Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்போலோவில் நடராஜன் அட்மிட் ஏன்? கே.பி.முனுசாமி பகீர் தகவல்

Featured Replies

அப்போலோவில் நடராஜன் அட்மிட் ஏன்? கே.பி.முனுசாமி பகீர் தகவல்

K.P.Munusamy

உளவு பார்க்கவே அப்போலோ மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, 'ஜெயலலிதா மறைந்து 60 நாட்களில் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கு சசிகலா வந்திருப்பதில் சதி இருக்கிறது. முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம். ஜெயலலிதாவுக்காக வாழ்வது உண்மை என்றால் முதலமைச்சர் பதவியை சசிகலா ஏற்கக் கூடாது.

நடராஜன் உடல்நிலை சரியில்லை என்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் உளவு பார்க்கவே என்று பகீர் தகவலை வெளியிட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/79924-why-natarajan-admitted-in-apollo---munusamy.art

1 hour ago, நவீனன் said:

நடராஜன் உடல்நிலை சரியில்லை என்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் உளவு பார்க்கவே என்று பகீர் தகவலை வெளியிட்டார்.

1j2kjl.jpg

  • தொடங்கியவர்

நடராஜனுக்கு அப்போலோவில் என்ன சிகிச்சை நடக்கிறது? #OPSVsSasikala

நடராஜன்

எம். நடராஜன், இப்போதெல்லாம் தமது அரணைப்பில் வைத்திருப்பது ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கை! ஜெயலலிதா இறுதி சடங்கு நடந்தபோது, தீபக்கை நடராஜன்தான் அழைத்துவந்தார். நடராஜனின் அணுகுமுறை தீபக்கிற்கு பிடித்திருந்தது. இந்த நிலையில், தஞ்சாவூரில் நடந்த விழாவில் எம்.என். நடராஜன் வெளிப்படையாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று பாராட்டினார். பி.ஜே.பி-தான் அ.தி.மு.க-வில் குழப்பம் செய்கிறது என்று பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டிப் பேசினார். சில நாட்களுக்குப் பிறகு, புதுக்கோட்டையில் பிரஸ் மீட் நடத்தினார் நடராஜன். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, மூன்று கேள்விகளை நீங்கள் தவிர்க்கவேண்டும். 1. பிரதமர் மோடி. 2. மத்திய அரசு. 3. பி.ஜே.பி என்று சிரித்தபடி சொல்ல நிருபர்களும் தலையை ஆட்டினர். நிருபர்களின் மற்ற கேள்விகளுக்குத் தயக்கமில்லாமல் பதில் அளித்தார். பிப்ரவரி 3-ம் தேதியன்று அண்ணா நினைவு நாளில் அவரின் சமாதிக்கு போய் மலர் வளையம் வைத்து வணங்கினார். அந்த சமயத்தில் காய்ச்சல், தொண்டைவலி  என்று அவதிப்பட்டு வந்தார்.

பிப்ரவரி 5-ம் தேதியன்று அ.தி.மு-வில் அதிரடி மாற்றங்கள். சசிகலாவை அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட செய்தியை போயஸ்கார்டனில் இருந்த உறவினர் ஒருவர் நடராஜனுக்கு போன் மூலம் தெரிவித்தாராம். அடுத்து, சசிகலா விரைவில் முதல்வர்  பதவியை ஏற்க உள்ள தகவலையும் சொன்னார்களாம். இதையெல்லாம் கேட்டவுடன், நடராஜன் முகத்தில் ஏக சந்தோஷம். 'அப்படியா...' என்று பேசிக்கொண்டிருந்தவருக்கு வியர்த்துக்கொட்டியதாம். உடனே, பரிசோதனைக்காக அப்போலோ சென்றார். அவரது உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனே அட்மிட் ஆகும்படி கூறிவிட்டார்கள். நடராஜன் அட்மிட் ஆகிவிட்டார். அவர் சிகிச்சை பெறும் அறையின் உள்ளே  எப்போது வேண்டுமானாலும் சென்று வர 'பாஸ்' வைத்திருக்கும் ஒரே நபர் - தீபக்தான். நடராஜனும் அவ்வப்போது தீபக் எங்கே? என்று கேட்டு வருகிறார்.

அப்போலோ வட்டாரத்தில் நடராஜன் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, '' பொதுவாக கல்லீரலில்  பிரச்னை வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வைரஸ் பாதிப்பு, தொற்று நோய் காரணமாகக் கூட பாதிப்பு வரலாம். அதுமாதிரிதான், நடராஜனின் கல்லீரலில் சிறு பிரச்னை. அதேபோல், கழுத்து வழியாக மூளைக்கு செல்லும் ரத்த நாளம் ஒன்றிலும்  சிறு பிரச்னை. அதனால், மூளைக்கு செல்லும் ரத்தம் மெதுவாகச் செல்கிறது. அதற்கும் சிகிச்சை தருகிறோம். அநேகமாக, 'ஸ்டண்ட்' வைக்கவேண்டிவரும். முதலில், கல்லீரல் பாதிப்பை சரிசெய்துவிட்டுத்தான், அடுத்து நரம்பியல் பிரச்னையைத் தொட வேண்டும். அந்த வகையில், கல்லீரல் பாதிப்புக்கு பிரபல வயிறு மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் பழனிச்சாமி சிகிச்சை அளித்து  வருகிறார். ரத்த நாள கோளாறை சரிசெய்யும் சிகிச்சையைப் பிரபல நரம்பியல் நிபுணர் மீனாட்சிசுந்தரம் கவனிக்கிறார். இவைகளுக்கான சிகிச்சை முடிந்ததும், நலமுடம் நடராஜன் திரும்பி வருவார்" என்கிறார்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நடராஜனை அவரது உறவினர்கள் உடன் இருந்து கவனித்துவருகிறார்கள். சசிகலாவின் அண்ணன் மருமகனும், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டருமான சிவக்குமார் அடிக்கடிப் போய் சிகிச்சை பற்றி கேட்டறிந்து வருகிறார். 

எல்லாம் சரி...! கணவரை பார்க்க சசி வருவாரா?

http://www.vikatan.com/news/tamilnadu/80142-this-is-the-treatment-given-to-natarajan-at-apollo.art

  • தொடங்கியவர்

சசிகலாவுக்காக களமிறங்க டிஸ்சார்ஜ் ஆகிறார் நடராசன்! #OPSVsSasikala

நடராஜன்

ப்போலோ மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சசிகலாவின் கணவர் ம.நடராசன் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.

சசிகலாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அப்போது பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்தார் ம. நடராசன். கார்டனில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், “சசிகலா நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்” என்று சொன்னதும், அதைக்கேட்டு நடராசன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். 'நீண்ட நாள் கனவு நிறைவேறியதுபோல அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பளிச்சிட்டுள்ளதாம். அதீத சந்தோஷம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயக்க நிலையை அடைந்துள்ளார் நடராசன். அவரை அவசரமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். 

நடராசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைக்குச் செல்லும் இரத்தநாளம் ஒன்றில் சிறு அடைப்பு இருப்பதாகவும் அதை சரி செய்ய 'ஸ்டன்ட்' பொருத்தவேண்டும் என்றார்கள். இது தொடர்பான சிகிச்சையை நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம் கவனித்து வந்தார். நடராசனுக்கு கல்லீரலில் சிறு பிரச்னை இருந்துள்ளது. இது  தொடர்பான சிகிச்சையை வயிறு மற்றும் இரைப்பை நிபுணர் பழனிச்சாமி கவனித்துவந்தார். இந்த நிலையில்தான்  செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் பன்னீரசெல்வம் சசிகலாவுக்கு  எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றார்கள். ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற பரபரப்பு இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், நடராசன் இல்லாதது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நடராசன் “எனக்கு இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருக்க முடியாது. அதனால் இப்போது மருந்து மாத்திரைகள் மட்டும் போதும். என்னை சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்யுங்கள்” என்று இரண்டு தினங்களாக தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். 

நடராசனின் இந்தத் தொடர் வற்புறுத்தலால் மருந்துகள் மூலம் உடல்நிலையை மருத்துவர்கள் கொஞ்சம் சீராக்கியுள்ளார்கள். மருந்துகள் மூலமே இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்துள்ளார்கள் மருத்துவர்கள். உடல்நிலை கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளதால் இன்று மதியம் ராகு காலம் கழித்தவுடன்  நல்ல நேரத்தில் மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளார்கள். அப்போலோ மருத்துவமனை வட்டாரமும் இதை உறுதி செய்துள்ளது. தமி்ழக  அரசியல் குழப்பமான சூழ்நிலையில் இருந்துவரும் நேரத்தில் இவர் டிஸ்சார்ஜ் ஆவது அரசியல் நோக்கர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது

http://www.vikatan.com/news/tamilnadu/80360-natarajan-likely-to-be-discharged-from-hospital-soon-opsvssasikala.html

  • தொடங்கியவர்
 
 
நடராஜன் அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
14:06
 
Tamil_News_large_1708814_318_219.jpg
 

சென்னை: உயர் ரத்த அழுத்தம், கை நடுக்கம் ஆகியவற்றுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த எம்.நடராஜன் (சசிகலா கணவர்) நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த பிப்., 5ம் தேதி நடராஜனுக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. கைநடுக்கமும் உண்டானது. இதையடுத்து அவரது குடும்ப டாக்டர் பிரம்மானந்தம் அப்பல்லோ கொண்டு வந்து சேர்த்தார். ஜெயலலிதா போன்ற வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்படும் 'எல்' வார்டில் அனுமதிட்டார். அவருக்கு டாக்டர்கள் கே.ஆர்.பழனிச்சாமி, சத்தியமூர்த்தி, ஆகிய இருதய நோய் நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்தது.
325 ஸ்லைஸ் சி டி ஸ்கேன்: நடராஜனுக்கு இசிஜி, எக்கோ, எம் .ஆர். ஐ. மற்றும் 325 ஸ்லைஸ் சி டி ஸ்கேன் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன. கைநடுக்கம் இருந்ததால், அவருக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிகிச்சை அளித்தார். அவருடன் நடராஜனின் மூத்த சகோதரர் ராமச்சந்திரன், டாக்டருமான அவரது மூத்த சகோதரரின் மகன் ஆகியோர் உடனிருந்தனர். அவ்வப்போது, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், தினகரன் ஆகியோர் அவரை பார்த்து சென்றனர். தற்போது உடல்நலம் தேறியதையடுத்து நேற்று இரவு 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடராஜன், அனுமதிக்கப்பட்ட மறுநாள் தான் ஜெயலலிதா மரணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் அப்பல்லோ டாக்டர்கள் விளக்கமளித்தனர். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு தான் நடராஜன் அப்பல்லோவில் சேர்ந்தார் என்று கூட பேசப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708814

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.