Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில்... முகாம்!:அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை:பேனர்களை அகற்றிய போலீசாருடன் பல இடங்களில் மோதல்

Featured Replies

Tamil_News_large_1688010_318_219.jpgஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில்... முகாம்!:அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை:பேனர்களை அகற்றிய போலீசாருடன் பல இடங்களில் மோதல்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவின் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில்,
தீபா பேனர்களை அகற்றிய போலீசாருடன், அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தீபாவை அரசியலுக்கு வரும்படி, அழைப்பு விடுத்து வருகின்றனர். தீபா, தன் முடிவை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான, 17ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், தீபா பேரவையை துவக்கி, ஆதரவு தெரிவித்து வரும், பெரும்பாலான தொண்டர்கள், சென்னைக்கு வந்து, ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துகின்றனர். பின், தி.நகரில் உள்ள தீபா வீட்டை நோக்கி படையெடுக்கின்றனர். இவ்வாறு வரும் தொண்டர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைப்பது, பேரவை துவக்குவது, ஆலோசனை கூட்டம் நடத்துவது என, தமிழகம் முழுவதும் பரபரப்பான காட்சிகள், தினமும் அரங்கேறி வருகின்றன.

தீபாவுக்கு ஆதரவாக, 'பேஸ்புக்' பக்கத்தை துவக்கி, அதில் பலரும் ஒன்றிணைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்போர்
பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

இந்நிலையில், தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார். இன்று மாலை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தீபாவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். ஈரோட்டில் தான், முதல் முறையாக, தீபா பெயரில் கட்சி துவங்கப்பட்டுள்ளது. சின்னம், கொடியை அறிமுகம் செய்து, தீபாவை பொது செயலராக முன் மொழிந்து, ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்களை, தீபாவிடம் ஒப்படைத்து, 'புதிய கட்சிக்கு தலைமையேற்க வேண்டும்' என, அழைப்பு விடுக்கவும், தீபாவை நேரில் சந்திக்கவும், ஈரோடு மாவட்ட மீனவரணி முன்னாள் செயலர் பாரூக் தலைமையில், ஐந்து பேர் சென்னை வந்துள்ளனர்.இவர்களை தொடர்ந்து, மேலும், பல ஊர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்திய பின், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அன்று, தீபா முடிவை அறிவிக்க உள்ளார்.

சேர்க்கை தீவிரம்

இதற்கிடையில், 'ஜெ., - தீபா பேரவை' என்ற பெயரில், அனைத்து மாவட்டங்களிலும், 'வாட்ஸ் ஆப்' குழுக்களை துவக்கி உள்ளனர். இக்குழுக்களில், சசிகலா எதிர்ப்பாளர்கள், உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், நகரம் மற்றும் கிராமங்களிலும், குழுக்கள் அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து, ஆதரவாளர்களை, ஒருங்கிணைக்கும் பணியையும் துவக்கி உள்ளனர்.

சில மாவட்டங்களில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக, தொடர்ந்து பல இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு கரூர், காமராஜபுரத்தில் தீபா ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், திருச்சி மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் செயலர் சவுந்தரராஜன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர்.

* பேனர் அகற்றம்

தமிழகத்தின் பல இடங்களில், தீபா ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனர்களை, நள்ளிரவில் போலீசார் திடீரென அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர், சில இடங்களில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி முழுவதும் தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்களை, அனுமதி பெறவில்லை என்று கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அகற்ற வந்தனர்.

தீபா ஆதரவாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்திய போலீசார், 'இது, மேலிட உத்தரவு' என கூறி, பேனரை எடுத்துச் சென்றனர். போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல் நடத்தினர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலும் போலீசார் பேனர்களை அகற்றியதால் ஆத்திரமடைந்த, தீபா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறப்பு பூஜை

தீபாவின் பிறந்த நாளான நேற்று, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில், பூமீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1688010

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.