Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவிற்கு பெருகும் ஆதரவு ... சசிகலா உறவினர்கள் திக்... திக்

Featured Replies

தீபாவிற்கு பெருகும் ஆதரவு ...
சசிகலா உறவினர்கள் திக்... திக்
 
 
 

தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.

 

Tamil_News_large_1687199_318_219.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.
 

ஆதரவுகள் பெருக துவங்கி விட்டன

தீபாவிற்கு ஆதரவாக, பேரவைகளை துவக்கியுள்ள, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள். தீபாவை தமிழக முதல்வராக்க சபதம் எடுத்து செயல்பட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், சசிகலா அவரது கணவன் நடராஜன் மற்றும் சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர்களும் உள்ள சொந்த மண்ணான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்குஆதரவுகள் பெருக துவங்கி விட்டன.தீபா பேரவைக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், தீபா பேரவை சார்பாக, போஸ்டர், பிளக்ஸ் வைப்பது, கூட்டங்களை கூட்டி, புதிய நிர்வாகிகள் சேர்ப்பு என, துவங்கி விட்டனர்.

சசிகலா உறவினர்கள், சாதிகளின் அடிப்படையில் கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகளை வளைத்து, அவர்களை மிரட்டியும் தாங்களின் செல்வாக்கை தஞ்சாவூரின் சுற்றுவட்டாரங்களில் பெருக்கி வருகின்றனர். இதற்கு மாற்றாக, சசிகலாவின் சொல்வாக்கை குறைக்கும் வகையில், தீபா பேரவை வலு பெற்று வருவதால், மன்னார்குடியினர் மத்தியில், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 

சசிகலாவை விமர்சிக்காதீங்க


'அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, மக்கள் அங்கீகாரம் பெறாதவர். எனவே, அவரை விமர்சிக்காதீர்கள்' என, தன்னை சந்தித்த ஆதரவாளர்களிடம், ஜெ., மருமகள் தீபா கூறியுள்ளார்.

 

இது குறித்து, தீபாவை சந்தித்த, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., - ஜெ., - கருணாநிதி போன்ற தலைவர்கள், மக்களை சந்தித்து, அவர்களின் அங்கீகாரம் பெற்றவர்கள். சசிகலா, இன்னும் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, அவரை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை என, எங்களிடம், தீபா தெரிவித்தார்.
அவரது உத்தரவை ஏற்று, சசிகலாவை புறக்கணித்து விட்டு, அ.தி.மு.க.,வின் ஒட்டுமொத்த ஆதரவும், தீபாவுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அ.தி.மு.க.,வை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்., மற்றும் தொண்டர்களை வழிநடத்திய ஜெயலலிதாவின் புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும் என, எங்களிடம், தீபா தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1687199

  • தொடங்கியவர்

சசிகலாவை ஏன் விமர்சிக்க வேண்டும்?'- கார்டனுக்கு எதிராக வியூகம் வகுத்த தீபா

deepa3_11264.jpg

ன்னும் 7 நாட்களில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'ஜனநாயகத்தில் மக்கள் ஆதரவைப் பெறாதவர்கள் நிலைத்து நின்றதில்லை. சசிகலாவை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை' எனப் பேசி வருகிறார் தீபா. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு, பொதுவிழாக்களில் பங்கேற்பு என முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தலைமைக் கழகத்துக்கு அவர் வரும்போதெல்லாம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்களைக் கூட்டி வருகின்றனர் மாவட்ட நிர்வாகிகள். அதேநேரம், அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத தீபாவின் தி.நகர் வீட்டின் முன்பு மக்கள் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. ஜெயலலிதா பாணியில் வீட்டின் மாடியில் நின்று தொண்டர்களை நோக்கி இரட்டை விரல்களைக் காட்டுகிறார். தினம்தோறும் தொண்டர்களை சந்திப்பது, அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசிப்பது என அவரும் அரசியல்வாதியாக மாறுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தீபா பெயரில் பிளக்ஸ் போர்டுகள் கிளம்பிவிட்டன. பல மாவட்டங்களில் தீபா பேரவை என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை எதுவும் தீபாவின் விருப்பத்துடன் நடக்கவில்லை. இதனை அவர் எதிர்க்கவும் இல்லை. "எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார். தனக்கு ஆதரவாக வருகின்றவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார். கடந்த இரண்டு நாட்களாக அ.தி.மு.க பிரமுகர்களிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார். எந்த இடத்திலும் மன்னார்குடி உறவுகளுக்கு எதிராக ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை" என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

sasi_new4_11152.jpg

"சசிகலாவின் வருகைக்காக அமைச்சர்கள் காத்துக் கிடப்பதும் அவர் வந்த பிறகு காலில் விழுவதும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தீபாவின் அரசியல் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. நேற்று எங்களிடம் பேசியவர், 'யாரையும் வெறுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அம்மா பக்கம் பற்றுதலோடு இருந்தவர்கள், எனக்கு ஆதரவாக வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களில் பலர் சசிகலாவை எதிர்த்துப் பேசுவதைக் கேட்கிறேன். அப்படி யாரையும் விமர்சிக்க வேண்டாம். மக்கள் ஆதரவைப் பெறாதவர்கள் யாரும் அரசியலில் நீடிக்க முடியாது. அவருக்கு (சசிகலா) மக்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. எதிர்மறை அரசியலையும் வெறுப்பு அரசியலையும் முன்னெடுக்க வேண்டாம். அரசியல்ரீதியாகவே அனைவரையும் எதிர்கொள்வோம். எந்த நோக்கத்துக்காக புரட்சித் தலைவர் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அம்மா வழியில் கழகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும். நெகட்டிவ் பாலிடிக்ஸ் நமக்கு தேவையில்லை. என்னுடைய அரசியல் பயணம் இதையொட்டியே அமையும்' என விரிவாகப் பேசினார். 'சசிகலாவை வீழ்த்துவதற்கு நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. மக்களே பார்த்துக் கொள்வார்கள்' என்ற ரீதியில் விளக்கினார். நாங்களும் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்டோம்" என்றார் விரிவாக. 

"ஜெயலலிதா மீது பற்று வைத்திருந்த பல கிராமங்களில், தீபாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  'அத்தையின் மருமகளே வருக... அம்மாவின் ஆட்சியைத் தருக' என்ற வாசகங்கள் பிளக்ஸ் போர்டுகளில் பளிச்சிடுகின்றன. பரமக்குடியில் உள்ள சில கிராமங்கள் ஒட்டுமொத்தமாக தீபா பக்கம் வந்துவிட்டன. மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைத்துச் செல்வது குறித்து விவாதித்து வருகிறார். 'தொண்டர்களும் மக்களும்தான் கட்சி. இவர்கள் நம் பக்கம் இருந்தால், முழுமையான பலம் கிடைக்கும். இளைஞர்களும் நம்மை ஆதரிப்பார்கள். கட்சியின் சின்னத்தை வைத்து யாரும் ஓட்டளிப்பதில்லை. தலைவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்தி பக்கம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் காமராஜரைத்தான் மக்கள் ஆதரித்தார்கள். எனவே, இங்கு தலைவர்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல, மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக மாற வேண்டும்' என தேர்ந்த அரசியல்வாதியைப் போல் பேசுகிறார் தீபா. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதியை வணங்கிவிட்டு, அரசியல் அதிரடிகளைத் தொடங்க இருக்கிறார் தீபா. தி.நகரில் குவியும் அரசியல் பிரமுகர்களையும் கட்சிக்காரர்களையும் குறிப்பெடுத்து வருகின்றனர் உளவுப் பிரிவு போலீஸார். எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தொண்டர்கள் கூட்டம் குவிந்து கொண்டே இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/77431-never-criticise-sasikala-deepas-new-strategy.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.