Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி!

Featured Replies

இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி!

-விதுரன்-

புதிதாக வந்துள்ள அதி நவீன ஆயுதங்களுடன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு அரசு திட்டம்

நாட்டில் ஸ்திரமற்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் போரில் அரசு குதித்துள்ள நிலையில் பெரும் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கட்சிகளைப் பிரித்து ஆட்களை இழுத்து அரசைப் பலப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயல்கையில் அவரது கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது.

இந்த அரசு மிகவும் ஸ்திரமாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடிருந்தாலும் இது உண்மையிலேயே ஸ்திரமற்றதொரு அரசாகவேயுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் பிளவுபடுத்தி அமைச்சுப் பதவி ஆசை காட்டி ஆட்களைத் தன்வசப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை ஜனாதிபதி மகிந்த உருவாக்க முயல்கிறார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுண்டு மிகவும் பலவீனமானதொரு கட்சியாகிவிட்டதால் அடுத்த பிரதான எதிர்க்கட்சிஇ ஐ.தே.கட்சியா அல்லது ஜே.வி.பி.யா என்றதொரு கேள்வி எழும்நிலை உருவாகியுள்ளது. அத்துடன்இ இனியிருக்கப்போவது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஐ.தே.க.வை பிளவுபடுத்திய ஜனாதிபதி மகிந்த அதிலிருந்து மிகவும் முக்கியமான் 19 பேரை தன்வசப்படுத்தி அதில் 18 பேருக்கு நல்ல அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் மூலம் அவர்களைத் தொடர்ந்தும் தனது அரசில் தக்க வைத்துக்கொள்வார்.

அதேநேரம்இ ஐ.தே.க. விலிருந்து இவ்வளவு பேர் பிரிந்து சென்றமை அக்கட்சியின் எதிர்காலத்தையும் அக்கட்சி கட்டி வளர்த்து வந்த பாரம்பரியத்தையும் கேள்விக் குறியாக்கியதுடன் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கிருந்த செல்வாக்கிலும் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியென்ற அந்தஸ்தை ஐ.தே.க. இழந்துவிடுமோ என்ற அச்சம் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால்இ அக்கட்சியின் தலைவரோஇ தனது தலைமைத்துவத்திற்கு ஏற்பட்ட போட்டியும் அச்சுறுத்தலும் நீங்கிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். கட்சிக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது குறித்து ரணில் விக்கிரமசிங்க சற்றும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

ஜே.வி.பி.யின் பூரண ஆதரவுடனும் அவர்களது முழு முயற்சியாலுமே மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். எனினும்இ மகிந்த ஜனாதிபதியானது முதல் அவர் மீது தனது செல்வாக்கை செலுத்த ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது.

ஒரு கட்டத்தில்இ இந்த அரசு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசா அல்லது ஜே.வி.பி. தான் ஆட்சி செய்கிறதா என்ற கேள்வி எழுமளவிற்கு நிலைமையிருந்தது.

இந்த நிலையிலிருந்து மகிந்தவை மீட்க அவரது சகோதரர்களும் மகிந்தவின் ஆலோசகர்களும் தீவிரமாக முயன்றனர். இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவ போட்டியும் பதவி ஆசையும் தலைதூக்கவே அதனை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகைளப் பிளவுபடுத்தி அவற்றிலிருந்து எம்.பி.க்களை இழுத்து அரசை பலப்படுத்த மகிந்தவின் ஆலோசகர்கள் திட்டமிட்டனர்.

இதேநேரம்இ ஜே.வி.பி.யின் கடும் நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் அவர்களது பிடியிலிருந்து வெளியேறி அவர்கள் எதிர்த்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாதளவுக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுவிட வேண்டுமென மகிந்த திட்டமிட்டார்.

ஜே.வி.பி.யின் பிடியிலிருந்து வெளியேறவும் ஏனைய கட்சிகளை பிளவுபடுத்தி எம்.பி.க்களை தன்வசப்படுத்தவும் ஜனாதிபதி மகிந்தஇ ஹதேர்தல்' என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தினார். புதிய தேர்தலென்றால் தனித்தே போட்டியிட வேண்டும் அதன்போதுஇ கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து பெற்ற 38 ஆசனங்களில் மூன்றில் இரண்டு நிச்சயம் பறிபோய்விடுமென்பதை உணர்ந்த ஜே.வி.பி. தேர்தலை சந்திக்க பயந்தது.

தேர்தல் நடைபெறும்இ தேர்தல் நடைபெறப் போகிறதென மிரட்டி மிரட்டியே ஜனாபதி ஜே.வி.பி.யை ஓரங்கட்டினார். அதேநேரம்இ ஜே.வி.பி.யின் ஆதரவில்லாமல் இந்த அரசை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யை விட ஏனைய எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி மகிந்த பிளவுபடுத்தினார். மீண்டுமொரு தேர்தலென்றால் எம்.பி. பதவி கிடைப்பதே சந்தேகமென்ற நிலையிலிருந்த பலரும்இ புதியதொரு தேர்தலை சந்திப்பதை விட அரசுடன்இ இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசையும் ஸ்திரப்படுத்தி தங்களையும் வளப்படுத்த விரும்பினர்.

ஒருபுறம்இ தனது ஹமகிந்த சிந்தனை'யில் இல்லாத யுத்தத்தை நடத்திக் கொண்டு மறுபுறம் தனது அரசை ஸ்திரப்படுத்தும் தீவிர முயற்சியிலும் ஜனாதிபதி இறங்கினார்.

கிழக்கில் அடுத்தடுத்து படையினருக்கு கிடைத்த சில வெற்றிகள் மூலம்இ புலிகள் வெல்லப்பட முடியாதவர்களென்ற மாயையைத் தகர்த்துஇ அவர்கள் தோற்கடிக்கப்படக் கூடியவர்களென்பதை முழு உலகுக்கும் காட்டுவோமென ஜனாதிபதியும் அவரைச் சார்ந்தவர்களும் முழங்கினர்.

ஜனாதிபதி மகிந்தவை தங்கள் கைப்பொம்மையாக்கி தங்கள் சிந்தனையையே மகிந்த சிந்தனையாக்கிய ஜே.வி.பிஇ ஆரம்பத்தில் படையினர் பெற்ற வெற்றிகளையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பறைசாற்றியது. நாட்டை ஜே.வி.பி. யினர் முழு அளவிலான யுத்த நிலைக்கு இட்டுச் செல்லவும் விரும்பினர்.

வடக்கு - கிழக்கில் ஒவ்வொரு தடவையும் ஷெல் வெடித்த போதெல்லாம் புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் கிழக்கிலிருந்தும் பின்னர் வடக்கிலிருந்தும் புலிகளை விரட்டி விடுவோமெனஇ ஜே.வி.பி. போர்ப் பிரகடனம் செய்தது. கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு கிடைத்த வெற்றிபோல் கொண்டாடவும் ஜே.வி.பி. முற்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி எம்.பி.க்களை ஒவ்வொருவராக மகிந்த தன் வசப்படுத்திக் கொண்டிருந்தார். இது ஜே.வி.பி.க்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கவே ஜே.வி.பி.க்கும் மகிந்தவுக்கு மிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

வேறு கட்சிகளிலிருந்து எம்.பி.க்களை உள்ளெடுத்து அரசை ஸ்திரப்படுத்துவதன் மூலம் தங்களை வெட்டிவிட மகிந்த தீர்மானித்துவிட்டதை ஜே.வி.பி. உணர்ந்த போதுஇதொழிற்சங்க போராட்டங்களை தீவிரப்படுத்தி நாட்டில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த ஜே.வி.பி. முற்பட்டபோதுஇ ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ அவற்றையெல்லாம் வெட்டி ஆடினார்.

தனது மிரட்டல்கள் பலனளிக்கவில்லை என்பதை ஜே.வி.பி. உணரத் தொடங்கியது. ஆட்சியை கவிழ்த்து விடுவோமென மிரட்டத் தொடங்கியது. ஆனால்இ அதற்கு ஜனாதிபதி மசியவில்லை. ஆதரவை விலக்கினால் உடனடித் தேர்தலென அறிவித்து வந்தார்.

அதேநேரம்இ ஐ.தே.கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் தீவிரப்படுத்தியபோது ஐ.தே.க.வுக்குள் பெரும் பிளவு தோன்றும் நிலை உருவானது. புதிய தேர்தலொன்றுக்குச் செல்லாமலும்இ ஜே.வி.பி.யின்இ ஆதரவு இல்லாமலும் மகிந்தவின் அரசை பலப்படுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் போட்டி போட்டனர்.

தனது கட்சி பிளவுபடுவதை தடுக்கவும் அமைச்சுப் பதவிக்கு அலைபவர்களை கட்டுப்படுத்தவும் அவசர அவசரமாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டார். இதன் மூலம் கட்சி பிளவுபடுவதை தடுத்துவிட்டதாக நம்பிய ரணில் பின்னர் ஏமாந்தார். ரணிலின் ராஜதந்திரம் இதிலும் தோல்வியடைந்தது.

ஒருபுறம் எதிர்க்கட்சிகளெல்லாம் பதவி ஆசையில் அலரி மாளிகை முன்பாக வரிசையில் நின்றதால் மறுபுறம் தேர்தலை அவற்றால் ஒருபோதும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடித் தேர்தலொன்று வந்தால் இந்தக் கட்சிகள் (ஜே.வி.பி.இ ஐ.தே.க. உட்பட) படுதோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளதை நன்குணர்ந்த ஜே.வி.பி. தனது மிரட்டல்களை கைவிடத் தொடங்கியது.

கிழக்கில் படையினர் பெற்ற வெற்றிகளும் ஜனாதிபதிக்கு மிகவும் சாதகமாயிருப்பதை ஜே.வி.பி. நன்குணர்ந்ததால்இ தேர்தலின் போது அதனை அவர் தனது பிரசாரத்திற்கு நன்கு வாய்ப்பாக்கி கொண்டு விடுவாரென்பதும் ஜே.வி.பி.க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

வடக்கு - கிழக்கில் படையினர் பெரும் தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே மகிந்தவுக்கு எதிராக பிரசாரங்களை முடுக்கி விடலாமெனவும் இல்லையேல் கிழக்கில் பெற்ற வெற்றிகள் அவருக்கே மிகவும் வாய்ப்பாகி விடுமென்பதையும் ஜே.வி.பி. உணர்ந்தது.

இதனால்தான்இ இராணுவம் வாகரை முதல் வெருகல் வரையான பகுதிகளை கைப்பற்றிய போது ஜே.வி.பி. எதுவும் கூறவில்லை. இராணுவம் பெற்ற வெற்றியை வானளாவப் புகழ்ந்து பாராட்டினால் அது ஜனாதிபதி மகிந்தவை பாராட்டுவதாகிவிடுமென்பதால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.