Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்!

Featured Replies

எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்!

Natarajan நடராஜன்

ஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலம். இந்த ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லை. வழக்கமாக நடப்பதுதான் என்றாலும், இதுவரை நடந்தது நடராஜன் நடத்திய பொங்கல் விழா. இப்போது அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை வகிக்கும், விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என சொல்லப்படும் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பதுதான் பரபரப்பும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கக் காரணம்.

என்ன பேசப்போகிறார் நடராஜன்?

ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் கணவர் நடராஜனால் தஞ்சையில் நடத்தப்படும் ‘தமிழர் கலை இலக்கியத் திருவிழா’வில் அவருடைய பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். 'ஜெயலலிதா இருக்கும்போதே 'நான் அரசியலுக்கு வரட்டுமா? வேண்டாமா?' என கருத்து கேட்டவர். அவருடைய பேச்சில் சாவல்கள் நிறைந்து இருக்கும். நான் செல்போனில் பேச மாட்டேன், காரில் பயணம் செய்யமாட்டேன் என பல்வேறு வித்தியாசமான வாக்குறுதி எல்லாம் நடந்தது இந்த பொங்கல் விழாவில்தான்.

நடத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துக்கிடையே, பொங்கல் விழாவை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடத்துவது என முடிவு செய்து விட்டார் நடராஜன். இந்த ஆண்டு பொங்கல் விழா அடுத்த மூன்று நாட்கள் நடக்கவிருக்கிறது. மனைவி அ.தி.மு.க.வின் பொறுப்பை ஏற்றுவிட்டார். தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவரது பேச்சில் அரசியலுக்கு பஞ்சமிருக்காது. ஜெயலலிதா இருந்தபோதே பல சவால்களை விடுத்தவர், இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பது கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு சசிகலா, நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி உறவுகளைக் கூண்டோடு வெளியேற்றிய பின்னர், அந்த பொங்கல் விழாவில் நடராஜன் என்னவெல்லாம் பேசினார் என்பதை பார்ப்போம்.

Natarajan நடராஜன்

2012 - 'கலைஞர் பின்னால் செல்லத் தயார்'

2012-ம் ஆண்டு பொங்கல் விழா. அதாவது ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் விழாவில் பேசிய நடராஜன், "இந்த ஆண்டு தமிழர் கலை இலக்கிய விழா நடக்குமா? நடக்காதா என்று தஞ்சை மக்கள் எண்ணினார்கள். கடைசி தமிழன் இருக்கும் வரை கலை இலக்கியத் திருவிழா நடைபெறும். இதைப் பார்த்து சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் திகாரில் சங்கமித்து விட்டார்கள். நான் அப்படியல்ல. இதற்கென மருதப்பா அறக்கட்டளையை துவக்கியிருக்கிறேன் என்றவர், முல்லைபெரியாறு பிரச்னை தீரவேண்டுமானால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் கலைஞர் அறிக்கை விட்டிருக்கிறார். அப்படியென்றால் காவிரிக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு, காவிரிக்காக களமிறங்கி போராடினால் கலைஞர் பின்னால் செல்ல நான் தாயார்," என்று முழுங்கினார்.

ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்தில் நடராஜன் இப்படி பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சசிகலாவும், குடும்பத்தினரும் நடராஜனின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் எனவும் சொல்லப்பட்டது.

Natarajan நடராஜன்

2013 - ஜெயலலிதாவுக்கு எதிராக ஜெயலலிதா ஸ்டைலில்...

2013-ம் ஆண்டு. "நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. ஆனால், என் மீது பொய் வழக்கு போட்டார்கள், சிறையில் அடைத்தார்கள். என் மீது பொய் வழக்கு போட்டவர்களுக்கு தேர்தல் நேரத்தில் நான் சொல்லுவேன், அதை நீங்கள் எனக்காக செய்ய வேண்டும். அப்படி செய்து அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்களா,"என்று ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார் நடராஜன். இவர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். ஜெயலலிதாவுக்கு எதிராக இவர் பேசிய இந்த பேச்சும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2014- ஆட்சி மமதையில் இருக்கிறது தமிழக அரசு

Natarajan நடராஜன்2014-ம் ஆண்டு. "இந்தியாவில் உழவு தொழிலும், உணவு உற்பத்தியும் குறைந்து போய்விட்டது. பிரதமரிடம் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டங்களே இல்லை, மாதத்தில் பத்து நாட்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்கிறார். மீதி நாட்கள் வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார். ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள் இவர் (மன்மோகன்சிங்) தமிழகத்துக்கு வந்ததுண்டா? பிரதமர் (மன்மோகன்சிங்) ஒரு நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) வைத்திருக்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகள் என்ன? அவர் ஏரியாவில் ஊருக்கு ஊர் வங்கிகளை திறந்து வைத்ததுதான், மக்களிடம் வங்கியில் பணம் போடுவதற்கு எங்கே பணம் இருக்கிறது.

மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதைப்பற்றி தமிழகத்திலுள்ள அமைச்சர்கள் யாராவது பேசுகிறார்களா? மீனவர்களை யாரோ என்றுதானே நினைக்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருக்கும்போது எங்களைத் தொட்டதே இல்லை என்று சொல்லுகிறார்கள் மீனவர்கள். ஆனால் தமிழக முதல்வர் (ஜெயலலிதா) என்னால் என்ன முடியும் என்கிறார். ஈழத் தமிழர்களின் ஈகிகளுக்காக கட்டப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் முற்றம். இந்த புகழ் இவருக்கு போய்ச் சேருவதா? என்று சிலருக்கு வருத்தம். முற்றத்தை இடித்த அதிகாரிகளை எனக்குத் தெரியும். அவர்களை இந்த தமிழக அரசு தண்டிக்காமல் ஆட்சி மமதையில் இருக்கிறது. அவர்கள் என் கையில் சிக்குவார்கள் நான் அப்போது நசுக்குவேன்.

Natarajan நடராஜன்

நேரடி அரசியலில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா?

a1_11134.jpgதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, இன்றைய வேலையில்லா இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவது வேதனையை அளிக்கிறது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பட்டியலை என்னால் வெளியிட முடியும். நான் மௌனம் சாதிப்பது எதிர்க்கட்சிகாரர்கள் நமக்கு நல்லது என்று நினைக்கிறார்கள், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா? என்று நீங்களே சொல்லுங்கள். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு இடம் கொடுத்த நாம் இல்லாமல் போய்விடக்கூடாது. நாங்கள் என்ன இளைத்தவர்களா? நான் எதிரிகளை அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இப்போது நான் நேரடி அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா என்பதை தீர்மானிக்க இங்கு ஓட்டு பெட்டி வைத்துள்ளேன். வாக்களியுங்கள்," என்றவர், வாக்குச் சீட்டு கொடுத்து ஓட்டு போட வைத்தார். ஓட்டு எண்ணிக்கை அண்ணா நினைவு நாளான பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவேன் என்றார். ஓட்டும் எண்ணப்படவில்லை, முடிவையும் அறிவிக்கவில்லை.

 

2015- போராட்டம் நடத்தாதீர்கள்... என்னிடம் வாருங்கள்

Natarajan நடராஜன்2015-ம் ஆண்டு. விழாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் அவரது கடிதத்துடன் பிரணாப்பின் மைத்துனர் கிருஷ்ண மோகன்ஜி பங்கேற்றார். "டெல்டாவில் உருவெடுத்து வரும் மீதேன் திட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். அதற்காக யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்னிடம் வாருங்கள் நான் எல்லோரையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டு போய் பேசி, மீதேன் திட்டம் வராமல் செய்துவிடுகிறேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.  மீத்தேன் திட்டம் வரவே வராது," என்று அடித்து பேசினார்.

"மக்களின் வாழ்வாதாரம் அடியோடு ஒழிக்கும் திட்டத்தை அரசு கைவிடவில்லையென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, அந்த திட்டத்தை முடக்கலாம் என சட்ட நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன் மூலம் இந்த திட்டத்தை முடக்க காய்நகர்த்தி வருகிறார்," என இவரது பேச்சுக்கு நடராஜனின் ஆதரவாளர்கள் காரணம் சொன்னார்கள்.

2016- 'நான் வருவதை சிலர் தடுக்கிறார்கள்'

2016-ம் ஆண்டு. பொங்கல் விழாவில் சிறப்பழைப்பாளராக பங்கேற்றார் கார்கில் போர் கேப்டன் அருண் சக்கரவர்த்தி. அவர் "தமிழகத்தின் சிறந்த மனிதர் நடராஜனால், ஆண்டுதோறும் அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் டெல்லிக்கு வரவேண்டும், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வரவேண்டும் இந்த தமிழர் கலை இலக்கிய திருவிழா தொடர்ந்து நடத்த வேண்டும்," எனச்சொல்லி நடராஜனை குஷிப்படுத்தினார்.

இடையில் குறுக்கிட்டு பேசிய நடராஜன், "நான் வருவதை சிலர் தடுக்க நினைக்கிறார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது," என்றார். இறுதிநாள் நிறைவுரையில், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் புகழைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர், "நீதிகட்சி தோன்றியபிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வேரோடு அழிந்துவிட்டது. அதன்பிறகு தோன்றிய திராவிட கட்சிகள்தான் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. திராவிட கட்சிகளை இனி யாராலும் அழிக்க முடியாது," என்று பேசி முடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல் நிகழ்ச்சி. மனைவி சசிகலா அ.தி.மு.க. தலைமையேற்ற பின்னர் முதல் நிகழ்ச்சி... இப்படி பல பரபரப்புகளுக்கிடையே நாளை துவங்குகிறது நடராஜனின் பொங்கல் விழா. நடராஜன் என்ன பேசப்போகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/77715-natarajans-speech-on-pongal-festival.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.