Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!!

Featured Replies

'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!!

சசிகலா

,தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களுக்கும் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையை ஊடகங்களும் இரண்டொரு நாள் விவாதத்துடன் முடித்துக் கொண்டன. தினசரி நாளிதழ்களும் அ.தி.மு.க புதிய பொதுச்செயலாளருக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கி விட்டன. ஊடக நிறுவனங்களின் அதிபர்களும், செய்தி ஆசிரியர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வி.கே.சசிகலாவைச் சந்தித்து தங்களின் மிகப்பெரும் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருப்பதாகக் கூறப்படும் மர்மம் விலகுவதற்குள், ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊடகங்களும், மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்துச் சொன்னவுடன், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு போன்ற செய்திகளை ஏறக்குறைய மறந்தே விட்டார்கள். ஊடகங்களை எந்தவொரு சாமான்ய மனிதனும் கேள்வி கேட்க முடியாது என்பதுடன், மக்களும் முந்தைய சம்பவங்களை மறந்தே விட்டார்கள் எனலாம்.அந்த அளவுக்கு தற்போதைய பரபரப்புச் செய்திகளில் ஊடகங்களும், மக்களும் மூழ்கி விட்டனர்.

சசிகலாஇந்த நிலையில்தான், பொதுச்செயலாளர் பொறுப்பை சூட்டோடு சூடாக ஏற்றுக் கொண்ட சசிகலா, அதற்கு அடுத்தக்கட்டமாக முதல்வர் பொறுப்பை ஏற்கும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என்று பரவலாக செய்திகள் வெளியான நிலையில், அது பல காரணங்களால் தள்ளிப்போனது. ஜனவரி 26-ம் தேதி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மெரினாவில் கொடியேற்றுவார் என்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட தகவல், அதுவரை சசிகலா முதல்வராக முடியாது என்பதை சூசகமாக உணர்த்தியது. இந்த நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தமிழகத்தின் முதல்வராக சசிகலா வரும் வாரத்தில், அதாவது பிப்ரவரி 9-ம் தேதிக்குள் பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே சசிகலா முதல்வர் பதவியேற்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்த மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, தற்போது இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டதோ என்ற கேள்வி, தமிழகத்தில் அரசியலை உற்றுநோக்குபவர்கள் இடையே எழுந்துள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் பிப்ரவரி 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக, புதிய முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கவிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, ஓரிரு நாளில் அதாவது வரும் 7-ம் தேதிவாக்கில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்துடன் தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் வரும் 8 அல்லது 9-ம் தேதி அன்று சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "கட்சித் தலைமையும், முதல்வரும் ஒரே நபராக இருந்தால்தான், ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வழிவகுக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாகத் தேர்வு செய்த பின்னர்தான், பொதுச் செயலாளர் முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பொதுச்செயலாளர் முதல்வர் பதவி ஏற்பதுதான் சரி" என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பட்டியலில் சசிகலாவும் இடம்பெறப் போவது அநேகமாக உறுதி செய்யப்பட்டு விட்டது என்றே தெரிகிறது.

http://www.vikatan.com/news/coverstory/79733-sasikala-should-have-been-made-cm-earlier-says-admk-officers.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.