Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையகப்படுத்தணும்

Featured Replies

gallerye_235443292_1688746.jpg

மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_1688746_318_219.jpg

மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார்.

1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

 

ஆர்.கே.நகர் தொகுதி


தேர்தல்களில் வெற்றி பெற்று, நான்கு முறை முதல்வராக பதவி வகித்தார். 2016, மே மாதம் ,நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி யிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், வங்கியில், 'டிபாசிட்' என, 10.63 கோடி ரூபாய்; பத்திர முதலீடு என27.44 கோடி; நகை கள் மதிப்பு என, 41.63 கோடி; நில மதிப்பு என, 72 கோடி ரூபாய் மற்றும் வாகன விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிச., 5ல் ஜெ., மறைந்தார். ஜெ., பெயரில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. சொத்துகளுக்கு வாரிசு யார் என்பதை, நேரடியாக குறிப்பிடவில்லை.

 

'மக்களால் நான்; மக்களுக்காகவே நான்' என, ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவார். அவரது அசையும், அசையா சொத்துகளை, அரசுடமை யாக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் வரும் வருவாயை, ஏழைகளின் நலன்களுக் காக பயன்படுத்தலாம். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், குழு அமைத்து, ஜெ.,யின் சொத்துகளை அடை யாளம் கண்டு, விபரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில், சொத்துகளை கையகப்படுத்தி, அரசுடமை யாக்க வேண்டும்.
 

எதிர்பார்ப்பு


சொத்துகளை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க கோரி, பிரதமர்
அலுவலக முதன்மைச் செயலர், மத்திய உள் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு, 2016, டிச., 15ல் மனு அனுப்பினேன். மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.இம்மனு, இன்று அல்லது விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்புள்ளது. பொதுநல வழக்கு என்பதால், இரண்டு நீதிபதி கள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1688746

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.