Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?!

Featured Replies

ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?!

ராம மோகன ராவ்

ரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Services) என்ற நிறுவனத்துக்கு சுமார் 360 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக்கும் பாஸ்கர் நாயுடும் பங்குதாரராக இருக்கின்றனர்.இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். 

ராம மோகன ராவ் ஊழல் ஆதாரம்

சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள்..

இந்த நிலையில் தான் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ்  நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் சி.பி.ஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாருக்கான ஆதாரங்களையும் அவர்கள் வழங்கி உள்ளனர்.ராம மோகன ராவின் மகன் விவேக்கும், பாஸ்கர் நாயுடுவும் இணைந்து “Swan Facilities Pvt Ltd” என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராம மோகன ராவிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பேசியபோது,"ஒரு வருடத்திற்கு130 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு,3 வருடத்திற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.மேலும் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெண்டரில் பங்கேற்ற 6 நிறுவனங்களில் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனத்தை தவிர்த்து மற்ற 5 அறப்போர் இயக்கம்,ராம மோகன ராவ்நிறுவனங்கள் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடட் நிறுவனங்கள் ஆகும்.ஒப்பந்தத்தில் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள்தான் பங்கேற்கவேண்டும் என்பது விதிமுறை.ஆனால் (Proprietorship ans partnership) பிரப்ரைட்ரி பார்டனர்ஷிப் நிறுவனங்களும் ஒப்பந்ததில் பங்கேற்கலாம் என விதிமுறைகள் திருத்தப்பட்டிருக்கிறது.அது குறித்த ஆதாரங்களைத்தான் சி.பி.ஐ- யிடம் வழங்கியுள்ளோம்.

பணியாளர்கள் குறித்து போலியான பதிவு

 தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன்தான் ( Tamilnadu Medical Services Corporation) இதற்கான ஒப்பந்ததை முடிவு செய்கிறது.ராம மோகன ராவ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி வாங்கித் தந்துள்ளார்.100 துப்புரவாளர்கள் தேவைபடுகிற அரசு மருத்துவமனையில் வெறும் 50 பேர் 30 பேர் என ஆட்களை நியமித்திருக்கின்றனர்.அதற்காக போலியான பணியாளர் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் பல உயர் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது" என்றார்.

ராம மோகன ராவ் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பணம், தங்க கட்டிகள்,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இதனால் ராமமோகன ராவ் பதவி பறிபோனது.தொடர்ந்து அவருக்கு எதிராகப் பாயும் ஆதாரங்கள் வலுவாகி வருகின்றன.அறப்போர் இயக்கத்தின் இந்த ஆதாரம் கோட்டையில் என்ன அதிர்வலைகளை ஏற்படுத்த போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/coverstory/77375-evidences-pile-up-against-rama-mohana-raos-hospital-agreement-scam.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.