Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்?

Featured Replies

தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்?

 

சென்னை: தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1703806

அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?

சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். இவர் 1976 ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானார். கடந்த 2012-ல் தமிழக அரசின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்விற்கு பிறகு 2014-ல் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் மார்ச் மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அவர் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1703647

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... தமிழக உயர் பதவிகளில், இருக்கும்... வேற்று மாநிலத்தவர், 
தாமாக விலக வேண்டும், அல்லது.... பின்தளம் மூலமாக.. விரட்டியடிக்கப் பட வேண்டும்.
இதற்கு...  திரு. நடராஜன் அவர்களின் பணி  பாராட்டுதலுக்கு உரியது.

  • தொடங்கியவர்
ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியது ஏன்
அரசு வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள்
 
 
 

தமிழக அரசை வழிநடத்தி செல்வதில், முக்கிய பங்கு வகித்த, அரசு ஆலோசகர், முதல்வர் அலுவலக செயலர்கள், திடீரென பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டது, அதிகாரிகள் தரப் பிலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, சசிகலாவுக்கும், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும் இடையிலான பனிப்போரே காரணம் என, கூறப்படுகிறது.

 

Tamil_News_large_170432920170204222418_318_219.jpg

தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், 2014 மார்ச், 31ல் பணி ஓய்வு பெற்றார். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவருக்கு, அரசு ஆலோசகர் பதவி வழங்கினார். ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்றவர் என்பதால், அரசில் செல்வாக்குடன் வலம் வந்தார்.

அரசு கோப்புகள்,அவரின் ஒப்புதலுக்கு பின் னரே, முதல்வர் கையெழுத்திற்கு சென்றன. அதே போல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கட ரமணன், 2012 ஏப்., 30ல் ஓய்வு பெற்றார். அவரும், முதல்வர் அலுவலகத்தில், செயலராக பணியாற்றி வந்தார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கமும், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் மூன்று பேரும், கடந்த ஆட்சியில் இருந்து, முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, முதல்வர் அலுவலக செயலராக இருந்த ராமமோகன ராவ், தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும், ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட ரமணன், ராமலிங்கம் ஆகியோர், அதே பணி யில் தொடர்ந்தனர். ஜெ., மறைவுக்கு பின்,

முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரது ஆலோசகராக ஷீலாவும், முதல்வரின் செயலர்களாக, வெங்கடரமணன், ராமலிங்கமும் தொடர்ந்தனர்.

இவர்களில், ஷீலா பதவிக்காலம், மார்ச் மாதம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் அவர், அரசு ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார்; வெங்கடரமணன், விடுப்பில் சென்றார்; ராமலிங்கம், முதல்வர் அலுவலக செயலர் பதவி யில் இருந்து விடுவிக்கப்பட்டார் என, தகவல் வெளி யானது.

அரசு தரப்பில்,அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை எனினும், அவை உண்மை என, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அரசில் செல்வாக்கு டன் வலம் வந்த மூன்று அதிகாரிகள், திடீரென பணியில் இருந்து விலகியது, அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 

அரசியல் பின்னணி


இவர்கள் விலக்கப்பட்டதற்கு, பல்வேறு காரணங் கள் கூறப்படுகின்றன. ஜெயலலிதாவிடம் பணி யாற்றிய ஷீலா, வெங்கடரமணன், ராமலிங்கம் ஆகி யோர், ஜெ., மறைவுக்கு பின், சசிகலாவின் விசுவாசி களாக மாறினர்.இவர்கள், தங்களுக்கு வேண்டியவர் களை மட்டுமே, மற்ற அரசு துறைகளின் செயலர் களாக நியமித்து வந்தனர். தலைமை செயலர் தேர்வும், இவர்கள் சிபாரிசாகவே இருந்து வந்தது.

தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமான வரித்துறை வழக்கில் சிக்கியதால், பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய தலைமை செயலராக, மத்திய அரசு ஆலோசனை யின்படி, பணிமூப்பு அடிப்படையில், கிரிஜா வைத்தியநாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்தார். இவர், ஓய்வுபெற்ற அதிகாரிகளான, ஷீலா மற்றும் வெங்கட ரமணன் ஆலோசனையை விரும்பவில்லை.

சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் பனிப்போர் ஏற்பட்டது. மத்திய அரசு ஆதரவு டன், பன்னீர் செல்வம் சுறுசுறுப்புடன் செயல் படத் துவங்கினார். அவர் என்ன செய்கிறார் என்பதை, சசிகலாவிற்கு விசுவாசம் காட்டிய அதிகாரிகள், அவருக்கு தெரியப் படுத்தி வந்தனர்.இதையறிந்த மத்திய அரசு,

அவர்களை பணியில் இருந்து நீக்க உத்தர விட்டது. இதை யறிந்த ஷீலா, தன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்; வெங்கடரமணன், நீண்ட விடுப்பில் சென்று விட்டார்; ராமலிங்கம் விடுவிக்கப்பட்டு உள்ளார். மேலும், இவர்கள் மீதும், வருமான வரித்துறை பார்வையை திருப்பி உள்ளது.

பதவியில் இருக்கும் போது, சோதனைகள் நடத்தினால், சிக்கல் வரக்கூடும் என்பதால், அவர்கள் பதவியை துறக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்களை விடுவித்து விட்டு, தங்களுக்கு வேண்டியவர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக, சசிகலா உத்தரவில் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றும், அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல்வர் அலுவலக செயலராக, புதிதாக யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதை பொறுத்தே, அரசு நிர்வாகத்தில் ஓங்க போவது, பன்னீர் செல்வம் ஆதிக்கமா, சசிகலா ஆதிக்கமா என்பது தெரிய வரும்.
 

உளவுத்துறை ஐ.ஜி.,யும் 'லீவு'


தமிழக காவல் துறையில், முக்கிய பதவியான உளவுத் துறை ஐ.ஜி., பொறுப்பில் இருப்பவர் சத்தியமூர்த்தி; அவரும் விடுப்பில் சென்றுள் ளார். இதுவும்அரசு வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704329

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - பரபர 'ஆர்டர்' ரெடி!

TN Government

பணி காலம் முடிந்தும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பதவிகளில் அமர்த்தி இருந்தது. அதைப் போன்று பதவியில் அம்ர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழக அரசில் வெவ்வேறு பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரையும் ஒரே உத்தரவின் மூலம் பதவி இழக்கச் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

இந்த விஷயம் தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் முதல்வரின் செயலாளர் வெங்கடரமணா, மக்கள் தொடர்புத் துறையின் செயலாளராக இருந்த எழில் போன்றவர்களும் இந்த திடீர் அறிவிப்புப் பற்றி முன்னரே தெரியவேதான், அவர்களாகவே தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சசிகலா வரும் 9-ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/79828-tn-governments-order-which-going-to-create-furore.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.