Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு வேண்டிய போராட்டம் பொய்த்துப்போனதா?

Featured Replies

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு தீர்வு வேண்­டிய போராட்டம் பொய்த்­துப்­போ­னதா?

 

உணர்­வு­களின் நிலை­பேறு தன்­மையின் இறுதி ஆயு­த­மாக பல போராட்­டங்கள் உலக அரங்கில் உரு­வாக்கம் பெறு­கின்­றது. இந்­த ­வ­கையில் மக்­க­ளி­னு­டைய எழுச்­சி­யி­னூ­டாக ஏற்­படும் போராட்­டங்கள் பல, வெற்­றி­யினை அடைந்­ததன் பின்­னரே நிறைவு பெற்­றதும் அதனை புரட்சி என்ற பெயர் கொண்­ட­ழைப்­பதும் வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது. 

அண்­மையில் தமி­ழ­கத்தில் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ர­வாக இடம்­பெற்ற போராட்டம் இறுதி தீர்வை பெற்­ற­தாக அமைந்­தி­ருந்­தமை அண்­மைய மக்கள் எழுச்­சிக்கு சான்­றாக அமைந்­துள்­ளது. அவ்­வா­றான போராட்­டங்­களின் ஓர் அங்­க­மா­கவே நீண்ட கால­மாக வடக்கு கிழக்கில் கடத்­தப்­பட்டும் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்டும் பலர் காணாமல் ஆக்­கப்­பட்ட நிலையில் அவர்­களின் உற­வுகள் கடந்த பல ஆண்­டு­க­ளாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். 

வெறு­மனே சில மணி நேர போராட்­ட­மா­கவோ அல்­லது ஒரு நாள் போராட்­ட­மா­க­வுமே காணப்­பட்ட அப் போராட்­டங்கள் அர­சி­ய­லா­ளர்­க­ளின் வாக்­கு­று­தி­களை நம்பி நிறு­த்­தப்­பட்டு வந்­தி­ருந்­தது, யுத்தம் பலரை பலி எடுத்­த­தற்­கப்பால் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பதி­வு­களும் அதி­க­ரித்துச்சென்­றி­ருந்­தது, 

23 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சி­ய­லா­ளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இவ்­வாறு காணாமல் ஆக்­கப்­பட்டோர் பல பிரி­வு­க­ளுக்குள் அடங்­கி­யுள்ளனர். குறிப்­பாக கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்டோர், வீடு­களில் புல­னாய்­வா­ளர்கள் என அறி­முகம் செய்து விசா­ர­ணைக்­காக அழைத்துச்சென்று காணாமல் ஆக்­கப்­பட்டோர், இறுதி யுத்­தத்தில் வவு­னியா நோக்கி வந்­த­வர்­களை ஓமந்தை சோத­னைச்­சா­வ­டியில் வைத்து விசா­ர­ணைக்­காக அழைத்­த­ போது பெற்­றோ­ராலும் மனை­வி­மா­ராலும் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டோர், இறுதி யுத்­தத்தில் மத போத­கரின் உத­வி­யுடன் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தோர் என பல பிரி­வு­களில் இவர்கள் அடங்­கி­யுள்­ளனர். 

இந் நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான நிலைப்­பாடு என்ன என்­பது அவர்­களின் உற­வு­க­ளுக்கு மட்­டு­மல்ல ஐ.நா.வுக்கே விடை காண­மு­டி­யாத புதி­ரா­கவே இருந்து வந்­தது. வெளிநாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களின் இலங்கை விஜ­யத்­தின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் சந்­திப்­பென்­பது தனி நிகழ்ச்சி நிர­லா­கவே ஆக்­கப்­பட்டு வந்த நிலையும் காணப்­பட்­டி­ருந்­த­துடன் எவ­ராலும் பதில் கூற முடி­யாமல் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் மீது சுட்­டு­வி­ரலை காட்டும் நிலையே காணப்­பட்­டது. 

இந் நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் மாவட்­டத்­திற்­கொரு அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு 8 அமைப்­புகள் வடக்கு கிழக்கில் செயற்­படத்தொடங்­கி­ய­துடன் அவை தமது மாவட்­டங்­களில் வெகு­ஜன போராட்­டங்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­தி­ருந்­தன. இப் போராட்­டங்கள் எந்த அள­விற்கு தீர்­வினைப்பெற்று தந்­தி­ருந்­தது என்­ப­தற்கு அப்பால் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் காலத்­திற்கு காலம் அர­சியல் தலை­மை­க­ளுக்கு ஞாப­க­மூட்டும் விட­ய­மாக மாத்­தி­ரமே அவை மாறி­யி­ருந்­தது, 

இந் நிலை­யி­லேயே வவு­னியா மாவட்­டத்தில் செயற்­படும் தமிழர் தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடி­ய­றியும் குடும்­பங்­களின் சங்கம் டிசம்பர் 30 ஆம் திக­தி­யன்று வவு­னியா பண்­டா­ரவன்­னியன் சிலைக்கு முன்­பாக அடை­யாள உண்­ணா­வி­ரதம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர். இவ் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் மாத்­தி­ரமே பங்­கேற்­றி­ருந்த நிலையில் காலை 9.30 மணியில் இருந்து மாலை 4 மணி­வரை இப் போராட்டம் இடம்­பெற்­றி­ருந்­த­ போ­திலும் போராட்­டத்தின் இறு­தியில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­ கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனின் உரு­வப்­படம் எரிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இச் செயற்­பாடு பலரின் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­த­துடன் எய்­தவன் இருக்க அம்பை நோவானேன் என்­பது போல் பேரின­வாத அர­சியல் தலை­மைகள் தகுந்த பதிலை அளிக்க முடி­யா­தி­ருக்­கையில் தமிழ் தலை­மையை இவர்கள் ஏன் நொந்து கொள்­கின்­றனர் என்ற கேள்வி மேலெழுந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான செயற்­பாடு அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சியால் சிலரின் தூண்­டு­தலில் இடம்­பெற்­றதா என்ற சந்­தே­கத்­தினை பல­மா­கவே எழுப்­பி­யி­ருந்த நிலையில் காணா­மல்­போனோரின் உற­வு­களால் அன்­றைய தினமே தமக்­கான உரிய பதில் கிடைக்­காத பட்­சத்தில் 23 ஆம் திக­தியில் இருந்து சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக தெரிவித்­தி­ருந்­தனர்.

தமி­ழ­ர­சுக்­கட்­சி­ மாவட்ட கிளையில் சம்­பந்­தனின் உரு­வப்­படம் எரிக்­கப்­பட்­ட­மைக்கு அதி உச்ச கோப­ம­டைந்­தி­ருந்த நிலையில் வவு­னியா தமி­ழ­ர­சுக்­கட்­சியில் ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற மாவட்ட கூட்­டத்தில் காணா­மல்­போ­னோரின் உற­வுகள் சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பாட்­டுக்கு கண்­டன தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இதனை பொறுத்­துக்­கொள்­ளாத உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் 30 ஆம் திகதி ஈடு­பட்ட சிலர் வவு­னியா கந்­த­சாமி கோவி­லுக்கு முன்­பாக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வவு­னியா மாவட்ட தலை­வரும் வட மாகாண சுகா­தார அமைச்­ச­ரு­மான ப. சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இவ்­வா­றான செயற்­பாட்டை அவர்கள் கந்­த­சாமி கோவிலில் எடுப்­ப­தற்கு முன்­பாக இங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த காணா­மல் ­போ­னோரின் உற­வு­க­ளுக்­க­ிடையில் சிறு முறுகல் நிலையும் ஏற்­பட்­டி­ருந்­தது. 

குறிப்­பாக இவ்­வா­றான செய­ற்­பா­டுகள் சிலரின் தூண்­டு­த­லி­னா­லேயே இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தேவை­யற்ற செயலில் காணா­மல்­போனோரின் உறவுகள் ஈடு­ப­டு­வ­தாக தெரிவித்­த­துடன் ஒரு­சிலர் அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சியை இவ்­வா­றான காணா­மல்­போ­னோரை வைத்து அரங்­கேற்ற நினைப்­ப­தா­கவும் தெரிவித்து அங்­கி­ருந்து வெளியே­றி­யி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே குறித்த சங்­க­மா­னது தாம் அறி­வித்­தது போன்று காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு எவ்­வித பதிலும் குறித்த திக­திக்கு முன்­பாக கிடைக்­க­வில்லை என தெரிவித்­த­துடன் தம்மால் சாகும் வரை­யி­லான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­வித்­தலை விடுத்­தனர்.

பொது அமைப்­பு­க்க­ளி­னதோ, அர­சியல் கட்­சி­க­ளி­னதோ, இளை­ஞர்­க­ளி­னதோ ஆத­ரவு ஏதும் கோரப்­ப­டாது ஒரு சிலரின் ஏற்­பட்டில் உணவு தவிர்ப்பு போராட்டம் திட்­ட­மிட்­டது ­போன்று 23 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை வவு­னியா கந்­த­சாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்­பிக்­கப்­பட்டு பேர­ணி­யாக வந்து வவு­னியா பிர­தான தபா­ல­கத்­திற்கு முன்­பாக தொடர்ந்­தது.

காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் நிலைப்­பாட்டை தெரிவிக்­க­வேண்டும், அர­சியல் கைதி­களை நிபந்­த­னை­யின்றி விடு­விக்க வேண்டும், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து காணாமல் போனோரின் உற­வுகள் மேற்­கொள்ளும் இவ் உண்ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வவு­னியா முச்­சக்­க­ர­வண்டி உரி­மை­யாளர் சங்கம் தமது ஆத­ரவை முதல்­நாளில் இருந்தே வழங்­கி­யி­ருந்த நிலையில் 14 பேர் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தத்­தினை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

மழை மற்றும் குளிர் என்ற கால­நிலை பிரச்­ச­ினை­க­ளுக்கு மத்­தியில் இளை­ஞர்கள் சிலரும் இப்­போ­ராட்­டத்தில் பங்­கேற்­ற­துடன் கொட்­ட­கை­க­ளையும் அமைத்து மேடை­யையும் அமைத்து உண­ர்வுபூர்­வ­மான போராட்­ட­மாக இதனை மாற்ற பிர­யத்­தனம் செய்து வந்­தனர்.

வவு­னி­யாவில் பொரு­ளா­தார மத்­திய நிலையம் ஓமந்­தையில் அமை­ய­வேண்டும் என மலே­பாம்பு என்ற 70 வயது வயோ­திபர் சில நாட்கள் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்ட நிலையில் வட மாக­ாண சுகா­தார அமைச்­சரும் வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் குறித்த இடத்­திற்கு வந்து கைகொ­டுத்து சமா­தா­ன­மா­கிய நிலையில் அவ் உண்­ணா­வி­ர­தப்­போ­ரா­ட்டம் கைவி­டப்­பட்­டது போன்றே இத­னையும் சிலர் விமர்­சித்­தி­ருந்த நிலை­யிலும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­களின் மன வேத­னையின் கார­ண­மாக சிலர் இவ்­வா­றான கருத்­துக்­களை அவர்­களின் முன் சொல்லத்தயங்கி வந்­தி­ருந்­தனர்.

எனினும் இரண்­டா­வது நாளும் இரவு பக­லாக நீரா­காரம் இன்றி உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்­பெற்று வந்த நிலையில் ஊட­கங்கள் உண்­ணா­வி­ரதத்தின் பக்கம் தமது பார்­வையை ஆழ­மாக பதிக்கத் தொடங்­கி­யி­ருந்­தன. இளை­ஞர்கள், பொது அமைப்­புக்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வாகள், முச்­சக்­க­ர­வண்டி உரி­மை­யா­ளர்கள், அர­சியல் கட்­சிகள் என பலரும் இவர்­க­ளது உண்­ணா­வி­ரதத்­திற்கு ஆத­ரவு தெரிவிக்க முனைப்பு காட்­டி­ வந்­த­துடன் இரவு பக­லாக ஆத­ர­வா­கவும் உணவு தவிர்ப்­பிலும் ஈடு­பட்­டி­ருந்­தனர். 

14 பேரும் மான­சீ­க­மாக உணவு தவிர்ப்பில் ஈடு­பட்டு வரு­வதை உணர்ந்த வைத்­தியர் குழாமும் அவர்­களை தினமும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் மருத்­துவ ஆலோ­ச­னை­க­ளையும் வழங்க தலைப்­பட்­டனர் இந்­நி­லையில் மூன்­றா­வது நாளும் கடந்து நான்­கா­வது நாள் பலரின் உடல் நிலை மோச­ம­டைந்து வரும் நிலையில் மக்கள் ஆத­ரவு அதி­க­ரிக்கத்தொடங்­கி­ய­துடன் ஏ9 வீதியில் பொலிஸார் குவிக்­கப்­பட்டு மக்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 

அத்­துடன் அர­சியல் கைதிகள் பலரும் சிறை­களில் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன் திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளிலும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் வவு­னி­யாவில் இடம்­பெறும் உண்­ணா­வி­ர­தத்­திற்கு ஆத­ர­வாக அடை­யாள உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இது தவிர இலங்கை பாரா­ளு­மன்­றத்­திலும் இவ்­வி­டயம் தமிழ் அர­சி­ய­லா­ளர்­க­ளையும் தாண்டி சிங்­கள தலை­மை­களும் பேசும் அள­விற்கு பாரிய விட­ய­மா­கி­யது. மக்கள் எழுச்சி என்­ப­தனை மீண்டும் மக்கள் நிரூ­பிக்கும் வகையில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், இளை­ஞர்கள், பொது அமைப்­புகள் என்­பன வீறு கொண்டு ஆத­ரவு தெரிவித்­த­துடன் வட மாகாண முத­ல­மைச்­சரும் நிலை­மையை உணர்ந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார்.

நீண்ட காலத்­திற்குப்பின்னர் மக்கள் எழுச்சி வவு­னி­யாவில் ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நிலையில் ஒரு சிலர் தமது கையில் இப்­போ­ராட்­டத்­தினை எடுக்க முய­ற்­சித்­துக்­கொண்­டி­ருந்­தனர். குறிப்­பாக இப்­போ­ராட்­டத்தின் தன்­மையை திசை மாற்­றவும் தமது அர­சியல் லாபத்­தினை தேடவும் முற்­ப­டு­கையில் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் இடம்­பெற்ற பகு­திக்குள் சல­ச­லப்­புகள் ஏற்­ப­டத்­தொ­டங்­கி­யி­ருந்­தன.

உணவு தவிர்ப்பு போராட்டம் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்டு மக்கள் வீதியில் இறங்கும் நிலைக்கு செல்­வ­தனை அவ­தா­னித்த பிர­ஜை­கள் ­குழு மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான சங்­கங்­க­ளினை பிர­தி­நி­திப்­ப­டுத்தும் சிலர் போராட்­டத்தின் திசை­யினை மாற்ற எண்­ணி­யி­ருந்­தார்கள் என பலரும் விமர்­சிக்க தொடங்­கிய நிலையில் மன்­னா­ருக்கு சென்­றி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­தன உணவு தவிர்ப்பு போராட்டம் இட­ம்­ பெறும் பகு­திக்கு வரு­வ­தாக பேச்­சுகள் வரத்­தொ­டங்­கின.

இந் நிலையில் பொலிஸார் குறித்த பகு­தியில் குவிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி நான்கு நாட்­களில் இது­வரை போராட்ட பகு­திக்கு வராத மற்றும் ஆத­ரவு தெரிவிக்­காத பலர் முன்­னிலை வகிக்கத் தொடங்­கினர். இது போராட்­டம் திசை மாறி­ய­தாக வந்த செய்­தி­களை உறு­திப்­ப­டுத்த கூடி­ய­வ­கையில் அமைந்­தது எனலாம். அங்கு வந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமை­ச்ச­ருடன் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்ட மூவரும் கிறிஸ்­தவ மத தலைவர் ஒரு­வ­ருடன் மேலு­மொ­ரு­வரும் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டத்­தொ­டங்­கி­யி­ருந்­தனர். 

தமது கோரிக்­கை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கா­விட்டால் போராட்­டத்­தினை முடிக்­க­மாட்டோம் என தெரிவித்து வந்த உண்­ணா­வி­ர­திகள் 45 நிமிட உரை­யா­டலின் இறுதி தரு­ணங்­களில் எதிர்­வரும் 9 ஆம் திகதி 11 மணிக்கு அலரி மாளி­கையில் பிர­தமர் உட்­பட சிலரை சந்­திப்­ப­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்தை திடீரென ஒத்­துக்­கொண்­டனர் அவ­ருடன் கல­ந்­து­ரை­யா­டி­ய­வர்கள். எனினும் போராட்­டத்தில் ஈடு­பட்ட சிலர் இது முடி­வல்ல என தெரிவித்­த­போ­திலும் அதனை செவி­சாய்க்­காது குறித்த முடி­வையே எழுத்து மூல­மா­கவும் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட நால்­வரும் ஏற்­றுக்­கொண்­ட­துடன் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரையே தமக்கு நீர் தந்து உணவு தவிர்ப்பு போராட்­டத்­தினை முடித்து வைக்குமாறும் கோரினர்.

குறிப்பாக தாம் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றேனும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் எழுச்சி கொண்டு வடக்கு, கிழக்கு அனைத்தும் ஸ்தம்பிதமடையச்செய்து போராட்டங்களை முன்னெடுக்க இளைஞர்கள் ஆயத்தமாகிய வேளையில் திடீரென யார் உணவு தவிர்ப்பை கைவிட முடிவெடுத்தார்கள் என்பது சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது மாத்திரமின்றி கடந்த 3 நாட்களும் உணவு தவிர்ப்பு இடம்பெற்ற பகுதிக்கு வராத சிலர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு வந்து தாமே இப்போராட்டத்தினை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்தது யார்? இப்போராட்டத்தினையே ஏற்பாடு செய்தது இவர் தான் என பலராலும் சுட்டிக்காட்டப்படும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக் கலந்துரையாடலில் ஈடுபடாததுடன் குறித்த பகுதியில் இருந்து வெளியேறியமை எதற்காக? 

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் வருகையை எதிர்பார்த்திருந்த உண்ணாவிரதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் பயனற்ற எழுத்துமூல ஆவணத்திற்கு அடிபணிந்தது யாரின் உந்துதலால்? மக்கள் போராட்டம் எழுச்சி பெறும் போது திடீரென போராட்டத்தினை கைவிடுமாறு உத்தரவிட்ட மேலிடம் எது?  இவற்றுக்கு பதில் காணும் பட்சத்தில் இப்போராட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது உணர்வு ரீதியாக மேற்கொள்ளப்பட்டதா என்பது வெளிப்படும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-28#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.