Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'

Featured Replies

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'

rajini_women-_jaya_11174.jpg

கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கார்டனில் வலம் வருவதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

யார் அந்த நாகர்கோவில் பெண்?

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இயற்கை மீதும், செடிகள் மீதும் அளவில்லாத பிரியம் உண்டு. இதனால், போயஸ் கார்டன் வீட்டிலேயே கார்டன் பராமரிக்கப்பட்டது. அதில் தினமும் ஜெயலலிதாவும், சசிகலாவும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதுபோல சிறுதாவூர் பங்களாவுக்குச் செல்லும்போதும் அங்கேயும் நடைபயிற்சி மேற்கொள்வதுண்டு. அப்போது ஒருநாள், ஜெயலலிதா, ஒரு மலர் குறித்து சசிகலாவிடம் கேட்டுள்ளார். அந்த மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்தது. அந்த மலர் குறித்த விவரமும் சசிகலாவுக்கும் தெரியவில்லை. அடுத்து கார்டனில் உள்ள சிலரிடமும் அந்த கேள்வியை கேட்க அவர்களும் விழிபிதுங்கி உள்ளனர்.
 இதையடுத்து ஜெயலலிதாவின் மலர் குறித்த ஐயத்தை விளக்க உடனடியாக அங்கு அழைக்கப்பட்டவர் ரஜினி. இவர், நாகர்கோவில் தோவாளையைச் சேர்ந்தவர். வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதால் ஜெயலலிதாவின் மலர் சந்தேகத்தை ஆங்கிலத்திலேயே விளக்கியுள்ளார் ரஜினி. இதன்பிறகு ரஜினிக்கு, தோட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ரவீந்திரன், அ.தி.மு.க.வின் தொலைகாட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இதனால் கார்டனுக்குள் எளிதில் ரஜினி நுழைந்து விட்டார்.

ஜெயலலிதாவுடன் நெருக்கம்

போயஸ் கார்டனுக்குள் சென்ற ரஜினி, ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பூங்கொத்தை கொடுப்பது வழக்கம். அதுவே அவருக்கு ரஜினியைப் பிடித்து போய்விட்டது. ஜெயலலிதாவை விட சசிகலாவிடமும் ரஜினி, விசுவாசமாக இருந்துள்ளார். தற்போது ரஜினியின் செல்வாக்கு இப்போது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அரசியல் தலைவர்கள், வி.வி.ஐ.பிக்கள், கட்சியினருக்கு வழியை ஏற்படுத்தியவர் ரஜினி. சசிகலா, ரஜினியை அதிகம் நம்பியதால் அவருக்கு இப்போது கார்டனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன்விளைவு, ரஜினியின் தயவைப் பெற கட்சியினர் பலரிடம் போட்டோ போட்டி நிலவுதாம். சமீபத்தில் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அவரை  சந்தித்து சமரசப்படுத்தி கார்டனுக்கு அழைத்து வந்ததில் ரஜினிக்கு முக்கியப் பங்கு உள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கார்டனுக்கு அழைத்து வந்ததிலும் ரஜினியின் பங்கு இருக்கிறது.

கார்டன் டூ அரசியல்

சசிகலாவும், ரஜினியும் நீண்ட நேரம் பேசிக் கொள்வதாக கார்டன் வட்டார முக்கிய நிர்வாகிகள் சொல்கின்றனர். அதில் அரசியல் பேச்சும் இடம் பெறுகிறது. காலையில் ரவீந்திரன், காரில் ரஜினியை போயஸ் கார்டனுக்கு அழைத்து வருவாராம். மாலையில் அவரே ரஜினியை பிக்அப் செய்து கொள்வாராம். கார்டனில் இருந்தபடியே அரசியல் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் ரஜினி வசம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி, சிபாரிசு செய்த சிலருக்கு எம்.எல்.ஏ சீட்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ரஜினியின் கை ஓங்குவதை கார்டனில் உள்ள சிலர் விரும்பவில்லையாம். ரஜினி, சசிகலாவின் நட்பில் பிளவு ஏற்படுத்த முயற்சிகளும் நடக்கிறதாம்.

எம்.என்.நடராஜன்

ரஜினியை கார்டனிலிருந்தும், சசிகலாவிடமிருந்தும் பிரிக்க சில வியூகங்களை ஒரு தரப்பு செய்து வருகிறதாம். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி தரப்பு தப்பித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஜினியின் மீது புகார் பட்டியலை மன்னார்குடி தரப்பு சசிகலாவிடம் சமீபத்தில் கொடுத்துள்ளதாம். அதில் பால் கலப்பட ஊழலில் ரஜினியின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி மீது முழுமையாக சசிகலா தரப்பு நம்பிக்கை வைத்துள்ளதால் எந்த குற்றச்சாட்டுக்களும் எடுபடவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகிறார் ரஜினி. தற்போது அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக முடிவெடுத்த சில அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு ரஜினியிடம் சசிகலா கொடுத்துள்ளாராம். அந்த அசைமெண்டில் பிஸியாக ரஜினி இருக்கிறாராம்.

http://www.vikatan.com/news/coverstory/77429-sasikala-pins-hopes-on-rajini.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.