Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive

Featured Replies

'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  #VikatanExclusive

கோல்டன் பீச் ரிசார்ட்

மிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு கொடுத்ததை கார்டன் நிர்வாகிகளால் நம்ப முடியவில்லை. தமிழக அரசியல் சூழல் குறித்து, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். கட்சி அதிகாரமும் கையைவிட்டுப் போகும் பதற்றத்தில் இருக்கும் மன்னார்குடி உறவுகள், எம்.எல்.ஏக்களை குளிர்விக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘கோல்டன் பே பீச் ரிசாட்டில்’ நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். "கோல்டன் பே ரிசார்ட் அமைந்துள்ள கூவத்தூரைச் சுற்றிலும், வயல் வெளிகளுக்கு வேலைக்குப் போகும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிக்குச் செல்லும் மக்களை மன்னார்குடி முகாம் நியமித்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கூவத்துரைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த 1 கிலோமீட்டர் எல்லைக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்களையும் அச்சுறுத்துகின்றனர். 150 குண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டள்ளனர். பேன்ட், சட்டை அணிந்து நவநாகரிமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளே அவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரிசாட்டில் தமிழ்நாடு பதிவுள்ள வண்டிகளைக் காண முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரள பதிவெண் வண்டிகள்தான் அதிகளவில் சென்று வருகின்றன" என விவரித்த, கூவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர், 

அமைச்சர் விஜயபாஸ்கர்"எம்.எல்.ஏக்களின் சத்தமும் ஆட்டம் பாட்டமும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் நேற்று திரண்டு போய், மன்னார்குடி முகாம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். ' நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்க கட்சி விவகாரம். எங்களை ஏன் டார்ச்சர் பண்றீங்க?' எனச் சத்தம் போட்டுள்ளனர். ' இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் கிளம்பிவிடுவார்கள்' என சமாதானப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஆளுநரை சசிகலா சந்தித்த பிறகும், எம்.எல்.ஏக்கள் கிளம்பவில்லை. மூன்று நாட்களாக ரிசார்ட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 25 பேர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களாம். தலைமைச் செயலகத்திலும் அவரோடு நெருக்கத்தைக் காட்டி வந்தவர்கள். இவர்களை மட்டும் தனியாகப் பிரித்து, பல மணி நேரம் வகுப்பு எடுத்துள்ளனர்.

நடிகர் கருணாஸ்'நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், ஆட்சி கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சின்னம்மாவைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் போட்டியிட்டாலும், வெற்றி பெற வாய்ப்பில்லை. இப்படியொரு நிலைமைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்' என அன்பான குரலில் அதட்டியுள்ளனர். இதை ஏற்காத சில எம்.எல்.ஏக்கள், 'எங்களை ஏன் அடைச்சு வச்சு அடிமை மாதிரி நடத்தறீங்க. ஆஸ்பத்திரியைவிட மோசமா இருக்கு. யார்கிட்டயும் பேச முடியல. வெளியில என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கதறியுள்ளனர். 'நிலைமை சுமூகமாகற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்' என மிரட்டியுள்ளனர் மன்னார்குடி கோஷ்டியினர். ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் அடிக்கடி வெளியில் போய் வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கிறது" என விவரித்து முடித்தார். 

"நேற்று எம்.எல்.ஏக்களில் சிலர் அதீத உற்சாகத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் தவறி விழுந்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய், நடிகர் கருணாஸ் தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். அவரோடு சில எம்.எல்.ஏக்களும் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமான நீச்சல் குளத்து தண்ணீரை அவர்கள் குடித்துவிட்டனர். விடிந்தும் பல எம்.எல்.ஏக்களுக்கு உற்சாகம் குறையவில்லை. நேற்று இரவே ஊருக்குக் கிளம்பும் மனநிலையில் பல எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், சுமூக சூழ்நிலை திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், அவர்களில் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு நண்பர் ஒருவருக்குப் போன் செய்த எம்.எல்.ஏ, 'மிக சந்தோஷமாக இருக்கிறோம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோதே கதறி அழுதிருக்கிறார். மன்னார்குடி டீம் இங்கிருந்து செல்லும் வரையில் கூவத்தூர் மக்களுக்கும் விடுதலை இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80341-the-situation-is-worse-than-hospitals-say-suffering-admk-mlas.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'ஜில்...ஜில்...' நடனத்துடன் எம்.எல்.ஏ.,க்களுக்கு தடபுடல்

 

சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, சசிகலா தரப்பினர், அழகிகளின் நடனத்துடன், விதவிதமான விருந்து அளித்து, உற்சாகப்படுத்தி வருகின்றனர். அத்துடன், ஒவ்வொருக்கும், தலா, 10 கோடி ரூபாய் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

தக்க வைக்க...


அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம், கடும் எதிர்ப்பு உள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல், பண பலத்தை பயன்படுத்தி, முதல்வராகி விட அவர் துடித்து வருகிறார். எளிதாக முதல்வராக நினைத்த சசிகலாவுக்கு, முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியான செயல்பாடுகள், சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. இதனால் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, எப்படியும் தக்க வைக்க வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.
 

 

அழகிகளின் நடனம்:


இதனால், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை, நேற்று முன்தினம்(புதன் கிழமை), நான்கு பஸ்களில் ஏற்றிய சசிகலா தரப்பினர், அங்கும், இங்குமாக சுற்ற வைத்தனர். பின், இரவு, 11:00 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்தை அடுத்த, கூவத்துாரில் உள்ள, 'கோல்டன் பே' சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அங்கு, 101, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன், சசிகலாவின் உறவினர்களான, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சென்று தங்கியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள், இரவு உல்லாசமாக பொழுது போக்க, கேரள அழகிகளின் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விதவிதமான மது வகைகளுடன், விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது.
 

 

தடபுடல்:


நேற்று(வியாழக்கிழமை) காலை, எம்.எல்.ஏ.,க்களுக்கு, இட்லி, தோசை, மசால் பூரி, இடியாப்பம், மட்டன் பாயா, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, வடை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மதியம், சைவ, அசைவ விருந்துக்கும், இயற்கை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசைவ உணவில், மட்டன், சிக்கன், மீன், இறால் வகை உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. இப்படி உற்சாக மிகுதியில், எம்.எல்.ஏ.,க்கள் இருந்த நேரத்தில், அவர்களின், மொபைல் போன்களையும், சசிகலா உறவினர்கள் வாங்கி வைத்துள்ளனர். அவர்கள், வேறு யாருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
 

 

போதை:


நேற்று முன்தினம் இரவு முழுவதும் போதையில் மிதந்து, நேற்று அதிகாலையில், போதை சற்று தெளிந்து, 'மொபைல் போன்' கேட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்கப்படவில்லை. அவர்களிடம், 'கவலைப்படாதீர்கள்; வேண்டிய உதவி செய்கிறோம்' என, சசி தரப்பு சமாதானம் செய்துள்ளது. அப்போது, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், 10 கோடி ரூபாய் தரப்படும் என, உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், குறிப்பிட்ட தொகை, எம்.எல்.ஏ.,களின் வீடு அல்லது உறவினர்கள் வீடுகளில், உடனே ஒப்படைக்கப்படும் என, கூறியதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
 

 

12 எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் :


சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர் வெளியில் செல்ல விரும்பியுள்ளனர். அவர்களுக்கு, சசி உறவுகள் அனுமதி வழங்கவில்லை. உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் உணவு சாப்பிடாமல், உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

குண்டர் படை :


எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள விடுதியை சுற்றி, 120 வாட்டசாட்டமான, குண்டர் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூட, அந்த வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், அரை கி.மீ., துாரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708111

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.