறந்த, நேர்­மை­யான, ஊழ­லற்ற, நிரந்­தர ஆட்­சியைத் தரக்­கூ­டிய அரசு ஒன்று அமைய வாய்ப்பு ஏற்­படும். அத்­துடன் சசி­கலா தலை­மை­யி­லான அ.தி.மு.க.வுக்­கான மக்கள் ஆத­ர­வையும் தெரிந்­து­கொள்ள முடியும் என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

ஆனால் சசி­கலா தரப்­பினர் எத­னையும் பற்றி கவ­லைப்­ப­டாமல் முதல்வர் பத­வியைக் கைப்­பற்­று­வதில் குறி­யாக இருக்­கின்­றனர். எப்­ப­டியும் இந்த வாரத்தில் சசி­கலா முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­கக்­கூ­டு­மென தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அதே­வேளை, தற்­போ­தைய முதல்வர் ஓ.பன்­னீர்­செல்­வத்­தி­ட­மி­ருந்து பதவி வில­க­ளுக்­கான கடி­தத்தை சசி­கலா தரப்­பினர் ஏற்­க­னவே வாங்­கி­வைத்­துள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, புதிய அமைச்சரவைக்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகின்றதாம். சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரி மகன் தினகரன் ஆகிய இருவரும் இணைந்து அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்து வரும் நிலையில் அதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவமற்ற பதவியே வழங்கப்படுமாம்.

இது இவ்வாறிருக்க, தி.மு.க.வின் ‘செயல்தலைவராக’ அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் மகனும் கட்சியின் பொருளாளரும் இளைஞரணித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். வயோதிபம் காரணமாக செயற்படமுடியாத நிலையிலிருக்கும் மு.கருணாநிதி தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருப்பார். எனினும் கட்சியின் செயல் தலைவராக கருணாநிதியின் அதிகாரங்களுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.

தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையின் கூடிய கட்சியின் பொதுக்குழுவின் தீர்மானத்துக்கமையவே செயல் தலைவராக ஸ்டாலினின் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினின் நியமனம் அந்தக் கட்சித்தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்களிடையே (மு.க.அழகிரி, மு.க.கனிமொழி) அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-2

  • தொடங்கியவர்

சின்னம்மாவா? சின்ன அம்மாவா?- சசிகலா முதல்வர் ஆனால்!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சர் ஆவார் என இப்போதே பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவர் முதலமைச்சரானால், ஊருக்குள் என்னென்ன நடக்கும்னு சும்மா ஒரு கற்பனை. கற்பனை மட்டும்தான் பாஸ். ஏன்னா இதைவிட பெருசாகக்கூட ரியல்ல நடக்கலாம் ஆங்க்...

சசிகலா

  • சசிகலா முதலமைச்சர் ஆனதுமே, பாரதப் பிரதமர்கிட்ட ஒரு மேட்டரை சொல்றதா இருந்தாலும் சரி! பஞ்சாயத்து போர்டு  பிரசிடென்ட் கிட்ட ஒரு மேட்டரை சொல்லுறதா இருந்தாலும் சரி! கடிதம் எழுதும் முறையானது முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நேராக அவரவர்களின் வீட்டுக்கே சென்று 'வலியுறுத்தும்' முறை அமலுக்கு கொண்டு வரப்படும்.

 

  • தன்  முதல் மேடைப்பேச்சிலேயே இந்தியத் துணைக்கண்டத்தையே வியக்கவைத்த மாபெரும் பேச்சாற்றலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, சசிகலாவிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அ.தி.மு.க. தொண்டர்களால் கோரிக்கை வைக்கப்படும். அதில் ஒரு குழு கிராமி விருதுக்கும் சசிகலாவின் பெயரைப் பரிந்துரைத்து 'கிலி' ஏற்படுத்தும்.

 

  • வாய் திறந்து பேசாமலேயே பல சாதனைகளைப் புரிந்த மிஸ்டர் பீன், சார்லி சாப்ளின் ஆகியோரின் புகழ்கள் ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் தவறாது நினைகூறப்பட்டு பாராட்டப்படும். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க கழகத்தினர் சார்பாக தினசரி பாடம் எடுக்க வழிவகைகளும் செய்யப்படும்.

 

  • ஜெயா டிவியில் 'இன்னோவா' நாஞ்சில் சம்பத் தலைமையில் 'சின்னம்மாவா? சின்ன அம்மாவா? எப்படி அழைக்கவேண்டும் கழகம்' என்கிற டாபிக்கில் தீவிர பண்டைத்தமிழ் இலக்கிய பட்டிமன்றமும் நடத்தப்படும்.

 

  • பொதுச்செயலாளராக நியமிச்சாச்சு. முதலமைச்சராகவும் ஆயாச்சுனா தொண்டர்களுக்கு வேற என்ன வேலை? அதான் அதேதான். ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்று, 'சின்னம்மா பிரதமர் ஆகவேண்டும்' என வலியுறுத்துவார்கள். இதற்காகத் தன் எம்.எல்.ஏ. பதவியையும் தாரைவார்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அறிக்கை விடுவார்கள். பிரதமர் ஆகுறதுக்கு எதுக்கு எம்.எல்.ஏ. பதவியைக் கொடுக்கணும்னுலாம் கேள்வி கேட்கக்கூடாது பாஸ். எல்லாம் அப்படித்தான்!

 

  • இதுவரை சினிமாவில் சின்னம்மா கேரக்டரில் வந்து கொடுமைப்படுத்திய நடிகைகளை எல்லாம் கூண்டோடு  கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டுவந்து, பாஸிட்டிவ் கேரக்டர்கள் கொடுத்து நடிக்க வைக்கப்படுவார்கள். சின்னம்மா பாத்திரத்துக்கு இருக்கிற களங்கமான இமேஜை மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெறும்..

 

  • தமிழ்நாட்டின் தலைநகரமான 'சென்னை' டம்மியாக்கப்பட்டு, கொஞ்ச நாளைக்கு 'மன்னை' என்கிற பெயர் தொடர்ந்து  ட்ரெண்டிங்கில் இருக்கும்.

 

  • அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் மாதிரி புதுசா ஆரம்பிக்கிற எல்லாத் திட்டமும் சின்னம்மா பெயரில் சீரும் சிறப்புமாகத் தொடங்கப்பட்டாலும், படலாம்ங்கிறது சொல்லி வேறயா தெரியணும்.

 

http://www.vikatan.com/news/politics/77215-satire-article-about-if-sasikala-becomes-chief-minister-of-tamil-nadu.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.