Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? விசாரணை வெளிப்படுத்துமா ?

Featured Replies

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்?

Indian-chelian-d05ea6d2071e5a5fcc4f173f0d15824c591238ae.jpg

 

விசாரணை  வெளிப்படுத்துமா ?
ஜல்­லிக்­கட்டு நடத்த அனு­மதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்­க­ரையில் அமைதிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு யார் காரணம்? யார் தாக்­குதல் நடத்­து­மாறு உத்­த­ர­விட்­டது? தாக்­கு­தலின் பின்­ன­ணியில் விஷ­மிகள் உள்­ள­னரா? அல்­லது முதல்வர் ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ரான சக்­தி­களா? என்­பது போன்ற கேள்­விகள் மக்­க­ளிடம் எழுந்­துள்­ளன.

ஜல்­லிக்­கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமி­ழகம் முழுதும் 8 தினங்­க­ளுக்கு மேல் போராட்­டங்கள் இடம்­பெற்­றன. இந்தப் போராட்டம் சென்­னையில் மட்­டு­மன்றி வெளி மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாக இடம்­பெற்று, ஒரு மக்கள் போராட்­ட­மாக பரி­ண­மித்­தி­ருந்­தது. இதற்கு ஆத­ர­வாக உலக நாடு­களில் வாழும் தமிழ் மக்கள் அனை­வரும் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். இது தமி­ழர்­களின் எழுச்­சியை வெளிப்­ப­டுத்­திய ஒரு நிகழ்­வாக அமைந்­தது.

தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய விளை­யாட்­டான ஜல்­லிக்­கட்டை நடத்தக் கூடா­தென்று, இந்­திய உச்­ச­நீ­தி­மன்றம் விதித்­தி­ருந்த தடைக்கு எதி­ரா­கவும், தடையைக் கொண்­டு­வர வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்த 'பீட்டா' அமைப்பை தடை­செய்ய வேண்­டு­மென்றும் போராட்­டத்தில் ஈடு­பட்ட மாண­வர்­களும், இளை­ஞர்­களும் தெரி­வித்­தனர். மாண­வர்­களின் கோரிக்­கைக்கு சகல தரப்­பி­னரும் ஆத­ரவு வழங்­கினர்.

மத்­திய அரசும், மாநில அரசும் இதனை கண்­டு­கொள்­ளா­ம­லேயே இருந்­தன. போராட்டம் தீவி­ர­ம­டைந்­ததைத் தொடர்ந்து ஜல்­லிக்­கட்டை நடத்­து­வ­தற்கு 'அவ­சர சட்டம்' ஒன்றைக் கொண்டு வரு­வதன் மூலம் அதனை நடத்த முடி­யு­மெனக் கூறப்­பட்­டது. அதன்­படி பொங்கல் தினத்­தன்று ஜல்­லிக்­கட்டு நடத்­தப்­பட முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தமி­ழக முத­ல­மைச்சர் ஓ. பன்­னீர்­செல்வம் புது­டில்லி சென்று பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்துப் பேசினார். இதன் பின்­னரே அவ­சர சட்டம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான திட்டம் முன்­வைக்­கப்­பட்­டது. தமி­ழகம் திரும்­பிய முத­ல­மைச்சர் பன்­னீர்­செல்வம், சட்­டப்­பே­ர­வையைக் கூட்டி 'அவ­சர சட்டம்' கொண்டு வந்தார். அத்­துடன் அலங்­கா­நல்­லூரில் ஜல்­லிக்­கட்டை ஆரம்­பித்து வைக்­கவும் சென்றார்.

இத­னி­டையே கடந்த திங்­கட்­கி­ழமை 23ஆம் திகதி அதி­காலை, யாரும் எதிர்­பா­ராத நிலையில், திடீ­ரென மெரீனா கடற்­க­ரை­யி­லி­ருந்த மாண­வர்கள் , இளை­ஞர்கள், பொது­மக்கள் அனைவர் மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்டு, அவர்கள் அடித்துத் துரத்­தப்­பட்­டனர். பொலிஸார் அங்­கி­ருந்­த­வர்­களை வெ ளியேற்றினர். வெளி­யேற மறுத்­த­வர்­களை தூக்கிச் சென்று அப்­பு­றப்­ப­டுத்­தினர்.

'ஐஸ் ஹவுஸ்' பொலிஸ் நிலையம் மர்ம நபர்­களால் தீயி­டப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகரம் போர்க்­க­ள­மா­னது. பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு வீசியும், வானத்தை நோக்கி துப்­பாக்­கியால் சுட்டும், நீர்த் தாரைப்­பி­ர­யோகம் செய்தும் அங்­கி­ருந்­த­வர்­களைக் கலைத்­தனர்.

எனினும், பொலி­ஸாரே தம்மைத் தாக்­கி­ய­தாக மாண­வர்­களும், பொது மக்­களும் தெரி­வித்­த­னர். அது தொடர்­பான காணொ­ளிகள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாக வெளி­யா­கின. பெண் பொலிஸ் ஒருவர் வரி­சை­யாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு தீ வைக்கும் காணொளி மிகவும் பிர­ப­ல­மா­ன­தாகும். ஒரு ஆண் பொலிஸ் ஒருவர் முச்­சக்­கர வண்­டிக்குள் தீச்­சு­வா­லையைப் போடு­வதும் வெளி­யா­கின.

அது­மட்­டு­மன்றி மாண­வர்கள் கடு­மை­யாகத் தாக்­கப்­ப­டு­வதும், இழுத்துச் செல்­லப்­ப­டு­வ­து­மான பல புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பத்­தி­ரி­கை­க­ளிலும் வெளி­யாகி இருந்­தன. எனவே, பொலிஸார் தான் மாண­வர்கள் மற்றும் பொது­மக்கள் மீது தாக்­குதல் நடத்­தினர் என்று பல்­வேறு கட்­சி­களின் தலை­வர்­களும், முக்­கி­யஸ்­தர்­களும் குற்­றஞ்­சாட்­டினர்.

தவிர, பலர் கைது செய்­யப்­பட்­டனர். அத்­துடன் ஐஸ் ஹவுஸ், திரு­வல்­லிக்­கேணி, சிவ­ரா­ஜ­புரம், மாட்­டங்­குப்பம், நடுக்­குப்பம் பகுதி குடி­யி­ருப்­புக்­களில் பொலிஸார் இர­வோ­டி­ர­வாக தேடுதல் நடத்­தினர். இதனால், பலர் வீட்­டுக்குச் செல்­வ­தையே தவிர்த்­தனர். 23ஆம் திக­தி­யன்று பொலிஸார் தேடுதல் நடத்­தினர். ஜல்­லிக்­கட்டு ஆத­ரவு போராட்­டக்­கா­ரர்­களை கைது செய்­வதில் பொலிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டனர்.

இதே­வேளை, மாண­வர்கள் மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­ய­தாகக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்டை பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் நிரா­க­ரித்­தனர். எனினும், தாக்­குதல் நடத்­து­மா­று­ பொ­லி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டது யார்? என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­பட்­டது.

'யாரு­டைய ஏவு­தலின் பேரில் பொலிஸார் தாக்­குதல் நடத்­தினர்' என்று இந்­திய கம்­யூனிஸ்ட் கட்­சியின் தேசிய செய­லாளர் டி. ராஜா கேள்வி எழுப்­பி­ய­துடன், தமது கட்­சியின் சார்பில் கடு­மை­யான கண்­ட­னத்­தையும் தெரி­வித்­தி­ருந்தார். அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­களின் உத்­த­ர­வுக்­க­மை­யவே அமை­திப்­போ­ராட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது பொலிஸார் தடி­யடி நடத்­தி­யுள்­ளனர் என்று குறிப்­பிட்­டுள்ளார். அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் என்று டி.ராஜா குறிப்­பிட்­டி­ருப்­பது 'தமி­ழக அர­சையா? அல்­லது மத்­திய அர­சையா?' என்று கேள்வி எழுந்­துள்­ளது.

இதே­வேளை, பொது மக்­களை தாக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு யார் உத்­த­ர­விட்­டது? என்று முத­ல­மைச்சர் பன்­னீர்­செல்­வமும் கேள்வி எழுப்­பி­யுள்­ள­துடன், இது தொடர்பில் கடும் அதி­ருப்­தியில் இருப்­ப­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டது யார் என்று தலைமைச் செய­ல­கத்­தி­லுள்ள உயர் அதி­கா­ரி­க­ளிடம் கோபத்­துடன் முத­ல­மைச்சர் கேள்வி எழுப்­பி­ய­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

முத­ல­மைச்சர் ஓ. பன்­னீர்­செல்வம் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­ட­வில்­லை­யானால், வேறு யார் உத்­த­ர­விட்­டி­ருப்­பார்கள்? அவ்­வாறு உத்­த­ர­வி­டு­வ­தற்கு யாருக்கு அதி­காரம் இருக்­கி­றது? இது அனை­வ­ராலும் கேட்­கப்­படும் கேள்­வி­யாகும்.

ஜெய­ல­லிதாவின் மறைவின் பின்னர், மூன்­றா­வது முறை­யாக முத­ல­மைச்சர் பத­வியை ஏற்­றி­ருப்­பவர் ஓ.பன்­னீர்­செல்வம். இவர் முத­ல­மைச்சர் பதவி ஏற்­றதை அவ­ரது கட்­சி­யி­னரே (அ.தி.மு.க) விரும்­ப­வில்லை. அ.தி.மு.க. வின் பொதுச் செய­லா­ள­ராக பத­வி­யேற்­றுள்ள (ஜெய­ல­லி­தாவின் தோழி) சசி­கலா, அவ­ரது கணவர் நட­ராஜன், சொந்­தங்கள், அ.தி.மு.க. அரசின் அமைச்­சர்கள், நாடா­ளு­மன்ற துணை சபா­நா­யகர் தம்­பித்­துரை உள்­ளிட்ட பலர் பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.

          
முத­ல­மைச்சர் பத­வியைக் கைப்­பற்றும் முயற்­சி­யிலும் இவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதே­வேளை, மத்­திய பா.ஜ.க. அரசும், பிர­தமர் மோடியும் பன்­னீர்­செல்­வத்­துக்கு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்கி வரு­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே, பன்னீர் செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அகற்ற முடி­யா­த­தொரு நிலைமை காணப்­ப­டு­கி­றது. 

இந்த நிலையில், பன்­னீர்­செல்வம் தொடர்ந்தும் முத­ல­மைச்­ச­ராக இருப்­பதை விரும்­பாத, அதி­கா­ரத்­திற்கு ஆசைப்­படும் குழு­வினர் பன்­னீர்­செல்­வத்­துக்கு பல்­வேறு வழி­க­ளிலும் தொல்லை கொடுத்து வரு­கின்­றனர். அதில் ஒரு கட்­ட­மா­கவே ஜல்­லிக்­கட்டை அனு­ம­திக்­கு­மாறு அமை­திப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மீது தாக்­குதல் நடத்­து­மாறு மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்சி என கூறப்­ப­டு­கி­றது.

ஜல்­லிக்­கட்டு நடத்­து­வ­தற்­கு­ரிய அனு­ம­தியை பெற்­றுக்­கொ­டுத்­ததன் மூலம் மாண­வர்கள் மற்றும் பொது மக்­க­ளிடம் முத­ல­மைச்சர் பன்­னீர்­செல்­வத்­துக்கு ஓர­ளவு நல்ல பெயர் கிடைத்­தது. அது­மட்­டு­மன்றி தொடர்ச்­சி­யாக பல பிரச்­சி­னை­களை வெற்­றி­கண்டு, நல்ல பெயர் பெற்று வரு­வ­தற்கு பெரும் களங்­கத்தை, அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே திட்­ட­மிட்டு பொலி­ஸாரை ஏவி­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தெரிந்­து­கொண்ட பிறகே ஓ.பன்­னீர்­செல்வம் கடும் கோப­ம­டைந்­த­துடன் தலைமைச் செய­ல­கத்தில் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் இது­பற்றி வின­வி­ய­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

எனவே, மாண­வர்கள், பொது­மக்கள் மீது தாக்­குதல் நடத்­து­மாறு வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து உத்­த­ரவு போயி­ருக்க முடி­யாது. அ.தி.மு.க. தலைமை அல்­லது தமி­ழக அமைச்­சர்கள் உய­ர­தி­கா­ரிகள் போன்ற யாரி­ட­மா­வது இருந்து தான் 'தாக்­குதல்' உத்­த­ரவு போயி­ருக்­க­வேண்டும் என்­பது சொல்­லித்­தெ­ரி­ய­வேண்­டிய ஒன்­றாக இருக்­காது.

இந்தத் தாக்­குதல் மூலம் முத­ல­மைச்சர் பன்­னீர்­செல்­வத்­துக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற திட்டம் ஓர­ளவு வெற்­றி­பெற்­றுள்­ள­தா­கவே தெரிய வரு­கின்­றது. எனினும், அவ­ரது இக்­கட்­டான நிலையை புரிந்­து­கொண்­ட­வர்கள் அனு­தா­பப்­ப­டு­கின்­றனர்.

இதே­வேளை, தன்னை வீழ்த்­து­வ­தற்கு 'சொந்­தக்­கட்­சி­யி­னரே சூனியம் வைப்­ப­தாக' தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளிடம் சொல்லி முத­ல­மைச்சர் பன்­னீர்­செல்வம் வருத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக தகவல் ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது. 'எதிர்­கா­லத்தில் நான் முதல்வர் பத­வியில் நிலைத்­து­வி­டுவேன் என்ற பயத்தில், சொந்­தக்­கட்­சி­யி­னரே போராட்­டக்­க­ளத்தில் இருந்த மாண­வர்­க­ளையும் இளை­ஞர்­க­ளையும் தூண்­டி­விட்­டுள்­ள­தாக தக­வல்கள் வரு­கின்­றன. அதன் பின்­னணி குறித்தும் விசா­ரிக்க இர­க­சிய உத்­த­ர­விட்­டுள்ளேன். இருந்­தாலும் சொந்­தக்­கட்­சி­யி­னரே என்னை நிம்­ம­தி­யாக ஆட்­சி­செய்ய விடாமல், துரத்தித் துரத்தி துரோகம் செய்­வது மிகுந்த வலியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது' என்று அவர் கூறி­ய­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் போராட்டம் நடத்­திய மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று பல்­வேறு தரப்­பி­னரும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அத்­துடன் மனித உரி­மைகள் ஆணை­யகம் இந்தத் தாக்­குதல் தொடர்பில் பதில் அளிக்­க­வேண்­டு­மென்று தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. மெரீனா கடற்­க­ரையில் நடை­பெற்ற தாக்­குதல் தொடர்­பாக இரண்டு வாரத்தில் பதி­ல­ளிக்­கு­மாறு தமி­ழக தலைமைச் செய­லாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகி­யோ­ருக்கு தேசிய மனித உரிமை ஆணை­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக முழு­மை­யான விசா­ரணை ஒன்று பக்­கச்­சார்­பின்றி நடத்­தப்­பட்டால் உண்மை வெளி­வரும். தாக்­குதல் நடத்துவதற்கு பொலிஸாருக்கு யார் உத்தரவிட்டது? விஷமிகள் தாக்குதலை நடத்துவதற்கு ஏவிவிடப்பட்டனரா?அதன் பின்னணியில் யாருடைய சதி உள்ளது? போன்ற விபரங்கள் வெளிவரக்கூடும்.

முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் கூறியதுபோல் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தாக்குதலின் பின்னணியிலிருந்து செயல்பட்டிருப்பார்களேயானால், அது கட்சிக்கும் அவ்வாறான சதிகாரர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இந்தக் கலவரத்தின் பின்னணியில் சமூக விரோத குழுக்களின் செயற்பாடுகளும் இருந்ததாக கூறப்படுகின்றது. அந்தக் குழுக்களே ஐஸ் ஹவுஸ் பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்து பொலிஸாரை ஆத்திரமடையச் செய்ததாகவும் அதன் பின்னரே பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அவ்வாறு சமூக விரோதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அந்தக் குழுக்களின் நோக்கம் எதிர்ப்பார்ப்புக்கள் என்ன? அவற்றின் பின்னணியில் இருந்து செயற்படுத்தியவர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதியான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை ஒன்றின் மூலமே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது. எப்போதாவது வெளிவரும் வந்தே தீரும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-29#page-2

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.