Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

Featured Replies

900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
 
900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
 
அவனியாபுரம்:

சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு, மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக, தமிழக அரசு சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளில் நடைபெறுவது வழக்கம். அதன் பிறகே பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். தடை விலகிய பிறகு இந்த ஜல்லிக்கட்டை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும், அங்கு குவிந்து கடந்த 2 நாட்களாக பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போட்டி நாளான இன்று, இறுதிகட்ட மருத்துவ சோதனை திருப்பரங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையில் வீரர்களுக்கு நடத்தப்பட்டது. 1008 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றதில், 263 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டிக்கான சீருடையான மஞ்சள் கலர் பனியனும், பச்சை கலர் அரை டிராயரும் வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதே போல் காளைகளுக்கும் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்பட்டன. காளைகளின் கண்கள், பற்கள் சோதனை செய்யப்பட்டது. கால்நடை மருத்துவர் முத்துராம் தலைமையில் 80 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். கூர்மையான கொம்புகளை கொண்ட காளைகள், தனியே கொண்டு செல்லப்பட்டு அறம் மூலம் கொம்புகள் தேய்த்து விடப்பட்டன. தொடர்ந்து 916 காளைகள் தகுதி பெற்று டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும், ஒதுக்கப்பட்ட எண் வரிசைப்படி, வாடிவாசல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஜல்லிக்கட்டு திடலில் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாதுகாப்பிற்காக சுமார் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார்கள் பரப்பப்பட்டு உள்ளது.
 
இதே போல் பார்வையாளர்கள் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒத்துழைப்புதர அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் அவர் விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை திருப்பிச் சொல்லி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.

அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

வாடிவாசல் வழியாக வரும் சில காளைகள், களத்தில் நின்று அங்கும், இங்கும் திரும்பி வீரர்களை விரட்டவும் செய்கிறது.

போட்டியை முன்னிட்டு, அவனியாபுரம் பகுதியில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 20 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05100417/1066379/Jallikattu-festival-in-avaniyapuram.vpf

  • தொடங்கியவர்

மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா: அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்; பொதுமக்கள், மாணவர்கள் உற்சாகம்

 

 
அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 
 

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. அவனியாபுரத்தில் லட்சக்கணக்கானோர் மத்தியில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளையை காளையர்கள் அடக்கிப் பரிசுகளைக் குவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போதிலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் துள்ளி குதிப்பதையும், காளைகளை காளையர்கள் அடங்கி பரிசுகள் வெல்வதையும் பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவசர சட்டம் நிறைவேற்றிய போதிலும் அதை ஏற்காமல் நிரந்தர சட்டம் கோரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தால் மத்திய அரசின் ஒப்புதலின் பேரில் தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகள் நடத்தப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

avaniyapuram2_3128346a.jpg

அவனியாபுரம் மந்தையம்மன் கிராம கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அய்யனார் கோவிலில் சம்பிரதாய முறைப்படி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வாடிவசால் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 919 காளைகளும், 717 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கியதில் இருந்து வாடிவாசல் வழியாக துள்ளி குதித்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி பரிசு பெற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மொபட், சைக்கிள், மிக்ஸி, எரிவாயு அடுப்பு, அண்டா, வெள்ளி நாணயம், வெள்ளி குத்து விளக்கு, பித்தளை குத்து விளக்கு, டிராவல் பேக், பேன்ட், சர்ட், வேஷ்டி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

2 ஆண்டுக்கு பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அதை காண லட்சக்கணக்கானோர் கூடினர். பார்வையாளர்கள் காலரியில் இருந்தும், வீடுகளின் மேல் பகுதிகளில் இருந்தும் மக்கள் ஜல்லி்க்கட்டை ரசித்தனர்.

மாவட்ட ஆட்சியர் வீரராகராவ், மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார்யாதவ், மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி, விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டை ஒருங்கிணைத்தனர். 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 6 எல்.இ.டி., ஸ்கிரீன் மூலம் ஜல்லிக்கட்டு ஒளிபரப்பப்பட்டது.

காளைகள் நிற்கும் பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு, 13 மொபைல் மெடிக்கல் யூனிட்கள், கால்நடைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

பாலமேட்டில் பிப்ரவரி 5-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 10-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/மதுரையில்-தொடங்கியது-ஜல்லிக்கட்டு-திருவிழா-அவனியாபுரத்தில்-சீறிப்பாய்ந்த-காளைகளை-அடக்கிய-காளையர்கள்-பொதுமக்கள்-மாணவர்கள்-உற்சாகம்/article9522565.ece?homepage=true

  • தொடங்கியவர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 60 பேர் காயம்

 

அவனியாபுரம் : மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கி நடந்து வருகிறது. அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்றைய போட்டியில் 60 பேர் காயமுற்றுள்ளனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தமிழக மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 916 மாடுகள் களமிறங்க உள்ளன. 721 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க உள்ளனர். 4 கோயில் மாடுகளை தொடர்ந்து, வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் ஜல்லிக்கட்டு என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்துள்ளனர். மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு மிக்சி, குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

gallerye_095207915_1704788.jpg
next.png

 

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704788

  • கருத்துக்கள உறவுகள்

காளைகளுக்கு வாழ்த்துக்கள் ....!  

  • தொடங்கியவர்

அவனியாபுரத்தில் பரிசுகளை அள்ளிய அலங்காநல்லூர் வீரர்

 

 
 
avaniyapuram1_3128907f.jpg
 
 
 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ஒருவர் பல காளை களை அடக்கி பரிசுகளை குவித்தார்.

அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 919 காளைகளும், 936 காளையர்களும் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள் 150 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு வாடிவாசலில் இருந்து வெளியேறிய மாடுகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட் டனர்.

காளைகளின் திமில்களைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளை களுக்காக, அதன் உரிமையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அலங்காநல்லூரைச் சேர்ந்த எஸ்.குமரேசன் (23) அதிக பரிசுகளை பெற்றார். இவர் தனியாக நான்கு காளைகளை அடக்கி 2 அண்டா, மின்விசிறி, மிக்சி போன்ற பரிசுகளை பெற்றார். மேலும் சில காளைகளையும் குமரேசன் அடக்கினார். ஆனால் அவற்றை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அடக்கியதாகக் கூறி பரிசு மறுக்கப்பட்டது.

avani_3_3128908a.jpg

இது தொடர்பாக குமரேசன் கூறியதாவது:

எங்கள் ஊரான அலங்கா நல்லூரில் நடை பெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. எங்கள் வீட்டில் காளைகள் வளர்க்காதபோதிலும் இயற்கையாகவே காளைகள் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது.

கயிற்றை கட்டி காளையை சுற்றவிட்டும், தற்காலிக வாடிவாசல் ஏற்படுத்தி அதன் வழியாக மாடுகளை விட்டும் காளைகளை அடக்க பயிற்சி பெற்றேன். எனது சகோதரர் சிறந்த மாடுபிடி வீரர். அவர் எனக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சிகளை பெற்று கடந்த 6 ஆண்டுகளாக மாடுபிடி வீரராக உள்ளேன்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகள், சிவகங்கை, பொன்னமராவதியில் மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று காளைகளை அடக்கியுள்ளேன். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறை. இதுவரை பெரியளவில் காயமடைந்தது இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் வேதனையுடன் இருந்தோம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் அதிக பரிசுகளை குவிக்க காத்திருக்கிறேன் என்றார்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினருக்கு மரியாதை

ஜல்லிக்கட்டு நடத்த உறுதுணையாக இருந்த மாணவர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு அவனியாபுரம் விழாக் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மதுரை, சென்னை, திருச்சி, கோவை உட்பட மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் அரசு ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றியது.

avaniyapuram_2_3128910a.jpg

எனவே ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்களின் பிரதிநிதிகளான மெரினாவில் போராடிய லெனின், அவனியாபுரத்தில் போராடிய உமாசங்கர் உள்ளிட்ட மாணவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது.

அதேபோல ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து குரல் எழுப்பிய திரைப்பட இயக்குநர்கள் அமீர், வ.கவுதமன், வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ராஜேஷ், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அவனியாபுரம் நாட்டாண்மை, கணக்குப்பிள்ளை உட்பட 4 பேரின் காளைகள் சுவாமி காளைகளாகக் கருதி வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு காளைகளிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/அவனியாபுரத்தில்-பரிசுகளை-அள்ளிய-அலங்காநல்லூர்-வீரர்/article9523847.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.