Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

Featured Replies

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

இந்த சட்டமூலத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன   எனவும்  சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களே  இவ்வாறு  ஒப்புதல் அளித்துள்ளன எனவும்  ஒப்புதல் அளித்த சட்டமூல வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது எனவும்  உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை அனுப்பும்  எனவும்தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை  வருவதாக திட்டமிட்டிருந்த  ஆளுனர்  முன்கூட்டியே வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

http://globaltamilnews.net/archives/14514

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் திடீர் திருப்பம்: குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல்- சென்னைக்கு அனுப்பிவைப்பு

 

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மெரினாவுக்கு மாட்டு வண்டியில் வந்த மக்கள் | படம்: க.ஸ்ரீபரத்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மெரினாவுக்கு மாட்டு வண்டியில் வந்த மக்கள் | படம்: க.ஸ்ரீபரத்.
 
 

நாளை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு

 

 

 

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை இரவு) திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு குடியரசு தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிய வந்தமையால், அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடியாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னை அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தமிழக அரசின் அவசர சட்டம் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டம், சுற்றுச்சுழல், கலாச்சாரம் ஆகிய அமைச்சகங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டது. இதற்காகவே, காத்திருந்த அதன் மத்திய அமைச்சர்கள் அதில் தம் கருத்துக்களை சில மணி நேரங்களில் பதிவு செய்து மாலையே அனுப்பி விட்டனர்.

இதற்கு இறுதி வடிவம் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் அவசர சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பியது.

இதில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அவசரசட்ட முன்வடிவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுப்பலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதனால், இன்று (சனிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் இறுதி செய்யப்பட்ட முன்வடிவு சென்னை தலைமை செயலகத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டு விட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், "சில விஷயங்களை குடியரசு தலைவரின் சார்பில் எங்கள் அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் என உள்ளது. இதை குடியரசு தலைவருக்கு அந்த சட்டமுன்வடிவை அனுப்பிய பின் சில அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

எனவே, இதை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இன்று நேரடியாக தமிழக அரசிற்கு அனுப்பி விட்டோம். உதாரணமாக, எங்களைப் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி அமர்வு குடியரசு தலைவரால் அமர்த்தப்படுகிறோம். இதற்காக, அவர் சார்பில் எங்கள் அமைச்சகம் தான் கையெழுத்து இட்டு உத்தரவு அனுப்புகிறது. அதுபோலத்தான் இந்த விஷயத்தையும் கருத வேண்டும்" எனக் கூறினர்.

சட்ட திருத்தம்

தமிழக அரசால் உயற்றப்படும் அவசர சட்டங்கள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றவை மற்றும் இடம்பெறாதவை என இருவகைகள் கொண்டவை. இதில் ஜல்லிக்கட்டு மீதான சட்டம் பொதுப்பட்டியல் எண்-3 ல் இடம் பெற்றுள்ளது. எனவே, இதை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின் தற்போது இயற்றப்படுகிறது. அப்பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ள ‘மிருகவதை அவசர சட்டம் 1960-ல் திருத்தம் செய்து இந்த அவசரசட்டம் இயற்றப்படுகிறது. இதன்படி, ஜல்லிக்கட்டு என்பது மிருகவதையில் வராது என்றாகி விடும். இதுவும் தமிழகத்தில் மட்டுமே அமலாகும்.

நாளை ஜல்லிக்கட்டு

சென்னை வரும் அவசர சட்டத்தின் முன்வடிவு, தலைமை செயலக அதிகாரிகளால் ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பப்படும். அவர் அதை சரிபார்த்த பின் கையெப்பம் இட்டு அவசர சட்டத்தை இன்று மாலையே இயற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து தமிழகத்தில் ஜல்லிகட்டு நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜல்லிக்கட்டு-அவசர-சட்டத்தில்-திடீர்-திருப்பம்-குடியரசுத்-தலைவர்-சார்பில்-மத்திய-உள்துறை-அமைச்சகமே-ஒப்புதல்-சென்னைக்கு-அனுப்பிவைப்பு/article9494838.ece?homepage=true

  • தொடங்கியவர்

அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்! அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு

Jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்படி, காட்சி படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று இரவு மதுரை செல்லும் முதல்வரர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.

TN Governor Vidhyasagar Rao

http://www.vikatan.com/news/tamilnadu/78365-tn-governor-passed-jallikattu-ordinance.art

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ஏன் ? தமிழக ஆளுநர் விளக்கம்

 
ஜல்லிக்கட்டு
  ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ஏன்?

ஜல்லிக்கட்டு குறித்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அவசர சட்டம் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைக்கப்படும் என்பதால், தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் என்று நம்பிக்கையுடனிருப்பதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கலசாரத்தை மதிக்கும் வகையிலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டும் , விலங்குகள் வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2017 என்ற அவசர சட்டம் மூலம், தற்போது நிலுவையில் உள்ள மத்திய சட்டமான , 1960ம் ஆண்டைய விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அவசர சட்டம் வெளியிட்டால் போதாது, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு சட்டபூர்வமாக நிரந்தர தீர்வு வேண்டும் என்று சென்னையில் போராட்டக்கார்ரகள் கோரிக்கையை வைத்து, போராட்டத்தை கைவிடமுடியாது என்று கூறிவரும் நிலையில் ஆளுநரின் இந்த அறிக்கை வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு வேண்டும்: தமிழகத்தில் தொடரும் போராட்டம்

அவசர சட்டம் கொண்டுவந்த பின்னணியை விளக்கிய ஆளுநர், சட்டமன்றம் வரும் 23ம் தேதி கூடவிருக்கும் நிலையில், அவசர சட்டம் ஒன்றை பிறப்பிப்பதன் நியாயத் தன்மை பற்றி கருத்தில் கொள்ளப்பட்டது; ஆனால், சட்டமன்றம் அமர்வில் இருப்பது என்பது அது கூடும் முதல் தினம் முதல் அக்கூட்டத்தொடரை ஆளுநர் முடித்துவைப்பது வரை அது அமர்வில் இருப்பதாக்க் கருதப்படும் என்பதை விளக்கினார்.

இந்நிலையில், இது குறித்த ஒரு மசோதா சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டுமானால். இந்த ஒட்டு மொத்த அரசியல் சட்ட வழிமுறை முடிய நீண்ட காலமெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவேதான், இந்த அவசர சட்டம் பிறப்பிப்பதுதான் இந்த தற்போதைய நிலைக்கு ஒரே பொருத்தமான, திருப்திகரமான தீர்வாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் ஆளுநர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38706476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.